Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தைக்கு உபதேசித்த பிள்ளை(சிட்னி கோசிப் 6)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பனின் மகளை பாடசாலக்கு அனுமதி எடுத்து விட்டு,கோயிலுக்கு செல்லும் பிளானில் நண்பனோடு பயணித்து கொண்டு இருந்தேன் பயணித்தின் போது ந்ண்பன் சில மனகுறைகளை புலம்பி கொண்டு வந்தார்,எனக்கு பிள்ளைகளை இங்கு வளர்க்க விருப்பமில்லை காரணம் இவங்களின் பழக்கங்களை எல்லாம் பழகி போடுவார்கள் என்ன செய்வது என்று பல்லை கடித்து கொண்டு இருக்கிறேன் என்றார்.

பாடசாலை நெருங்கியவுடன் மக்ளௌக்கு சில அறிவுறைகளை சொன்னார்.அதிபர் விலாசத்தை கேட்டால் வசந்தா அன்டியின் அட்ரஸ்சை கொடுங்கோ என்றார்,பிள்ளை அது எங்கன்ட அட்ரஸ் இல்லை என்று சொன்ன போது நான் சொல்லுகிறேன் செய் என்று பிள்ளையை ஒரு பர்வை பார்த்தார் பிள்ளை கப்சிப்.(இது நல்ல பாடசாலை எங்கன்ட சப்பேர்பில் நல்ல பாடசாலை இல்லை இங்கே தான் எங்கன்ட ஆட்கள் எல்லாம் விடுகிறவை என்று எனக்கு ரகசியமாக சொன்னார்).

பாடசாலக்குள் உட்பிரசித்தவுடன் காரை நோ பார்க்கிங்கில் விட்டார்,பிள்ளை அப்பா இது நோ பாக்கிங் என்றது.அது எனக்கு தெறியும் நீ சத்தம் போடாமல் வா என்று அழைத்து கொண்டு உட் சென்று அதிபரின் காதில் பூ சுற்றி(அவருடைய பெயரில் உள்ள வசந்தா அன்டியின் விலாசத்தில் உள்ள அத்தாட்சி பத்திரங்கள் எல்லாம் காட்டி)அனுமதி பெற்று கொண்டு,மீண்டும் காரில் கோயிலுக்கு பயணமானோம்.கோயிலுக்கு முன் நோ ரைட் டேர்ன் இருந்தது,ஆனால் அவரோ அதில் தான் ரைட் டேர்ன் எடுத்தார்.பின்னுக்கு வந்த வாகனக்காரர் இவரை 2 கெட்ட வார்த்தைகளால் திட்டி நடுவிரலை காட்டி விட்டு செல்ல இவரும் பதிலுக்கு திட்டி போட்டு சொன்னார்கள் நாங்கள் கறுப்பன்கள் அது தான் அவங்கள் அப்படி செய்தார்கள் என்று குறை பட்டு கொண்டார்(அவர் செய்த பிழையை அவர் உணரவில்லை).

கோயிலுக்குள் சென்றவர் காரை மற்றவர்களுக்கு இடைஞ்சலாகா காரை குறுக்காக நிற்பாட்டி விட்டார்.அப்போது பிள்ளை இப்படி பார்க் பண்ணிணால் மற்றவர்கள் காரை எடுக்க ஏலாது என்று சொல்ல அவைக்கு தேவை என்றால் அவர்கள் மைக்கில் அறிவிப்பார்கள், பூசைக்கு நேரமாயிச்சு சத்தம் போடாம ஓடி வா என்று தானும் ஓடி சென்றார்(இவர் நேரத்திற்கு ஓடாவிட்டால் முருகன் எழுந்து ஒடி விடுவார் என்ற நினைப்பு)

