Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருச்சி - மலைகோட்டை மாநகரில் ஒரு இன்ப சுற்றுலா

Featured Replies

திருச்சி, தமிழகத்தின் நான்காவது மிகப்பெரிய நகரமான இது மிகத்தொன்மையான வரலாற்று பாரம்பரியத்தையும், காவேரித்தாய் தந்தருளும் செழிப்பையும் கொண்டிருக்கும் சீரும் சிறப்பும் மிகுந்த ஓரிடமாகும். பூகோள ரீதியாக தமிழ் நாட்டின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் திருச்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் தமிழனின் கட்டிடக்கலை அறிவை உலகுக்கு பறைசாற்றும் கல்லணை போன்றவை அமைந்திருக்கின்றன. மலைகோட்டை நகரை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள்.  
 

 

11-1426074305-7742390964-571191fe98-k.jp

 

திருச்சியின் வரலாறு :
திருச்சி நகரில் கி.மு 2ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உறையூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நகரம் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள் என பல்வேறு மன்னர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது.
 
கி.மு 3ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை இந்நகரை ஆட்சி செய்த சோழர்களின் தலைநகரமாக உறையூர் இருந்திருக்கிறது. வரலாறு மற்றும் அகழ்வாராய்ச்சி சார்ந்த விஷயங்களில் நாட்டம் உடையவர்கள் நிச்சயம் உறையூருக்கு வர வேண்டும். 
 
கல்லணை 
 
11-1426074267-1309253561-8dc4e31f5c-b.jp
 
அறிவியல் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் காட்டப்படும் அணைகளே சில வருடங்களில் விரிசல் விடும் போது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை இன்றும் பிரமாண்டமாக வீற்றிருக்கிறது.
 
11-1426074311-8914125134-22b5443282-k.jp
 
பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் குறுக்கே கி.பி 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அணை உலகத்தில் இன்றும் பயன்பாட்டில் இருக்கும் பழமையான அணை என்ற சிறப்பை பெற்றுள்ளது. திருச்சி நகரில் இருந்து 15கி.மீ தொலைவில் இந்த அணை அமைந்திருக்கிறது. 
 
இந்த அணையினால் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கர் டெல்டா விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இதனை கட்டிய கரிகால் சோழனை கவுரவிக்கும் பொருட்டு கல்லனைக்கு அருகில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. திருச்சிக்கு செல்கையில் நாம் தவறவிடக்கூடாத இடம் இந்த கல்லணையாகும். 
 
11-1426074342-cholan.jpg
கரிகால் சோழன். 
 
உச்சி பிள்ளையார் கோயில் :
 
11-1426074292-6357418619-cd84dc50e7-b.jp
 
திருச்சி என்று சொன்னதுமே பலருக்கு நினைவுக்கு வரும் ஓரிடம் இருக்குமென்றால் அது மலைகோட்டையின் மேல் அமைந்திருக்கும் உச்சி பிள்ளையார் கோயில் தான். 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் தமிழ் நாட்டில் இருக்கும் மிக முக்கியமான விநாயகர் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. 
 
குடைவரைக் கோயில்கள் கட்டுவதில் கைதேர்ந்த பல்லவர்கள் காலத்தில் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டாலும் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களே இக்கோயிலை முழுமையாக கட்டி முடித்திருகின்றனர். 
 
11-1426076334-4395012200-a013561dc8-b.jp
 
திருச்சி நகரின் அழகை முழுமையாக காண விரும்புகிறவர்கள் நிச்சயம் இந்த மலைக்கோட்டைக்கு வர வேண்டும். இதன் மேல் நின்று திருச்சி நகரின் மொத்த அழகையும் பார்த்து ரசிக்க முடியும். 
 
11-1426076340-15710167355-df58715837-k1.
 
 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :
 
11-1426076668-16-1400232151-history.jpg
 
108 திவ்யதேசங்களில் முதன்மையானதாக வைத்து போற்றப்படும் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் திருச்சியில் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள தீவு நகரமான ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், 1000 ஆண்டுகளை தாண்டியும் இன்றும் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
 
11-1426076797-16-1400232166-inscriptions
 
 
வரலாறு :
சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களில் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், 9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுகளில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளே கோயிலில் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, ஹொய்சள மற்றும் விஜயநகர பேரரசுகளின் காலத்தை சேர்ந்தவையாகும்.
 
 
11-1426076899-16-1400232221-rajagopuram.
 
