Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுடன் இன்று கூட்டமைப்பினர் சந்திப்பு

Featured Replies

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை இன்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளனர்.

யாழ். மனித அவலம், வலிந்த தாக்குதல்கள், ஏ-9 பாதை திறக்க மறுப்பு, யுத்த நிறுத்த மீறல்கள், கருணா குழுவுக்கு சிறார் கடத்தலில் சிறிலங்கா இராணுவத்துக்கு நேரடித் தொடர்பு, ஆட்கடத்தல்கள், மாமனிதர் ரவிராஜ் படுகொலை போன்ற பல்வேறு அப்பட்டமான மனித உரிமை மீறல்களை சிறிலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளதால் அரசுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது.

இவற்றை சமாளிக்கும் நோக்குடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு நேற்று மாலை கடிதம் மூலம் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமனிதர் ரவிராஜின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக யாழ். சென்றுள்ளதால் கொழும்பில் இருக்கும் ஒரு சில உறுப்பினர்களும், கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் மகிந்த ராஜபக்சவை இன்று சந்திக்கவுள்ளனர்.

http://www.eelampage.com/?cn=29782

சந்திப்பில் மகிந்தன் வடக்கு கிழக்கு பிரிப்பு குறித்து பிரஸ்தாபித்ததாக தெரியவருகின்றது. நீதிமன்றத்தீர்ப்பு தனக்கு மிகுந்த தலையிடியைத்தருவதாகவும், தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி ஒரு தீர்வுக்கு வருவதாகவும் பசப்பியுள்ளான்.

விரைவில் இந்தியா செல்லவுள்ள இவன் இதனைப் போன்றே முன்னரும் மக்கள் காணமற் போவது குறித்து நடைபெறவிருந்த கடையடைப்பொன்றை தான் திரும்பி வந்ததும் தக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறி தடுத்து நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அப்போது மாமனிதர் ந.ரவிராஜ் அவர்கள் அவ்வாறு அந்த நடவடிக்கையை கைவிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். பின்னர் அவன் திரும்பி வந்து தக்க நடவடிக்கை எதுவும் எடுக்காதது மட்டுமின்றி ரவிராஜ் அவர்களின் உயிரையும் எடுத்தான்.

எனவே தனக்கு வெளிநாட்டு அழுத்தங்கள் ஏற்படும் போது இவ்வாறு இவனின் வெற்று பேச்சுக்களை நம்பி அவனின் சதி முயற்சிகளுக்க எமது பாராளுமன்ற உருப்பினர்கள் (பிரதானமாக சம்பந்தன்) துணை போவது கண்டிக்கத்தக்கது. மக்கள் தங்கள் அதியுச்ச அர்பணிப்பாக உயிர்களைக் காவு கொடுப்பதால் கனிந்து வரும் இந்நிலைகளை தமது சுத்த முட்டாள் தனத்தினாலோ அல்லது பயத்தினாலோ விழலுக்கு இறைத்த நீராக்குவதும் துரோகமே.

உரியவர்கள் சிந்திப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் பறக்கப்போகும் இன்னுமொரு உறுதி

வாகரைக்கான பாதையைத் திறந்து

பொருள்கள் அனுப்ப ஜனாதிபதி உறுதி

தமிழ்க் கூட்டமைப்பினரை நேரில் அழைத்து அவர் கலந்துரையாடல்

கிழக்கில் வாகரைப் பகுதிக்கான வழி யைத் திறந்து அத்தியாவசியப் பொருள் களை அங்கு எடுத்துச் செல்வதற்கு உட னடியாக ஏற்பாடு செய்வதாக ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடா ளுமன்ற உறுப்பினர்களை நேற்று முற் பகல் விசேட கலந்துடையாடல் ஒன் றுக்கு அழைத்த ஜனாதிபதி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர் பாக அவர்களோடு உரையாடினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந் தன், கஜேந்திரகுமார் பொன்னப்பலம், எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் நேற்று ஜனாதிபதியை அலரிமாளிகையில் சந்தித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றுக்காலை யில் தான் கொழும்பு திரும்பினர். இத னால் அவர்கள் ஜனாதிபதியுடனான சந் திப்பில் பங்குகொள்ளவில்லை.

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அவரை நேரில் சந்தித்த சம்பந்தன் தலை மையிலான எம்.பிக்கள் மூவரும் வடக்கு கிழக்கு மக்களின் அவலங்கள் குறித்து ஜனாதிபதிக்கு எடுத்து விளக்கி னர்.

யாழ். குடாநாட்டில் முற்றுகைக்குள் ளாகி இருக்கும் மக்களின் பட்டினி நிலை, கிழக்கில் வாகரைப் பிரதேசத் தில் இடம்பெயர்ந்த மக்களின் அவலங் கள், அண்மையில் அங்கு அகதிகள் மீது நடத்தப்பட்ட ஷெல் வீச்சு சம்பவம், நாடா ளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை உட்பட பல விடயங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட் டன என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

உணவு, மருந்து இன்றி வாகரை மக் கள் படும் இன்னல்கள் அறிந்து கவலை வெளியிட்ட ஜனாதிபதி, அந்தப் பிர தேசத்துக்கான மாங்கேணிப் பாதையை திறந்து பொருள்களை தாராளமாக அனுப்பு வதற்கு உத்தரவிடுவதாக கூட்டணி எம்.பிக்களிடம் தெரிவித்தார்.

வாகரைப் பகுதிக்கு பொருள்களை எடுத்துச் செல்வதை கடந்த 3ஆம் திகதி முதல் இராணுவம் தடுத்து வைத்துள் ளது. இதனால் அங்கு மனிதப் பேர வலம் உருவாகியிருக்கிறது.

வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாக சர்வதேச அளவில் கிளம்பி யிருக்கும் கண்டனங்களையடுத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைத்து அங்குள்ள மக்களின் பிரச்சி னைகள் குறித்து ஜனாதிபதி கலந்துரை யாடியிருக்கிறார் என்று அவதானிகள் சுட்டிக்காட்டினர்.

ரவிராஜ் எம்.பியின் படுகொலை தொடர்பாக அரசு முழு அளவில் விசா ரணைகளை நடத்தும் என்று தெரிவித் திருக்கும் ஜனாதிபதி, இதுவிடயத்தில் ஒளிவு மறைவு இன்றி சகல தரப்பு உதவி களும் வெளிப்படையாகப் பெற்றுக்கொள்ளப்படும் என்றும்கூட்டமைப் பினரிடம் உறுதியளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.