Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டில இருந்து கத்துற உங்களுக்கு தாயகத்து நிலைபற்றி என்ன தெரியும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 “இலவச கல்வி தருகிறார்கள். மகா பொல புலமை பரிசில் பணம் தருகிறார்கள். தின்னும் நிவாரண அரிசியிலிருந்து அனைத்தையும் இலவசமாக தரும் சிறிங்கா அரசாங்கத்தினை எதிர்க்கவும் புறக்கணிக்கவும் பிரசாரம் செய்துகொண்டு வெளிநாட்டிலிருக்கும் உங்களுக்கு தாயத்திலுள்ள மக்களின் யதார்த்தநிலை பற்றி என்ன தெரியும்”
 
தாயகத்தின் நிலமை குறித்தும் தாயகத்தின் விடுதலை குறித்தும் இறுக்கமாக நடக்கும்; விவாதங்களின் நீட்சியில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களின் வாயை அடைப்பதற்காக எதிர்தரப்பினால் முன்வைக்கப்படும் ஒற்றை வாக்கியம் இதுவாகும். 
 
இந்த ‘எதிர்த்தரப்பு’ அநேக தருணங்களில் தாயகத்திலிருந்து பேசும் குரலாக இருப்பதே இல்லை. மாறாக, தாயக மக்களுக்காக கரிசனைப்படுவதுபோன்ற போர்வையில் புலம்பெயர்ந்த மண்ணிலேயே இருந்துகொண்டு வாய்ச்சவடால் அடிக்கும் கூட்டத்தின் குரலாகவே இருக்கும். இந்தக்கூட்டத்திற்கு உண்மையில், தாயகத்தை பற்றியும் அக்கறை இல்லை, புலம்பெயர்ந்த மண்ணிலுள்ள அரசியல் இருப்பு குறித்தும் அக்கறை இல்லை. பார்க்கப்போனால், நான் பார்த்த பல தருணங்களில், சனி, ஞாயிறுகளில் உள்ளே இறங்கும் சோமபானத்தின் இடைவேளைகளில் சப்பிக்கொள்ளும் வியாக்கியானம்தான் இது.
 
இருந்தாலும் இந்த விஷயத்தை கொஞ்சம் ஆழமாக விவாதிப்பது இந்த இடத்தில் சாலச்சிறந்தது என்று எண்ணுகிறேன். 
 
இன்றைய நிலையில் சிறிலங்காவிலுள்ள மக்கள் மத்தியில் கொள்கை ரீதியாக இருதேசங்களுக்கான முன்மொழிவுகள் இருப்பினும் சட்ட ரீதியாக ஒற்றையாட்சிமுறைதான் நடப்பிலிருந்து வருகிறது. சிறிலங்காவில் ஆட்சிக்கட்டமைப்பு எனப்படுவது அதிகார மையம் தொடக்கம் நிர்வாகமுறைவரை அனைத்தும் சிங்கள ஏகாதிபத்தியத்தின்கீழ் முடக்கப்பட்ட தனிப்பெரும் உரிமையாகவும் தமிழ்மக்கள் அதற்கு இறைஞ்சும் கூட்டமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை எதிர்த்துத்தான் போர் முடிந்த பின்னரும் இன்னும் ஆறு வருடங்களாக உரிமைக்கான இழுபறிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
 
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர், இலங்கை எனும் ஜனநாயக பெருவெளியில் தமிழ் மக்களுக்கு உரிமைகளை அள்ளி இறைத்துவிட்டிருப்பதாக சிங்கள தேசம் வெளியே மார்தட்டிக்கொண்டாலும் இராணுவம் பிடித்து வைத்திருக்கும் மக்களின் காணியை விடுவிப்பதற்கு மக்களின் பிரதநிதிகளான கூட்டமைப்புக்காரரே இராணுவத்திடம்போய் இராப்பகலாக ஒப்பாரிவைக்கவேண்டிய நிலைமைதான் நிலவுகிறது. 
 