ராஜகோபுரம் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயிலின் கோபுரம் இந்தியாவின் 2-வது உயரமான கோபுரமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மொத்தம் 21 கோபுரங்களை கொண்ட இந்தக் கோயிலின் ராஜகோபுரம் 236 அடி உயரத்தில் ஆசியாவிலேயே 3-வது உயரமான கோபுரமாக அறியப்படுகிறது. ஏனைய 20 கோபுரங்கள் 14 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜகோபுரம் மட்டும் 1987-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதாவது 400 ஆண்டு காலமாக 55 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்படாமல் நின்றுகொண்டிருந்த கோபுரம் 236 அடி உயரத்தில் அஹோபிலா மடத்தால் முழுமை பெற்றது.
 
11-1426076990-16-1400232074-chandrapushk
 
சந்திர புஷ்கரணி ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலின் தீர்த்தம் சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. இந்த சந்திர புஷ்கரணி வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவ தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆடம்பர தீர்த்தம் ஆகிய எட்டுத் தீர்த்தங்களால் சூழப்பட்டுள்ளன. சந்திரபுஷ்கரணியும், ஸ்தல விருட்சமான புன்னை மரமும் பரமபதவாசலுக்கும், ஸ்ரீகோதண்டராமன் சன்னதிக்கும் இடையே அமைந்துள்ளன.
 
11-1426077103-16-1400232101-festivals.jp
 
திருவிழாக்கள் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் வைகுண்ட ஏகாதசி, பங்குனி, சித்திரைத் தேரோட்டங்கள் ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. 
 
ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலின் சில அற்புதமான புகைப்படங்கள்
 
11-1426077371-16-1400232109-fromrockfort
 
11-1426077515-16-1400232203-pillarsandho
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் தூண்களில் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ள குதிரைச் சிற்பங்கள்
 
11-1426077567-16-1400232116-fullmoonday.
ஒரு பௌர்ணமி தினத்தன்று!
 
11-1426077691-16-1400232051-carfestival.
 
11-1426077817-16-1400232036-1000pillars.
1000 தூண் மண்டபம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள 1000 தூண் மண்டபம். 
 
/tamil.nativeplanet.com/travel-guide/trichy-the-city-temples-rich-history-000408.html#slide5878
 
 

 

  • 1 year later...
  • தொடங்கியவர்

சம்மர் டூர் : பச்சைப்பசேல் மலை குதூகலிக்க முக்கொம்பு 

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருச்சியில் மலைக்கோட்டை, உறையூர் வெக்காளியம்மன் கோயில், சுற்றுப்பகுதிகளில் ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்காவல், உத்தமர்கோவில், குமாரவயலூர், செயின்ட் ஜோசப் சர்ச் என ஆன்மீக தலங்கள் மட்டுமின்றி கோடைகாலத்தை சில்லென்று கழிப்பதற்கு ஏற்ற இடங்களும் நிறைய உள்ளன.

பச்சமலை 

எங்கும் பச்சை போர்த்தியது போல் மரங்கள், ஜில்லென்று வீசும் காற்று, மூலிகை மணத்துடன் கூடிய சுவாசம் ஆகியவற்றை அளிக்கும் இடம் பச்சமலை. திருச்சி மாவட்டத்தின் கடைசி பகுதியாக கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியாக, சுமார் 19 ஆயிரத்து 76 ஹெக்டேர் பரப்பில் விரிந்துள்ளது. இந்த மலையின் ஒரு பகுதி திருச்சி மாவட்டத்திலும், நேர் எதிர்பகுதி சேலம் மாவட்டத்திலும் உள்ளது. மற்ற சுற்றுலா தலங்கள் போல இங்கு விடுதி, ஓட்டல்கள் அவ்வளவாக இல்லை. ஆனாலும், கட்டிட ஆக்கிரமிப்புகள் குறைவு என்பதால் சூழல் இன்னமும் பசுமையாக, இயற்கையாகவே இருக்கிறது. மலைவாழ்மக்கள் வாழும் பகுதியாகவே பச்சமலை உள்ளது. 

சுற்றுலாவுடன், மலைவாழ் மக்களின் பாரம்பரிய வரவேற்பும், அவர்களுடன் ஒருநாள் தங்குவது, அவர்களின் கலாசாரத்தை அறிதல் ஆகியவற்றுக்கான பயண திட்டங்களுடன் கூடிய பேக்கேஜ் திட்டமும் இங்கு உள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கேற்ப, சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பேக்கேஜ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு வனத்துறையிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தில், மலைவாழ் மக்கள் சமைத்த உணவு, தெருக்கூத்து, நடனம், உறியடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை கண்டு களிக்கலாம். இரவில் அங்குள்ள ஓய்வு விடுதியில் தங்கிக்கொள்ளலாம். 

