Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏன் மௌனமானாய்....???

Featured Replies

ஏன் மௌனமானாய்....???

சிங்களவன்

அழிகையிலே

சீறி எழும்

உலகமே...

எம் தமிழ்

அழிகையிலே

ஏன்

உனக்கு

மௌனமோ...???

பயங்கர

வாதியேன்றேன்

பயங்கரமாய்

தூற்றுகிறாய்...???

பயங்கரமாய்

வந்து அவன்

பயங்கரங்கள்

ஆடுகிறான்...

பார முகமாய்

ஏனோ

நீ

பாரினில்

இருக்கிறாய்...??

ஏழை என்றா

எம் தமிழை

ஏறி இன்று

மிதிக்கிறாய்....???

நடு நிலை

என்றேன்

நா வறள

கத்துகிறாய்...

இன்று

நடு நிலை

மறந்தேன்

நரகத்திலே

கிடக்கிறாய்...???

நா

நனைந்து

எம் தமிழர்

நாட்கணக்காய்

ஆச்சு...

நலிவடைந்து

உடலதுவோ

உயிர் பிரியும்

நிலை போச்சு....

நின்மதி

இன்றியவர்

நிர்கதியாய்

ஆச்சு...

எண் கணக்கில்

பயங்கரங்கள்

எத்தனையோ

அவன்

இழைத்தான்....

அத்தனையும்

கண்டு உலகே

மௌனமாய்

ஏன் ஆனாய்....???

- வன்னி மைந்தன் -

:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

உங்கள் ஆதங்கத்தை கவியில் வடித்துள்ளீர்கள். நன்று.

  • தொடங்கியவர்

தேடி வந்த

உன் கருத்தை

தேறாமால்

சொல்பவரே...

உந்தனுக்கு

எந்தனது

எந்தனது

நன்றிகள்...

- வன்னி மைந்தன் -

நீங்கள் "ஆச்சு" "போச்சு" போன்றவற்றை விட மாட்டீர்களா?

  • தொடங்கியவர்

அன்னுடன்

சபோசன் அவர்களுக்கு

என் வணக்கம்....

நீங்கள் "ஆச்சு" "போச்சு" போன்றவற்றை விட மாட்டீர்களா?

தங்களால் மேல் கூறப்பட்ட கருத்தில் என்ன தவறு இருக்கு....???

கவிதையை எந்த வடிவிலும் எழுதலாம்

மாறாக இவ்வாறு தான் எழுத வேண்டும் என்று விதி முறை இல்லை...

சுதந்திரமாக ஒருவன் எழுத வேண்டும்...

அது தான் கவிதையின் பொது விதி....

எதுகை மோனை என்று வரும் போது

சில சொற்றோடர்கள்

அவற்றில் இவ்வாறு வருவது வழமை...

தாங்கள் அவ்வாறு கூறியதன் காரணம் என்னவோ....???

அதை விபரமாக அறிய விரும்புகிறேன்...

எனவே தங்களது இவ்வாறான கருத்தாடல்கள் என்னை

வளம் படுத்தும் என நம்புகிறேன்...

ஆகவே தங்களது விமர்சன கோவையை எதிர் பார்க்கிறேன்...

நன்றி

அன்புடன்

வன்னி மைந்தன்

சொல்லிப்புட்டேன், விட்டீக, ஆச்சு, போச்சு என்ற சொற்கள் குறிப்பிட்ட வட்டார மொழிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

நீங்கள் பேசுகின்ற போதோ அல்லது எழுதுகின்ற போதோ இந்த சொற்களை உபயோகிப்பீர்கள் என்று நான் நம்பவில்லை.

உங்கள் வட்டார மொழியில் நீங்கள் எழுதுவதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் மேலே குறிப்பிட்ட சொற்கள் எதுவும் உங்களின் வட்டாரச் சொற்கள் இல்லையே.

இப்படி நீங்கள எழுதுவதற்கு காரணம் தமிழ்நாட்டு சினிமாப் பாடல்கள் உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்தான் காரணமாக இருக்கும்.

இச் சொற்களால் உங்களின் கவிதைகள் அந்நியப் படுத்தப்படுகின்றன

  • தொடங்கியவர்

அன்புடையீர்..

தங்களது பதில் கருத்துக்கு

என் மனமார்ந்த நன்றிகள்...

மேலும்....

என்னை தென் இந்திய பாடல்கள்

கவர்ந்திழுத்திருக்கிறது அதன் காரணமாகவே

இவ்வாறான் சொற்களை அதில் புகுத்தி

உள்ளேன் என தாங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள்...

'

அதை நான் மறுக்கிறேன்...

