Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெங்களூருவில் கைதான ஐ.எஸ். தீவிரவாதி பற்றிய பரபரப்பு தகவல்கள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு: டிவிட்டர் மூலம் ஐ எஸ் அமைப்பை நடத்தியதாக கைதான பெங்களூரு ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த வாலிபர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட  பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியைக்  கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்த பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.

உலகின் மற்ற நாடுகளிலும் தங்கள் இயக்கத்தின்  செயல்பாடுகளைத்  தொடங்கும் முயற்சிகளில் ஐ.எஸ். அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களது இந்த திட்டத்துக்கு டிவிட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக  இணையத் தளங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்ற  தகவல் இந்தியாவில்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக டிவிட்டர் இணையதளத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்காகப்  பல கணக்குகள் உள்ளன. அவற்றில் ’ஷமிவிட்னஸ்’ என்ற கணக்கு மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த வலைத்தளம் கணக்கு மூலம் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தகவல்கள் உடனுக்குடன் உலகம் முழுவதும் உள்ள அவர்களின்  ஆதரவாளர்களைச்  சென்று அடைந்தது.

அது மட்டுமின்றி ஷமிவிட்னஸ் வலைத்தளம் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவு திரட்டப்பட்டது. மேலும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்த்து விடும் வேலையையும் இந்த வலைத்தளம் செய்து வந்தது. இதனால்  மிகக் குறுகிய காலத்தில்  இந்த வலைத்தளம் தீவிரவாதிகள் மத்தியிலும், புலனாய்வுத் துறையினர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.

ஷமிவிட்னஸ் வலைத் தளம் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பலம் பெருகியதால், அது உலகுக்கே சவால் விடும் வகையில் அச்சுறுத்தலாக மாறி வந்தது. இதனையடுத்து  இங்கிலாந்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ’சானல்  4’  இணையதளத்தில் ஷமிவிட்னஸ் பற்றி  தீவிரமான ஆய்வை செய்தது.

அப்போது இந்த வலைத் தளம் கணக்கு இந்தியாவில் பெங்களூருவில்  இருந்து இயக்கப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்தது. தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வில்,   அந்த வலைத் தளத்தை மெஹதி என்பவர் இயக்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கணக்கை 17,700 பேர் பின் தொடர்வதும், மாதந்தோறும் மெஹதி அந்த வலைத்தளத்தில் ஐ.எஸ். தீவிரவாதம் பற்றி சுமார் 20 லட்சம் தகவல்களை வெளியிட்டிருப்பதையும் கண்டு பிடித்தது.

இதையடுத்து சானல்-4 நிருபர்கள், மெஹதியைத்  தொடர்பு கொண்டு பேசியுள்ளார்கள். அவர்களிடம்  மெஹதி, ’என் குடும்ப  சூழ்நிலை காரணமாக ஐ.எஸ். இயக்கத்தில் சேர இயலவில்லை. என்றாலும் அந்த இயக்கத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துள்ளதாகக்  கூறியுள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்காக வேலை செய்தது ஏன்? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட் டார்.  இந்த தகவல்களை `சானல் 4` தொலைக்காட்சி கடந்த புதன்கிழமை ஒளிபரப்பு செய்தது. இதனையடுத்து இந்தியா மற்றும் உலக நாடுகளிடையே பரபரப்பு  ஏற்பட்டது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப் புக்கான டுவிட்டர் வலைத் தளம் பெங்களூருவில் இயக்கப்படுகிறது என்ற தகவல் வெளியானதும் இந்திய அரசும், மத்திய புலனாய்வுத் துறையினரும், பெங்களூர் போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த வலைத் தளத்தை நடத்தும் மெஹதியைக்  கைது செய்ய  தேடுதல் வேட்டை   நடத்தினார்கள். ஆனால் அதற்குள் அவர் அந்த வலைத்  தளத்தை மூடி விட்டு தப்பி விட்டார். இதனால் பெரிய போலீஸ் அதிகாரிகள் தங்களது தேடுதலைத் தீவிரப்படுத்தினர்.

 இறுதியில்  மெஹதி பெங்களூரு  போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர் இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்காக  மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் தெரியத் தொடங்கி உள்ளது.

