Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் பிரபாகரன் பிறந்தநாளுக்கு தடை, வைகோ கைது: சு.சுவாமியின் கோரிக்கை இது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை தமிழகத்தில் கொண்டாட அனுமதிக்க கூடாது என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் வரும் 26ம்தேதி மாவீரர் நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ் இயக்க போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். எழுச்சியுடன் பிறந்தநாளை கொண்டாட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் பாஜகவில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியன் சுவாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை தமிழகத்தில் கொண்டாட அழைப்பு விடுத்துள்ள வைகோவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்.

 

21-subramanian-swamy4-600.jpg

 

தமிழகத்தில் அதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மாநில அரசின் கடமை. தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதை அறிவுறுத்த வேண்டும். மேலும், சுனந்தா புஷ்கர் மர்மமாக மரணமடைந்தது குறித்து அமைச்சர் சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதே நேரம் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வருகிற 26ம் தேதி விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மாவீரர் நாளாக கொண்டாடப்படுகிறது. இதில் மாணவர்கள் கலந்து கொள்வார்கள். இதேபோல் உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாட வேண்டும் என உலக தமிழர் பேரமைப்பு கேட்டு கொள்கிறது.

மேலும் அன்றைய தினம் தஞ்சை பகுதியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். உண்மையான தமிழர்கள் பிரபாகரனின் பிறந்தநாளை மாவீரர் தினமாக கொண்டாடுவார்கள். இலங்கையில் இனப்படுகொலை நடக்க காரணமாக இருந்தவர்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை புரிந்தவர்கள் இந்த மாவீரர் தினத்தை கொண்டாடுவதை எதிர்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

http://tamil.oneindia.com/news/tamilnadu/subramaniyan-swamy-seeks-ban-on-prabhakaran-s-birth-ann-celebration-in-tn-215360.html

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒன்று நினைக்க கொழும்பு மக்கள் ஒன்று நினைக்கினம்......மாற்றங்கள் ஒன்றே மாறது.....

"புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடினால்,வைகோ வை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென" தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளான் சுப்பிரமணிய சாமி எனும் கோமாளி.இவனுக்கெல்லாம் வைகோ பதில் சொல்லத் தேவையேயில்லை என்ற பொழுதிலும்,நாம் அவனுக்கு ஒரு சம்பவத்தை நினைவு படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தியப் பாராளுமன்றத்தில் "பார்லிமென்ட் டைகராக" வைகோ உலவிய காலம் அது.அன்றைக்கும் இதே சு.சாமி,அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம்,"வைகோ எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் " என்று வழக்கம்போல் உளறியிருக்கின்றான்.மறுநாள் நாடாளுமன்ற நடவடிக்கையில் பங்கு கொள்ள வந்த வைகோ விடம் அதே பத்திரிக்கையாளர்கள் சு.சாமியின் கூற்றைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள்.அதற்கு,

"He doesnot deserve my threat" என்று செவிட்டிலறைந்தார் போல்,நொடிப் பொழுது தாமதிக்காமல் பதில் தந்தாராம் வைகோ.

வைகோ வை விமர்சிக்கவும் ஒரு தகுதி வேணும் ..

 

துரை ..பேஸ்புக் .

 

 

"

வைகோ ஐயாவை   விமர்சிக்கவும் ஒரு தகுதி வேணும் .. :)

 

துரை ..பேஸ்புக் .

 

 

10408732_392042930949076_728498092667198

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.