Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறியாகியது வாழ்க்கை அதை

உடைத்தான் மனிதன் முயற்சியால்

பொறிவைத்த மனிதன் விலங்கினங்களை

பொறிவைத்தே அழித்தான்

பொறிவைத்த அரசியல் வாதி

மக்களை தினம் ஏமாற்றினான்

பொறிவைக்கும் அரசியல் நியாயங்கள்

அகப்படும் போராளி

  • Replies 1.9k
  • Views 183.4k
  • Created
  • Last Reply

போராளி

நெஞ்சுக்குள்

தீ...

பொறி

நூறாகிப்

பாயும்

செந்தீ

இவர்

பேர்

சொல்லும்

போர்க்களத்தீ

மண்ணுக்காய்

மடிதலில்

இன்பத்தீ

புலி

அருகில்

வந்தால்

பொங்குந்தீ

தன்குருதி

தாரையாய் சிந்தி

தமிழ் மானம்

காக்கும் தீ

இவர்

விழிபேசும் தீ

பேச்செல்லாம் தீ

விடுதலை காணுமித்தீ

தீயென நீயிரு

தீட்டப்படாத

மூடநம்பிக்கை

எரிவதற்காய்

தீயென நீயிரு

முகத்தை

முகமூடியால்

மறைப்பவர் தனை

சுட்டேரிப்பதற்காய்

தீயென நீயிரு

சமூதாய சீரழிவை

வேரோடு தீயிட்டு

கொழுத்திட

தீயென நீயிரு

தீண்டியவர்கள்

தீயில் எரிந்து

சாம்ல் ஆகம்

வரை

சாம்பல் ஆகும் வரை

எங்கள் உடல்

நெருப்பிலே எரிந்தாலும்

எங்கள் கனவு தேசம்

எங்கள் உள்ளத்தை

விட்டகலாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்தை விட்டகலாது தமிழீழம் என்ற உணர்வு

இல்லத்தை கூடியே விட்டகலாதிருப்பது ஆனந்தம்

கள்ளமில்லா மழலையில் ஒன்றியிருப்பது சிரிப்பு

பள்ளத்தில் விழுந்தாலும் கைகொடுத்திடும் நட்பு

தள்ளாத வயதிலும் துணைதருவதோ ஊன்றுகோல்

ஊன்றுகோல் ஒன்று

வாங்கிவந்தேன்..

ஊரிலிருந்து..

ஆரம்பத்தில் நடை பழக அடம்

பிடித்தது

போகப் போக

பழகிக்கொண்டது..

சில ஆண்டுகளில்

எனக்கு நடை

பழக்கியது..

இன்னும் சில ஆண்டுகளில்

தனியே நடை

போட்டது

இப்போது

ஊன்றுபோல்...

என்னை விட்டு விலகி

வேறாக நின்று

ஆட்டம் போடுகிறது..

புரிகிறது..

ஊன்றுகோலை வாழ்வில்

எல்லைக்கு வந்து

வாங்கியது

என் தவறு..

வாழக்கை முடியும் தறுவாயில்

புது ஊன்றுகோலை

வாங்கி

முறிக்கப்பார்த்த என்னை உலகம்

சொல்கிறது

கிழஉலக்கை

என்று

உலக்கை இன்றி

உரலிற்கு வாழ்க்கை இல்லை

எதுனை இன்றி

மோனை எடுபடுவதுமில்லை

வழுக்கை விழுந்தால்

காதல் துளிக்கும் வருவதில்லை

உடுக்கை இழந்தால்

கையி;ல் உரைக்க ஏதுமில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதுமில்லை எழுத என்றாலும் நல்