இந்த நிலைமையில், சிறிலங்கா அரசையோ அதன் படைகளையோ எதிர்த்து அங்குள்ள மக்கள் எதையும் புடுங்கிவிடமுடியாது என்பது யதார்த்தம்.
 
ஆனால், எமக்கான உரிமைகளின் மீது ஆத்மார்த்தமான வேட்கையுடைய மக்கள், உணர்வுரீதியான சில விடயங்களை தவிர்க்கக்கூடிய நடைமுறை அரசியல் வெளிகூட தாயகத்தில் இல்லை என்றால், அது சாத்தியமற்ற விவாதமே ஆகும். உணர்வுடன் உள்ள மக்கள் அதனை நிறைவேற்றிவருகிறார்கள். அந்த தெளிவான பார்வையும் அவர்களுக்கு உண்டு. அவர்களின் அந்த உணர்வுகளின் மீது எந்த இராணுவமும் நெருக்குவாரங்களை ஏற்படுத்திவிடமுடியாது. 
 
நீட்டி முழக்காமல், விஷயத்துக்கு வருகிறேன். 
 
சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதும் மைத்திரிக்கும் மகுடம் வைத்து கம்பன் விழா நடத்துவதும் இலங்கையில் கட்டாய சட்டங்கள். சிங்களத்துக்கு சாமரம் வீசும் இப்படியான நடவடிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எமது மக்கள் அங்கு உயிர்வாழ முடியாது என்று கூறினால், இதைக்கேட்டு மைத்திரியே சிரிப்பார். (கம்பன் கழக விழாவில் மாலை போடும்போது ஒரு சிரிப்பு சிரித்தாரே. அடடா.. என்ன ஒரு சிரிப்பு. சில்லறையை அள்ளி வீசி எறிந்தது போல)
 
அப்படியானால், சிறிலங்காவின் அனைத்து இலவசங்களையும் அனுபவித்துக்கொண்டு அந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்கவேண்டாமா என்று நீங்கள் கேட்கலாம்.
 
இதற்கான பதில், தொடர்ச்சியான அடக்குமுறையின் நீட்சியில் தொலைந்துபோய் கிடப்பதுதான துரதிஷ்டவசமானது.
 
அதாவது, எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு அரசும் எதையும் இலவசமாக தனது நாட்டு மக்களுக்கு வழங்கிவிடுவதில்லை. வளர்முக நாடுகள் தமது நாட்டின் மக்களிடமிருந்து வசூலிக்கும் வரிகளிலிருந்து குறிப்பிட்ட தொகையை தமது மக்களுக்கே வெவ்வெறு வழிகளில் “இலவசம்” என்ற பெயரில் திருப்பிச்செலுத்துகின்றன. வளர்ச்சியடையாத நாடுகள் மக்கள் வரிப்பணித்திலிருந்தும் அதேவேளை அந்த மக்களின் வறுமையையும் தேவைகளையும் காண்பித்து வெளிநாடுகளிடமும் சர்வதேச நாணயநிதியம் போன்ற மெகா அமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன்களிடமிருந்து பெற்ற பணத்தை தமது மக்களுக்கு “இலவசம்” என்ற பெயரில் கொடுத்துவிடுகின்றன. இந்த இலவச பட்டியலுக்குள் மருத்தும், கல்வி, நீங்கள் கூறும் மகாபொல எல்லாம் அடங்கும். மற்றும்படி, மகிந்தவும் மைத்திரியும் தங்கள் அப்பன் முப்பாட்டன் சொத்துக்களை நாட்டுமக்களுக்கு அள்ளி அள்ளி தரவில்லை. மாறாக மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்ததுதான் அதிகம். அது தனிக்கதை. அதை இப்போது விட்டுவிடுவோம். 
 
