Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி!

Featured Replies

வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி!
[ செவ்வாய்க்கிழமை, 26 மே 2015, 10:53.07 AM GMT ]
01-210.jpg
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட 17 பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன்பின்னர் வடக்கு ஆளுநரின் அலுவலகத்திற்கு வித்தியாவின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

அதன்போது குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டு தண்டனையினை வழங்குவதாகவும் வித்தியாவின் கொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் பெற்றோரிடம் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் வித்தியாவின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வடக்கு முதல்வரின் ஊடாக தெரியப்படுத்துமாறும் அவற்றை பெற்றுத்தர தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி -  ஜனாதிபதி யாழிற்கு திடீர் விஜயம்! வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என உறுதி

mythiri_jaff_001.jpg

mythiri_jaff_2752015_1.jpg

mythiri_jaff_2752015_2.jpg

mythiri_jaff_2752015_3.jpg

mythiri_jaff_2752015_4.jpg

mythiri_jaff_002.jpg

01-21.jpg

http://www.tamilwin.com/show-RUmtyFRaSUhxyA.html#

 

 

தமிழ் மக்களின் நாடி பிடிக்கும் ஜனாதிபதி வாழ்க!வித்தியாவின் பெற்றோர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விடயம் மரியாதைக்குரிய ஜனாதிபதியாகின்றார்

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை உடன் வழங்க ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டும். இப்படியான சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இலங்கை ஜனாதிபதியின் இந்த செயலை நான் மதிக்கிறேன்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயம் வேறு என்ன காரணங்களை கொண்டிருந்தாலும் வித்தியாவின் பெற்றோரை சந்தித்தது நிச்சமாக அவர்களுக்கு ஆறுதலை கொடுத்து இருக்கும்.இந்த நிலையில் அந்த பெற்றோருக்கும் உறவுகளுக்கும் தேவையானது ஆறுதலும் நீதியுமே.

அதை ஒரு நாட்டின் தலைவர் நேரடியாக தெரிவித்தமை வரவேற்ககூடியது. (இதையே ரணில் செய்திருந்தால் அது நிச்சயமாக வாக்கு அரசியல் தான்.)

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்து மக்காள் பார்த்து.. ஒரெயடியா விசுவாசத்தை காட்டி தொலைச்சிடாதேங்க.

 

இதே ஆள் தான் முள்ளிவாய்க்காலின் போது சிங்களத்தின் பாதுகாப்பு அமைச்சரா இருந்தவர்.

 

இதே ஆள் மாணவி சரணியாவின் படுகொலை பற்றி மூச்சும் விடாதவர்.

 

இந்தியப் படைகளுக்கு பூமாலை போட்ட மக்களும் நீங்கள் தான்.. 95 இல் ரிவிரெச 2 இன் பின்.. சிங்களப் படைகளுக்கு குளிர்பானம் வழங்கினதும் நீங்கள் தான்.

 

கண்டது என்ன..?! கொஞ்சம் நிதானமா சிந்திச்சிட்டு.. செயற்படுங்க.

 

வித்தியா உலக விவகாரம் ஆகிவிட்டதால்.. மைத்திரியும் அனுதாபத்தைக் காட்ட வேண்டியதாயிற்று. இதே அண்மையில் கொல்லப்பட்ட.. தற்கொலைக்குத் தூண்டப்பட்ட.. எத்தனையோ தமிழ் இளம் பெண்களுக்கு எங்கே போனது இந்த அனுதாபம்...??! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதிபர் மைத்திரி சில நாள்களுக்கு முன்னர் புலம்பெயர் அன்பர்களின் கனவு பலிக்காது எனக் கூறியிருக்கின்றார். மறுபுறத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று சந்தித்திருப்பதானது தாயகத்தில் வாழும் மக்களுக்கு நல்லதொரு அறிகுறியாகவே தெரிகின்றது. இது ஒருபோதும் புலம்பெயர் அன்பர்களுக்கு மகிழ்ச்சயான செய்தியாக இருக்கப்போவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நல்லாட்சியில் நடக்கும் நிலை தான்...

 

https://www.facebook.com/sangar.indrani/videos/737359836310823/

  • கருத்துக்கள உறவுகள்

39601f8614bd7ae2eeeea20e5e020cae

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.