Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கினாலும் சொத்து முடக்கம் தற்போதைக்கு அமுலில் இருக்கும்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Continue_CI.jpg

தமிழீழ விடுதலைப் புலிளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கிய போதிலும் சொத்து முடக்கம் தொடர்பிலான உத்தரவுகள் தளர்த்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்த ஐரோப்பிய நீதிமன்ற நீதவான்கள், புலிகளின் சொத்து முடக்கம் குறித்த உத்தரவு தற்போதைக்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்களின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் 2006ம் ஆண்டு இணைக்கப்பட்டதாகவும், புலிகள் தொடர்பில் நேரடியான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்காலிக அடிப்படையில் சொத்து முடக்கம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112646/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சொத்தை நீயே வைச்சுக்கோ ...நிரந்தரமாக தடையை நீக்கிவிடு...

  • கருத்துக்கள உறவுகள்

சொத்து முடக்கத்திற்கு பதிலீடாக சில விடயங்களைப் பரிந்துரைக்கலாம் எனத் தோன்றுகின்றது. சொத்து முடக்கம் என்பது நிரந்தமாக இருப்பின், அது தொடர்பாக பின்வருமாறு கோரிக்கையை முன் வைக்கலாம். அந்தச் சொத்துக்களை நேரடியாக எம் மக்களின் வாழ்வாதரங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியமே நேரடியாக பங்களிப்புச் செய்யும் வண்ணம் ஆவண செய்விக்கலாம். தற்போதையை தமிழர் தரப்பு எடுத்தால் அது, சிங்கள அரசு ஆக்கிரமிப்புச் செய்ய முயற்சிக்குனும். அதனால் ஐரோப்பிய ஒன்றியமே வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்மக்களின் மேம்பாட்டுக்காக நேரடியாக(3ம் தரப்பில்லாமல்) கொடுக்க வகை செய்ய வேண்டும்.

. அந்தச் சொத்துக்களை நேரடியாக எம் மக்களின் வாழ்வாதரங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியமே நேரடியாக பங்களிப்புச் செய்யும் வண்ணம் ஆவண செய்விக்கலாம். தற்போதையை தமிழர் தரப்பு எடுத்தால் அது, சிங்கள அரசு ஆக்கிரமிப்புச் செய்ய முயற்சிக்குனும். அதனால் ஐரோப்பிய ஒன்றியமே வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்மக்களின் மேம்பாட்டுக்காக நேரடியாக(3ம் தரப்பில்லாமல்) கொடுக்க வகை செய்ய வேண்டும்.

 

இலங்கையின் ஒற்றையாட்சி சட்டங்களின் பிரகாரம் இது சாத்தியமில்லை. எந்த ஒரு நாடோ அல்லது அமைப்போ இலங்கை அரசின் அனுமதியின்றி, தலையீடு இன்றி நேரடியாக இலங்கையிலுள்ள எவருக்கும் உதவி செய்து விட முடியாது. மாகாணசபையினூடாக உதவுவதற்கு கூட மத்திய அரசினதும், மத்திய வங்கியினதும் அனுமதி தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசாங்கம் வீடு கட்டிக் கொடுக்கும்போது, ரயில்வே தண்டவாளம் அமைக்கும்போது இது ஏன் சாத்தியப்படாது. அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது முக்கியமாக வடக்கில் செயற்படும் அமைப்புக்கள் மீது சிங்கள அரசு கிடுகுப் பிடியாக நிற்க முயற்சிக்கின்றது. அதனால் அது எவ்வளவு தூரம் சாத்தியம் எனத் தெரியவில்லை. நேரடியாக ஐரோப்பியயுனியன் குறைந்தபட்சம் சிறிலங்கா அரசோடு சேர்ந்து வழங்கலாம். ஆனால் அவர்களின் மேற்ப்பார்வையின் கீழ்...

இந்திய அரசாங்கம் வீடு கட்டிக் கொடுக்கும்போது, ரயில்வே தண்டவாளம் அமைக்கும்போது இது ஏன் சாத்தியப்படாது. அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது முக்கியமாக வடக்கில் செயற்படும் அமைப்புக்கள் மீது சிங்கள அரசு கிடுகுப் பிடியாக நிற்க முயற்சிக்கின்றது. அதனால் அது எவ்வளவு தூரம் சாத்தியம் எனத் தெரியவில்லை. நேரடியாக ஐரோப்பியயுனியன் குறைந்தபட்சம் சிறிலங்கா அரசோடு சேர்ந்து வழங்கலாம். ஆனால் அவர்களின் மேற்ப்பார்வையின் கீழ்...

 

இந்திய அரசாங்கம் செய்வது அனைத்தும் இலங்கை அரசின் அனுமதியுடன் தான். அதனை மீறி அல்ல.  இலங்கை அரசின் அனுமதியுடன் செய்கின்ற அனைத்துக்கும் பின்னால் பெளத்த மயப்படுத்தலும், இராணுவத்தினரை தடையின்றி தாயகத்தில் வைத்திருக்க தேவையான அரசியலும் அடங்கி இருக்கின்றன.

 

தமிழர் நிலங்களில் இன்னொரு அரசின் உதவி நேரடியாகவோ அல்லது தமிழர் தரப்பின் ஊடாகவோ பெறபடுவதற்கு ஒற்றையாட்சி மாற்றப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது மிச்சம் மீதி இருந்த நிதி கொடுத்து சின்னா பின்னமான குடும்பங்களையும் கவனியுங்கப்பா ;-)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொத்துமுடக்கம் சரியானதுதான்  கடந்த காலத்தில் விடுதலை புலிகளின் பேரில்  சேர்த்த சொத்துக்களில்  எதனை பேர் புலம்பெயர் நாடுகளில் வீடு, முதலீடுகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இங்குள்ள அரசாங்களுக்கும்  இங்குள்ள புலம்பெயர் விடுதலையை நேசிக்குக்கும்  தமிழர்களுக்கும் தெரியும் .போர்முடிந்த கையேடு இங்குள்ள பல புலிகளின் பொறுப்பாளர்கள்  k.P இலங்கை வந்து சந்தித்தார்கள் என்பதும்  தெரியும் .அதனால் இந்த மகளின் பணம் எப்படி,, இந்தவிடுதலைக்கு விலைகொடுத்த மக்களுக்கு போய் சேரவேண்டும் என்பதில் இங்குள்ள அரசுகளும்  புலம் பெயர் மக்களும் கவனமாக வேண்டும் என்பதை  காலத்தின்

 அனுபவம்  கற்றுத்தந்திருக்கிறது 

Edited by Anitta

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா குருபரன் தடையை நீக்கவில்லை ஐயா - தக்க ஆதாரத்தின் அடிப்படையில் முடிவை எடுக்குமாறு 3 மாதம் கொடுக்கப்பட்டிருக்கு.

தடை தொடர்கிறது ஆகவேதான் சொத்து முடக்கமும் தொடர்கிறது.

தடை என்று நீங்குதோ அன்றே சொத்து முடக்கமும் நீங்கும். ஆனால் யாரிடம் கையளிப்பது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.