பூசை முடிந்தவுடன் கோயிலுக்கு வெளியே பிரசாதம் கொடுக்கபட்டது,அவரின் பிள்ளை ஒழுங்காக லைனில் நிற்கும் போது இவர் வந்து ஓடோடி முன்னுக்கு சென்று தெரிந்தவர் ஒருவருடன் உரையாடி கொண்டு அவருக்கு முன்னால் போய் இரண்டு பிளேட்டில் பிரசாதம் எடுத்து கொண்டு,நான் எடுத்து விட்டேன் வாங்கோ என்று என்னையும் கூப்பிட்டு கொண்டு காருக்கு சென்றார்,பிள்ளை கேட்டா ஏன் லைனில் நிற்காம உள்ளுகுள் போனீங்கள் என்று கேட்ட போது அந்த அங்கிள் என்னை அழைத்து தந்தவர் நான் குறுக்கால போகவில்லை என்று பெருமையாக சொன்னார்.எல்லாம் முருகனின் கிருபை என்று அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தார்.

காரில் ஏறி வீடு நோக்கி பயணிக்கும் வேளையில் அவர் ஒரு கசட் ஒன்றை எடுத்து போட்டார் அதில் ஒரு பெரிசு ஆங்கிலத்தில் சிறப்பாக வாழ சிறந்த வழிமுறைகள் என்ற தலைப்பில் விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார்,இதை கேட்டு கொண்டு நண்பர் சொன்னார் இவர் சொல்வது எல்லாம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்று சொல்லி பெரிசை பற்றி புகழாரம் சூடினார்.இந்தியாவிற்கு சென்றால் கட்டாயமாக அவரை பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்.பிள்ளை என்னை பார்த்து சிரித்தது எனக்கோ தலை சுற்றியது ஒரு மாதிரி வீடு வந்து சேர்ந்து நேரடியாகவே யாழ்களத்திற்கு சென்றேன் அப்ப மனிசி கத்த அன்றைக்கு எழுத இயலாமல் போச்சு இன்றைக்கு நல்ல நேரம் நான் பிழைத்து கொண்டேன்.

தாத்தா ம்ம் லண்டனிலும் இப்படி பலர் இருக்கிறார்கள் அதுக்கு தான் சொன்னார்களாக்கும் தன்னைத் தானே திருத்து சமுதாயம் திருந்தும் என்று இவரைப் போல உள்ளவர்கள் தங்களைத் திருத்தினால் எல்லாம் சரிவரும். அந்த பிள்ளைக்கு தெரிகிறது அவருக்கு புரியவில்லை அது தான் கரிகாலம்.

எல்லாம் சரி உங்களுக்கு ஒரு நாளைக்க என்றாலும் பாட்டியை குறை சொல்லாவிட்டால் நித்திரை வராதா வாறேன் பாட்டியிடம் போட்டுக் கொடுத்து விடுகின்றேன் :lol::lol:

புத்தன் நகைச்சுவையோடு நல்ல விசயம் ஒன்றை எழுதியுள்ளீர்கள். இப்படி பலரை அடிக்கடி காணலாம். :P

புத்தா ஆதியைப்பற்றி எழுதின மாதிரிக்கிடக்கு.....

யாழுக்குள்ள யாரேனும் லஞ்சம் கொடுத்தாங்களா?

பூசைக்கு நேரமாயிச்சு சத்தம் போடாம ஓடி வா என்று தானும் ஓடி சென்றார்(இவர் நேரத்திற்கு ஓடாவிட்டால் முருகன் எழுந்து ஒடி விடுவார் என்ற நினைப்பு)

.

அவர் ஒடி போனது அன்னதான் கியுவுக்காக தான் இருக்கும்

:wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

நேரில் கண்டதை அப்படியே எழுதியிருக்கிறிங்க புத்தன் சார். இப்படி இங்கும் பலரை கண்டிருக்கிறேன். பெரியவர்கள் செய்வதை எல்லாம் செய்துவிட்டு சிறுசுகள் மீது அநியாயமாய் பழி போடுகினம். அவர்கள் செய்தததையே காலம் கடந்து பிள்ளைகள் செய்யும் போது தான் ஞானக்கண் திறக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் இப்படி பலர் பல மாதிரி :roll: பிள்ளைகளுக்கு பொய் சொல்ல கற்றுக்கொடுப்பதே பெற்றோர் தானே :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.