Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொலையாளியைக் கண்டுபிடியுங்கள்; மட்டுநகரில் பாரிய பேராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கொலையாளியைக் கண்டுபிடியுங்கள்; மட்டுநகரில் பாரிய பேராட்டம்
5f7f91a20c1afd805a84f8883561d09b.JPG
மட்டக்களப்பு மண்டூரில் சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் மதிதயன் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இன்று காலை கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
IMG_2838.JPG
 
நல்லாட்சிக்கு அவமானம் எனும் தொனிப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினர், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 
 
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொலையாட்சியா நல்லாட்சியா?, மண்டூர் மதிதயனின் கொலைக்கு பின்னனி யார்?, மதிதயனின் படுகொலை ஏன்? எதற்கு? யார்?, நல்லாட்சியிலும் நாங்கள் தான் பலியா?, அரசே கொலையாளியை கைது செய்ய ஏன் தாமதம், அரசே படுகொலைக்கான தீர்வுதான் என்ன?, நல்லாட்சிக்கு அவமானம் வெட்கம் தலை குணிவு,  அரசே கயவனை கண்டு பிடித்து கூண்டில் நிறுத்து, பட்டப் பகலில் படுகொலை படையினரின் கண் இருட்டா?, மைத்திரி ஆட்சியிலும் மறைமுக குண்டர்களா, அரசே முடிவு கிட்டும் வரை முடிவுறாது போராட்டம், அரசே ஆயுத கலாசாரத்தை தடுத்து நிறுத்து எமது பாதுகாப்பை உறுதி செய், ஆட்சி மாறினாலும் சூழ்ச்சி மாறவில்லை, மதியின் கொலைக்கு நீதி வேண்டும் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களையும்  எழுப்பினர்.
IMG_2856.JPG
 
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் ஒன்று திரண்ட ஆர்பாட்டகாரர்கள் தமது கோரிக்கைள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாக சென்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் மகஜரை வழங்கினர். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=739484073808401992#sthash.7XpfKTK8.dpuf

 

இலங்கையில் தற்போது இடம்பெறுகின்ற ஆட்சியானது எங்களினால் ஆதரிக்கப்பட்ட ஆட்சியே. இதை  தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று  இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். :o 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு  உண்மையில் கொலையாளியையும்

கொலைக்கான காரணத்தையும் தெரியுமென்றால்......

 

எதற்கு பொது ஆர்ப்பாட்டம்???

சட்டப்படி வழக்கை பதிவு செய்து முறையிடவேண்டியது  தானே..

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கையில் தற்போது இடம்பெறுகின்ற ஆட்சியானது எங்களினால் ஆதரிக்கப்பட்ட ஆட்சியே. இதை  தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று  இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். :o 

 

 

இந்தக் கொலையில் மாவைக்கு சம்பந்தம் இருக்குமோ என்று கூட சந்தேகிக்க நேரிடுகிறது. அவ்வளவுக்கு மைத்திரி தாசனாகிவிட்டர்.. மாவையும். :rolleyes::(:icon_idea:

 

இவர்களுக்கு  உண்மையில் கொலையாளியையும்

கொலைக்கான காரணத்தையும் தெரியுமென்றால்......

 

எதற்கு பொது ஆர்ப்பாட்டம்???

சட்டப்படி வழக்கை பதிவு செய்து முறையிடவேண்டியது  தானே..

 

வித்தியா கொலையிலும் இதைக் கடைப்பிடித்திருக்கலாம். ஆர்ப்பாட்டம் எதற்கு?

வித்தியா கொலையிலும் இதைக் கடைப்பிடித்திருக்கலாம். ஆர்ப்பாட்டம் எதற்கு?

 

வணக்கம் இறைவன், நீண்ட நாட்களுக்கு பின்னர்.

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியா கொலையிலும் இதைக் கடைப்பிடித்திருக்கலாம். ஆர்ப்பாட்டம் எதற்கு?

 

இறைவனே மிதிச்சா என்ன செய்ய...??

 

 

வித்தியா கொலையில் ஆர்ப்பாட்டம்  செய்தவர்கள் மக்கள்

இங்கு

தலைவர்கள்

பாராளுமன்ற உறுப்பினர்கள்

மாகாணசபை உறுப்பினர்கள்

படித்த உயர் பதவியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் அதிலும் சட்டத்தரணிகள்...

இறைவனே மிதிச்சா என்ன செய்ய...??

 

 

வித்தியா கொலையில் ஆர்ப்பாட்டம்  செய்தவர்கள் மக்கள்

இங்கு

தலைவர்கள்

பாராளுமன்ற உறுப்பினர்கள்

மாகாணசபை உறுப்பினர்கள்

படித்த உயர் பதவியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் அதிலும் சட்டத்தரணிகள்...

 

தேர்தல் கிட்ட வருகுது என்று பொருள்.

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கும்பலை கேட்டிட்டா இந்த ஆர்ப்பாட்டம் நடக்குது. நல்லாட்சியில்.. கொலையா... எதற்கும் சுமந்திரனிடம் விசாரிச்சால் தெரியும். இது தற்கொலை என்று தான் அவர் சொல்வார்.

 

இப்ப..அரசியல் கைதிகளே இல்லையாம்.. ரெக்னிக்கலி.. யாருமே அரசியல் கைதிகள் இல்லை என்பது தானாம்.. மைத்திரி அரசின் நிலைப்பாடு. ஆனால் அன்று.. ஜே வி பி ரெக்னிக்கலி.. அரசியல் கைதிகள். டக்கிளஸ் அரசியல் கைதி. புளொட் அரசியல் கைதி. ஈபி அரசியல் கைதி. ரெலோ அரசியல் கைதி. புலி மட்டும்.. பயங்கரவாதி.

 

முதல்ல.. சுமந்திரனுக்கு மூளை சரியான்னு செக் பண்ணனும். :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.