Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் பெயரைக் கெடுக்க சில அரசியல்வாதிகள் முயற்சி - நடந்தது என்ன? - வி.ரி.தமிழ்மாறன் கருத்து

Featured Replies

புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்துக்குள்,  தேவையின்றித் தன்னை இழுத்து தனது பெயரைக் கெடுக்க சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன் கவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“புங்குடுதீவு எனது சொந்த இடம். வித்தியா கொலையை அடுத்து நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக நான் அங்கு சென்றிருந்தேன்.

கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேகநபர்களில் ஒருவரான, சுவிற்சர்லாந்தில் வந்த எம்.குமார் என்பவரின் தவறான செயற்பாடுகள் குறித்து நான் அறிவேன்.

குறித்த சந்தேகநபர் புங்குடுதீவுக்கு வந்து சென்றிருக்கிறார். அவர் இங்கு வந்தபோதெல்லாம், அந்தப் பகுதி மக்களிடையே பெரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளார்.

உண்மையில், சந்தேகநபரைக் கைது செய்வதற்கு நான் தான் காவல்துறையினரின் உதவியைக் கோரியிருந்தேன்.

எவ்வாறாயினும், அவர் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிச் சென்று விட்டார்.

செவ்வாய்க்கிழமை நான் புங்குடுதீவில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது, மதுபோதையில் இருந்த சிலர், என்னை எதிராக கீழ்த்தரமான வார்த்தைகளால் ஏசினர்.

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவுள்ளதாக வெளியான  ஊகங்களை அடுத்து, எனது பெயரைக் கெடுப்பதற்காக, சில அரசியல் சக்திகள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்துள்ளன.

இது என்னை மிகவும் பாதித்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/40314/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எம். குமார் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்.. (ஒருவேளை அவர் நாட்டை விட்டு வெளியேறி இருந்தால்) அவரை சர்வதேச பொலிஸ் பிடியாணை பிறப்பித்து.. சுவிஸ் பொலிஸின் உதவியுடன் அவரைக் கைது செய்து மீள நாட்டுக்கு கொண்டு வந்து அவரின் மீதான குற்றத்தை நீதிமன்றத்தின் முன் விசாரிக்க வேண்டுமே தவிர.. பொலிஸாரின் பிடியில் இருந்து அவர் தப்பிவிட்டார் என்று இன்றைய உலக ஒழுங்கில் அங்கலாய்க்கத் தேவையில்லையே..??!

 

சட்டம் படிச்ச இவரும் எதையோ மறைக்க முற்படுகிறார்.. போலுள்ளது. :rolleyes::(:o

Edited by nedukkalapoovan

பொலிஸாரின் பிழையே வடக்கில் வன்முறை வெடிக்கக் காரணம்!- புலனாய்வுப் பிரிவு
[ சனிக்கிழமை, 23 மே 2015, 06:12.09 AM GMT ]
jaffna_court6.jpg
பொலிஸாரின் பிழையே வடக்கில் வன்முறை வெடிக்கக் காரணம் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்று வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரை கைது செய்து, விடுதலை செய்தமையே இந்த பிரச்சினைக்கான காரணமாகும்.

உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் உத்தரவிற்கு அமைய கைது செய்யப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டார்.

இதனால் மக்கள் பொலிஸார் மீது நம்பிக்கையிழந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி தொடர்ந்தும் பதவியில் நீடித்து வருகின்றார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிய உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் செல்வாக்குடையவர் எனவும் அவர் செல்வாக்கை பயன்படுத்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார் எனவும், இதுவே பிரச்சினைகள் ஏற்படக் காரணம் எனவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். -------tamilwin.com

 

  • கருத்துக்கள உறவுகள்

“புங்குடுதீவு எனது சொந்த இடம். வித்தியா கொலையை அடுத்து நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக நான் அங்கு சென்றிருந்தேன்.

கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேகநபர்களில் ஒருவரான, சுவிற்சர்லாந்தில் வந்த எம்.குமார் என்பவரின் தவறான செயற்பாடுகள் குறித்து நான் அறிவேன்.

குறித்த சந்தேகநபர் புங்குடுதீவுக்கு வந்து சென்றிருக்கிறார். அவர் இங்கு வந்தபோதெல்லாம், அந்தப் பகுதி மக்களிடையே பெரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளார்.

உண்மையில், சந்தேகநபரைக் கைது செய்வதற்கு நான் தான் காவல்துறையினரின் உதவியைக் கோரியிருந்தேன்.

எவ்வாறாயினும், அவர் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிச் சென்று விட்டார்.

 

 

அண்ணா

உங்களது அரசியல் லாபநட்டக்கணக்கு போதும்..

எவ்வாறு உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் தப்பினார்

காவல்த்துறையிடம் நீங்கள் ஒப்படைத்தீர்களா?

(இதுவரை அவ்வாறு எந்தததகவலும் இல்லை)

உண்மை உங்களிடம் மட்டுமே உள்ளது

மனம் திறவுங்கள்

ஊர் இரண்டுபட இடமளிக்காதீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மாறன்,

1) சுவிஸ் குமார் உங்களிடம் மக்களால் ஒப்படைக்கப் பட்டாரா?

2) அதன் பின் நீங்கள் அவரை போலிசிடம் ஒப்படைத்தீர்களா?

3) 2க்கு பதில் இல்லை எனில், உங்கள் பிடியில் இருந்து அவர் எப்படித்தப்பினார்? நீங்கள் உடனடியாய் இதை போலீசில் சொல்லாமல் ஏன் புங்குடுதீவுக்கு கூட்டம் போடப் போனீர்கள்?

4) ஆம் எனில், எந்த பொலீஸ் அதிகாரி குற்றவாளியை தப்ப விட்டார் எனச் சொல்லுங்கள்?

