Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியாவின் கொலை சந்தேகநபரான குமார் சுவிஸ் ரஞ்சன் அல்ல ; புளொட் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வித்தியாவின் கொலை சந்தேகநபரான குமார் சுவிஸ் ரஞ்சன் அல்ல ; புளொட் அறிவிப்பு
58631e22c37a99c1688af7d4c74a8f53.jpg
புங்குடுதீவு மாணவி வித்தியாவில் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில்  கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் என்பவர், எமது அமைப்பைச் சேர்ந்த சுவிஸ் ரஞ்சன் அல்ல என்று புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
 
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில் கைதாகியிருப்பவர், சுவிஸில் பிரகாஸ் என்றும் புங்குடுதீவில் குமார் என்றும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் என்பவராவார். 
 
ஆயினும், வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரகாஸ் அல்லது குமார் என்பவரின் புகைப்படம் என்று எமது அமைப்பைச் சேர்ந்த சொக்கலிங்கம் ரஞ்சன் என்கின்ற சுவிஸ் ரஞ்சனின் புகைப்படத்தை சில விசமிகள் பிரசுரித்திருப்பதை இணையத்தளங்களிலும் சில முகநூல்களிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது.
 
எமது அமைப்பைச் சேர்ந்த ரஞ்சன் என்பவருடன், எமது தலைவர் உட்பட ஏனைய அரசியல் பிரமுகர்கள் இருக்கும் புகைப்படங்களை பிரசுரித்து, அதில் எமது அமைப்பைச் சேர்ந்த ரஞ்சனை, இவர்தான் குமார் என பொய்யாக சுட்டிக்காட்டி அடையாளம் காட்டியிருக்கின்றார்கள். 
 
ஆனால் அது உண்மையல்ல. சில அரசியல் இலாப உள்நோக்கம் கொண்டவர்கள், ஏனைய தமிழ் அரசியல் பிரமுகர்கள் மீது திட்டமிட்டு சேறுபூசும் அல்லது அவர்கள் பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் நோக்குடன் சில அரசியல் பிரமுகர்களின் பின்னணியில் இயங்கும் இணையத்தளங்களையும் முகநூல் பாவனையாளர்களையும் பயன்படுத்தி,  இந்த கீழ்த்தரமான ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்நடவடிக்கையானது, வித்தியாவின் கொலையை மலினப்படுத்துவதோடு அவரின் நெருங்கிய உறவினர்களையும் மீண்டும் மீண்டும் ஆழ்ந்த வேதனைக்குள் தள்ளும் என்பதை இச்செயலைச் செய்பவர்கள் உணராதிருப்பது வேதனையானதே. 
 
இவ்வாறான மலினமான அரசியல் இலாபம் தேடும் பிரமுகர்களை, மக்கள் அடையாளம் காண வேண்டும். 
 
இணையத்தளங்களில் காணப்படும் எமது அமைப்பைச் சேர்ந்த சுவிஸ் ரஞ்சனின் புகைப்படங்களை நாம் தருகின்றோம். இப்புகைப்படங்களாவன மாணவி வித்தியாவுக்காக தற்போது சுவிஸில் நடைபெற்றுவரும் அஞ்சலிக் கூட்டங்களில் சுவிஸ் ரஞ்சன் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டவையாகும். 
 
இப்புகைப்படங்கள் ரஞ்சன்இலங்கையில் கைது செய்யப்பட்டிருக்கும் குமார் அல்ல என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்பதுடன், இந்த ஆள்மாறாட்டக்காறர்களின் செயலையும் அம்பலப்படுத்தி நிற்கின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=822344048624692837#sthash.M01HW2e0.dpuf

 

குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டுமென்பதை விட தமது அரசியல் காழ்ப்புணர்வின் நிமித்தம் விஷமத்தனமாகக் கட்டவிழ்த்து விடப் படும் இவ்வகைப் பிரச்சாரங்கள் குறித்து எமது கவனம் தேவை. நான் அறிந்தவரை சுவிஸ் ரஞ்சன் ஒன்றும் தியாகி இல்லை, ஆனால் அவரது உருவ ஒற்றுமையை மட்டும் வைத்து செய்யப் பட்ட பிரச்சாரம் எந்தவகைச் சமூகப் பொறுப்புமற்ற கபட நாடகமே.

Edited by Alternative

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்பார்களோ :)

நல்ல வேளை கிட்டு மாமா உயிரோடு இல்லை.

மேலே மாமா என்றது காழ்புணர்சி அல்ல.

உண்மையில் கிட்டு யாழை கலக்கிய நாட்களில் இவரை இப்படித்தான் என் பராயத்தவர் அழைத்தோம்.

சப்பா.... விளக்கம் கொடுற்றெ ஓஞ்சுடுவம் போல இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அங்கு இல்லாதது .... மக்களுக்கு நின்மதி!
இருந்திருந்தால் இதைவிட கேவலம் நடந்திருக்கும்.

 

இந்த வண்டவாளத்தில் ஒரு செய்தி மாநாடு.....
கலிகாலம் எனபதை அப்ப அப்ப உறுதி செய்கிறார்கள்
மக்களுக்குத்தான் புரியவில்லை.

 

இப்படியே போனால் வாறமாதம் .....

சிர்த்தார்த்தன் ஆப்ரிக்காவில் எந்த கொலையும் செய்யவில்லை
என்று ஒரு செய்தி மாநாடு போடுவார்கள் போல்???

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சுத்தமாக இருந்திருந்தால்.. ஏன் அசிங்கப்படுத்தப் போகிறார்கள். உங்கள் வரலாறு மக்கள் அறிவார்கள் மிஸ்டர் சித்தார்த்தன். :lol::D


நீங்கள் வவுனியாவில் நின்று 2009 மே க்குப் பின்னும் தமிழ் பெண்களை சீரழிச்சதை.. அவ்வளவு இலகுவில் தமிழ் சமூகம் மறக்க வாய்ப்பில்லை. இப்போதும் உங்களால் (புளொடு ஒட்டுக்குழுவினரால்).. பாதிக்கப்பட்ட பல பெண்கள் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துக் கோரி வருகின்றனர். அதற்கான ஆதாரங்களும் உலக நாடுகளின் குடிவரவுத் திணைகளங்களிடமும் நீதிமன்றங்களிடமும்.. வைத்திய ஏடுகளிலும் உள்ளது. :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.