எழுத்துக்கள் அமுழ்ந்த சொல்லெடுத்து

கவிதை அந்தாதியில் அழகாய்

கவி வடித்த பரணிக்கு பாராட்டுகள்தனை

வழங்கி செப்புவதில் மகிழ்ச்சி கண்டு

வளமார கவிதைகளை எதிர்பார்த்தபடியே

எதிர்பார்த்தபடியே காத்திருப்பேன்

ஏமாற்றிடாதே என்னுயிரே

என்று வரும் அந்த நாள் என

எண்ணிக்கொண்டே இருக்கின்றேன்

அந்த இனிய நாள் வரும்போது

அன்போடு வரும் உன்னை

ஆசையோடு கட்டி அணைக்கவே

ஆதங்கத்தோடு காத்திருக்கின்றேன்

என்னவனே எனை நாடி வா

உனக்கான எனை தேடி வா

எனக்காக ஒரு பாடல் பாடி வா

எனைக்காண ஓடி வா

என்றும் உனக்காக

இன்றுவரை காத்திருக்கும்

வெண்ணிலா

வெண்ணிலாக்கள் உலா வரும்

கவிதைப்பூங்காடே.... நாங்கள்

தூக்கத்தில் கேட்கும் ஏக்கத்தை கூட

நீதான் துடைத்ததாயே..

கால் நனைத்தோம்.. அட

ஓடும் நதியை உன்னில் கண்டோமே..

நாவில் ஊறும் தேனின் துளியாய்த்

தமிழ் சுவையைக் கொண்டோமே....

தமிழ்த் தரத்தால் பெரு வரத்தால்

நாம் யாழைக் கண்டோமே..

பலநிலத்தில்

வேர் துளைத்தும்

இங்கு ஒன்றாய் நின்றோமே..

வெண்ணிலாக்கள் உலா வரும்

கவிதைப்பூங்காடே.... நாங்கள்

தூக்கத்தில் கேட்கும் ஏக்கத்தை கூட

நீதான் துடைத்ததாயே..

நன்றி என்ற சொல்லை

மனிதன் உணர்ந்து கொண்டால்

அதை உரைப்போம்..உரித்தை

உடைய நல்நெஞ்சே..

ஒருகோடி நன்றிகள் மோகன் அண்ணா..

அண்ணாய் வந்த

சொந்தம்

எனக்காய் தந்த

பாசம்

புரியாது பூத்த

கோலம்

எதனாலோ தேடும்

ஆர்வம்

உணர்விற்குள் புதிய

வேகம்

ஆனந்தம் தந்த

காலம்

எல்லாமே எனக்காய்

இன்பம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் வாழ்வில் எது என்று கேட்டால்

இன்பத் தமிழ்மொழியை சுவைத்திட இன்பம்

கவிதையினை வடிப்பதும் இன்பம்

இசைகேட்டு மெய் மறந்திடவும் இன்பம்

மனம் விட்டு காதல் செய்வதும் இன்பம்

திருமணத்தில் இணைவதும் இன்பம்

மழலையின் மொழியில் நனைவதும் இன்பம்

இயற்கையை ரசிப்பதிலும் இன்பம்

மழைத்துளியில் குளித்திடவும் இன்பம்

விதவிதமாய் உணவு உண்பதிலும் இன்பம்

இத்தனை இன்பங்கள் இருந்தும் ஏனோ

இல்லாத இன்பத்துக்காக ஏங்கிடும் மனம்

மனதோடு கரைந்த

சோகங்கள் இங்கே

கண்ணீர் மழை

பொழிய நாளை

கவிதையோடு

கரைகின்ற என்

இதயம் இங்கே

மனதோடு

மறைந்ததேன்

மறைந்ததேன் என் விம்பம்

முகில் சூரியனை மறைத்தபோது

முறைத்தேன் முகிலதனை

முரண்டு பிடிக்காமல்

முகில் சூரியனை விட்டு

மறைந்தது கண்டு

மனதுக்குள் சிரித்தேன்

மழலை நான்.

மழலை நானாவேன்..

மயங்கும் மலர்த்தொட்டில் நீயானால்..

நிலவும் நானாவேன்

நீந்தும் நீலவான் நீயானால்..

துள்ளும் மீன் நானாவேன்..

தாலாட்டும் கடலலை நீயானால்..

புன்னகை நானாவேன்..

உரசும் பூவிதழ்கள் நீயானால்..

கவிதை நானாவேன்..கண்மனியே..

