Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா குழுவில் இனையமறுத்த கடத்தப்பட்ட சிறுவர்கள் படுகொலை?

Featured Replies

2962ts4.jpg

அப்படி போலதான் இருக்கு ஏனேனின் சண்டையி செத்தமாதிரி தெரியவில்லை அல்லது சபேசன் webeelathil எழுதினமாதிரி பிணங்களாய் நடித்திருக்க வாய்ப்புண்டு காயம் தெரியவில்லை பாருங்கள் இரத்தமும் பூசினதுமாதிரி தெரியுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:roll: :roll: :roll:

ஈழவன் சொன்னது -

அப்படி போலதான் இருக்கு ஏனேனின் சண்டையி செத்தமாதிரி தெரியவில்லை அல்லது சபேசன் றநடிநநடயவாடை எழுதினமாதிரி பிணங்களாய் நடித்திருக்க வாய்ப்புண்டு காயம் தெரியவில்லை பாருங்கள் இரத்தமும் பூசினதுமாதிரி தெரியுது

இல்லை பாருங்கோ..இது நான் முதல் சொன்ன மாதிரி உந்த காணமல் போனவரின் உடலும்...

அவையின்ர உள் விட்டு பிரச்சினையல் கிழப்பினவயும் தானம் உவையள்...

இது புரியாமல் என்ன நீங்கள்...

உந்த இரு குழுவம் எல்லே பிறிஞ்சு போட்டுதாம் அதில உள்ள சிலர தானாம் உப்படி சுட்டு போட்டு இருக்காங்கள்..ஆதோட இவையள் முதல் நல்ல சண்டை காயளாம்..

ம்..ம்..ஆமியோட பின்னல நிண்டு சொறிஞ்ச...சண்டை காயல் தானே...

அப் உவைய் சொல்லிச்சினம் மருத்துவ மனையில

உடல்கள் கிடக்குதெண்டு அப்ப எப்படி நடிக்க முடியும்...

அதல்ல ..ஆனால் உதில அவயிளின்ர இரு குழுவும் தான் இவை...

பாத்தியளே எப்படி முட்டு படினம் எண்டு...

தான் ஒரவர் ஆழ எத்தனை பேரை இன்னும் இப்படி சாக்கட்ட போறானோ...??

ஆனால் உதில இறந்ததுகள் எல்லாம் ஒட்டுப் புளவாம்...

கதிர் காத்தான் ஏதோ கணக்க சொல்லுறான்..

அதை கேட்டு போட்டு அடுத்த றவுண்டில சந்திக்கிறன்

இப்ப வாறன்..

வன்னி மைந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

பாக்க நடிக்கிற மாதிரி தான் இருக்கு...

பாக்க நடிக்கிற மாதிரி தான் இருக்கு...
றநடட வாநல யசந னநயன டிழனலள ழnஉந வாந அயn ளை னநயன ழெவ பழழன வழ வயடம யடிழரவ வாநஅ ளழ அழஎந ழn
  • கருத்துக்கள உறவுகள்

வாகரை - இராணுவமும் கருணா குழுவும் இணைந்து நடத்திய நடவடிக்கை!

நேற்று சிறிலங்கா இராணுவம் வாகரையை நோக்கி மும்முனைகளில் இருந்து ஒரு வலிந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படையினரும் ஈடுபட்ட இந்த இராணுவ நடவடிக்கையில் கருணா குழுவும் ஈடுபடுத்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பனி;ச்சங்கேணி வரை முன்னேறிய சிறிலங்கா இராணுவம் கடைசியில் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாது பெரும் இழப்புக்களோடு பழைய இடங்களுக்கு பின் வாங்கி ஓடியது.

