Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

முடிப்போம் வம்சம் அழிக்கும்

வஞ்சகர் கதையினை

இரக்கமேயில்லாமல்

இனத்தையழிக்கும்

இடுகாட்டு பேய்களை

முடிப்போம் விரைவில்

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

விரைவில்

வருமென எதனை

எதிர்பார்க்கிறாய்..

சுதந்திரமா..

இறப்பை விட

ஏதொரு சுதந்திரம்...

நிம்மதியையா..

மாயானத்தைவிட அமைதி

எங்கே இருக்கிறது..

பெரும்வாழ்வா..

ஏழ்மையுள்ள வரைதான்

தூய்மை வாழும்..

தூய்மையைத் தொலைத்து

மனச்சாட்சி கடந்தால்

பெரும்வாழ்வு வாழலாம்..

உன் பெரும்வாழ்வில்..

ஆயிரம் தலைகள்

உருளும்..

பலர் வாழ்வில்..

வறுமை சேரும்..

பலர் உன்னை திட்டுவார்கள்..

பலர் உன்னை சபிப்பார்கள்..

அதற்கென்ன..

நீ

பெருவாழ்வு வாழந்தால்

போதும் அல்லவா..

விரைவில்

வருமென எதனை

எதிர்பார்க்கிறாய்..

சுதந்திரமா..

இறப்பை விட

ஏதொரு சுதந்திரம்...

நிம்மதியையா..

மாயானத்தைவிட அமைதி

எங்கே இருக்கிறது..

பெரும்வாழ்வா..

ஏழ்மையுள்ள வரைதான்

தூய்மை வாழும்..

தூய்மையைத் தொலைத்து

மனச்சாட்சி கடந்தால்

பெரும்வாழ்வு வாழலாம்..

உன் பெரும்வாழ்வில்..

ஆயிரம் தலைகள்

உருளும்..

பலர் வாழ்வில்..

வறுமை சேரும்..

பலர் உன்னை திட்டுவார்கள்..

பலர் உன்னை சபிப்பார்கள்..

அதற்கென்ன..

நீ

பெருவாழ்வு வாழந்தால்

போதும் அல்லவா..

போதும் அல்லவா...

எனத் தூங்கிக் கிடந்தால்

உன்னுயிரே உடம்பில் பாரமல்லவா..?

உணர்வுகள் எல்லாம் எங்கே போயின ...?

போராடிப் பார்...

விழுப் புண்கள் ஒருபோதும்

வலிப்பதில்லை -

அவையெல்லாம் அணியும்

அணிகலன்கள் - தமிழ் வீரனுக்கு !

வீரனுக்கு வில்

தேவை இல்லை

வெறும் புல் ஒன்றே

போதும் என

முன்னோர் சொன்னார்கள்..

இதனால்...

நான் இப்போது

பசு மாடாகி விட்டேன்... :)

தமிழ் வீரனுக்கு வாளெடுத்து

தான் கொடுத்த தலைவா..

நம் ஈழம் மீதில் வேங்கை

வந்து வேட்டையாட வருதா..

சிங்களத்து போர் எடுப்பு

தமிழ்மக்கள் மீதுஎன்று..

இந்த உலகம் புரியும் காலந்தன்னில்..

தமிழ்த்தாயேது சேயேது மண்ணில்

நாடு விட்டு நாடு வந்து...

நான்கு வார்த்தை எழுதி...

நியாயம் என்றும் தர்மமென்று

எனக்கு கேள்வி என்ன கேள்வி..

அருகதையை இழந்தவரில்

நானுமொருவன் ஐயா..

என் நாட்டமெல்லாம் அங்கிருக்கு

இங்கு இல்லை ஐயா...

கணப்பொழுதும் மணிப்பொழுதும்

புலி வெற்றிக்காகத் துடிப்பேன்..

என் காலம் முடிய முன்னர்

ஈழம் கண்டுதானே மரிப்பேன்.

மரிப்பேன் - நான்

தமிழ மானம் துறந்தால்

உயிர்ப்பேன் இன்னொரு தமிழனாய்

தமிழனாய் பிறந்ததால்

இன்னல்கள் கோடி

வந்து இடியாய் இடித்தது

ஆனாலும் வீழமாட்டோம்

" அச்சம் இல்லை

அச்சம் இல்லை

உச்சிமீது வானிடிந்து

வீழ்ந்த போதும்

அச்சம் இல்லை

அச்சம் இல்லை

அச்சம் என்பதே இல்லை"

இல்லை பொறுமை

எனக்கு இப்போது..

