Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஈழம் ” தான் தன்னை தோற்கடித்தது என்னுடைய மக்கள் என்னை தோற்கடிக்கவில்லை ஆகவே நான் தோல்வியை சந்தித்ததாக எண்ணவில்லை – மகிந்த ராஜபக்ச

Featured Replies

“ஈழம் ” தான் தன்னை தோற்கடித்தது என்னுடைய மக்கள் என்னை தோற்கடிக்கவில்லை ஆகவே நான் தோல்வியை சந்தித்ததாக எண்ணவில்லை – மகிந்த ராஜபக்ச

IMG_85771-620x354.jpg

“ஈழம் ” தான் தன்னை தோற்கடித்தது என்னுடைய மக்கள் என்னை தோற்கடிக்கவில்லை ஆகவே நான் தோல்வியை சந்தித்ததாக எண்ணவில்லை என முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொந்த ஊரான மெதமுல்லவில் கருத்து

தேர்தலில் தோல்வியடைந்தால் நான் அமைதியான முறையில் வெளியேறுவேன் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளரிடம் உறுதியளித்திருந்தேன். இதற்கு அமையவே நான் நல்லாட்சிக்காக அதிகாரத்தை அமைதியான முறையில் கையளித்து விட்டுச் சென்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

நான் நீதியானதும் சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடாத்த ஒத்துழைப்பு வழங்கினேன்.

மேலும் நான் அமெரிக்காவுக்கு தெரிவித்திருந்தற்கமைய அமைதியான முறையில் ஆட்சியை கொடுத்து விட்டுச் சென்றேன்.

தேர்தல் முடிவுகள் கிடைக்கப் பெற்று இதுவரையான காலப்பகுதியில் எமது ஆதரவாளர்கள் மீது வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன .

இவ்வாறான சம்பவங்களுக்கு புதிய ஜனாதிபதி இடம்கொடுக்க கூடாது எனவும் அவருடைய எதிர்கால செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க ஒன்றுபட வேண்டும் என பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

தனது இந்த அழைப்பை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்வார்கள் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இன்று, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, பத்திரிப்பில், நாட்டு மக்களுக்கான தனது முதலாவது உரையை நிகழ்த்தினார்.

இது ஒரு விவசாய நாடு, தமது அரசாங்கத்தில் விவசாயத்துறையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன்போது கூறினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரங்கள் பாராளுமன்றம், அமைச்சரவை மற்றும் நீதித்துறைக்கு மாற்றப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது உறுதியளித்துள்ளார்.

அத்துடன் நாட்டிற்கு அதிகளவு அன்னிய வருமானத்தை ஈட்டித்தருபவர்களான, வெளி நாடுகளில் பணிப் பெண்களாக உள்ளவர்களின் தனிப்பட்ட பொருளாதாரத்தை முன்னேற்றி அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

எமது நாட்டுக்கு தேவை அரசன் அல்ல உண்மையான மனிதன் என கூறிய அவர், சத்தியப் பிரமாணத்தின் போது, தான் தெரிவித்ததற்கு அமைய இதுவே தான் களமிறங்கிய முதலாவது மற்றும் இறுதியான ஜனாதிபதித் தேர்தல் எனவும் மேலும் சுட்டிக்காட்டினார்.

http://tamilfm.cmr24.net/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/

 

  • கருத்துக்கள உறவுகள்
மஹிந்த, கோத்தாபய மீது விசாரணை – மங்கள தெரிவிப்பு!

 

manhala.jpgஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் சதிப்புரட்சியொன்றிற்கு முயற்சிகளை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டுக் குறித்து விசாரணைகள் இடம்பெறும் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கண்டியில் இன்று அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதை தடுக்குமாறு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டுள்ளனர். நீதியான சுதந்திரமான தேர்தலொன்றை உறுதிசெய்யதமைக்காக நாடு அவர்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளது. புதிய அமைச்சரவை ஏற்படுத்தப்பட்ட பின்னர் சதிப்புரட்சி முயற்சிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகும்.

மக்களுக்கு உண்மைகள் தெரிவிக்கப்படும். மக்களின் ஆணைக்கு எதிராக ராஜபக்‌ஷ செயற்பட முயன்றார் என்பது மக்களுக்குத் தெரியவேண்டும். வாக்களிப்பு தினத்தன்று நாடு அமைதியாக காணப்பட்டாலும் திரைமறைவில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்பபடுத்தவேண்டும். தோல்வியை ஏற்றுக்கொள்ளதா ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் வதந்திகளை பரப்பிவருகின்றனர். இவ்வாறான பதற்றத்தை ஏற்படுத்த எந்த குழுவிற்கும் புதிய அரசு இடமளிக்காது. – என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://tamilleader.com/?p=46158

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை ஜனாதிபதியாக்கியதும் ஈழம் தான்என்பதையும் இவ்வளவு இலகுவாய் மறந்ததால்த்தான் தாேற்கடித்தாா்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை நல்லூர்க் கந்தனும் கை விட்டுவிட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

“ஈழம் ” தான் தன்னை தோற்கடித்தது என்னுடைய மக்கள் என்னை தோற்கடிக்கவில்லை ஆகவே நான் தோல்வியை சந்தித்ததாக எண்ணவில்லை – மகிந்த ராஜபக்ச

 

ஈழம்

புலிகள்.... தடை செய்யப்பட்ட சொற்கள் தமிழருக்கு மட்டும்..

 

 

சிங்களவர் ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு மேடையிலும்

ஒவ்வொரு நாடாளுமன்றநிகழ்விலும்

சர்வதேசங்களிலும் உச்சரித்து பயன் பெறும் சொல்......

 

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.