Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீது குறைகூறுவது வம்பை விலைக்கு வாங்கும் செயல்: கருணாநிதி

Featured Replies

விடுதலைப் புலிகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருப்பது வம்பை விலைக்கு வாங்கும் செயல் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த மனுவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

null
தமிழக அரசின் மனுவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புப் பொறுப்பு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கேரளா வசம் இருக்கிறது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இது தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த துணை மனுவில், அணையைத் தகர்க்கத் தீவிரவாதக் குழுக்கள் முயற்சிப்பதாக மத்திய உளவுத் துறை தகவல் அளித்திருப்பதாக தமிழக அரசு கூறியிருந்தது.
இந்த மனுவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இது தொடர்பாக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அவசியம் என்றாலும், விடுதலைப் புலிகள் மீது குறைகூறி, அவர்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பது வம்பை விலைக்கு வாங்கும் செயல் என கூறியுள்ளார்.

மேலும் புலிகள் மீது மாசு கற்பிப்பதைப் போலவும் அவர்களின் முதுகிலே குத்தி அவமானப்படுத்துவதைப் போலவும் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருப்பதைக் கண்டிப்பதாக கருணாநிதி கூறியுள்ளார்.


null
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை சுமுகமாகத் தீர்க்க வேண்டுமென விஜயகாந்த் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இது தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளி என்று கூறியுள்ளார்.
இது போன்ற செயலில் ஈடுபடும் அமைப்பின் பெயரை தமிழக அரசால் வெளியிட முடியுமா என்றும் விஜயகாந்த் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

http://www.bbc.com/tamil/india/2015/07/150704_mullai_periyar

  • கருத்துக்கள உறவுகள்
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு: விடுதலைப்புலிகள் மீது வீண் பழி சுமத்துவதா? - கருணாநிதி கண்டனம்
 
 

 

சென்னை, ஜூலை 4–

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டுமெனக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். எம். லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்துமாறு உத்தரவிட்டது.

இந்த அணையின் பராமரிப்பு பொறுப்பு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பராமரிப்புப் பணிக்காகச் செல்லும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை, கேரள வனத்துறையினர் உள்ளே அனுமதிக்காமல் பல்வேறு எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக அணையைப் பார்வையிடவும், பராமரிக்கவும் முடியாத நிலைமை இருந்து வந்தது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டுமென்றும், மற்றும் சில கோரிக்கைகளையும் முன் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்து, உச்ச நீதிமன்றம் அதுபற்றி மத்திய அரசு பதில் தர நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தான் மத்திய அரசு நேற்று முன் தினம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்க முடியாது என்றும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உதவி வேண்டுமென்று கேரள அரசு கேட்டால் மட்டுமே அது குறித்துப் பரிசீலனை செய்ய முடியுமென்றும்; தமிழகத்தின் நிலையையும், தேவையையும் அலட்சியப்படுத்திடும் வகையில், தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு நேற்று (3–7–2015) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களுக்கு நான்கு வாரங்களுக்குள் கேரள அரசும், மத்திய அரசும் பதிலளிக்க வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு பராமரிப்பு பணி தமிழக அரசின் வசம் இருப்பதால், அங்கே அந்தப் பணியை ஆற்றுவதற்காகச் செல்லும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு மிக மிக அவசியம். ஆனால் மத்திய அரசு, இதனை உணர்ந்து கொள்ளாமல், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் பாதுகாப்பினை வழங்க முன்வராதது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

எனவே மத்திய அரசு இனியாவது தன்னுடைய கவனக்குறைவான நிலையைத் திருத்திக் கொண்டு, தமிழகத்தின் நலனைக் காத்திட, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவினைத் தாக்கல் செய்து, முல்லைப் பெரியாறு பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பினை (சி.ஐ.எஸ்.எப்) வழங்கிட ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்திட முன்வர வேண்டும்.

இந்த பிரச்சனையில் தமிழக அரசும் மத்திய அரசிடம் முறையாக எடுத்துச் சொல்லி, தேவையான அழுத்தம் தந்து, மத்திய பாதுகாப்புக் கோருவதன் அவசியத்தை நேரிலே வலியுறுத்தியிருக்க வேண்டும்.