நேற்றுவரை உனக்காக

காத்திருந்து காத்திருந்து

கால அவகாசம் கடந்துவிட்டது..

இதனால்...

இன்றிலிருந்து நான்

ஒரு புதிய மனிதன்..

எனக்கு ஒரு

புதிய வாழ்க்கை..

ஆனால்..

நீ இல்லாத ஒரு

புதிய உலகில்!

:lol:

புதிய உலகில்

புதிய காற்றோடு

புதிய இனத்தோடு

புதியவனாய் நான்

அடிமனதில் மட்டும்

தமிழன் நீ

வடுப்பட்டவன் வஞ்சகரினால்

கொடுங்கோல் புரியும்

சிங்களக்காடையை

கொன்று தின்னப்பிறந்தவன் நீ

இடைவிடாது ஓலிக்கின்றது ஓர் ஓசை

காத்திருக்கின்றேன் காலம் வரும்வரை

அதுவரை புதியவனாய் நான்

வெளியுலகிற்கு மட்டும்

வெளியுலகத்திற்குள்

நின்று மட்டும்

மறையப் போன

என் கவித்

தோட்டமே உன்னை

யாரும் ரசிக்க

வில்லையேன்

இங்கே நீ

மறைந்து போனதால்

இவள் மீண்டும்

பூத்தாள் கவிப்பூவாய்

வாழ்ந்த

கவித்தோட்டம்

இருளில் மறைந்து

போக இவள்

இதயம் துடித்ததால்

தொட்டணைந்து

எழுதிவிட்டாள் மீண்டும்

தொடர வேணும்

என்பதால்

தொடர்வார்களா?

கவிகள்........

கவிகள் தொடர்வதால்

சில கவிக்கூட்டம்

கவலை கொள்கின்றதே தோழி

களவும் செய்கின்றதே

புவியில் நாம் வாழும்

காலம் சொற்பம்

கவியாய் வாழாமல்

கவிஞனாய் வாழ்வோம்

கவிகள்

கவிதைப் பூங்காட்டில்

என்றும் பூத்துக்குலுங்க

என்றும் வாழ்த்து மழை

தூவுகின்றேன்

கவிகள்

கவிதைப் பூங்காட்டில்

என்றும் பூத்துக்குலுங்க

என்றும் வாழ்த்து மழை

தூவுகின்றேன்

தூவுகிறேன் - என்

பின்னூட்டங்களை யெல்லாம்

தொலைந்து போன வுறவுகளின்

கடந்து போனவுணர்வுகளில் ....

இன்றைய உன்னுணர்வுகளை

எல்லாம் புதைக்க - இதை விட்டால்

வேறு ஏது வழி..? :lol:

இன்றைய உன்னுணர்வுகளை

எல்லாம் புதைக்க - இதை விட்டால்

வேறு ஏது வழி..? :lol:

வழி என்னவென்று கேட்டு

விழி மூடும் பாவாய்

கவி நான் வரைய

கருவாக நீயே ஆவாய்

கரையும் சில திங்கள்

காத்திருக்கப்

புரியும் என்னுள்ளம்

புரிந்துவிட்டால்

சொர்க்கம் உனதில்லம்!

சுந்தரியே புரிவாயா?

புரிந்து பின் என்மேல்

கருணை மழை

பொலிவாயா?

மந்திரியாய் நீயாவாய்

மன்னனாக நானாவேன்

நீதிகள் எனக்குச் சொல்வாய்

நிறைவாக அமையுமடி

எம்மரசு!

எம் அரசாழ

இன்னொருவன் ஏன் எமக்கு

தன்னிகரில்லா தலைவன்

தலைவணங்கா தமிழர்

ஒற்றுமையாய் எம்மினம்

வென்றிடுவோம் உலகை

உலகை நாம்

வெண்று

உரிமை

எமக்காய் எழுதி

கற்பனையில்லா

காவியம் படைத்தாலும்

புரிந்திடாத

உணர்வுக்குள் மறத்திட்ட

மனித

நேயங்கள்

கால காலமாய்

கசப்பாய் தொங்கி

நிற்க

ஒற்றுமை

கேள்விக் குறித்தொடராய்

தொடர

மறத்திடாத

மறந்திடாத காயங்கள்

வாழ்வின் தொடரானது

தொடரான போராட்டத்தால்

தொடர்பின்றி தவிக்கின்றோம்

நிலையில்லா வாழ்விற்காய்

நெடுநாளாய் போராட்டம்

உருக்குலைந்து போனபின்னும்

உறுப்பலைந்து தேடுகின்றதாம்

கட்டவிழ்ந்த இனப்போரால்

கசங்கிய என் வாழ்வெங்கே என ? ?