தமிழ் வார்த்தைகள் நீயானால்..

தமிழ் வார்த்தைகள்

நீயானால்

அழகாய் கவி படைத்து

தமிழுக்காய் நாலுவரி

நான் உரைத்து

அழிகின்ற சமூகத்தை

ஒரு தரம்

சிந்தித்துப் பார்ப்போன்

உன்னை வைத்தே

Edited by கஜந்தி

உன்னை வைத்தே

ஓவியம் வரைந்தேன்

கண்ணை பார்த்து

பார்க்க பயின்றேன்

மூக்கை முகர்ந்தே

மூச்சுவிட கற்றேன்

குரலைக் கேட்டே

கதைக்க ஆரம்பித்தேன்

பற்களைப் பார்த்தே

ஒளியைக் கண்டேன்

உதட்டை ரசித்தே

புன்னகைக்க தெரிந்தேன்

முடியை மோந்து

வாசனை அறிந்தேன்

நீ ஒரு தேவதையா?

இல்லை என்

உணர்வுகளின் குருவா?

உணர்ச்சிகளின் குருவா?

இல்லை

உணர்ச்சிகள்

அற்ற இதயமா?

இல்லை

வலிகொண்டு

செதுக்கப்பட்ட சிற்பமா?

இல்லை

சிதைக்க

முடியா கற்பனையா?

இல்லை

கல்லறையை

மட்டு் நேசிப்பவளா?

இல்லை

உணர்ச்சிகள்

விற்று வாழ்கின்றாளா?

யார் இவள்?

புரிந்து கொள்ளாக்

கவிதை

புரிந்து கொள்ளாக்

கவிதை

உன் புன்னகை!

உன் புன்னகை

பேசும்...

முன்றாம் பிறை

மூன்றாம் பிறை

வளர்ந்தால்

பெளர்ணமி

மூன்றாம் பிறை

வளர்ந்தால்

பெளர்ணமி

பெளர்ணமி இவள்

வானத்தின்

இருளைப்போக்க

முழு நிலவானாள்

ஐயோ பறிதாவம்

இவள் வாழ்கை

இருட்டுக்குள்

இருட்டுக்குள்

இருப்பதாக சொல்பவர்களே

ஒரு விளக்கேற்றும்

அறிவில்லையா?

அறிவு இருட்டுக்குள்

இருக்குமெனின்

சிந்தனைத் திரிதூண்டியை

திருகுங்கள்

அடுத்தவரின்

அனுதாபத்திற்காக

ஏங்கின்றீர்கள்

வேண்டாமே...

இந்தச் சமூகம்

வேதனைப்படும் போதும்

வேர்வை வடிக்கும் போதும்

வேடிக்கை பார்பதோடு சரி

தொட்டு அணைத்து

தோளில் சாய்த்து

ஆறுதல் தராது

அறிவுரைகள் தருவதில்

என்ன பயன்?

வேண்டாம் வெங்காயமும்

இந்த வேடிக்கைச் சமூகமும்!

Edited by kavi_ruban

வேடிக்கை சமூகமும்..

விபரீதவிளையாட்டுகளும்..

விதைத்த வினைகள்..

முளைவிட்டு கிளைவிட்டு

வேர் துருத்த

வேதனை புரியும்..

புரியும்

இம்மதந்தர்க்கு

இதனால்தான் வலியென்று?

உள்ளிருந்து உதைத்துபோது வலியறியவில்லை

உருண்டு வந்து விழுந்த போது மொழி புரியவில்லை

பல் விழுந்து முளைத்தபோது சொல் வலிக்க கண்டேன்

உன் நிழலில் வீழ்ந்த போது உள்வலியும் உணர்ந்தேன்

தாய்மடியில் தூங்கியதால் நோய் தழுவவில்லை

வேரறுந்து வந்தனால் இலையுதிர்ந்து நின்றேன்

தரமிழந்து போனாலும் தமிழ் மறந்து நில்லேன்

சிரமறுத்து நீ எறிந்தாலும் என் தாய் மொழி அறிவித்துச்செல்வேன்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.