Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3 மணிநேரப் பேச்சில் தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வு – விபரங்களை வெளியிட இந்தியா தயக்கம்

Featured Replies

3 மணிநேரப் பேச்சில் தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வு – விபரங்களை வெளியிட இந்தியா தயக்கம் JAN 19, 2015 | 2:23by இந்தியச் செய்தியாளர்in செய்திகள்

Sushma-Mangala-300x200.jpgதமிழர்களுடன் அரசியல் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம், இந்தியா வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லியில் நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில், சுமார் 3 மணிநேரமாக சந்திப்பு இடம்பெற்றது.

வழக்கத்துக்கு மாறான முறையில் மிக நீண்டநேரமாக நடந்த இந்தச் சந்திப்பில், இந்திய – சிறிலங்கா உறவுகளை மறுசீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுகுறித்துதகவல் வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன்,

“சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற ஐந்து நாட்களில் மங்கள சமரவீர தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ளார்.

இது சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இந்தியாவுடனான உறவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தப் பேச்சுக்களின் போது. அரசியல், பொருளாதார விவகாரங்களில் ஒத்துழைப்பு, சிறிலங்காவில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், இதுகுறித்து புதிய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள முயற்சிகள், சிறிலங்காவில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், மீனவர்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டன.

பேச்சுக்கள் சுமுகமாகவும், நட்புரீதியாகவும் இடம்பெற்றன.

Sushma-Mangala.jpg

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை கொழும்பு வருமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சுஸ்மா சுவராஜ், கூடிய விரைவில் சிறிலங்கா செல்வார்.

சிறிலங்கா அதிபரின் புதுடெல்லிப் பயணம் குறித்தும் இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சிறிலங்கா வருமாறு அழைப்பிதழ் கொண்டு வந்துள்ளார் மங்கள சமரவீர.” என்று தெரிவித்தார்.

அதேவேளை, சிறிலங்காவின் வடக்கு. கிழக்கில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா தரப்பு விபரித்துக் கூறியதாக குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, அதுபற்றி அவர்கள் கூறியது என்ன என்றும், அடுத்த நடவடிக்கை என்ன என்றும் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால், அதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், தான் சிறிலங்கா அரதசாங்கத்தின் பேச்சாளர் அல்ல என்றும், தனது பக்க நிலையை மட்டுமே தன்னால் கூற முடியும் என்றும், குறிப்பிட்டு அதனை விபரிக்க மறுத்து விட்டார்.

அதேவேளை, “பேச்சுக்களின் தொனி மற்றும் போக்குகள் குறித்த தகவல் தர முடியும்.ஆனால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் நிலையில் இருந்து, என்னால் பதில் கூறமுடியாது.

அது நியாயமற்றது. அது எமக்கு நல்லதல்ல. அவரே தமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

தமது 100 நாள் செயற்திட்டம் குறித்து அவர் விபரித்திருந்தார். இதன்படி மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளைப் பட்டியலிட்டார். இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய விடயங்களையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையில் சில இரகசியமான தொடர்புகள் பேணப்படுவது இயல்பு.

எனவே, இதுபற்றிய மேலதிக கேள்விகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடமே எழுப்ப வேண்டும்.” என்றும் தெரிவித்திருந்தார்.

http://www.puthinappalakai.net/2015/01/19/news/3018

 

  • கருத்துக்கள உறவுகள்
இப்போதைக்கு எல்லாம் தல்லாம் என்று சொல்லுங்கள் 
 
98ஆவது நாளில் யாழ்தேவிக்கு புதுசா பெயிண்ட் அடித்து மாலை போட்டு ஒரு வெள்ளோட்டம் விடுவோம்.
நாடு முன்னேறுகிறது என்று அவர்களே வந்து வாக்கு போடுவார்கள்.
 
சுஷ்மா: வரும் தேர்தலிலும் உங்களுக்கு சார்பாக கூடமைப்பு தமிழர்களை வாக்கு போட சொல்லும் அகவே நீங்க தயங்காதீங்க.
 
மங்கள: ஒன்றுமே தரவில்லையே என்று கூட்டமைப்பு ஒருவேளை மாறினால்?
 
சுஷ்மா: ஹி ...ஹி .. கூடமைப்பே நாங்கதான்.  போய் வேலையை பாருங்க.
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு எல்லாம் தல்லாம் என்று சொல்லுங்கள் 
 
98ஆவது நாளில் யாழ்தேவிக்கு புதுசா பெயிண்ட் அடித்து மாலை போட்டு ஒரு வெள்ளோட்டம் விடுவோம்.

 

101 ஆவது நாள் யார் பிரதமர்?மைத்திரியா!!ரணிலா!

Edited by putthan

101 ஆவது நாள் யார் பிரதமர்?மைத்திரியா!!ரணிலா!

 

இருவரும் இல்லை!  சந்திரிகா!

 

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் ஆட்சியில் தமிழருக்கு ஒரு தீர்வு கிடைக்காவிட்டால்
கூட்டமைப்பால்  மீண்டும் மகிந்தவைப் பிரதமராகக்  கொண்டு வரமுடியும்.
அப்படியான ஒரு பெரும் சக்தியாகக் கூட்டமைப்பு இலங்கையில் உருவெடுத்துள்ளது :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.