மக்கள் பணத்தை மக்களுக்கே வழங்கும் இந்த கைங்கரியத்தை இலவசம் என்று ஏமாந்து அதற்காக இந்த ஆளும் வர்க்கத்துக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று கூச்சல்போடும் இந்த கூட்டத்தை பார்க்கும்போது – 
 
தாங்கள் முடக்கிவைத்திருந்த ஞானம் ஹோட்டால் பின் வீதியை பல வருடங்களுக்கு பின்னர் மக்கள் பாவனைக்கு தாங்களே திறந்தவிட்டபோது, அதற்கு “வீதி திறப்புவிழா” என்று விழா எடுத்த டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் சித்துவிளையாட்டுத்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
 
உதாரணத்துக்கு, ஆஸ்திரேலியாவை எடுத்துக்கொண்டால், centrelink எடுப்பவர்கள் எல்லாம் ஆஸ்திரேலிய விளையாட்டு அணிகளுக்குத்தான் ஆதரவளிக்கவேண்டும் என்று கோருவது எவ்வளவு அப்பத்தமோ அவ்வளவு அபத்தமான விவாதம் இது. 
 
அப்படியானால், இந்த இலவசங்களை துறந்துவிட்டு தாயகத்துக்கு விசுவாசமாக இருக்கவேண்டுமா என்றால் - 
 
வேண்டவே வேண்டாம்.
 
எமது தாயகம் இன்று இன்னொரு அடக்குமுறை சக்தியால் எமது விருப்பத்துக்கு மாறாக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இடைக்காலப்பகுதியில், சில விடயங்களை நடைமுறை ரீதியாக நிறைவேற்றிக்கொண்டால்தான் எமது அன்றாட வாழ்க்கை முறையையும் தேவைகளையும் முன்னகர்த்தமுடியும் என்றால், அதனை பின்பற்றியே ஆகவேண்டும். 
 
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர், சமாதான பேச்சுக்களுக்காக வெளிநாடு சென்ற விடுதலைப்புலிகளின் தலைவர்களும் மருத்துவ, அரசியல், பிரச்சார நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற விடுதலைப்புலிகளின் தளபதிகள் மற்றும் உறுப்பினர்களும் சிறிலங்கா அரசின் கடவுச்சீட்டை பெற்றுத்தான் கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக வெளிநாடு சென்றார்கள். ஏனெனில், அதுதான் நடைமுறை நிலை என்கின்றபோது, நோர்வே சமாதான பிரதிநிதிகள் அதற்கான வேலைகளை செய்து விமான நிலையத்தின் இராஜதந்திர பிரதிநிதிகள் செல்லும் வாசலினால், விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை அழைத்து சென்றார்கள். அதற்காக, அவர்கள் தங்கள் கொள்கையிலிருந்து தவறிவிட்டார்கள் என்று அர்த்தம் ஆகாது.  
 
எமக்கான ஒரு தேசம், எமக்கான ஒரு சட்டம், எமது மக்களுக்காக ஒரு நிர்வாக அலகு என்ற விடயங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு அதை நேர்சீராக அமுல்படுத்தும்வரை, யதார்த்தமாகத்தான் விடயங்களை கையாளவேண்டிய கட்டாயத்திற்குள்தான் எமது மக்கள் திணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
இதில், நிவாரணத்துக்கு கொடுக்கும் இலவச அரிசி முதல் கச்சேரியில் கொடுக்கும் ஓய்வூதியம் வரை எல்லாமுமே அடங்கும். ஏனெனில், இவையெல்லாம் எமது மக்களின் இயல்புவாழ்க்கை சக்கரத்தை இயக்கும் முக்கிய காரணிகள். இப்போதைக்கு இவற்றோடு ஒத்துப்போகவேண்டியது காலத்தின் கட்டாயம். நடைமுறை யதார்த்தம்.
 
ஆனால், சிறிலங்கா அணிக்கு ஆதரவு தெரிவிப்பதும் கம்பன் கழகத்தில் மைத்திரிக்கு மகுடம் சூட்டுவதையும் காலத்தின் கட்டாயமாகவும் நடைமுறையில் அடிபணிந்துபோயே ஆகவேண்டிய நிர்ப்பந்த சமன்பாடாகவும் எமது மக்கள் வரிந்துகட்டிக்கொள்ளவேண்டுமா?
 