அதே நேரத்தில் நேற்றைய தினம் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை மனுவிலே, முல்லைப் பெரியாறு அணை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை, பயங்கர வெடி பொருள்கள் ஏற்றிய வாகனங்களைக் கொண்டு மோதச் செய்து தகர்க்க, லஷ்கர்–இ–தொய்பா, ஜெய்சி முகமது போன்ற பயங்கர வாத அமைப்புகள் திட்டமிட்டு வருவதாகத் தொடர்ச்சியாக பல தகவல்கள் ஐ.பி.க்குக் கிடைத்து வருகின்றன என்றும்; இலங்கையில் எல்.டி.டி.ஈ. எனப்படும் விடுதலைப் புலிகள் இயக்கம் தோல்வி அடைந்ததை அடுத்து, மீதமுள்ள அதன் உறுப்பினர்கள் மீண்டும் ஒன்று திரள முயற்சித்து வருகின்றனர் என்றும்; இந்தத் தீய சக்திகள், இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு இந்தியா உதவவில்லை எனக் கூறி இந்தியாவுக்கு எதிரான மனப்பான்மையை வளர்க்க முயற்சிக்கின்றன என்றும்; எனவே மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்துவது அவசியம் என்றும் தெரிவித்திருப்பதாக ஏடுகளிலே செய்தி வந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பணியாற்றும் தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்புப் படை அவசியம் என்று வாதாட வேண்டியது மிகவும் அவசியம் என்ற போதிலும், தேவையில்லாமல் விடுதலைப்புலிகள் மீது குறை கூறி, அவர்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தெரிவித்திருப்பது வீண் வம்பை விலைக்கு வாங்கும் செயல் என்று தான் கூற வேண்டும்.

மத்திய பாதுகாப்பு தேவை என்பதற்கான வலுவான உண்மைக் காரணங்களைத் தெரிவித்து, ஏற்கத்தக்க வகையில் வாதாடுவதை விடுத்து, விடுதலைப் புலிகள் மீது மாசு கற்பிப்பதைப் போலவும், அவர்களின் முதுகிலே குத்தி அவமானப்படுத்துவதைப் போலவும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதை தி.மு.க.வின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, தமது கடமையைச் செய்யும் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பாதுகாப்பு வேண்டும் என்பதையும், அரசியல் சட்டத்தின் 262–வது பிரிவின்படி இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதி நீர் பிரச்சனைக்குத் தீர்வு காண சட்டம் கொண்டு வர இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மத்திய அரசுக்குத் தான் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்து விளக்கி, மத்தியப் பாதுகாப்புப் படையை அங்கே அமைப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/2015/07/04124048/mullai-periyar-dam-security-ka.htm
l

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த துணை மனுவில், அணையைத் தகர்க்கத் தீவிரவாதக் குழுக்கள் முயற்சிப்பதாக மத்திய உளவுத் துறை தகவல் அளித்திருப்பதாக தமிழக அரசு கூறியிருந்தது...

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு

மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அவசியம் என்றாலும், விடுதலைப் புலிகள் மீது குறைகூறி, அவர்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பது வம்பை விலைக்கு வாங்கும் செயல் என கூறியுள்ளார்.

48feec39-5b90-4205-9314-28418be3911b.jpgjdqo32ijhhesi.jpg

தமிழ்நாட்டில், 2004ல் ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி) தாக்குதலும் அவர்கள் ஏற்பாடுதான்.. இதையும் உச்சாநீதிமன்றத்தில் சொல்லிவிடுங்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்

"விடுதலைப் புலிகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருப்பது...." 
கேரள அரசுக்கு, தனது தரப்பு வாதங்களை, நியாயப் படுத்த... வாய்ப்பாக போய்  விடும்.
இதனால்... பாதிக்கப் படப் போவது, முல்லைப் பெரியாறு அணையால்... பயன் பெரும் தமிழக மக்கள் என்பதை, தமிழக அரசு புரிந்து கொள்ளாதது விந்தை.
இப்படியான கருத்துக்கள், முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமான வழக்குகளில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும்.

Edited by தமிழ் சிறி
எழுத்துப் பிழை திருத்தப் பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.