Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

நாடுதே மனம்

இனிய இசையை

தேடி ஓடுதே...

உலகை மறந்து

மணிக்கணக்கில்...

நாட்கணக்கில்...

வருடக்கணக்கில்..

செவிகள்

ஓய்வு

பெறுவது

எப்படி?

பயணத்தின்

முடிவுதான்

எப்போது?

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

முடிவுதான் எப்போது.......?

எங்கள் தேசத்தின் ஆரம்பமும்

எதிரியின் முடிவும் எப்போது........?

எப்போது பார்த்தாலும்

இருட்டுக்குள் நுழைந்து

முகம் மூடி அழுகின்ற...

குளிர்தேசக்கோழைக்

கதிரவனே..உன்னையே

காதலில் தோற்கடித்த

மங்கை யார்?

மங்கை யார்?

அம்மாவா?

அக்காவா?

தங்கச்சியா?

காதலியா?

மனைவியா?

மச்சாளா?

அல்லது...

மனதிற்கு பிடித்த

அனைவருமா?

அன்பிற்கும்

இறுதியில்

இருக்கின்றதே...

பகுத்தறிவெனும்

அடைக்குந்தாள்!

தாள் கொண்டு அன்பை

அடைத்துவிட நீ வந்து

என் மனதில் சில காலம்

இருந்துவிட்டு போவதற்கு

என்னிதயம் உனக்கு ஒரு

விளையாட்டுப் பொருள்தானா?

தாள் கொண்டு அன்பை

அடைத்துவிட நான் வந்து

உன் மனதில் சில காலம்,

இருந்துவிட்டு போவதற்கு

உன்னிதயம் எனக்கு ஒரு

விளையாட்டுப் பொருள்தானா?

மென்மையான நம் இதயம்

வெடித்துச் சிதறுமுன்னே

விரைவில் நீ வந்து

பதில் பகர்வாய்

என் அன்பே!

அன்பே என்றாய் அன்று

யாரில் என்கிறாய் இன்று

ஆருயிரே என்றாய் அன்று

உயிரை ஏனெடுக்கிறாய் என்கிறாய் இன்று

அழகாக பேசுகிறாயென்றாய் அன்று..

அறுவை நீயென்றாய் இன்று

உலகில் நீதான் அழகென்றாய் அன்று

உலகில் நீயெல்லாம் ஏனிருக்கிறாய் என்கிறாய் இன்று

உன்னித்தில் ஒரிடம் வேண்டுமென்றாய் அன்று

உலகத்தில் நீயில்லாத ஓர் இடம் வேண்டுமென்கிறாய் இன்று

அன்று நீ நீதான் நான் நான்தான்

இன்று நான் நான்தான் நீ நீயில்லை

நீயில்லை என்றாய்

என் அன்பே

நீ என் இதயத்தின்

நிஜமென்று

தெரிந்து கொள்ளாமல் உன்

விம்பம் நான்

என்று புரிந்து

கொள்ளாமல் எப்போது

புரிந்து கொள்வாய்

நாம்

பிரிந்த பின்னரா?

அப்போதும் உனக்காய்

காத்திருப்பேன்

உன் நினைவுகள்

சுமந்து கொண்டு

கொண்டு வந்தாள் தந்தை,

என்றனர்

கொண்டு வந்தேன் காதலியை,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலியை காதலி

காத்திருந்தவள் மனம்

கடலலையாய் ஆர்ப்பரித்து

கல்லறைக்குள் சமாதியாகும் முன்

காதலித்துவிடு

விடுவது என்பது

காசியில் முறை

எதை விடுவது

4 மனிக்கு ஒருமறை எடுக்கும் பசியையா,

பசிக்கு காரணமான வயிரையா,

எப்பொழுதாவது வரும் தாயின் நினைவையா,

அல்லது

எப்பொழுதும் துரத்தும் வறுமையையா,

தெரியாமல் தவிக்கும்

ஏழை.

ஏழை மனதின்

வெளிச்சங்கள்..

பசி மறந்த

அவன்

மழலையின்

சிரிப்பில்..

சிரிப்பில்

நான் கண்ட

சுகங்கள்

சில காலம்...

சிரித்துச் சிரித்து

வந்ததால் வந்த

வெறுப்பில் வாழ்ந்த

சில காலம்....

வெறுப்பில் இருந்த என்

மனதை மாற்றிய

உன்னுடன் சேர்ந்து

திரும்பவும் சிரிக்கும்

சில காலம்....

இது

வாழ்வின்

வசந்த காலம்!

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த காலம்!

இனி வருங்காலம்!!

ஆனை வரும் பின்!

மனியோசை வரும் முன்!!

நறுமணம் வரும் முன்! என்

நாயகி வருவாள் பின்!!!.

  • கருத்துக்கள உறவுகள்

நாயகி வருவாள் பின்னாளில் மனையாக

தாயாகித் தருவாள் சில கணங்கள் சுவையாக

தீயாகக் கனலும் அவள் பார்வை பலபொழுதில்

நீயாகி விடுவாய் வீண்சருகாய் வன்சுழலில் :(

சுழலில் அகப்பட்ட

என்னை நீ காப்பாற்றி

குழலில் பூவாக

நீ அணிந்ததன்

நோக்கம்

என்ன?

