Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு பிரிப்பு ஜெனீவாவில் முக்கிய இடத்தை பிடிக்கும

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு பிரிப்பு ஜெனீவாவில் முக்கிய இடத்தை பிடிக்கும் சாத்தியம்

இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜெனீவாவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் வடகிழக்கை பிரிப்பது குறித்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கிய விவகாரமாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் இது தொடர்பாக மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் குறித்து அது விவாதிக்கப்போவதில்லை.

இன்னொரு பக்கத்தில் சிங்கள பெரும்பான்மை சமூகம் இந்த தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாக சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் விட்டுக் கொடுப்பு எதனையும் அது ஏற்கப் போவதில்லை.

வடகிழக்கை பிரிக்ககூடாது என சர்வதேச சமூகம் கொடுத்து வரும் அழுத்தத்திற்கும் அரசாங்கம் உட்பட்டுள்ளது.

அமெரிக்கா வெளிப்படையாக வடகிழக்கை பிரிப்பதை எதிர்த்துள்ளது. வடகிழக்கை பிரிப்பது இனங்களுக்கு இடையேயான பிரிவை மேலும் அதிகரிக்கும். இன மோதலை மேலும் கூர்மைப்படுத்தும் என சர்வதேச சமூகம் கருதுகின்றது.

இதற்கு மாறாக விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளின் போது இந்த விடயத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்கள். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கப்போவதில்லை என்ற புலிகளின் வாதத்திற்கு இது வலுச்சேர்க்கின்றது.

ஆயுதப்போராட்டம் மூலமான பிரிவினையே இதனால், சாத்தியமாகும் என்பதை புலிகள் வலியுறுத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தைகளின்போது அரசாங்கம் இந்த விடயத்தில் தற்பாதுகாப்பு நிலையையும், இதற்காக வருந்தும் நிலைப்பாட்டையும் கடைப்பிடிக்கும்.

விடுதலைப் புலிகள் சர்வதேச உலக முன்னிலையில் இந்த விடயத்தை முழுமையாக பிரசாரம் செய்வர். ஒரு வகையில் இது அரசாங்கம் தானாக தேடிக் கொண்ட நெருக்கடி. ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகளின் போது யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவது, ஏ௯ பாதையை திறப்பது போன்ற மனிதாபிமான விடயங்கள் போன்றவை குறித்தே கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கவும் மிக மோசமாக மீறப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும் அரசாங்கம் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியது.

எனினும், வடகிழக்கை பிரிப்பது என்ற முக்கிய விவகாரத்தை பேச்சுவார்த்தை மேசைகளில் எதிர்கொள்வது அரசிற்கு கடினமாக அமையும். எனினும், பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இன்னமும் கால அவகாசமுள்ளது. வடகிழக்கு இணைப்பு தொடர்வதை உறுதி செய்வதற்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளை நவம்பர் 16 வரை எடுக்கலாம்.

உயர்நீதிமன்றம் சட்ட அடிப்படையிலேயே தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

கிழக்கு மாகாணத்தில் நவம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் இணைப்பு தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

அரசாங்கம் குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் மாகாணசபைகள் சட்டமூலத்தை மாற்றலாம். எதிர்க்கட்சி இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு உதவ முன்வந்துள்ளது. இதன் காரணமாக அரசாங்கம் சட்டத்தை மாற்றலாம். எனினும், சிங்கள பெரும்பான்மை சமூகத்திற்கு இதனால், ஏற்படும் பாதிப்புகளை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நவம்பர் ஏழாம் திகதிக்கு முன்னர் இணைப்பு குறித்து எடுக்கவுள்ள பொருத்தமான நடவடிக்கைகளை அறிவிக்குமாறு கேட்டுள்ளது.

எனினும், ஜெனீவா பேச்சுவார்த்தைகள் அதற்கு முன்னர் இடம்பெறுகின்றது. அரசாங்கம் அதுவரை இந்த விடயத்தில் அமைதியாக இருந்தால் விடுதலைப் புலிகள் ஜெனீவாவில் இந்த விடயத்தில் வெற்றிபெறுவார்கள்.

-தினக்குரல்

தமிழ் செல்வனின் இந்த பேட்டியை கேட்டால் தெரியும் வடக்கு கிழக்கு சேர்ப்பு - பிரிப்பு விவகாரம் முக்கியம் பெறாது எண்டு.

http://www.pathivu.com/?ucat=sirappu_paarv...vai&file=201006

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாப் பேச்சுவார்த்தை நடக்கும்போது, சிறிலங்கா அரசின் யாழ்பாணப் பொருளாதாரத் தடை, மற்றும் சிறுமிகள், மற்றும் பொதுமக்கள் படுகொலைகள் பற்றி ஆர்ப்பாட்டம், அல்லது அமைதிப் பேரணி நடத்தினால் என்ன?

இது என் தனிப்பட்ட எண்ணமாகும். விளைவுகள் எப்படியிருக்கும் எனப் பெரியவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால், அப்படி நடப்பின், அதில் கட்டாயம் சிறிலங்கா அரசைச் சாடித் தெளிவான வாக்கியங்கள் அமைத்தல் நல்லது. இல்லாவிட்டால், சிறிலங்கா அரசும், கைக்கூலிகளும் அதைத் திரிவுபடுத்தி ஆதாயம் தேடுவார்கள். எனவே அது குறித்தும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.