Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்பட்டமையால் நாடாளுமன்றத்தில் குழப்பம் - சபை ஒத்திவைப்பு

Featured Replies

மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும 24ம் திகதி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் எதிர்கட்சிகள் குழப்பம் விளைவித்தன.
 
எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் மையப்பகுதிக்கு பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
 
இதனால் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக நாடாளுமன்றம் நாளைய தினம் காலை 9.30 வரையில் சபாநாயகரால் பிற்போடப்பட்டது.
 
எனினும் விமல் வீரவன்ச தலைமையிலான எதிர்கட்சிகளின் குழு ஒன்று நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
 
மகிந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் வரையில், தாங்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தவிருப்பதாக விமல் வீரசன்ச கூறியுள்ளார்.

http://www.pathivu.com/news/39386/57//d,article_full.aspx

Edited by nunavilan

மனைவிக்காக மகிந்தவிடம் ரணில்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்வரும் 24ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பாராளுமன்றில் உறுப்பினர்கள் 105 பேர் இதுவரை இதற்கு எதிராக கையொப்பமிட்டு பாராளுமன்றத்தில் இன்று இரவை கழித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை முன் எடுத்து வருகின்றமை அறிந்ததே.

குறிப்பிட்ட மகஜரில் தனது மனைவியின் விருப்பப்படி ரணில் விக்ரமசிங்க அவர்களும் நாளை காலை கையொப்பமிட உள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சகோதர ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது….

http://www.jvpnews.com/srilanka/105878.html

Raneil4.jpg?resize=400%2C214

மனைவிக்காக மகிந்தவிடம் ரணில்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்வரும் 24ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பாராளுமன்றில் உறுப்பினர்கள் 105 பேர் இதுவரை இதற்கு எதிராக கையொப்பமிட்டு பாராளுமன்றத்தில் இன்று இரவை கழித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை முன் எடுத்து வருகின்றமை அறிந்ததே.

குறிப்பிட்ட மகஜரில் தனது மனைவியின் விருப்பப்படி ரணில் விக்ரமசிங்க அவர்களும் நாளை காலை கையொப்பமிட உள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சகோதர ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது….

http://www.jvpnews.com/srilanka/105878.html

Raneil4.jpg?resize=400%2C214

 

இந்த கடித்தில மைத்திரியும் கையெழுத்திட்டால் சம்பந்தார் தான் விசாரிக்க சொன்னார் எண்டு சம்பந்தரை தூக்கிடலாம்.   :D

  • கருத்துக்கள உறவுகள்

100.. நாள் பஞ்சா பறந்திட்டுது. நாடாளுமன்றக் கலைப்பும் இல்லை.. முன்னாள் ஆட்சியாளர்களின் ஊழல் மீதும் விசாரணையும் இல்லை. இதில.. சுமந்திரன்.. 100 நாளைக்குள்ள வெட்டிக்கிழிப்பன் என்றது ஒன்றும் நடக்கல்ல. 1000 ஏக்கரில.. 400 ஏக்கர் கூட முழுசா.. விடுவிக்கப்படல்ல. கொழும்பில் இருந்து கொண்டு ஊரை ஏய்க்கிற அரசியல் செய்தவைக்கு கடந்த காலம் கற்றுக் கொடுத்த படிப்பினையை மிஸ்டர் சுமந்திரன் கவனத்தில் எடுக்கனும். போர்  முடிஞ்சிட்டுது.. புலி இல்லை என்றதுக்காக எப்படியும் ஆடலாம் என்று கணக்குப் போட்டால்.. அது தப்புக் கணக்கப்பு. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

ஆணைக்குழுவுக்கு அழைத்தது தவறென்றால் உச்சமன்றில் தடையுத்தரவு பெறலாம்

 

ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிடப் போவதில்லை - பிரதமர்

 

எம்.எஸ்.பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அழைத்திருப்பது தவறு எனக் கருதினால் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று அதற்கு எதிராக தடையுத்தரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தான் ஒருபோதும் தலையிடப்போவதில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படவேண்டிய அவசியம் தமக்கு இல்லையெனச் சுட்டிக்காட்டிய பிரதமர், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்குவதாக உறுதியளித்த பாதுகாப்பு சகலதும் வழங்கப்பட்டே இருப்பதாகவும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் தினேஷ் குணவர்த்தன கொண்டுவந்த சிறப்புரிமைப் பிரச்சினை குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

இவ்வாறு அழைப்பாணை விடுத்தமையானது இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழு சட்டத்துக்கும் அப்பால் சென்ற விடயம் எனக் கருதினால் முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று இதற்கு எதிராக தடையுத்தரவைப் பெற்றுக்கொள்ள முடியும். எல்லா விடயங்களும் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும் கூறினார்.

இலஞ்சமோசடி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தான் தலையிடுவதில்லையெனச் சுட்டிக்காட்டிய அவர், சட்டரீதியாக செயற்படுவதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்துக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்றும் கூறினார். குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கான பெயரை நீதி அமைச்சரே வழங்கியிருந்தார்.

பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருப்பவர் எனக்கு நெருக்கமான நண்பர் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது என தான் உறுதிமொழி வழங்கியதாக விமல் வீரவன்ச குற்றச்சாட்டை மறுத்த பிரதமர், உச்சநீதிமன்ற நீதியரசராக சட்டமா அதிபரையோ சொலிசிட்டர் ஜெனரலையோ நியமிக்கலாம். உச்சநீதிமன்ற நீதியரசர் நியமனம் தொடர்பில் முறைமையொன்று பின்பற்றப் படுகிறது.

எனவே இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்றும் கூறினார், இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நியமிக்கப் பட்டவர்கள். இவ்வாறான நிலையில் எமது கட்டளைக்கு அமைய ஆணைக்குழு செயற்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.

அண்மையில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள். ஜனாதிபதி அக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அக்கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. இது இலஞ் சமாக முடியாது. இந்தப் பிரச்சினையை கட்சித் தலைவருடன் பேசித் தீர்த்துக் கொள்ளாமல் பாராளுமன்றத்தில் வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்புவதில் எந்தவித பயனும் இல்லையென்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் யுத்த வெற்றியை தொடர்புபடுத்த வேண்டாம் என்று கோரிய பிரதமர், யுத்தத்திற்கு இராணுவ ரீதியான தலைமைத்துவத்தை சரத் பொன்சேகா வழங்கியதாலேயே யுத்தத்தை வெல்ல முடிந்தது. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது இராணுவ ரீதியில் தலைமைத்துவம் வழங்க தகுந்தவர்கள் இருக்காததாலேயே அன்று யுத்தத்தை வெல்லமுடியாது போனதாகவும் தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.