Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவரும் ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன்தான்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன்தான்...!

masai.jpgகென்யாவில் ஒரு கிரிக்கெட் அணி உள்ளது. இந்த அணிக்கு பெயர் மசாய் கிரிக்கெட் வாரியர்.

கென்யாவில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் பழங்குடி இளைஞர்கள் இணைந்து தோற்றுவித்த அணி, அவர்கள் அணிந்த ஆடைகளால் அகில உலக பாப்புலரானது.

கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் சமயத்தில் இவர்களது கிரிக்கெட் பயிற்சி ஆரம்பமாகும். பயிற்சினா சும்மாலாம் கிடையாது. தொலைவில் உள்ள சிங்கம், சிறுத்தைகளை குறிவைத்து கல்கொண்டு அடித்து விரட்டுவதுதான் இவர்களது பயிற்சி. பின்னர் இதே பகுதியில் தொடங்கப்பட்ட இந்த கிரிக்கெட் அணியால், பழங்குடி மக்களிடையே எச்.ஐ.வி பாதிப்பு குறைந்ததுதான் இந்த செய்தியின் ஹைலைட்.

இந்த அணியின் கேப்டனாக இருப்பவர்தான் நிசான் ஜோனதான் ஒலி மெசாமி. மசாய் கிரிக்கெட் வாரியார் அணியை தோற்றுவித்த ஒலி மெசாமி உண்மையிலேயே பெரியார்தான்.

தங்களது கிரிக்கெட் அணி குறித்து நிசான் ஜோனதான் கூறுகையில், '' கென்யாவில் லைகிபியா பகுதிதான் எங்கள் பூர்வீகம். எனக்கு 4 அண்ணன்கள் 4 அக்காக்கள் வீட்டுக்கு நான்தான் கடைசிபிள்ளை. எனது பெற்றோர் என்னை பள்ளிக்குஅனுப்பவில்லை.எங்கள் குடும்பத் தொழிலாளான கால்நடைகளை மேய்க்கும் தொழிலுக்கு பழக்கப்படுத்தப்பட்டேன்.  நாங்கள் வசிக்கும் பகுதியில் சிறுத்தை, சிங்கங்கள் அதிகம். அவற்றிடம் இருந்து என்னையும் எனது கால்நடைகளையும் காப்பாற்றிக் கொள்ள நான் பல வித்தைகளை கற்க வேண்டியதாக இருந்தது. சிறுத்தைகளை நீண்ட தொலைவில் இருந்து கற்களை கொண்டு குறி தவறாமல் அடிக்க கற்றுக் கொண்டேன். ஆனால் நான் எறியும் கற்கள் அந்த வனவிலங்குகளை துன்புறுத்துவதற்காக இல்லை. எனது கால்நடைகளை பாதுகாத்து கொள்வதற்காகத்தான். சில சமயங்களில் வனவிலங்குகளை நேருக்கு நேராகவும் சந்தித்துள்ளேன். இதுவெல்லாம் என்னை தைரியமிக்க சிறுவனாக மாற்றின.

masai1.jpg

11 வயதில் அந்த பகுதியில் உள்ள ஹெடர் பள்ளியில் என்னை சேர்த்தனர். எனக்குள் இருந்த சில திறமைகள், ஆசிரியர்களை பிரமிக்கவைத்ததால் தொடர்ந்து என்னை நேரடியாகவே 3வது வகுப்பிற்கு சேர்த்து படிக்க வைத்தனர். 2004ஆம் ஆண்டு பள்ளிபடிப்பை முடித்தேன். ஆனால் எனது பெற்றோரிடம் பணம் இல்லாததால் என்னை மேற்கொண்டு படிக்க வைக்கவில்லை. இதனால் மீண்டும் நான் மாடு மேய்க்க வந்தேன். இந்த சமயத்தில் பெரிய ஆளாகி விட்ட காரணத்தினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் நான்தான் காவலன்.

mos.jpg

கால்நடை மேய்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நான் படித்த பழைய பள்ளியில் கிரிக்கெட் அணி ஒன்று வந்தது. அதுதான் கிரிக்கெட் விளையாட்டு என்று எனக்கு முதலில் தெரியாது. எனினும் அந்த விளையாட்டில் பந்துவீசும் முறை எனக்கு பிடித்திருந்தது. குறிவைத்து அந்த மூன்று கம்புகள் மீது அடிக்க வேண்டுமென்பதால், பந்துவீசுவது எனக்கு பிடித்திருந்தது. 

எனக்குள்ளும் அதேபோல் பந்து வீச வேண்டுமென்ற ஆசை துளிர்த்தது. குறி வைத்து எறிவதில் நான் வல்லவன் என்பதால் பந்துவீசுதிலும் அசத்துவேன் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. தொடர்ந்து கிரிக்கெட்டில் பந்துவீசுவதை கற்றுக் கொண்டு அதில் எனது பலம் பலவீனங்களை தெரிந்து கொண்டேன். ஒரு பேட்ஸ்மேனுக்கு அவுட் என்றால் வேறு வாய்ப்பு கிடையாது. ஆனால் பந்துவீச்சாளருக்கு தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைக்கும்.

ma.jpg

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலுமே வித்தைகளை கற்றேன். பின்னர் பயிற்சி அளிக்கும் முறைகளை தெரிந்து கொண்டேன். முதலில் எனக்கு தொலைகாட்சிகளில் கிரிக்கெட் பார்க்க வைத்தனர். பின்னர் வீடியோக்கள் பார்க்க வைத்தனர். கிரிக்கெட் கோச்சுக்கான முதல் லெவலை பாஸ் செய்தேன். அதற்கான சான்றிதழ் எனக்கு வழங்கப்பட்டது. எனது வாழ்க்கையில் நான் பெற்ற முதல் சான்றிதழ் அதுதான். அதனை பொன் போல பாதுகாத்தேன். 

பின்னர் எங்கள் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். எங்கள் பகுதியில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உண்டு. இந்த சமயத்தில் அந்த பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள், கிரிக்கெட் வழியாக எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு என்னிடம் கேட்டனர். கிரிக்கெட் பயிற்சி முடிந்த பின்னர் சிறுவர்கள், இளைஞர்களுக்கு ஆணுறையின் பயன்பாடு அதனால் விளையும் நன்மைகள் பற்றி கூறுவேன். ஒரு பந்து உன்னை அவுட் ஆக்குவது போல ஒரு தவறு உன் வாழ்க்கையை முடித்து விடும் என்று அவர்களுக்கு எடுத்துரைத்தேன்.

கிரிக்கெட் வழியாக எச்.ஐ.வி குறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த  நான் துவக்கிய கிரிக்கெட் அணிதான் மசாய் கிரிக்கெட் வாரியர். இந்த அணிக்கு நான்தான் கேப்டன். கிரிக்கெட்,  எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. எங்கள் பகுதி இளைஞர்களுக்கு வாழ்க்கையில் பல அம்சங்களை கிரிக்கெட் சொல்லிக் கொடுத்தது. இப்போது எங்கள் பகுதியில் எச்.ஐ.வி பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. எல்லாம் கிரிக்கெட் ஏற்படுத்திய மாயாஜாலம்'' என்கிறார். 

யார் யாரையோ கேப்டன் என்கிறார்கள்... ஒலி மெசாமியை என்னவென்று அழைப்பது...? 

நன்றி விகடன் 

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிமே சாமியின் அருள்வாக்கு ......"ஒரு பந்து உன்னை அவுட் ஆக்குவது போல ஒரு தவறு உன் வாழ்க்கையை முடித்து விடும்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.