நெடுக்கு,

சுவிஸ் குமார் நாட்டை விட்டுத் தப்பவில்லை. மீளக் கைதாகி ரிமாண்டில் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மாறன்,

1) சுவிஸ் குமார் உங்களிடம் மக்களால் ஒப்படைக்கப் பட்டாரா?

2) அதன் பின் நீங்கள் அவரை போலிசிடம் ஒப்படைத்தீர்களா?

3) 2க்கு பதில் இல்லை எனில், உங்கள் பிடியில் இருந்து அவர் எப்படித்தப்பினார்? நீங்கள் உடனடியாய் இதை போலீசில் சொல்லாமல் ஏன் புங்குடுதீவுக்கு கூட்டம் போடப் போனீர்கள்?

4) ஆம் எனில், எந்த பொலீஸ் அதிகாரி குற்றவாளியை தப்ப விட்டார் எனச் சொல்லுங்கள்?

நெடுக்கு,

சுவிஸ் குமார் நாட்டை விட்டுத் தப்பவில்லை. மீளக் கைதாகி ரிமாண்டில் உள்ளார்.

 

நன்றி

இவை தான் இன்று  முட்டுக்கட்டையாக உள்ள முடிச்சுக்கள்

இவற்றை விரி தமிழ்மாறன் அவர்களால் மட்டுமே அவிழ்க்கமுடியும்

ஆனால் அவர்......?? :(  :(  :(

 

 

 

ஊரிலிருந்து  வந்த செய்திகளின்படி..

வடபகுதியிலுள்ள அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 60 முக்கிய அதிகாரிகள்

(காவல்த்துறை

இராணுவம்

கடற்படை

சிவில் நிர்வாகம்)

புங்குடுதீவுக்கு வந்திருந்தார்கள்.

இவர்களை அழைத்து வந்தவர் விரி தமிழ் மாறன்.

இவர்கள் அனைவரையும் அழைத்து

புங்குடுதீவு மக்கள் அனைவரையும் அழைத்து (விரி தமிழ்மாறனின் வேண்டுகோளுக்கிணங்க மக்களை அழைத்தவர்கள் சர்வோதயத்தினர்)

ஒரு கூட்டம் நடந்தது சர்வோதய மண்டபத்தில்.

கூட்டத்தின் நோக்கம் இனி இவ்வாறான ஒரு நிகழ்வு நடக்காமல் தடுப்பதற்காக புங்குடுதீவில் ஒரு காவல்துறை அலுவலகத்தை (உதவி அல்ல) திறப்பது.

இந்த காரணத்தை சொன்னவரும்

60 முக்கிய அதிகாரிகளை அழைத்து வந்தவரும் விரி தமிழ் மாறனே.

கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு 45 நிமிடங்கள் விரி தமிழ் மாறன் வந்திருந்த  அதிகாரிகளுக்கு விளங்கவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேச அதை மக்களுக்கு அங்குள்ள கணேசு வைத்தியரின் மகன் தமிழில் மொழி பெயர்த்தார்.  45 நிமிட உரை நடந்து கொண்டிருந்தபோது

கூட்டத்திலிருந்த ஒருவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அழைப்பைத்தொடர்ந்து மக்களிடம் விடயம் பரவியது.

விரி தமிழ்மாறனை  நோக்கி மக்கள் நேற்றிரவு உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு போனார் எனக்கேள்வி எழுப்பினர்.

மக்களின் ஆவேசத்தை கண்ட அதிகாரிகளும் பதில் சொல்லுமாறு விரி தமிழ் மாறனை நெருக்கினர்.

ஆனால் அவரது வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை.

அதனைத்தொடர்ந்து  இவர்மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் கிடடத்தட்ட இவரை பணயம் வைக்கும் முடிவை அவர்களே எடுத்து மக்களுக்கு கையெழுத்திட்ட கடிதத்தையும் கொடுத்தனர்

அதுவரை அந்த மக்கள் (கிட்டத்தட்ட நாலரை மணித்தியாலங்கள்)

அதிகாரிகளின் வாகனங்கள் அசையவிடாது அவற்றின் ரயர்களுக்குள் படுத்துக்கிடந்தனர்.

 

விரி தமிழ் மாறன்

அன்று மூடியவர் இன்றுவரை வாயைத்திறக்கவில்லை...

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
எவ்வாறாயினும், அவர் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிச் சென்று விட்டார்.
என்னையா காவல்துறை வெள்ளி பார்த்துகொண்டே இருந்தது.....கொலை குற்றவாலியை தப்பவிடியினம் பொதுமக்களை சிறைப்படுத்தியினம்....
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மாறன்,

1) சுவிஸ் குமார் உங்களிடம் மக்களால் ஒப்படைக்கப் பட்டாரா?

2) அதன் பின் நீங்கள் அவரை போலிசிடம் ஒப்படைத்தீர்களா?

3) 2க்கு பதில் இல்லை எனில், உங்கள் பிடியில் இருந்து அவர் எப்படித்தப்பினார்? நீங்கள் உடனடியாய் இதை போலீசில் சொல்லாமல் ஏன் புங்குடுதீவுக்கு கூட்டம் போடப் போனீர்கள்?

4) ஆம் எனில், எந்த பொலீஸ் அதிகாரி குற்றவாளியை தப்ப விட்டார் எனச் சொல்லுங்கள்?

நெடுக்கு,

சுவிஸ் குமார் நாட்டை விட்டுத் தப்பவில்லை. மீளக் கைதாகி ரிமாண்டில் உள்ளார்.

உங்கள் கேள்விகளுக்கான பதில் இந்த இணைப்பில் (ஆங்கிலத்தில்) உள்ளது.

 

http://www.lankaenews.com/news/453/en

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.