Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது இறுதி வெற்றி அல்ல

Featured Replies

முகமாலையில் புலிகள் ஈட்டிய வெற்றியை இறுதி வெற்றி அல்ல

வடபோர்முனையில் சிறீலங்கா அரசாங்கத்தின் நில ஆக்கிரமிப்பு படையெடுப்பு முறியடிக்கப்பட்டமைக்காக, தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஈழநாதம்| நாளேட்டிற்கு கருத்துரைத்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், வடபோர்முனையில் ஈட்டப்பட்ட வெற்றியை இறுதி வெற்றியாகக் கருதி தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு படையெடுப்பிற்கான தயார்படுத்தல்களில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து தமிழ் மக்களும் அணிதிரள்வதன் மூலமே, ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொண்டு வெற்றியீட்ட முடியும் என்றும் இளந்திரையன் சுட்டிக் காட்டியுள்ளார்.

வடபோர்முனை சமரில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த படையினர் உள்ளடங்கலாக, களமுனையில் இருந்து ஆயிரம் வரையான சிறீலங்கா துருப்புக்கள் அகற்றப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் இளந்திரையன், இவர்களில் இருநூறுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, மேலும் முந்நூறு வரையான படையினர் நிரந்தரமாக களமுனைக்கு திரும்ப முடியாது செயலிழந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

சிறீலங்கா படைகள் சந்தித்த மிக மோசமான தோல்வியாக வடபோர்முனை சமர் திகழ்கின்ற அதேவேளை, சிறீலங்கா படைகளின் ஐம்பத்தைந்தாவது டிவிசன் படையணி, பாரிய இழப்பை சந்தித்திருப்பதாகவும் இளந்திரையன் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன், யாழ் குடாநாட்டில் சிறீலங்கா படைகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய கவசப் படையணி ஒன்பது கவச வாகனங்களை இழந்தமை, அரச படைகளின் போர் மூலோபாயத்தை கேள்விக் குறியாக்கி இருப்பதாகவும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

வடபோர்முனையில், சிறீலங்கா படைகளின் நான்கு யுத்த டாங்கிகளும் இரண்டு துருப்புக் காவிகளும், ஆறு கவச வாகனங்களும் முற்றாக சேதமடைந்து, களமுனையில் இருந்து நிரந்தரமாக அகற்றப்பட்டிருப்பதாக, (The Island)த ஐலண்ட் நாளேடு கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.

நன்றி பதிவு .கொம்

pathivu.com

ஈழத்திலிருந்து

ஐானா

எங்கட சூரன்போர் கொண்டாட்டத்தை கெடுத்துப் போட்டாரே :lol: :cry:

உது ஈழநாதம் தாயகத்து நாழிதள் எல்லோ. அதற்கு சர்வதேச பதிப்பு இருக்கோ?

  • கருத்துக்கள உறவுகள்

இளந்திரையன் அவர்களின் செய்தி மக்களை விடுதலைப் புலிகளின் வெற்றியை ஆறுதலாகக் கொள்ள வேண்டாம் என்பதல்ல. அவர் அறிவுறுத்துவது இதுவே இறுதி வெற்றி என்று ஒதுங்கி இருந்துவிடாது மக்கள் எதிரியின் தொடரவிருக்கும் படை நகர்வுகளை எதிர்கொள்ள விடுதலைப் புலிகளுடன் அணிதிரண்டு இறுதி வெற்றிக்கு வழிவகுக்கக் கூடிய வெற்றிகளை ஈட்ட வேண்டும் என்றுதான் கூறியுள்ளார். அவரே மக்கள் இதை வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டுதான் மக்களை எதிரியின் தொடர் திட்டங்கள் நோக்கி விளிப்புணர்வோடு இருக்கும் படியும் அறிவுறுத்துகிறார். இதில் இங்கு சிலர் முன்வைத்த கருத்துக்கும் இளந்திரையன் மக்களை நோக்கி வைக்கும் கருத்துக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. மக்கள் வெற்றியைக் கொண்டாடும் அதேவேளை எதிரியின் எதிர்காலத் திட்டங்களை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என்பதே சொல்லப்படுகிறது. இங்கு அதுவா சொல்லப்படுகிறது. இங்கு எதிரி இழப்புக்குறித்து மக்கள் ஆறுதல் கூட படக்கூடாதாம் என்றெல்லோ அறிவுறுத்தப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்காலத்தின் அதிமுக்கிய கருத்தாகதான் நான் இதை பார்க்கின்றேன். வெற்றிவருகிறபோது அதைகொண்டாடிவிட்டு சிலநாட்களில் அவற்றை மறந்துவிட்டு அதன் சிந்தனையே இல்லாமல் இருப்பதும். பின்னடைவுகள் வருகிறபோது அதோ இதோ எண்டு மும்முரமாக நிற்பதும் தமிழ்மக்களின் இயல்பு. அவ்வாறான செயலைவிட்டு எப்பொழுதும் ஒரே எண்ணத்துடன் தமிழ் மக்கள் இருப்பது முக்கியம் என்ற செய்திதான் இங்கு சொல்லப்படுகின்றது என்று நினைக்கின்றேன்..

  • தொடங்கியவர்

சந்தோஸப்படுவது மட்டுமல்ல அதற்கு மேலும் கடமை தமிழருக்கு உண்டு என்பதனையும் சூசகமாகத் தெரிவிக்கின்றார். அடுத்த கட்டத்திற்கும் தயாராகுங்கள் என்பதே செய்தி.

ஈழத்திலிருந்து

ஐhனா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.