Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஃபிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர் மீண்டும் தேர்வு

Featured Replies

150529050239_sepp_blatter_speech_2_512x2

 

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
மீண்டும் தலைவராக பிளாட்டர் தேர்வு
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோர்டான் நாட்டு இளவரசர் அலி பின் அல் ஹுசைன் இரண்டாம் சுற்றின்போது போட்டியிலிருந்து விலகியதால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
மிகவும் பரபரப்புக்கு இடையே இந்தத் தேர்தல் ஜூரிக் நகரில் நடைபெற்றது.
முதல் சுற்று வாக்கெடுப்பில் இரு வேட்பாளர்களுக்கும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால், போட்டி இரண்டாம் சுற்றுக்குச் சென்றது.
எனினும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, அலி பின் அல் ஹுசைன் விலகுவதாக தெரிவித்த பின்னர், பிளாட்டர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர் ஐந்தாவது முறையாக ஃபிஃபா அமைப்பின் தலைவராக தேர்வாகியுள்ளார்.
 

Sepp-Blatter_3106324b.jpg

ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FIFA) தலைவராக சுவிட்சர்லாந்தின் ஜோசப் செப் பிளேட்டர் 5-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் அதன் இரண்டு துணைத் தலைவர்கள் உட்பட 7 பேர் கடந்த புதன்கிழமை சுவிட்சர்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரும் ஊழலுக்குப் பெயர்போன பிளேட்டர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அவருக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதனால் பிளேட்டரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜோர்டான் இளவரசரும், FIFA வின் துணைத் தலைவருமான அலி பின் அல் ஹூசைனுக்கு ஆதரவு பெருகியது.

இந்நிலையில், நேற்று மாலை தேர்தல் நடைபெற்றது. இதில் 209 நாடுகளைச் சேர்ந்த FIFA அங்கத்தினர்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர்.

பின்னர் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது முதல் சுற்றின் முடிவில் வெற்றிக்குத் தேவையான 140 வாக்குகளில் பிளேட்டர் 133 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஜோர்டான் இளவரசர் அல் ஹூசைன் 73 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

தொடர்ந்து இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்க இருந்த நேரத்தில் திடீரென போட்டியிலிருந்து விலகுவதாகவும், தனக்கு தைரியமாக ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அல் ஹூசைன் அறிவித்தார்.

இதனால் 79 வயதான பிளேட்டர் மீண்டும் தலைவராக தேர்வானார்.

http://newsfirst.lk/tamil/2015/05/fifa-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/

 

ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாகிகள் மீது பிளேட்டர் சாடல்
 

 

அமெரிக்க புலனாய்வு அமைப்பு, சர்வதேச கால்பந்து சம்மேளனத் தின் (பிஃபா) மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது அதிர்ச்சி யளிப்பதாக தெரிவித்துள்ள பிஃபா தலைவர் செப் பிளேட்டர், ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாகிகள் அருவருக்கத்தக்க பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகக் கூறி கடுமையாக சாடியுள்ளார்.

 

ரூ.984 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டின் பேரில் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் பிஃபா நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இது ஒருபுறமிருக்க, 2018 மற்றும் 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ரஷ்யா மற்றும் கத்தாருக்கு வழங் கியதில் முறைகேடு நடந்திருப்ப தாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜூரிச் போலீஸார், அங்குள்ள பிஃபா தலைமை அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினர்.

 

பிஃபாவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் மேற்கண்ட சம்பவங்கள் நிகழ்ந்தது செப் பிளேட்டருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும் நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில் 5-வது முறையாக பிஃபா தலைவராக தேர்வு செய்யப்பட்டார் பிளேட்டர்.

 

அதைத் தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு அமைப்பு மற்றும் ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாகிகளை கடுமையாக சாடியுள்ள பிளேட்டர் மேலும் கூறியிருப்பதாவது:

பிஃபா கூட்டத்தை தடுத்தும் நிறுத்தும் முயற்சியாகவே பிஃபா நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப் பட்டதாக சந்தேகிக்கிறேன். பிஃபாவுக்கு எதிராக அவர்கள் வேண்டுமென்றே தவறான பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 2022 உலகக் கோப்பை போட்டியை நடத்த அமெரிக்க நாடுகளும் போட்டியிட்டன. ஆனால் வாக்கெடுப்பில் அவர்கள் தோல்வியடைந்தனர். வாக்கெடுப்பின்போது அனைவரும் கையெழுத்திட்டிருக் கிறார்கள். அதனால் அங்கு தவறு நடக்க வாய்ப்பு இல்லை. என்னை எதிர்த்து போட்டியிட்ட அலி பின் அல் ஹுசைன் ஜோர்டான் நாட்டின் இளவரசர். அந்த நாட்டின் முதல் ஸ்பான்சர் அமெரிக்காதான் என்றார்.

 

கால்பந்து விளையாட்டில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி பிஃபா மீது குற்றம்சாட்டிய அமெரிக்க அட்டார்னி ஜெனரல் லொரேட்டா லிஞ்ச் உள்ளிட்டோருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிளேட்டர், “அவர்களின் குற்றச்சாட்டால் நான் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இவ்வளவு நாட்கள் பிஃபா தலைவராக இருந்திருக்கிற நான், மற்றவர்களுடைய விஷயத்தில் என்ன நடந்தது என்பது தெரியாமல் அது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவித்ததில்லை” என்றார்.

 

பிஃபாவில் நடந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பிளேட்டர் பதவி விலக வேண்டும் என ஐரோப்பிய கால்பந்து சங்கமும், அதன் தலைவர் மைக்கேல் பிளாட்டினியும் கூறியிருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்கள் மீது சாடிய பிளாட்டினி, “இந்த அருவருக்கத்தக்க பிரச்சாரம் ஒருவரிடம் இருந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பிய கால்பந்து சங்கத்திடமும் இருந்து வந்துள்ளது” என்றார்.

 

நீங்கள் பிளாட்டினியை மன்னீப்பீர்களா என பிளேட்டரிம் கேட்டபோது, “நான் எல்லோரையும் மன்னிக்கிறேன். ஆனால் மறப்பதில்லை” என்றார்.

அதேநேரத்தில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரி ரிச்சர்ட் வெப்பர், பிஃபா ஊழல் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எச்சரித்துள்ளார்.

 

பிஃபா செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிளேட்டர், “2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் விளையாடும். ஐரோப்பாவைச் சேர்ந்த 13 அணிகளுக்கும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த 4 அணிகளுக்கும் வழக்கம்போல் வாய்ப்பளிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article7267237.ece

FIFA தலைவர் பிளேட்டர் தனது பதவியை இராஜினாமா செய்து உள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

FIFA தலைவர் பிளேட்டர் தனது பதவியை இராஜினாமா செய்து உள்ளார்.

 

கள்ளர் கூட்டங்கள் கரை ஒதுங்கியதில் சந்தோசம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.