அவரின்  முழுப் பெயர் மெஹதி மசூர் பிஸ்வாஸ். இவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொழில் நுட்பக் கழகத்தில்  பொறியியல் படித்துள்ள இவர் கடந்த 2011ஆம் ஆண்டு பெங்களூருவுக்கு  வந்துள்ளார்.  அங்குள்ள ஒரு மல்டி நேஷனல் உணவு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்ய இவர் பெங்களூருவில் ஒரு கிளை அமைப்பைத்  தொடங்கி நடத்தி வந்துள்ளார். இஸ்லாமிய நாடு உருவாக்கப்பட்டுள்ள ஈராக், சிரியாவுக்கு, பெங்களூர் ஐ.எஸ். கிளை மூலம் ஆட்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதை இன்று காலை பெங்களூர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அரிசேகரன் உறுதிபடுத்தினார்.

பெங்களூரு  ஐ.எஸ். அமைப்பில் ஏராளமான  இளைஞர்கள் இணைந்து  இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களை வேட்டையாட கூடுதல் கமிஷனர் அரிசேகரன் தலைமையில் தனிக்குழு அமைக்கப் பட்டுள்ளது. பெங்களூரு ஐ.எஸ். அமைப்பு மூலம் இந்தியாவில் பல நகரங்களில் நாச வேலைக்கு திட்டமிடப்பட்ட தகவல்களும் தெரிய வந்துள்ளன.

இதுதொடர்பாக மெஹதியிடம் விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.மெஹதி யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவரது செல்போன் தொடர்புகளையும் புலனாய்வுத் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மெஹதி பெங்களூருல் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் தன் சொந்த ஊர் மேற்கு வங்க is%20terorist%282%29.jpgமாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் என்று வலைத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த பெயரில் எந்த ஊரும் மேற்கு வங்கத்தில் இல்லை என்று அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.எனவே மெஹதி மசூர் பிஸ்வாஸ் பற்றி பல  மர்மங்கள் எழுந்துள்ளன. உண்மையிலேயே அவர் யார்? ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு வேறு என்னென்ன உதவிகள் செய்தார் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

மெஹதி மசூர் பிஸ்வாஸ் பற்றிய தகவல்களை திரட்ட அனைத்து மாநில உளவுத் துறைக்கும் உத்தர விடப்பட்டுள்ளது. இதை யடுத்து மேற்கு வங்க உளவுத் துறையினர் இன்று கொல் கத்தாவில் இருந்து பெங்க ளூரு  வந்தனர். அவர்களும் மெஹதியிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஷமிவிட்னஸ் வலைத் தளம் கணக்கு முலம் உலகம் முழுவதும் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் மெஹதி மசூர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகளில் மூன்றில் இரண்டு பேர் மெஹதி மசூரின் ஷமிவிட்னஸ் இணையத்தள பக்கத்தை தினமும் பின் தொடர்ந்துள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் வட்டாரத்தில் மெஹதியை ’அக்கூனு ஷமி’ என்று புனை பெயரில் அழைக்கப்பட்டது  தெரிய வந்துள்ளது. டிவிட்டரில் இவர் 2 வலைத்தள பக்கங்களை நடத்தி வந்துள்ளனர். அதில் ஷமி விட்னஸ் பக்கம் முழுவதிலும் ஐ.எஸ். தீவிர வாதிகளின் புகழ் பாடும் தகவல்கள், செய்திகள் இவர் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

பெங்களூருவில் இவர் வேலை பார்த்த நிறுவனம் மற்றும் அவர் தங்கியிருந்த வீட்டிலும்  போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு  ஷமி விட்னஸ் வலைத் தளத்தில் செய்தி ஏற்றப்பட்டதற்கான கணினி ஆதாரங்கள்  எதுவும் கிடைக்கவில்லை. எனவே பெங்களூருக்கு வெளியில் ரகசிய இடத்தில் இந்த இணையதளம் இயக்கப்பட்டு வந்து இருக்கலாம் என்று போலீஸ் வட்டராங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=36138

  • கருத்துக்கள உறவுகள்

சனல் நான்கில் மோட்டுத் துணிவாக தொலைபேசியில் இவர் உரையாடியபோதே நினைத்தேன். சீக்கிரம் உள்ளேதான் என்று. சிபிஐ எல்லாம் சும்மாவா இருப்பார்கள்!

இப்படி ஒரு இணையத்தளம் இந்தியாவில் இயங்குகிறது என்று தெரியாமலே இருந்திருக்கிறது இந்தியப் புலனாய்வுத்துறை !!   :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு இணையத்தளம் இந்தியாவில் இயங்குகிறது என்று தெரியாமலே இருந்திருக்கிறது இந்தியப் புலனாய்வுத்துறை !!   :wub:

 

எப்படி ? அபொட்டாபாட்டில் ஒசாமா பின்லாடன் இருந்தது தமக்குத் தெரியாது என்று பாக்கிஸ்த்தான் சொன்னது போலவா? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.