இவ்வாறான காரியங்கள், நாங்கள் வலிந்து சென்று சிங்களத்தின் காலை பிடித்துக்கொள்வதாக அமையாதா? 
 
இது எவரையும் புண்படுத்துவதற்காகவோ அல்லது விவாதத்தில் வெற்றிக்கொள்வதற்கான பிரச்சார பத்திரமாகவோ எழுதவில்லை. அத்துடன், யாரையும் துரோகிப்பட்டம் கொடுப்பதற்கான அங்கீகார பத்திரமோ அல்லது உன்னிலும் பார்க்க நானே உணர்வுசெறிந்தவன் என்ற சிறுபிள்ளைத்தனமான சச்சரவுகளுக்கு வித்திடுவதற்கு எழுதப்பட்ட ஆக்கமும் அல்ல. எமக்குள் நாமே எம்மை சுயவிமர்சனம் செய்துகொண்டு ஆரோக்கியமாக பயணிப்பதற்காக எழுதப்பட்ட பதிவு.  
 
(விளையாட்டும் அரசியலும் வெற்வேறானவை என்ற கருத்தை மறுதலித்து எழுதிய ஆக்கம் :- "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்; சங்கா நீ எம் மங்கா விளக்கு")
 
Posted by தெய்வீகன் at 10:22 PM
 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 “இந்த நிலைமையில், சிறிலங்கா அரசையோ அதன் படைகளையோ எதிர்த்து அங்குள்ள மக்கள் எதையும் புடுங்கிவிடமுடியாது என்பது யதார்த்தம்.
 
ஆனால், எமக்கான உரிமைகளின் மீது ஆத்மார்த்தமான வேட்கையுடைய மக்கள், உணர்வுரீதியான சில விடயங்களை தவிர்க்கக்கூடிய நடைமுறை அரசியல் வெளிகூட தாயகத்தில் இல்லை என்றால், அது சாத்தியமற்ற விவாதமே ஆகும். உணர்வுடன் உள்ள மக்கள் அதனை நிறைவேற்றிவருகிறார்கள். அந்த தெளிவான பார்வையும் அவர்களுக்கு உண்டு. அவர்களின் அந்த உணர்வுகளின் மீது எந்த இராணுவமும் நெருக்குவாரங்களை ஏற்படுத்திவிடமுடியாது."
 
முக்கியமான பதிவு

 

  • கருத்துக்கள உறவுகள்

---

ஆனால், சிறிலங்கா அணிக்கு ஆதரவு தெரிவிப்பதும் கம்பன் கழகத்தில் மைத்திரிக்கு மகுடம் சூட்டுவதையும் காலத்தின் கட்டாயமாகவும் நடைமுறையில் அடிபணிந்துபோயே ஆகவேண்டிய நிர்ப்பந்த சமன்பாடாகவும் எமது மக்கள் வரிந்துகட்டிக்கொள்ளவேண்டுமா?
 
இவ்வாறான காரியங்கள், நாங்கள் வலிந்து சென்று சிங்களத்தின் காலை பிடித்துக்கொள்வதாக அமையாதா? 
---

 

நன்றாக ஆராய்ந்து எழுதப்பட்ட, யதார்த்தமான கட்டுரை.

  • கருத்துக்கள உறவுகள்

இது ...இது 
இதுதான் கட்டுரை 

 

கட்டுரையாளரின் மற்ற கட்டுரையும் படித்தேன் .செமையாக இருக்கிறது 
கூவுங்கள் ...சங்கா நீ எங்கள் மங்கா விளக்கு என்று (இதுக்குள்ள வருண பகவான் வந்து வழி அனுப்பிவைச்சார் என்ற அலப்பறை வேற )

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியது போலுள்ளது...

 

உண்மை உறைக்கும்

ஆனால் நிலைக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை உண்மையைச் சொல்கிறது...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.