Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி, சர்வதேச சமூகத்தின் பதில் நடவடிக்கை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனி, சர்வதேச சமூகத்தின் பதில் நடவடிக்கை என்ன?

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடை யிலான "ஜெனிவா - 2' அமைதிப் பேச்சுகள் பயன் ஏதுமின்றி - தோல்வியில் முடிவடைந்துவிட்டன.

இந்தப் பேச்சுகள் மூலம் சமாதான முயற்சிகளில் ஆக்கபூர்வமான முன் நகர்வு கிட்டும் என்று பலரும் கனவு கண்டார்கள். எனினும், இப்படித்தான் இது முடியும் என்பது எதிர்பார்க்கப்பட் டதுதான்.

""இலங்கை அரசுடன் நடத்தும் இந்தப் பேச்சுகளில் எமக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப் புக்கு இடமளித்து இந்த இறுதிக்கட்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்குடன் ஜெனிவாவுக்குப் புறப்படுகின்றோம்.'' - என்று இந்தப் பேச்சுக்காகத் தாயகத்திலிருந்து புறப்படு முன் னரே புலிகளின் பேச்சுக்குழுத் தலைவர் சு. ப. தமிழ்ச்செல்வன் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.அதுவே நடந்துமிருக் கின்றது.

சரி,இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அமைதிப் பேச்சுகளுக்கு வரையறைகளை- வரம்புகளை - எல்லைகளை திணிக்க முயன்ற சர்வதேச சமூகம் இனி என்னசெய்யப் போகின்றது என்பதே இன்றைய கேள்வியாகும்.

பேச்சுகள் நடைபெறவேண்டிய மார்க்கம் தொடர்பாக சர்வ தேச சமூகம் காட்டிய வழிமுறைகளில் முதலாவது - விரைந்து கவனிக்கப்பட வேண்டியது - பாதிக்கப்பட்ட மக்களின் மனி தாபிமானப் பிரச்சினைகளை உடன் தீர்ப்பது பற்றி சிரத்தை எடுப்பதாகும். அந்த விவகாரத்தில்தான் "ஜெனிவா - 2' பேச்சு முடங்கிப்போய் நிற்கின்றது.

அதுவும் சர்வதேச சமூகம் விடாது வலியுறுத்திவந்த - யுத்தநிறுத்தத்துக்கு வழி வகுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்துங்கள் என்ற- கோரிக்கையை ஒட்டியே இம்முறை பேச்சு தோல்வியடைந்திருக்கின்றது.

"ஜெனிவா - 1' பேச்சுகளுக்குப் பின்னர் எழுந்த மனிதப் பேரவலங்களில் யாழ். குடாநாட்டில் திறந்தவெளிச் சிறைக் குள் சிக்கியுள்ள ஆறுலட்சம் மக்களின் மனிதாபிமான நெருக் கடி மிக முக்கியமானதாகும்.

அப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் எழுந்த சிக்கலே இம்முறை பேச்சு தடைப்பட்டு,பயனின்றி முடிவுற்ற தற்குப் பிரதான காரணம் என்பதும் வெள்ளிடைமலை.

யாழ். குடாநாட்டில் முப்பது சதவீத நிலப்பரப்பை பாது காப்பு உயர்வலயம் என்ற பெயரில் கபளீகரம் செய்துகொண்டு, அறுபதாயிரம் துருப்புகள் குடாநாட்டை ஆக்கிரமித்து நிற்க, அதற்கான ஒரேயொரு தரைவழிப் பாதையையும் அரசுத்தரப்பு கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக மூடி வைத்திருப் பதன் மூலம் அந்த மக்களைத் திறந்த வெளிச் சிறைக்குள் தள்ளி மனிதப் பேரவலத்தை அரசுத்தரப்பு உருவாக்கி நிற்கின் றது என்று தமிழர்களின் பக்கத்தில் வலுவாகச் சுட்டிக்காட்டப் பட்டது.

தரைவழிப் பாதையை மூடி புதிய "பேர்லின் சுவரை' தோற்றுவித்த இந்த நடவடிக்கை எத்தகைய பாரியதொரு மனிதப் பேரவலத்தை உருவாக்கியிருக்கிறது என்பதை ஏற் கனவே பல தடவைகள் இங்கு விவரித்தாயிற்று.

யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப்பாதை திறக்கப்பட வேண்டும் என்பது யுத்த நிறுத்தத்துக்கு வழிவகுத்த புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கூறப்பட்ட ஒன்று.

அது மட்டுமல்லாமல் சுமார் எட்டு ஆண்டுகால கொடூரயுத்தத்துக்குப் பின்னர் அரசு - புலிகள் செய்துகொண்ட புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் பயனாகத் தமிழர் தரப்புக்கு கிடைத்த ஒருசில சாதக அம்சங்களில் - செய்யப்பட்ட நியாயங்களில் - பிரதானமானது இந்தப் பாதை திறப்புத்தான். அந்த நியாயத் தையும், நான்கரை ஆண்டு காலத்துக்குள் குழப்பி மீண்டும் அநியாயத்தையும், அவலத்தையும், கொடூரத்தையும் இழைக் கச் செய்யும் வேலையாக பாதை மூடப்பட்டிருக்கின்றது.

இந்த மனிதப் பேரவலத்துக்கு யுத்தநிறுத்த ஒப்பந்தத்துக்கு அமைவாகத் தீர்வுகாண இணங்குவதற்கு மறுத்துள்ள அரசுத் தரப்பு, திறந்த வெளிச் சிறைபோன்ற பிரதேசத்திற்குள் சிக்கி யுள்ள "கைதிகளுக்கு'உணவளிப்பது பற்றிப் பேச முற்படு வதைப் புலிகள் தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கின்றன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மடுக் காட்டில் அந்தரப்படும் மக்கள் கப்பல் மூலம் யாழுக்கு அனுப்பி வைக்கப்படுவர். வன்னிக்கும் யாழுக்கும் மாணவ மாணவிகள், வர்த்தகர்கள், உறவினர் வந்து போவதற்கு கொழும்பு மூலமாக கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும். கொழும்பில் தங்கும் வசதிகள் (காலவரையன்றி தடுப்புமுகாம்கள்) கேட்காமலேயே செய்து கொடுக்கப்படும்! கப்பல்களில் UN அதிகாரிகள் வடபகுதி இராணுவத்திற்கு தேவையான (மக்களைக் கொல்ல) குண்டுகளை அனுப்ப மேற்பார்வை செய்வார்கள்!

ஜநா கொடியுடன்,,???? கப்பல் ஏஜன்ட் யார் தாடி வாலாவா?

ஈழத்திலிருந்து

ஜானா

சர்வதேசம் என்ன செய்யும்...???? புலிகள் இராணுவத்தின் மீது நடத்தும் தாக்குதல்கள் நிறுத்தபடவேணும் எண்டு அறிக்கைவிடும், பின்கதவாலை பாக்கிஸ்தானுக்கு காசுகுடுக்கும் இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பிவைக்க....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.