Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு எஸ்டேட் சொத்துகள் முடக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரூ130 கோடி அபராதத்துக்காக போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு எஸ்டேட்

உட்பட 211 சொத்துகள் முடக்கம்!

 

சென்னை: ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு தேயிலைத் தோட்டம் உட்பட மொத்தம் 211 சொத்துகளை ரூ130 கோடி அபராதத்துக்காக முடக்கி வைக்க பெங்களூரு தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் தலா ரூ10 கோடி (ரூ30) அபராதம் விதிக்கப்பட்டது.

 

28-jayalalitha-14-600.jpg

 

இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • அரசுத் தரப்பில் வருமானத்துக்கு அதிகமாக ரூ66.65 கோடி சொத்து குவித்ததாக கூறப்பட்டது. ஆனால் ரூ53 கோடி அளவுக்கு சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  • எஞ்சிய ரூ13 கோடி சொத்து குவிப்புக்கான ஆதாரங்களை அரசுத் தரப்பு தாக்கல் செய்யவில்லை.
  • ஊழல் தடுப்புச் சட்டம் 13(2) மற்றும் 13(1)(ஈ) ஆகிய பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109ன் கீழும், 120ன் கீழும் குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
  • ஜெயலலிதாவுக்கு 3 பிரிவுகளிலும் 4 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
  • இதே பிரிவுகளின் கீழ் மற்ற மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சாதாரண சிறையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வழக்குக்காக தமிழக அரசு வழக்கு செலவாக ரூபாய் 5 கோடியை கர்நாடக அரசுக்கு தரவேண்டும்.
  • மொத்தம் 130 கோடி ரூபாய் அபராதத்துக்காக, வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தையும் நீதிமன்றம் முடக்கியுள்ளது
  • அதாவது ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம் தொடங்கி கோடநாடு தேயிலைத் தோட்டம் உட்பட மொத்தம் 211 சொத்துகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • தற்போது மொத்தம் ரூபாய் 130 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் இந்த தொகையை செலுத்தும் வரை இந்த 211 சொத்துகளையும் பறிமுதல் செய்து முடக்கி வைக்க இருக்கிறது நீதிமன்றம்.
  • அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள், முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள தொகை ஆகியவற்றிலிருந்தும் அபராத தொகை வசூலிக்கப்படும்
  • அதுவும் போதவில்லையெனில் முடக்கப்பட்டுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் விற்கப்பட்டு அபராத தொகை ஈடுசெய்யப்படும்.
  • சசிகலா, சுதாகரன், இளவரசிஆகிய மூவரும், கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்காக, '120 பி' பிரிவின் கீழ், தலா ஆறு மாதம் கூடுதல் சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பு.
  • இந்த 6 மாத தண்டனையை ஏக காலத்தில் அதாவது 4 ஆண்டுகால காலத்துடன் இணைந்து அனுபவிக்க வேண்டும்.

தற்ஸ் தமிழ்.

 

  • கருத்துக்கள உறவுகள்
நரிகளின் கூடாரத்தை நம்பி, புலிகள் என்னைக் கொல்லப்போகிறார்கள் என்று அறிக்கை விட்டார். பாவம் அவரை இப்போ நரிகள் புடுங்கித் தின்னுகின்றன. :o
 
  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்ல.. 1991 இல் நிகழ்ந்த சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வந்த எமது போராளிகளை எல்லாம்.. குறித்த சம்பவத்தோடு இணைத்து பழிவாங்கத் துடித்த ஹிந்திய நடுவன்.. அரசுக்கு அடிவருடி.. சயனைட் குடிக்கச் செய்து.. தமிழகம் எங்கும் அனாதைப் பிணங்களாக அவர்கள் படுக்க வைக்கப்பட்டு.. படம் போட்டு ரசித்தது இன்னும்... கண் முன்னே விரிந்து நிற்கிறது. அம்மா.. இந்த ஹிந்திய தேசிய நரிகளோடு சேர்ந்து.. எங்களுக்கு செய்யாத அநியாயம் இல்லை. கடைசியில்.. அவரின் போக்கை கொஞ்சம் என்றாலும்.. மாற்றி அமைத்தது என்றால்.. அது தமிழ் தேசிய எழுச்சியை தமிழகத்தில் தூண்டியவர்கள் தாம்..!!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
இதுக்குத் தான் சொல்லுறது: பினாமி வேண்டும் எண்டு.
 
கருணாநிதி 1000 கோடிக்கு மேல் ஆட்டையை  போட்டாலும், விசாரித்தவர்களுக்கு, அந்தாள் போடுற கோவணத் துணி கூட, கட்சி / தொண்டர் கொடுத்த மஞ்சள் துண்டு தான் என்று கதை சொல்லும் அளவுக்கு அனுபவம், தெளிவு.
 
தேன் எடுப்பவன் நக்காம விடுவான? தேன் கூடு பிரச்னை இல்லாமல் கைக்கு வந்தால்  போதும் என்பது தான் அவர் நிலைப் பாடு.
 
இந்தம்மா, தேன் கூடு, எடுத்தவன் கை தேன் எல்லாம் வேணும் அதுவும் தனது பெயரில் என்றால், என்ன செய்வது?

அதுமட்டுமல்ல.. 1991 இல் நிகழ்ந்த சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வந்த எமது போராளிகளை எல்லாம்.. குறித்த சம்பவத்தோடு இணைத்து பழிவாங்கத் துடித்த ஹிந்திய நடுவன்.. அரசுக்கு அடிவருடி.. சயனைட் குடிக்கச் செய்து.. தமிழகம் எங்கும் அனாதைப் பிணங்களாக அவர்கள் படுக்க வைக்கப்பட்டு.. படம் போட்டு ரசித்தது இன்னும்... கண் முன்னே விரிந்து நிற்கிறது. அம்மா.. இந்த ஹிந்திய தேசிய நரிகளோடு சேர்ந்து.. எங்களுக்கு செய்யாத அநியாயம் இல்லை. கடைசியில்.. அவரின் போக்கை கொஞ்சம் என்றாலும்.. மாற்றி அமைத்தது என்றால்.. அது தமிழ் தேசிய எழுச்சியை தமிழகத்தில் தூண்டியவர்கள் தாம்..!!! :icon_idea:

என்ன அண்ணா ஈழத்தாய் அவர்களை நீங்களே இப்படி சொல்லலமா நீங்கள் தானே அவருக்கு களமாடி தேர்தல் வெற்றி பெற்று கொடுத்தது இப்ப இப்படி சொன்னா ..

 

காலம் காலம் ஒரு சகுனி உலகில் பிறந்துகொண்டே இருப்பான் பாருங்கோ .

10599465_730494680331087_658728399114642

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.