எங்கேயென

நான் தேட

எதிரியாய்

நீ மாற

எதையும் புரியாது

நான் தவிக்க

மரணம் சொன்னது

வாழ்கையின் ரகசியத்தை

ரகசியம் உடைக்க

ராத்திரியில் நான் தவிக்க

புரிந்தும் புரியாமல்

புழுவாய் நீ நெளிய

வெட்பத்தில் தவிக்கின்றாயா

வெட்கத்தில் தவிக்கின்றாயா

பக்கத்தில் நானிருந்தும்

பதிலறியாமல் தவிக்கின்றேன்

தவிக்கின்றேன்

மெத்தை மேல் நான்

அத்தை பெத்த

அருமை அத்தானே

அங்கங்கே தொடுகின்றாய்

அங்கங்கள் வலிக்காமல்...

இதழில் இளைப்பாற

வேண்டுமென்கிறாய் - என்

நுதலில் இதழ் ஒத்தடம்

தருகின்றாய்

மஞ்சமென என்

நெஞ்சில் தலைசாய்கின்றாய்

கொஞ்சமோ நீ

செய்யும் கூத்து...?

இன்னும் இன்னும்

வேண்டுமென கெஞ்ச

வைக்கின்றாய்

நொடிக்கொரு முறை

சொர்க்கத்தில்

தூங்கவைக்கின்றாய்

எல்லாம் சொர்பனமாய்

தோன்றுதடா கண்விழிக்க

நிஜத்தில் எப்போதடா

புரிவாய் எல்லாம்?

எல்லாம் புரிந்த

கண்ணா

மாய

உலகிற்குள் அவளை

தள்ளி விட்டு

ராதை அவள்

கனவில் துடிக்க

மாயமாய்

ரசிக்கின்றாய்

பெண்ணவளை

ரசிப்பதற்கே

பிறந்தன் நீ

சொல்லவா வேண்டும்

எல்லாம் புரிந்த

கண்ணா

மாய

உலகிற்குள் அவளை

தள்ளி விட்டு

ராதை அவள்

கனவில் துடிக்க

மாயமாய்

ரசிக்கின்றாய்

பெண்ணவளை

ரசிப்பதற்கே

பிறந்தன் நீ

சொல்லவா வேண்டும்

வேண்டும் இறைவா...

இன்னொரு பூமி..

வேண்டும் இறைவா...!.

இந்தப் பூமியில்

இருந்து கொண்டே

இன்னொரு (கனவு) உலகில்

இணைந்து வாழும்...

எனக்கும் அவளுக்கும்

இன்னொரு பூமி

வேண்டும் இறைவா...!

அங்கு நாய்களும் நரிகளும்

பிறக்க வேண்டாம்..

வேற்று மனிதரும்

அப் பூமியில் வேண்டாம்

வெறும் நாம் மட்டும்

பிறந்தால் போதும் இறைவா...!

நமக்கு மட்டும்

இன்னொரு பூமி

வேண்டும் இறைவா.....!: :P

வேண்டும் இறைவா

எனக்காய்

ஒரு பூமி

அங்கே

மனிதனில்லா

தனிமை வேண்டும்

இசைகள் மட்டும்

சேர்ந்திட வேண்டும்

காதல் மொழி

எனக்காய் கிளிகள்

பேச வேண்டும்

கற்பனையில்லா

கவிதைகள்

என்னோடு வேண்டும்

அழகு மயிலும்

மான்களும் சேர்ந்திடும்

அருவிக்கரை

எனக்காய்

சில நிமிட தனிமை

தரவேண்டும்

அங்கே

நான் மட்டும்

பூக்களின் மகாராணியாய்

வாழ்ந்திட வேண்டும்

இறைவா........

இறைவா

உனது படைப்பில்

உன்னை போல்

கேவலமான

படைப்புக்கள்

எதற்க்கு.........?

எதற்க்கு

என்று தெரிந்து

படைத்தான்

இறைவன்

ஆனால்

அறிவோடு மனிதனை

படைத்தால்

தலை மறைவாகி

விட்டான் புரியாது

செய்த தப்பால்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.