Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்! (படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து மதுரை உள்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

madurai%20protest%20.jpg

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார்.
 

madurai%20protest%201.jpg

இதனிடையே, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 

madurai%20protest%202.jpg

இந்நிலையில், மதுரையில் அ.தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தை மதுரை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார். மேலமாசி வீதியில் நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மதுரை ஆதீனம் உள்பட 2 ஆயிரம் அ.தி.மு.க.வினர் கருப்பு சண்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.
 

madurai%20protest%203.jpg

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புக்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை மதுரையில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அதிமுகவினர் அறிவித்துள்ளனர்.

tuticorin%20protest.jpg

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாநகர செயலாளர் ஏசாதுரை, மாநகர மேயர் அந்தோணிகிரேஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

ariyalur%20protest%20.jpg

அரியலூர்

ஜெயலலிதாவிற்கு வழங்கிய தீர்ப்பிற்கு தடைவிதிக்க வேண்டும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் அரியலூரில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்துக் கொண்டனர்.
 

thanjavur%20protest.jpg

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அதிமுகவினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த உண்ணாவிரதத்தில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், நகர்மன்ற தலைவர் ராஜசேகரன், நகர செயலாளர் பாஸ்கர் ஆகியோருடன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளும் பங்கேற்று உள்ளனர்.
 

pudukottai%20protest.jpg

இவர்கள் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் சமீபத்தில் புதுக்கோட்டையில்  நடந்த திருமண விழாவிற்கு பேராசிரியர் அன்பழகன் வந்திருந்தார். அவரை வரவேற்கும் விதமாக அன்பழகனின் படம் வைத்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரை பார்த்த நகர செயலாளர் பாஸ்கர், பேராசிரியர் அன்பழகன் படத்தில் சாணத்தை தெளித்ததோடு செருப்பால் அடித்து தனது எதிர்ப்பை காட்டியிருக்கிறார்.

இதற்கு முன்பு அ.தி.மு.க.வினர் தி.மு.க வின் மாவட்ட அலுவலகத்தை தாக்கியிருப்பதற்கு தி.மு.க சார்பில் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாஸ்கரின் செயலால் மீண்டும் தி.மு.க வினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
                

இதேபோல்  கோவை, திருச்சி, ஈரோடு, நெல்லை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

- சல்மான், எஸ்.சரவணப்பெருமாள், எம்.திலீபன், குணசீலன்,   வீ.மாணிக்கவாசகம்

படங்கள்: காளிமுத்து, ஏ.சிதம்பரம், நந்தகுமார்

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=32907

  • கருத்துக்கள உறவுகள்

 

madurai%20protest%201.jpg

 

 

 

மதுரை ஆதீனம் வந்துள்ளார்.. நித்தி எங்கே? :unsure: நித்தி திமுகவா?  :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுரை ஆதீனம் வந்துள்ளார்.. நித்தி எங்கே? :unsure: நித்தி திமுகவா?  :huh:

 

திமுக ஆட்சியிலைதானே நித்தியின்ரை கள்ளச்சீடி வந்தது?  :o

  • கருத்துக்கள உறவுகள்

திமுக ஆட்சியிலைதானே நித்தியின்ரை கள்ளச்சீடி வந்தது?  :o

 

கள்ளச் cd யோ?
 
நித்தி அப்படித் தான் சொல்லுறார்.
 
ஆனால் அது ஒரிஜினல் cd எண்டு தான் மத்த எல்லோரும் சொல்லுகினம் அண்ண.
 
கள்ளச் cd எண்டு பாக்காமல் விட்டுட்டியளோ ? தேடித் பிடிச்சு பார்த்திடுங்கோ.
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டினைத்  தற்போது அதிமுகவே ஆள்கின்றது, இவர்கள் அரசால் நடைமுறைப்படுத்தப்படும் சட்டரீதியான விடையங்களை தெருவில் நின்று விமர்சிக்கிறார்கள் கண்டனம் செய்கிறார்கள்.

 

அநத அளவுக்கு இருக்கின்றது இவர்களது அரசாட்சி செய்யும் நம்பகத்தன்மை. நீதித்துறையை ஆள்பவர்களே விமர்சனம் செய்தால் பொதுமக்கள் எந்த அளவுக்கு சட்டத்தை மதிப்பார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.