குறிப்பாக நான் தமிழீழ தேசியப் படல்களை தான் தற்போது

அதிகம் விரும்பி கேட்பது...

அதில் குறிப்பாக நாட்டு பற்றாளர் நாவண்ண் அவர்கள்

எழுதிய பாடல்களை கேட்டீர்களா...???

அது எதனை குறிக்கிறது...??

வாட்டார மொழி பேச்சிலேயெ அவருடய அதிக

பாடல் அமைந்துள்ளது அதை புலிகளின் குரல் இணைய நேரடி

ஒலிபரப்பில் கேட்டேன் கேட்டு வருகிறேன்...

வேண்டுமானால் தாங்களும் கேட்டு பாருங்கள்....

ஆனால் அவருடய பாடலில் இருந்து ஏனைய பிற கவிகளது பாடல்கள்

வேற படுகின்றன...

குறிப்பாக புதுவை. காசியானந்தன் .விஜய். வீரா .

இன்னும் பலர் அவர்களுடய வரிகளும் அதை ஏதோ ஒரு வகையில்

பிரதி பலிக்கின்றன

அணைத்திலும் அல்ல....

எமது பிரதேசத்திலும் ஏன் குறிப்பாக ஈழத்தின்

கலாச்சார பட்டணத்திலும் இவ்வாறு உரையாடப்படுவதை

அங்கு வாழ்ந்த காலப் பகுதியல் அதை கேட்டு உணர்ந்தேன்..

எனவே இது தவிர்க்க முடியாத ஒன்றே..

இதில் பாரதத்தை இழுத்து இடிந்து உரைப்பதென்பது

தவறானதே....

எனக்கு தனமடல் மற்றும் மின்னஞ்சல் ஊடாக பலர்

பல கருத்துகளை கூறி வருகிறார்கள்...

அதில் தங்களது கருத்து சற்று வித்தியாசமாக உள்ளது...

அதே வேளை பலர் இதை வர வேற்றுள்ளார்கள்

எனவே இவ்வாறான கருத்துகள் முட்டி மோதும் பொழுது தான்

நாம் பலதை உணர்ந்து கொள்ள முடியும்..

எனவே இது சார்ந்த ஒரு நீண்ட விளக்க ஆய்வு மடலை

தங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்...

தங்களுடய பார்வை எவ்வாறு உள்ளது என்பதை அறிவதற்கே

அவ்வளவு தான்...

எனவே தங்கள் பதில் கண்டு

பதில் தொடர்கிறேன்...

நன்றி

அன்புடன்

வன்னி மைந்தன்

நான் நாவண்ணனின் பாடல்களைக் கேட்டதில்லை. அதனால் அவருடைய பாடல்கள் குறித்து கருத்து சொல்ல முடியவில்லை.

அவரும் "போனீக, வந்தீக" என்றும் "சோல்லிப்புட்டேன், கேட்டுப்புட்டேன்" என்றும் எழுதி இருந்தால், அவரிடமும் தமிழ்நாட்டு சினிமாப்பாடல்களின் தாக்கம் இருக்கிறது என்றுதான் சொல்வேன்.

தமிழீழத்தில் எந்த மாவட்டத்தில் "விட்டீக" போன்ற வார்த்தைகள் பேசப்படுகின்றன?

நீங்கள் உங்கள் கவிதைகளில் உபயோகப்படுத்திகின்ற வார்த்தைகள் யாழ்ப்பாணத்திலும் பேசப்படுவதில்லை. மட்டக்களப்பிலும் பேசப்படுவதில்லை.

அது மட்டும் அல்ல. தமிழ்நாட்டில் கூட அனைத்து மாவட்டங்களிலும் ஓரே மாதிரி பேசப்படுவதில்லை. நீர்வேலியில் ஒரு மாதிரியும், கோவையில் ஒரு மாதிரியும், சென்னையில் ஒரு மாதிரியும் இப்படி பல மாதிரி பேசுவார்கள்.

நீங்கள் எந்த வட்டார மொழியில் எழுதுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

நாங்களும் தமிழ்நாட்டு திரைப்படங்களைப் பாப்பதால், உங்கள் கவிதைகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த சொற்களை பாவிப்பதற்கான காரணம் புரியவில்லை.

தேடி வந்த

உன் கருத்தை

தேறாமால்

சொல்பவரே...

உந்தனுக்கு

எந்தனது

எந்தனது

நன்றிகள்...

- வன்னி மைந்தன் -

வன்னி கடைசியில் இரசிகையைத் தேறாதவராக ஆக்கிட்டீங்களே. :cry: :cry: :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.