Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்குத் தயாராகும் சென்னை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்குத் தயாராகும் சென்னை

Jayalalitha-300x214.jpg

 

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக 23ஆம் தேதி மீண்டும் பதவி ஏற்பது உறுதியாகிவிட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

 

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா,  நாளை மறுதினம் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கிறார். இதற்காக நாளை காலை 7 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இதில், சட்டப்பேரவை கட்சித்தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுகிறார்.

 

அதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்கிறார். இதுகுறித்த கடிதங்கள் ஆளுநர் ரோசய்யாவிடம் வழங்கப்படும். அதை ஏற்று ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார்.

 

இதையடுத்து, நாளை மறுநாள் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. இதற்கான விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன. அரங்கை புதுப்பிப்பது, விஐபிகளுக்கு இருக்கை ஒதுக்குவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் இரவு, பகலாக நடக்கிறது.

 

ஜெயலலிதாவுடன் 31 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இவ்விழாவி்ல் மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் அருண்ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, நாளை பிற்பகல் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர், அண்ணா சிலைகளுக்கும் அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கும் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

 

சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர் போயஸ் தோட்ட வீட்டில் இருந்து வெளியில் வரும் ஜெயலலிதாவுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அதிமுகவினர் தயாராகி வருகின்றனர். போயஸ் தோட்டத்தில் இருந்து அண்ணா சாலை வரை வரவேற்பு பேனர்கள், கொடிகள், தோரணங்கள் கட்ட ஏற்பாடு செய்துள்ளனர்.

 

அதேபோல, நாளை மறுநாள் பதவியேற்பு விழாவுக்கு வரும் ஜெயலலிதாவை வரவேற்று கடற்கரை சாலையிலும் பேனர்கள் வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, தொண்டர்களின் அன்பையும், பாசத்தையும், தியாக உள்ளத்தையும் தான் பெரிதும் போற்றுவதாக செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் அரசக்கடம்பனூர் ஊராட்சியைச் சேர்ந்த எம்.முனியாண்டி, அதிமுக அரசு மீண்டும் மலர்வதில் ஏற்பட்டுள்ள இடைவெளி குறித்து அரசியல் எதிரிகள் பரப்பிய வதந்திகளை உண்மை என நம்பி தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

 

“அதிமுக தொண்டர்கள் என் மீது அளவு கடந்த பற்றும், பாசமும் கொண்டவர்கள். எனக்காக எந்தத் தியாகத்தையும் எப்பொழுதும் செய்ய காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நன்கு அறிவேன். இந்த அன்பையும் பாசத்தையும் தியாக உள்ளத்தையும் பெரிதும் போற்றுகிறேன்.

 

“தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் இனியும் ஈடுபட வேண்டாம் என மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்த முனியாண்டி குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.3 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும்,” என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். - இந்து

 

http://www.colombomirror.com/tamil/?p=4632

  • கருத்துக்கள உறவுகள்

பிரதம விருந்தினராக நீதிபதி குமாரசாமி உரை நிகழ்த்துவார்..! :lol:

பிரதம விருந்தினராக நீதிபதி குமாரசாமி உரை நிகழ்த்துவார்..! :lol:

 

ஏன் பவானிசிங்கை மறந்தீர்கள், :icon_mrgreen:  அவரும் சிறப்புரை  நிகழ்த்துவார் :lol: :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரதம விருந்தினராக நீதிபதி குமாரசாமி உரை நிகழ்த்துவார்..! :lol:

 

குமாரசாமி அவர்கள் நீதிபதியா....??? smiley3907.gif 

எனக்குத் தெரியாதே..!!  :o  :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.