Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் டக்கிளஸிற்கு சிக்கன் கூனியா!

Featured Replies

சிறிலங்கா அமைச்சர் டக்கிளஸிற்கு சிக்கன் கூனியா!

சிறிலங்கா அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவிற்கு சிக்கன் கூனியா நோய்ஏற்பட்டுள்ளதாக யாழ் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். யாழ் குடா நாட்டிற்கு வருகைதந்திருந்த டக்கிளஸ் தேவானந்தா யாழில் உள்ள சிறிதர் திரையரங்கில் ஒட்டுக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டதாகவும் இவ்வாறு சந்திப்பில் ஈடுபட்டிருந்த போது.

தீடிரென மயங்கி விழுந்ததாகவும் இதனையடுத்து ஒட்டுக்குழுவினர் யாழ் மருத்துவமனைக்குச் சென்று வைத்தியர் ஒருவரை அழைத்து வந்து பரீசோதித்ததாகவும் இதன்போது வைத்தியர் சிக்கன் கூனியா நோய்க்கான அறிகுறி உள்ளதாகக் கூறியதாகவும் இதனையடுத்து ஒட்டுக்குழுவினர் தமது அமைச்சருக்கு சிக்கன் கூனியா நோய் ஏற்பட்டுள்ளது தொடர்பாக யாருக்கும் கூறக்கூடாது.

என எச்சரிக்கைசெய்து வைத்தியரை அனுப்பிவைத்துள்ளனர். டக்கிளஸிற்கு சிக்கன் கூனியா நோய் ஏற்பட்டுள்ளதை கொழும்பிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனைஒன்றும் உறுதி செய்துள்ளது. கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை மேற்கொண்டபோதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் பின்பே யாழ்ப்பாணத்தில் இவருக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

www.sankathi.com

Edited by YARLVINO

இது புலிகளின் ஒரு சதி முயற்சி என EPDP வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது புலிப்பயங்கரவாதிகள் வயது குறைந்த சிறு அப்பாவி நுளம்புகளை தங்கள் தாக்குதல்களுக்காக பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளதாக அவை தகவல் வெளியிட்டுள்ளன.

திரு டக்கிளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்டிருந்த கடுமையான பாதுகாப்பையும் மீறி இத்தாக்குதல் நடந்தமையானது பாதுகாப்பு வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.

இதனை அடுத்து யாழ்நகரப்பகுதியில் நுளம்புகளை முற்றாக கட்டுப்படுத்தும் பணியில் இராணுத்தினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை காணக்கூடியதாகவிருந்தது.

சிக்குன் குன்யா நோய் பரவியுள்ளமை ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

வீரகேசரி நாளேடு

சுகாதார அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் சிக்குன்குன்யா நோய் பரவியுள்ளமை ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு நிபுணர் நிகால் அபயசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 60 வீதமானோர் சிக்குன்குன்யா நோயினாலேயே பீடிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்துகொண்ட செய்தியாளர் மாநாட்டில் நிகால் அபயசிங்க மேலும் தெரிவிக்கையில், சிக்குன்குன்யா நோய் உயிராபத்தினை ஏற்படுத்தக் கூடியதல்ல. இலங்கையில் இந்நோய் பரவியுள்ளமை சந்தேகத்துகிடமின்றி நிரூபணமாகியுள்ளது. மூன்று ஆய்வு நிலையங்களின் பரிசோதனையின் பின்னரே நாம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றோம் என்று தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சிக்குன் குன்யா நோயினை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொள்வதன் மூலமே இதனைக் கட்டுப்படுத்த முடியும். நுளம்பு உற்பத்தியாகும் நிலைகளை இனம்கண்டு ஒழிக்கவேண்டும் என்று கூறினார்.

http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=3068

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.