Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொண்டர்களுடன் 2–வது நாளாக ஆலோசனை நடத்தும் ஜி.கே.வாசன்: புதியகட்சி 16–ந்தேதி உதயம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டர்களுடன் 2–வது நாளாக ஆலோசனை நடத்தும் ஜி.கே.வாசன்: புதியகட்சி 16–ந்தேதி உதயம்?

 

சென்னை, நவ. 4–

காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கி இருக்கும் முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

 

af060bb8-7dd0-443c-b040-75be9787aeb8_S_s

 

திருச்சியில் பொதுக்கூட்டம் நடக்கும் இடம், தேதி பற்றி கட்சி நிர்வாகிகளுடன் இன்று அவர் 2–வது நாளாக ஆலோசனை நடத்தினார். ஆழ்வார்பேட்டை அசோகா தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

வருகிற 12 அல்லது 16 ஆகிய 2 தேதிகளில் ஒன்றில் பொதுக்கூட்டம் நடத்த இதில் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

தேர்தல் ஆணைய நடைமுறைகள் முடிவதில் காலதாமதம் ஆவதால் தேதியை இறுதி செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. இன்று மாலைக்குள் தேதி இறுதி செய்யப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆலோசனையின்போது ஞானதேசிகன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ், ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ, கோவை தங்கம், ஞானசேகரன், சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஜி.கே.வாசன் ஆதரவாளர்களான சைதை ரவி, இ.சி.சேகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், தாஸ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ மகேஸ்வரி, என்.டி.எஸ். சார்லஸ், என்.எஸ்.விஜயக்குமார், தி.நகர் தோதண்டன், லயோலா லாசர் உள்பட ஏராளமான தொண்டர்கள் அங்கு திரண்டு இருந்தனர். வெளியூர்களில் இருந்தும் ஆதரவாளர்கள் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.

பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

நேற்று நடைபெற்ற புதிய கட்சி தொடக்க விழா கூட்டத்துக்கு வருகை புரிந்த மூத்த முன்னணி தலைவர்கள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எதிர்பார்க்காத அளவிற்கு தொண்டர்கள் திரண்டனர். வரமுடியாத பலர் பல மாவட்டங்களில் இருந்து என்னிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டும் இன்று நேரில் வந்தும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அனைவரது எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் எங்கள் கட்சி செயல்படும்.

புதிய கட்சியின் பெயர், கொடி, அறிவிப்பு தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம். தேர்தல் ஆணைய நடைமுறைகள் முடிவடைந்ததும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரசுக்கும் எங்களுக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடு என்பது இலக்கை எப்படி அடைவது என்ற வழிமுறையில்தான் உள்ளது.

காங்கிரஸ் தொண்டர்களுடன் எங்கள் தொண்டர்கள் நண்பர்களாகவே இருப்பார்கள். எந்த முரண்பாடும் இருக்காது. அப்படி முரண்பாடு இருப்பதை விரும்புவதும் இல்லை.

காங்கிரசின் அகில இந்திய தலைமையை பற்றியோ, தலைவர்களை பற்றியோ யாரும் இழிவாக பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் குறைகூறி கட்சி வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இயக்கம் முதல் நிலை இயக்கமாக வளர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். வெற்றி இயக்கமாக வளர உழைப்போம்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

 

http://www.maalaimalar.com/2014/11/04152758/gk-vasan-met-with-supporters-2.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் எட்டுக்கோடித் தமிழர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். எட்டுக்கோடித் தமிழர்களும் எட்டுக்கோடிக் கட்சிகள் தொடங்கி, எட்டுக்கோடிக் கட்சிகளும் ஒரு நேர்கோட்டில் வரும்போது தமிழின விடுதலை கைக்கு எட்டும். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜி.கே.வாசனின் புதிய கட்சி 12ம் தேதி துவக்க விழா! - பிரபலங்கள் பலரும் இணைய உள்ளனர் !

[Tuesday 2014-11-04 22:00]
gk-vasan-041114-350-india.jpg

ஜி.கே.வாசனின் புதிய கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் என்றே பெயர் சூட்டப்படும். அதே கொடி, அதே சைக்கிள் சின்னம் பெறவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கட்சி தொடக்க விழா திருச்சியில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அட்டையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி படங்களுடன் காமராஜர், மூப்பனார் படங்களும் இடம் பெற்றிருந்தன. இதில் காமராஜர், மூப்பனார் படங்களை எடுத்து விட்டு புதிய உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியது.தமிழகத்தில் காங்கிரசை வளர்த்த காமராஜர், மூப்பனார் படங்கள் இல்லாமல் அடையாள அட்டை கொடுக்க முடியாது என மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன் மேலிடத்திடம் தெரிவித்தார். அதை மேலிடம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபற்றி வாசனும் மேலிடத்தில் தெரிவித்தார். ஆனால் இவர்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

  

 

ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவரிடம் கருத்து கேட்காமல் அகில இந்திய தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததால் அதிருப்தியில் இருந்த ஜி.கே. வாசன், ஞானதேசிகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காமராஜர், மூப்பனார் படங்களை அகற்றும்படி கட்சி மேலிடம் கூறியதை உறுதியாக எதிர்த்தனர். இதைத்தொடர்ந்து ஞானதேசிகன் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவராக முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அறிவித்தது. இதனால் வாசன் ஆதரவாளர்கள் கொதிப்படைந்தனர். இனி காங்கிரசில் இருந்து பயன் இல்லை. சுயமரியாதையுடன் கட்சி நடத்த வேண்டுமானால் தனி இயக்கம் காணவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் வாசன் கருத்து கேட்டார். பெரும்பாலான மாவட்ட தலைவர்கள், முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள், மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுபற்றி நேற்று, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தனது ஆதரவாளர்களை சந்தித்து வாசன் ஆலோசனை நடத்தினார். அதில் புதிய கட்சி தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் வாசன்கூறும்போது, ‘வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற கொள்கையின் மூலம் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், தமிழக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் புதிய அரசியல் பாதையை வகுத்து, அதன் அடிப்படையில் மக்களுக்காக பணியாற்றுவோம்.

 

இன்று தமிழகத்தில் இளைஞர்கள் புதிய விடியலை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் இந்த புதிய இயக்கம் உதயமாகி இருக்கிறது. கட்சியின் பெயர், கொடி பற்றிய விவரங்கள் விரைவில் திருச்சியில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படும் என்றார். தனிக்கட்சி தொடங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜசேகரன், வாசனின் தீவிர ஆதரவாளர். திருச்சியில் தொடக்க விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்யும்படி வாசன், ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கூறினார். நேற்று மாலை ராஜசேகரன், வாசன் மற்றும் மூத்த தலைவர்களை சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

விழா ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்வதற்காக அவர் இன்று அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்தார். மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, மோடி பேசிய பொன்மலை ஜி கார்னர் மைதானத்திலேயே தொடக்க விழா ஏற்பாடுகளை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான அனுமதி பெறுவதற்கு இன்று மனு கொடுக்கின்றனர்.வாசனின் தீவிர ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது: நேரு பிறந்த தினமான 14ம் தேதி தொடக்க விழா நடத்தலாம் என முதலில் கருத்து தெரிவிக்கப்பட்டது. அன்று அஷ்டமி என்பதால் முகூர்த்த தினமான வரும் 12ம் தேதி மாலை திருச்சியில் விழா நடைபெறுகிறது. கட்சியின் பெயர் ஏற்கனவே இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தான். மூப்பனார் இந்த கட்சியை தொடங்கியபோது தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என இருந்தது. இப்போது மூப்பனார் என்பது மட்டும் இருக்காது.

 

சின்னமும் அதே சைக்கிள் சின்னம் தான் கேட்க முடிவு செய்துள்ளனர். அகில இந்திய கட்சியாக உள்ள சமாஜ்வாடி கட்சிக்கு சைக்கிள் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆந்திராவில் மாநில கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும் சைக்கிள் சின்னம் உள்ளது. அதேபோல தமிழகத்தில் மாநில கட்சியாக அமையப்போகும் தமாகாவுக்கும் சைக்கிள் சின்னம் பெறுவதில் சிரமம் இருக்காது.தமாகாவும், சைக்கிள் சின்னமும் தமிழகத்தில் பிரபலமாகவும், வெற்றிசின்னமாகவும் அமைந்ததால் அதையே மீண்டும் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள், டெல்லியில் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து பேசினர். சென்னையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த மினிட் புத்தகத்தையும், வங்கி கணக்கு தொடங்கிய பாஸ் புத்தகத்தையும் கொண்டு வரும்படி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர்.

இன்று அவற்றை சமர்ப்பிக்கின்றனர்.

 

எனவே மீண்டும் தமாகா, சைக்கிள் சின்னம் உதயமாகிறது. சிவப்பு, வெள்ளை, பச்சையில் சைக்கிள் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும் அதே கொடி தான் இப்போதும் பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.திருச்சி தமிழகத்தின் மத்திய பகுதி என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர் வருவதற்கு வசதியாக இருக்கும் என்பதால் திருச்சியை தேர்வு செய்து உள்ளனர். 2 லட்சம் தொண்டர்களை திரட்டி விழாவை சிறப்பாக செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருச்சியும்ஜி.கே.வாசனும்மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அதன் ஆண்டு விழா திருச்சி மரக்கடையில் நடந்தது.

 

இந்த கூட்டத்தில் தான் முதன் முதலாக ஜி.கே. வாசன் பொதுக்கூட்ட மேடையில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அவர் அரசியலில் பல பொறுப்புகளை வகித்தார். இப்போது அவர் தொடங்க இருக்கும் கட்சியும் திருச்சியில் இருந்து தான் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா நட்சத்திரங்கள் திருச்சியில் நடைபெறும் கட்சி தொடக்க விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி தங்கள் பிரமாண்டத்தை காட்ட வாசன் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சினிமா நட்சத்திரங்கள் பலரையும் அதில் பங்கேற்க செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தொடக்க விழாவில் பிரபலங்கள் பலரும் கட்சியில் இணைய உள்ளனர். அவர்களை கவுரவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=120090&category=IndianNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் படு வீக்..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.