இச் சண்டையில் 50 இற்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். குறைந்தது 8 கருணா குழுவினரும் கொல்லப்பட்டுள்ளனர். கருணா குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவனாகிய இசையாளன் என்பவனும் கொல்லப்பட்டுள்ளதாக கருணா குழு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளால் 10 சிறிலங்கா இராணுவத்தினரின் உடல்களும் 5 கருணா குழுவினரின் உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் காயமடைந்த இரண்டு இராணுவத்தினர் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்திருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். சிறு காயங்களுக்கு மட்டுமே இலக்காகி இருந்த மற்றைய சிப்பாய் இன்று விடுதலைப்புலிகளால் செய்தியாளர்களிடம் காண்பிக்கப்பட்டார். அந்த சிப்பாய் வாகரைச் சண்டையில் 400இற்கு மேற்பட்ட சிறிலங்காப் படையினரும், 80 கருணா குழுவினரும் ஈடுபட்டதாக தெரிவித்தார். பலவந்தமாக கடத்தப்பட்டு பயிற்சி கொடுக்குப்பட்ட சிறு வயதினரே கருணா குழுவில் அதிகமாக இருந்துள்ளனர். கருணா குழு வெளியிட்ட படங்களின் மூலமும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இச் சண்டையின் போது விடுதலைப்புலிகளால் பெரும் தொகையான ஆயதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட இரு 81 எம்.எம். மோர்ட்டார்கள், ஒரு 60 எம்.எம். மோர்ட்டார், எறிகணைகள், 10 ரொக்கெட் புரொபெல்ட் கிரனைட் லோஞ்சர்கள், பி.கே.எல்.எம்.ஜிகள், ஏ.கே.எல்.எம்.ஜிகள், ஏ.கே.47 துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்கள் வாகரையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகள் நடத்திய வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிரான சண்டையை கேணல் சொர்ணம் வழி நடத்தி இருந்தார். இச் சண்டை விடுதலைப்புலிகள் கிழக்கில் மிகப் பலமான நிலையிலேயே இருக்கின்றனர் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி உள்ளது. இச் சண்டையில் 11 விடுதலைப்புலிகள் வீரச் சாவடைந்துள்ளனர்.

கிழக்கில் கருணா குழுவும் சிறிலங்கா இராணுவமும் இணைந்து விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தி வருவது இம் முறை அசைக்க முடியாத ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தற்பொழுது இதை மறைப்பதற்கு சிறிலங்கா இராணுவமும் கருணா குழுவும் மாறி மாறி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டபடி உள்ளன.

அது மட்டும் அன்றி கருணா குழு தாமே இத் தாக்குதலை நடத்தியதாகவும், தாம் 23 விடுதலைப்புலிகளின் உடல்களைக் கைப்பற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. பல உடல்கள் கிடப்பது போன்ற படத்தையும் வெளியிட்டுள்ளது. அப் படம் பல சந்தேகங்களையும் அச்சங்களையும் உருவாக்கி உள்ளது.

அப் படத்தில் காணப்படுபவர்கள் சிவில் உடையில் உள்ளனர். பெரும்பாலானவர்கள் சிறுவர்களாக இருக்கின்றனர். காலில் செருப்பு அணிந்து உள்ளனர். கழுத்துக்களில் சயினைட் பட்டிகள் இல்லை. படத்தில் இருப்பவர்கள் எக் காரணத்தைக் கொண்டும் விடுதலைப்புலிகளாக இருக்க மாட்டார்கள் என்பது தெரிகிறது. அப்படி என்றால் இவர்கள் யார்? கைகள் பின்புறம் கட்டப்பட்டிருந்தது போன்ற நிலையில் கிடக்கின்றனர். இவர்கள் கருணா குழுவால் கடத்தப்பட்ட சிறுவர்களா? கருணா குழுவில் இணைய மறுத்த காரணத்தால் கொலை செய்யப்பட்டனரா? இப்படி அச்சம் கலந்த கேள்விகள் எழுகின்றன.

அதே வேளை படங்களில் சடலங்களாக கிடப்பவர்கள் மீது சூட்டுக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. சிலர் மீது இரத்தம் பூசப்பட்டுள்ளது போன்று தெரிகிறது. பெரும்பாலானவர்கள் முதுகை காட்டியபடி கிடக்கின்றனர். இது உயிரோடு உள்ள கருணா குழுவினரே இப்படி கிடந்த "போஸ்" கொடுத்துள்ளனரா என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறது.

அப்படி இந்தச் சிறுவர்கள் இறக்கவில்லை என்றால் அது மகிழ்ச்சியான விடயமே!

-வெப்பீளம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.