உலகில் பூவாக

பிறந்த எனதுடலால்

தென்றலின்

வீச்சைக் கூட

தாங்க முடிய வில்லை....

எனவே...

பெண்ணே...

உனது இதயத்தினுள்

தயவு செய்து என்னை

இப்போதைக்கு

பூட்டிவைத்து விடு...

வெளியில் சுழல்காற்று

அடிக்கிறது....

வெளியில் சுழல்காற்று

அடிக்கின்றது எம்

உறவுகள் அதற்குள்

சிக்கித்தவிக்கின்றனர்

சுழல்காற்றே எம்மீது

உனக்குமா வெறுப்பு?

அனைத்தையும்

இழந்த எம்மை

நீயும் பதம்பார்க்கின்றாயா?

அவர்களால் நாம்

காட்டுக்குள் வந்தோம்

உன் அழிவால்

நாம் எங்கே போவது

நீ என்ன ஆழும்

கட்ச்சி உறவா?

உறவுக்கு தாய் அழகு

உரிமைக்கு தந்தை அழகு

யாழிர்க்கு தமிழ் அழகு

யானைக்கு தும்பிக்கை அழகு

வெற்றிக்கு தன்னம்பிக்கை அழகு

வேதனைக்கு நான் அழகு

அழகு என்ற சொல்லின்

பொருளே அவள்தான்..

அவள் சேற்றில்

முளைத்த செந்தாமரை..

கோடையில் சுகம்

தரும் செந்தேன்மழை

நாட்டிய நவரசம்..

நளின சொரூபம்..

முல்லை மூடிய தடாகம்

முத்தமிழ் கொஞ்சும் அஞ்சுகம்

என் மூன்று வயது ஆசான்

தந்தையை அடிமை செய்த

சின்னத்தாயவன் என் சேயவள்

சேயவள் கண்களில்

சிறிய சந்தேகம்..

எனது

அப்பா அம்மாவை

இன்றிரவு அடிப்பாரா

அல்லது அணைப்பாரா?

வேண்டாப் பெண்டாட்டியுடன்

வாழும் புருசன்

குழந்தையின் கேள்விக்கு

கூறப்போகும் பதில்?

அவன் இப்போது

வேலைக்கு போய்விட்டான்..

வீடுதிரும்பும்வரை பொறுத்திருக்கவும்!

:lol: பொறுத்திருக்கவும் என்றா

கூறினார்கள்..பாவம்

கள் போதையில்

சொல்லியிருப்பார்கள்..

மூடர் கூட்டத்திடை

வாழும் முட்டாளானாயே..

விடு விழுந்தால் எழும்பலாம்

குதிரை வயசுதானே உனக்கு

யானை வயசான நானே

காதல் குழிகளில்

விழுந்து விழுந்து

எழும்புகிறேனாம்..

எழும்புகிறேனாம் நான்..

கிழக்காக தோன்றி

மேற்காக மறைகின்றேனாம்...

என்னைப் பார்ப்பதற்கு

பூமியில் ஒரு பெரிய

ரசிகர் கூட்டம்...

அதிகாலையில் கண்விழித்து எனக்காக

காத்திருக்கும் கவிஞர்கள்...

மண்வெட்டியை தோளில் தூக்கியபடி

என் தரிசனத்திற்காக ஏங்கும் கமக்காரன்...

நான் தருகின்ற இளஞ்சூட்டில்

குளிப்பதற்காக காத்திருக்கும் சிறுவர்கள்...

இப்படிப் பலர்...

இவர்களில்...

எனைத்தேடுகின்ற

நீ யார்?

யார் யாரோ...

செடி வளர்த்து

யார் யாரோ..

நீர் ஊற்றி..

யார் யாரோ

பார்க்க ரசிக்க

பூக்கள் கொண்ட

தோட்டக்காரன்..

வாசம் தெரியாமல்

வெளியூரில்..

:icon_idea:

Edited by வெங்கட்

வெளியூரில் நான்...

உள்ளூரில் நீ..

இப்படி இன்னும்

எத்தனை காலம்

நாமிருவரும்

பிரிந்து தனியாக?

உன் கடிதங்களும்

புகைப்படங்களும்

ஆறுதல் தரவில்லை...

மாறாக..

நெஞ்சினில்

ஆறாத வடுவை

உருவாக்கி விட்டது...

இவ்வளவு காலமும்

சகித்தது போதும்...

அன்பே..

விரைவில்

உனது

கணவனை

விவாகரத்து

செய்துவிட்டு

என்னுடன் நீ

இணைந்துவிடு!

இணைந்தவிடு

இனியவளே..

பொருந்தாத ஜாதகமாம்..

பொய்ச் சாட்சி ஜோசியனும்...

செவ்வாய் கிரகமும்..

சேர்ந்த விளையாட

என் வாலிப வயலின்

ஈரங்காய முன்...

இணைந்துவிடு

இனியவளே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.