Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காசு..பணம்..துட்டு..டப்பு..! கருப்பு பணம்..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பு பணம் பற்றி சுவாரசியமான குறிப்பை நேற்று இணையத்தில் படித்தேன்.

 

வருவாயில் இருந்து அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே கருப்பு பணம்தான். பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்கவே, வருவாய் மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக் காட்ட முடியாமல் போவதால் அதுவும் கருப்பு பணமாகி விடுகிறது.

 

சுவிஸ் வங்கிகள் இம்மாதி குறுக்கு வழிகளில் தேற்றும் பணங்களை முதலீடு செய்ய வரவேற்கிறது. இம்முதலீடு பற்றிய அனைத்து விபரங்களிலும் கண்டிப்பான ரகசியம் காக்கப்படுகிறது. அந்த ரகசியம் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பது பற்றிய குறிப்பு கீழே...

 

நைஜீரிய நாட்டின் புதிய நிதி அமைச்சர் இக்னாசியஸ் அகர்பி. மிகவும் நேர்மையானவர். ஊழலை அறவே பிடிக்காது. தான் குடும்பத்துடன் செல்லும் பயணங்களுக்கு கூட அரசு பணத்தை தொட மாட்டார். தனது சொந்தப் பணத்தை மட்டுமே செலவு செய்பவர். அதிரடி நடவடிக்கைகள் மூலம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் ஊழலை அம்பலப்படுத்தி, மிகக் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் ஆனவர்.

 

நாட்டின் அதிபருக்கு இவர் மீது நல்ல நம்பிக்கை! 'ஸ்விஸ் வங்கியில் பணக்காரர்கள் பதுக்கியிருக்கும் பணத்தை கண்டுபிடித்து மீட்க இவர்தான் சரியான ஆள்' என முடிவு செய்கிறார். அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார். நைஜீரிய அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தை எப்படியாவது கண்டுபிடிக்கும்படி கூறி அவரை ஸ்விட்ஸர்லாந்து அனுப்புகிறார்.

 

அதிபரின் உத்தரவுப்படி ஸ்விஸ் வருகிறார் அகர்பி. சம்பந்தப்பட்ட ஸ்விஸ் வங்கிக்கு செல்கிறார். கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தனது நாட்டவரின் பட்டியலைக் கேட்கிறார்.

 

"அதெல்லாம் மிகவும் ரகசியமான விஷயம். யார் கேட்டாலும் தர மாட்டோம்" என மறுக்கிறார் வங்கி நிர்வாகி. :o

 

"நைஜீரியா எவ்வளவு ஏழை நாடு என்பது உங்களுக்குத் தெரியும். அங்குள்ள மக்கள் பசி, பட்டினியோடு வாழ்கிறார்கள். அவர்களை சுரண்டிக் கொழுத்த பணத்தை அவர்களுக்கே செலவிட நீங்கள் உதவுங்கள்" என கெஞ்சுகிறார் அமைச்சர் அகர்பி.

 

"அதெல்லாம் உங்கள் பிரச்சினை..! அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.. எங்கள் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை தரும் வழக்கம் எங்களுக்கு இல்லை..ம்ம்.. கிளம்புங்கள்..!" என உறுதியாக மறுக்கிறார் வங்கி நிர்வாகி.

 

"இப்படி எல்லாம் கேட்டால் நீ சரிப்பட்டு வர மாட்டாய்.." என கோபத்துடன் துப்பாக்கியை எடுத்து நிர்வாகியின் நெற்றிப் பொட்டில் வைக்கிறார் அகர்பி. :o

 

"தாராளமா சுட்டுக்கோ... நீ சுட்டாலும் நீ கேட்ட ரகசிய தகவலை தரவே மாட்டேன்..!" என உறுதியாக சொல்லிவிடுகிறார் வங்கி நிர்வாகி. :(

 

"அப்படியா... ? " என சந்தோஷத்துடன் தான் கொண்டு வந்திருந்த சூட்கேஸை திறக்கும் அகர்பி, "இந்தா.. இதுல 50 லட்சம் டாலர் இருக்கு....இதை நான் இங்க முதலீடு செய்கிறேன்... கவனம்...!  அத்தனை பணமும் யாருக்கும் தெரியாமல் ஊழலில் சேர்த்தது..!" என்றார் மெல்லிய குரலில்! :icon_idea:

 

-இணையத்தில் படித்தது.

 

 

.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

-----

"இப்படி எல்லாம் கேட்டால் நீ சரிப்பட்டு வர மாட்டாய்.." என கோபத்துடன் துப்பாக்கியை எடுத்து நிர்வாகியின் நெற்றிப் பொட்டில் வைக்கிறார் அகர்பி. :o

 

"தாராளமா சுட்டுக்கோ... நீ சுட்டாலும் நீ கேட்ட ரகசிய தகவலை தரவே மாட்டேன்..!" என உறுதியாக சொல்லிவிடுகிறார் வங்கி நிர்வாகி. :(

 

"அப்படியா... ? " என சந்தோஷத்துடன் தான் கொண்டு வந்திருந்த சூட்கேஸை திறக்கும் அகர்பி, "இந்தா.. இதுல 50 லட்சம் டாலர் இருக்கு....இதை நான் இங்க முதலீடு செய்கிறேன்... கவனம்...!  அத்தனை பணமும் யாருக்கும் தெரியாமல் ஊழலில் சேர்த்தது..!" என்றார் மெல்லிய குரலில்! :icon_idea:

-இணையத்தில் படித்தது.

 

அகர்பி.... வங்கியின், நம்பகத் தன்மையை.... சோதிக்க,

எவ்வளவு சிரமப் பட்டுள்ளார்.

இது கற்பனை கதை என்றாலும்,

அண்மையில்.... இந்தியாவிலிருந்து வந்திருந்த கருப்பு பண பட்டியலிருந்த அரசியல் வாதிகளை பெயரை பார்த்த போது... ஆச்சரியம் தான் மேலிட்டது.

 

அதில், ராகுல் காந்தி, சோனியா காந்தி...உட்பட...

தனக்கு கோபாலபுறம் வீடு தான் ஒரு சொத்து... அதனையும் தான் இறந்த பின் மருத்துவ மனைக்கு, உயில் எழுதி வைக்கப் போகின்றேன் என்று சொன்ன கருணாநிதியும் நினைவுக்கு வந்து சென்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.