Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆள்கடத்தல்காரர்களுக்கு ஆஸி. பணம் வழங்கிய ஆதாரங்களை வெளியிட்டது இந்தோனேசியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆள்கடத்தல்காரர்களுக்கு ஆஸி. பணம் வழங்கிய ஆதாரங்களை வெளியிட்டது இந்தோனேசியா
c481d76658a11e5ef16c195d95fed224.jpg

புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்கு வெளியே அழைத்துச் செல்வதற்காக இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் பெரும் தொகை பணம் வழங்கியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 
54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அண்மையில் இந்தோனேசியாவை சென்றடைந்திருந்தது.
 
சட்டவிரோத ஆள்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் படகைச் செலுத்தியோருக்கு ஆயிரக் கணக்கான அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டுள்ளது.
 
அவுஸ்திரேலிய அதிகாரிகள் சட்டவிரோத ஆள்கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கியமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
பணம் வழங்கியமைக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து கேள்வி எழுப்பும் பொறுப்பு ஏனைய அமைப்புக்களைச் சாரும் எனவும், இந்தோனேசியாவின் தென்காரா திமோர் மாகாண காவல்துறைப் பொறுப்பதிகாரி ஜெனரல் என்டாங் சுன்ஜியா தெரிவித்துள்ளார்.
 
புகலிடக் கோரிக்கையாளர்களை இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அவுஸ்திரேலிய அதிகாரிகள் பணம் வழங்கியதனை சட்டவிரோத ஆள்கடத்தல்காரர்கள் ஒப்புக் கொண்டுள்ளதுடன், புகலிடக் கோரிக்கையாளர்களும் அதனை உறுதி செய்துள்ளனர்.
 
போலியான புகலிடக் கோரிக்கையாளர்களை படகில் ஏற்றி அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கு பணம் பெற்றுக் கொள்ளும் ஆபத்தான முயற்சியில் சட்டவிரோத ஆள்கடத்தல்காரர்கள் ஈடுபடக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான விசாரணை நடத்தப்பட்டு காவல்துறை தலைமையகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தலைமையகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, 65 படகுப் பயணிகளையும் இரண்டு படகுகளில் ஏற்றி சிறிதளவு எரிபொருளையும் வழங்கி திருப்பி அனுப்புவது தற்கொலை முயற்சியாகும் எனவும், இதுவா மனிதாபிமானம் எனவும் மற்றுமொரு அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களை கிராம மக்கள் மீட்டுள்ளதாகவும், காலநிலை சீர்கெட்டிருந்தால் ஆபத்துக்களை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=796434090517149822#sthash.jJp6q1EH.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்
அவுஸ்திரேலிய அரசுக்கு பாரிய தலையிடி! கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கியதை இந்தோனேசியா நிரூபித்தது!
 
indo_proo_100.jpg
54 இலங்கை அகதிகள் உட்பட 65 பேரை ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்பி அதிலிருந்த கடத்தல்காரர்களுக்கு பெருந்தொகை பணத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கினார் என்பதற்கான ஆதாரத்தை இந்தோனேசியா வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் பணத்தை இந்தோனேசிய அதிகாரிகள் காணப்பி;த்துள்ளனர்.

இதில் பல ஆயிரக்கணக்கான அமரிக்க டொலர்கள் காணப்படுகின்றன என்று சிட்னி மோனிங் ஹெரல்ட் தெரிவித்துள்ளது.

indo_proo_1.jpg

இந்தோனேசிய நுஸா டென்காரா திமுர் மாகாணத்தின் பொலிஸ் தலைமை அதிகாரி ஜெனரல் என்ட்டாங் சுன்ஜாயா இந்த பணத்தை காணப்பிக்கும் புகைப்படத்தையும் அவுஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டுள்ளது.

எனவே தற்போது பதில் கூறவேண்டிய கடப்பாடு அவுஸ்திரேலிய அரசாங்கம் வசம் உள்ளதாக குறித்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

indo_proo_2.jpg

கடத்தல்காரர்கள் 6 பேரும் தாம் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் இருந்து பணத்தை பெற்றதாக சத்தியம் அளித்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இது புனையப்பட்ட செய்தி அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இது குறித்த விசாரணைகள் தற்போது ஜகார்த்தாவில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இந்தோனேசிய சட்டப்பட்ட ஒரு லஞ்ச நடவடிக்கையாகும்.

indo_proo_3.jpg

இந்தநிலையில் அவுஸ்திரேலியாவின் மனிதாபிமானம் குறித்து கேள்வி எழுவதாக திமுர் மாகாண கடத்தல்களுக்கு எதிரான அமைப்பின் தலைவர்; இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தல்காரர்கள் 6பேரையும் விசாரணை செய்த அவர், அதில் முதன்மை மாலுமியான யொஹான்ஸ் என்பவர், அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் பணத்தை பெற மறுத்ததுடன் அகதிகளை நியூஸிலாந்துக்கு கொண்டு செல்ல துணிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரியான ஆகஸ் என்பவர் தொடர்ந்தும் பேச்சு நடத்தி யோஹான்ஸூக்கு 5000 டொலர்களை வழங்கியதாகவும் விசாரணையாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்வின்.காம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.