இது 24 மணி நேர பேக்கேஜ் திட்டம். ஒரு நாளைக்கு 4 குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி. ஒரு குடும்பத்துக்கு (4 பேர்) ரூ.2 ஆயிரம் கட்டணம். பச்சமலை கீழ்கரை பேக்கேஜ் என்ற திட்டமும் உள்ளது. இதில் ஒரு நாளுக்கு 100 பேருக்கு அனுமதி. பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.300, சிறியவர்களுக்கு ரூ.200. திருச்சியில் இருந்து துறையூர் 45 கி.மீ. தூரம். அங்கிருந்து அடிவாரம் வழியாக பச்சமலையின் கிழக்கு பகுதிக்கு செல்ல 25 கி.மீ. தூரம். அதேபோல, மேற்கு பகுதியான டாப்செங்காட்டுப்பட்டி செல்ல துறையூரில் இருந்து 35 கி.மீ. தூரம். இரண்டு பகுதிகளுக்கும் துறையூரில் இருந்து குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டும் டவுன் பஸ் வசதி உண்டு.

பொண்ணனியாறு அணை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ளது பொண்ணனியாறு அணை. பெருமாள்மலை மற்றும் செம்மலைக்கு நடுவே உள்ளது. முன்பு சிறு ஓடைபோல் இருந்த இப்பகுதியில் 2 மலைகளையும் குடைந்து அகலப்படுத்தி 37 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை. பூங்கா மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. ஏராளமான மான்களும் உள்ளன. திருச்சியில் இருந்து செல்வதாக இருந்தால் மணப்பாறை வழியாக வையம்பட்டி சென்று அங்கிருந்து இடையப்பட்டி வழியாக பொண்ணனியாறு அணைக்கு செல்லலாம். மணப்பாறையில் இருந்து பொண்ணனியாறு அணைக்கு தினமும் காலையில் அரசு டவுன் பஸ் செல்கிறது.

முக்கொம்பு

காவிரி, கொள்ளிடம் என அகண்ட காவிரி ஆறு இரண்டாக பிரியும் இடம் முக்கொம்பு. மேலணை எனப்படும் இது 1974-ல் கட்டிமுடிக்கப்பட்டது. சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் விரும்பிச் செல்லும் இடம். இங்குள்ள காவிரி, கொள்ளிட ஆற்றுப் பாலம், சுற்றிலும் நீர் இருக்க இரண்டு ஆறுகளுக்கு இடையில் உள்ள பூங்கா, நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், ஏரி ஆகியவை சம்மருக்கு ஏற்ற இடங்கள். குடும்பத்துடன் சென்று வர ஏற்ற இடம். இரவில் தங்க பொதுப்பணி துறைக்கு சொந்தமான அறை மட்டும் உள்ளது. திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் பஸ்சில் செல்லலாம்.

கல்லணை

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அதிசயம் கல்லணை என்று போற்றப்படுகிறது. முற்கால சோழ அரசன் கரிகால் பெருவளத்தான் கட்டிய இந்த அணைதான் உலகில் முதன்முதலில் ஆற்று நீரை தேக்கிவைத்து கட்டப்பட்ட அணை என கூறப்படுகிறது. கல்லணைக்கு வரும் சுற்றுலா பயணிகளை குதிரையில் சிலையாக நின்று வரவேற்கிறார் கரிகால சோழன். கல்லணை பாலத்தில் அமர்ந்து பிரமாண்ட காவிரியை காண்பது தனி அழகு. மே மாதம் துவங்கி ஜூலை வரை சீசன் காலம். காவிரி ஆற்றில் மீன் பிடித்து அங்கேயே வறுத்து தருவார்கள். அணையை ஒட்டி பூங்கா, பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் உள்ளது என்றாலும், திருச்சி வழியாக செல்வதுதான் எளிது. திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் கல்லணை உள்ளது. டூவீலர் அல்லது காரில் திருச்சியில் இருந்து காவிரிக் கரை வழியாக செல்லலாம். திருச்சி, தஞ்சையில் இருந்து கல்லணைக்கு நேரடியாக பஸ் வசதியும் உள்ளது.

www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=6018#sthash.WsEGCXkm.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆதவன்...வாசிக்க ஆவல்

எத்தனை தடவைகள் பார்த்தாலும் ஆறாதது தமிழ் நாட்டு அழகு .

இந்த சுற்றுலா நல்லதுகள் பற்றியே எழுத்துக்கள் இருக்கும் இன்றும் கல்லனைக்கு சுற்றுலா செல்வோரிடம் பிராடு தனம் பண்ணும் கும்பல் பற்றி விகடனிலோ எதோ ஒன்றில் படித்த நினவு வந்து போகின்றது நன்றி ஆதவன் இணைப்புக்கு .

Edited by spyder12uk

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில்.... எனக்குப் பிடித்த நகரங்களில் முதலாவது திருச்சி, அடுத்து கோயம்புத்தூர்.
பகிர்விற்கு நன்றி ஆதவன்.

  • 4 months later...
  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.