Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு

Featured Replies

இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை , சித்தன்கேணி வீதயில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிளையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நிர்வாக செயலாளருமான மாவை சேனாதிராசா திறந்துவைத்தார். முன்னதாக வட்டுக்கோட்டை அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கட்சியின் அலுவலக பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் கட்சயின் அலுவலகத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயக மூர்த்தி, சுமந்திரன் ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ITAK%20vaddu%20bh55223.jpg

ITAK%20vaddu%20bh55221.jpg

 http://malarum.com/article/tam/2015/06/28/10746/இலங்கை-தமிழரசுக்கட்சியின்-வட்டுக்கோட்டைக்-கிளை-அலுவலகம்-திறப்பு-.html#sthash.1Hihvnyn.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்
வட்டுக்கோட்டையில் தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகம் திறந்து வைப்பு
news
வட்டுக்கோட்டை தொகுதிக்கான இலங்கை தமிழரசு கட்சியின் கிளை அலுவலகம் அத்தியடிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகையில் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 
DSCF7271.jpg
 
அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா,  நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் மற்றும் அப்பாத்துரை  விநாயகமூர்த்தி , சுமந்திரன் ஆகியோர்  நாடா வெட்டி திறந்து வைத்தனர்.
 
DSCF7273%20%281%29.jpg
கட்சி அலுவலகத்துடன்  உதயவாழ்வு செயற்திட்டத்தின் அலுவலகமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.  உதயவாழ்வு செயற்திட்டத்தின் ஊடாக தையல் பயிற்சி நெறி, உடற் பயிற்சி  மற்றும் கணணி வகுப்புகளும் நடாத்தப்பட உள்ளன.
 
மாதர் சங்கங்கள் ஊடாக ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்ட 40 பேருக்கு தையல் பயிற்சியை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகளும் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
DSCF7253%20%281%29.jpg
 
அத்துடன் இன்றைய நிகழ்வில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தில் தையல் இயந்திரங்களும், நடக்க முடியாதவர்களுக்கான ஊன்றுகோல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
DSCF7368.jpg
 
இதன்போது, உதவித்திட்டங்கள் தேவைப்படுவோருக்கு தாம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கவுள்ளதாக உதயவாழ்வு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் யாழ்.கிளிநொச்சி மாட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
DSCF7312%281%29.jpg
 
DSCF7337.jpg
 
DSCF7343.jpg
 
மேலும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், விநாயகமூர்த்தி, வடமாகாண சபையின் அவைத்தலைவர்  சீ.வி.கே.சிவஞானம்,  வடமாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், ஆனோல்ட், சித்தார்த்தன், சிவாஜிலிங்கம் , வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் ,வலி மேற்கு தவிசாளர் திருமதி ஜங்கரன் மதகுருமார்கள் மற்றும் பொது மக்கள் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=295154115228619654#sthash.IFZNwhDe.dpuf
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நோமர்லாய் பாக்கப்போனால் இவையளுக்கு இரத்ததிலமிட்டு வரவேற்பு குடுத்திருக்கோணும்....:huh:

முந்தி நாங்கள் அப்பிடி செய்துதான் உவையள் முன்னுக்கு வந்தவையள்....:lol:

 

 

நோமர்லாய் பாக்கப்போனால் இவையளுக்கு இரத்ததிலமிட்டு வரவேற்பு குடுத்திருக்கோணும்....:huh:

முந்தி நாங்கள் அப்பிடி செய்துதான் உவையள் முன்னுக்கு வந்தவையள்....:lol:

 

நீங்கள் எல்லாம் புலம்பெயர்ந்ததால் இரத்தப் பொட்டு இடுவது மறந்துவிட்டதாம் .:huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லாம் புலம்பெயர்ந்ததால் இரத்தப் பொட்டு இடுவது மறந்துவிட்டதாம் .:huh:

அப்ப சம்பந்தம் மா வை எல்லாம் பழசை   எல்லாம் மறந்திருப்பினம் :o

சுமந்திரன் ஊருக்கு வந்தால் கூழ் முட்டை அடிப்பம் என்றவர்கள் போட்டு விட்டு படுத்துவிட்டார்கள் போலிருக்கு .

இதனால் தான் புலம் பெயர்ந்தவர்களை எவரும் கணக்கில் எடுப்பதில்லை .

அப்ப சம்பந்தம் மா வை எல்லாம் பழசை   எல்லாம் மறந்திருப்பினம் :o

எவராவது பழசை மறக்கமுடியுமா ?தற்போதைய இளைஞர்களுக்கு பழையவைகள் தெரியவில்லையாம் :rolleyes:
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தளவிற்கு போதை வஸ்துக்கள் பெருகிவிட்டது.

அப்பன் செத்தாலென்ன...அம்மணமாய் கிடந்தாலென்ன......

எம்மை அந்நியன் ஆண்டாலென்ன........

இன்றைய சுகம் மட்டுமே முக்கியம்....

நாளைய சந்ததியின் வாழ்க்கை எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன பட்டினத்தாரே...:(

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஊருக்கு வந்தால் கூழ் முட்டை அடிப்பம் என்றவர்கள் போட்டு விட்டு படுத்துவிட்டார்கள் போலிருக்கு .

இதனால் தான் புலம் பெயர்ந்தவர்களை எவரும் கணக்கில் எடுப்பதில்லை .

நீங்க வேற,

சாத்திரி ஜேர்மனியில் வந்து புத்தகம் வெளியிடட்டும் ஆ..ஊ ....

என்று விட்டு பின் ஜேர்மனியிலேயே ஒண்டும் செய்யமுடியேல்ல :) 

யாழ்பாணத்தில் இவர்களால் சுமந்திரனுக்கு எதிராக வாயு கூட விட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.