Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தடை! முல்லைதீவு நீதிமன்று விதித்தது!!

Featured Replies

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால்; முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இதை தடைவிதிக்க வேண்டும் என முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்ட விண்ணப்பத்தின் பிரகாரம் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தடை உத்தரவு கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிற்கு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடை தொடர்பினில் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவிக்கையினில் கடந்த 11 ம் திகதி திங்கட்கிழமை நிகழ்வு தொடர்பான அனுமதி கோரி எம்மால் முல்லைதீவு காவல் நிலையத்தினில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.இந்நிலையினில் முல்லைதீவு நீதவான் நீதிமன்றம் தடை பெற்று அதனை பொலிஸார் இன்று ஒப்படைத்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

courts.JPG

நாளை மறுதினம் திங்கட்கிழமை வரை விடுமுறை நாள்காரணமாக மேன்முறையீடு செய்து நீதிமன்ற அனுமதியினை பெறமுடியாத இக்கட்டான நிலை முன்னணியினரிற்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசு உயிரிழந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்த தடையில்லையென அறிவித்துவிட்டு நீதிமன்றினூடாக தடைபெற்றுள்ளமை அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. http://www.pathivu.com/news/40106/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்திருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை  அறிவித்தபடி நடத்த வேண்டும். நிகழ்வு திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் முன்னிலையில் நடக்க நடத்தவேண்டும்,   

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிலே இல்லாத அமைதிக்கு  எந்தவகையில் பங்கம் விளையும் என்று தெரியவில்லை

முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அனுமதி?

 

 

 
 
 
முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அரச தரப்பிலிருந்து சாதகமான சமிக்ஞை வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்த மக்களை நினைவு கூர தடையில்லை எனவும் எனினும் தடை செய்யப்பட்ட அமைப்பினை சேர்ந்தவர்களை நினைவு கூர அனுமதியில்லை எனவும் வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் அனுமதி தொடர்பில் தொடர்பு கொண்ட வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
 
 
இதனிடையே முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களிற்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
 
எனினும் கடந்த 11ம் திகதியே முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலிற்கு அழைப்பு விடுத்திருந்ததுடன் அதனை ஊடகங்கள் மூலமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது.
 
எனினும் தம்மை தொடர்பு கொண்ட பொலிஸ் அதிகாரியொருவர் முன்னணியுடன் முரண்பட்ட அமைப்பொன்றும் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை நடத்த இருப்பதாகவும் இருதரப்பும் நிகழ்வுகளை நடத்த முற்பட்டால் முரண்பாடு ஏற்படுமெனவும் அதனால் முன்னணிக்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் அறிய தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனினும் முன்னதாக அனுமதி கோரிய தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு கூட்டமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் ஆட்சேபனைகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தெரிவிக்கப்பட்ட போதும் இது உயர்மட்ட முடிவென தெரிவித்ததாகவும் அறிய முடிகின்றது.
 
எனினும் முன்னதாக அறிவிக்கப்பட்டது போன்று மட்டக்களப்பு வாகரையிலும் வடக்கிலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இதனிடையே வடக்கு முதலமைச்சருடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தானும் முள்ளிவாய்க்கால் சென்று நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். எனினும் கட்சி தலைவர் சம்பந்தன் இந்நிகழ்வில் கலந்து கொள்வாரா என்பது பற்றி தகவல்களில்லை. 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.