Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பேருந்தில் கைது செய்யப்பட்டு, காட்டில் கொல்லப்பட்டனர்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்து உள்ள வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஏழுபேர் ஆந்திர மாநில எல்லையில் கைதுசெய்யப்பட்டு, பிறகு சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

150408104806_relatives_640x360.jpgநகரியில் கைதுசெய்யப்பட்டு, பிறகு சுட்டுக்கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு.

ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரம் கடத்தியவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, ஷேஷாச்சலம் வனப்பகுதியில் செவ்வாய்க் கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்கள் திருப்பதியில் உள்ள ரூயா அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமையன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.

கொல்லப்பட்டவர்களின் உறவினர்களைக் கண்டறியும் பணியில் ஆந்திர மாநில காவல்துறையினருடன் இணைந்து தமிழக காவல்துறையினரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், புதன்கிழமையன்று மதியம் இரண்டு மணியளவில், கொல்லப்பட்டவர்களில் 7 பேரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

இவர்கள் ஏழு பேரும் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள அர்ஜுனாபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

'நகரியில் கைதுசெய்யப்பட்டனர்'

திங்கட்கிழமைன்று பிற்பகலில் ஆந்திராவில் கூலி வேலை செய்வதற்காக திருவண்ணாமலையிலிருந்து 8 பேர் பேருந்தில் புறப்பட்டதாகவும் ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி என்ற இடத்தில் ஆந்திர காவல்துறையினர் இவர்களில் ஏழு பேரை பேருந்திலிருந்து இறக்கி கைதுசெய்ததாகவும் மீதமிருக்கும் ஒருவர் தப்பிவந்து தங்களிடம் தகவல் அளித்ததாகவும் அர்ஜுனாபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மரம் கடத்தும்போது தடுக்கவந்த காவல்துறையைத் தாக்கியதால் இந்தத் தொழிலாளர்கள் சுட்டுகொல்லப்பட்டதாக காவல்துறையினர் கூறுவது தவறான தகவல் என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் சரியான இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.

கொல்லப்பட்ட முனுசாமி என்பவரின் உடலைப் பெற்றுக்கொள்ள வந்த அவரது தாயார், தன் மகன் கூலி வேலைக்காகவே ஆந்திரா வந்ததாக தெரிவித்தார்.

இன்று காலையில், கொல்லப்பட்டவர்கள் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில், ஆந்திராவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

மனித உரிமை அமைப்புகள் கேள்வி

சம்பவம் நடந்த பின்னணி குறித்து, மனித உரிமை அமைப்புகள் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

கொல்லப்பட்டவர்களின் அருகில் கிடக்கும் செம்மரக் கட்டைகள் பழையதாக இருப்பது, சில கட்டைகளில் எண் இருப்பது, கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மார்பிலும் தலையிலும் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது, அவர்களது உடலில் கடுமையான காயங்கள் இருப்பது ஆகியவை பெரும் சந்தேகத்தை எழுப்புவதாக மருத்துவமனைக்கு வந்த மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

தவிர, தப்பி ஓடியதாகக் கூறப்படுபவர்களில் ஒருவர்கூட கைதுசெய்யப்படாதது ஏன் என்றும் அவர்கள் கேள்வியெழுப்பினர்.

புதன்கிழமையன்று மாலையில், ஏழு பேரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தமிழக அரசுக்குச் சொந்தமான அமரர் ஊர்திகளில் இந்த உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டன.

bbctamil

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து வசதி கூட இல்லாத கிராமங்களைச் சேர்ந்த.. ஏழை மக்களின் பிள்ளைகளே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வேதனையிலும் வேதனை..!!

Edited by nedukkalapoovan

இதற்கான பொறுப்பை எற்று சந்திரபாபு நாயுடு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். 
 

வயாகரா தயாரிக்க பயன்படுத்தப்படும் செம்மரங்கள்... 4 ஆண்டுகளில் ரூ.500 கோடி மரங்கள் கடத்தல்! Posted by: Mayura Akilan Updated: Wednesday, April 8, 2015, 8:00 [iST] Share this on your social network:    FacebookTwitterGoogle+   CommentsMail சென்னை: அமெரிக்காவில் செம்மர பட்டையில் இருந்து வயாகரா தயாரிக்கின்றனர். சீனாவிலும் உடல் வலிமைக்காகவும் மருந்து தயாரிக்கின்றனர். எனவேதான் செம்மரத்திற்கு சர்வதேச சந்தையில் விலை அதிகம் உள்ளது. தற்போது தமிழக - ஆந்திர எல்லையில், செம்மரங்களை வெட்டிக் கடத்தும் சம்பவங்கள் அண்மைகாலமாக அதிகரித்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வெயிலை ஈர்த்து குளிர்ச்சியை கொடுக்கும் சக்தி செம்மரத்திற்கு உண்டு. இதனால், சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய், ஏமன், சீனா போன்ற நாடுகளில் செம்மரங்களில் கட்டில், மேஜை செய்கின்றனர். செம்மரத்திற்கு சர்வதேச சந்தையில் விலை அதிகம். செம்மரத்தில் பல ரகங்கள் உள்ளன. ரகங்களுக்கு தக்கபடி விலை நிர்ணயிக்கின்றார்கள். சாதாரண செம்மரம், ஒரு டன் 10 லட்சம் ரூபாய்க்கும், முதல் தர செம்மரம் ஒரு டன் 40 லட்சம் முதல் 90 லட்சம் ரூபாய் வரை, விற்பனையாகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/red-woods-play-big-role-making-viagara-224280.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.