Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா

Featured Replies

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 1

சவூதி அரேபியாவில் உள்ள ரப் அல்-காலி பாலைவனத்தை கடந்து செல்லும் ஒட்டகங்கள்.
சவூதி அரேபியாவில் உள்ள ரப் அல்-காலி பாலைவனத்தை கடந்து செல்லும் ஒட்டகங்கள்.

சவுதி அரேபியாவில் நடைபெறுவதாக ஒரு கதையைத் தான் எழுதியிருப்பதாக ஒருவர் கூறுகிறார். அந்தக் கதையின் தொடக்கம் இது. கதாசிரியரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?

“காரை ஓட்டிச் சென்ற ஜாஸ்மின் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த தன் நண்பனைக் கண்டதும் காரை நிறுத்தினாள். அவளை அடையாளம் கண்டு கொண்ட அந்த நண்பனும் சற்றுத் தொலைவிலிருந்தே தன் கையை அசைத்தான். ஜாஸ்மின் காரை விட்டு இறங்கினாள். “எங்கே இந்தப் பக்கம்?” என்றான் அவன். “நதிக்கரையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாம் என்று கிளம்பினேன்.” என்றாள் ஜாஸ்மின். ‘’அப்படியா? நான் ஒரு சினிமாவுக்குப் போகலாம் என்று கிளம்பினேன்” என்றான் அவள் நண்பன். அவள் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டாள் - அவளுக்குத் தெரியும், அவன் மதுவகத்துக்குத்தான் கிளம்பி இருப்பான் என்று.”

இப்படி எழுதியவர் நிச்சயம் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருக்கமாட்டார். அது மட்டுமல்ல, அந்த நாட்டைப் பற்றிய அடிப்படை விவரங்கள்கூட அவருக்குத் தெரியவில்லை என்பதையும் உறுதியாகக் கூறிவிடலாம். காரணங்களை அடுக்குவோமா?

சவுதி அரேபியாவில் பெண்கள் தனியாக கார் ஓட்ட அனுமதியில்லை. சற்றுத் தொலைவிலிருந்து ஜாஸ்மினின் நண்பன் அவளை அடையாளம் கண்டு கொள்ள வாய்ப்பு இல்லை. கண்களைத் தவிர உடல் முழுவதும் மறைக்கும் உடையைத்தான் அங்கு பெண்கள் அணியவேண்டும். சவுதி அரேபியாவில் நதிகள் கிடையாது. உறவினர்களைத்தவிர வேறு யாருடனும் பொது இடங்களில் பெண்கள் பேசக் கூடாது. அந்த நாட்டில் திரை அரங்குகளே கிடையாது.

(விதிவிலக்குகளைப் பிறகு பார்ப்போம்)

மதுவகமா? வாய்ப்பே இல்லை. ஆக, பல விதங்களில் சவுதி அரேபியா மிக மிக வித்தியாசமான ஒரு நாடுதான். ஆண்-பெண் சமத்துவம் கிடையாது. முஸ்லிம்கள்-அல்லாதவர்கள் சமத்துவம் கிடையாது. ஜனநாயகமோ, எந்த வகையான தேர்தலோ கிடையாது என்பதால் ஆட்சியாளர்-மக்கள் சமத்துவம் கிடையாது. சட்டத்திலும் சமத்துவம் கிடையாது. இப்படிப் பலவிதங்களில் தனித்துவம் காட்டி வருகிறது சவுதி அரேபியா.

சவுதி அரேபியா எங்கே இருக்கிறது? இந்தியாவிலிருந்து வட மேற்கே பாகிஸ்தான். அதைத் தொடர்ந்து கத்தார், குவைத், இராக் என்று போனால் அரேபிய தீபகற்பம் வரும். இந்த அரேபிய தீபகற்பத்தின் மிகப் பெரும்பாலான பகுதியைக் கொண்டுள்ளது சவுதி அரேபியா. அதற்குக் கீழே ஏமன், ஓமன் என்று இரண்டு குட்டி நாடுகள். ஆப்பிரிக்காவுக்கு வடகிழக்காக உள்ளது சவுதி அரேபியா. அல்ஜீரியாவை விட்டுவிட்டால் அரபு நாடுகளில் மிகப் பெரியது சவுதி அரேபியாதான். அத்தனை பக்கங்களிலும் அரபு நாடுகளால் சூழப்பட்டுள்ளது சவுதி அரேபியா.

வட எல்லையில் ஜோர்டான் மற்றும் இராக், வடகிழக்கில் குவைத், கிழக்கில் கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்கள், தென்கிழக்கில் ஓமன், தெற்கில் ஏமன். சவுதி அரேபியா என்றவுடனேயே நம் மனதில் படர்ந்த பாலைவனம் நினைவுக்கு வரும். உண்மைதான். அந்த நாட்டில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மணல் பாங்கானதுதான். அந்த நாட்டின் மீது சமீபத்தில் ஒரு பெரும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அது அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பானது.

அமெரிக்காவில் நடந்த இரட்டை வணிக கோபுர தாக்குதல் தீவிரவாதிகளின் உச்சகட்ட அராஜகங்களில் ஒன்று. இரண்டு விமானங்கள் அந்த கோபுரங்கள் மீது மோத, மூன்றாவது விமானம் வாஷிங்டனுக்குச் சற்று வெளியே உள்ள அமெரிக்க ராணுவ அமைப்பான பென்டகனில் மோதியது. 9/11 (செப்டம்பர் 11) தாக்குதல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் தாக்குதலில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.

இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் சமீபத்தில் புறப்பட்டிருக்கிறது புதிய பூதம். அது இந்தத் தாக்குதலில் சவுதி அரேபியாவுக்கும் தொடர்பு உண்டு என்கிறது – அதுவும் சவுதி அரச குடும்பத்தினரின் நேரடித் தொடர்பாம்.

இப்படிக் கூறி இருப்பவர் சகாரியாஸ் மவ்சாய். இரட்டை கோபுரத் தாக்குதலுக்காக அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அல் காய்தா தீவிரவாதி. இந்தத் தாக்குதலுக்காக நிதி உதவி செய்ததாக சவுதி அரச வம்சத்தினர் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களெல்லாம் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள்.

கைதியின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டா?

அல் காய்தாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் உள்ள உறவு ஒரு விதத்தில் நகமும் சதையும் போல. மறு புறம் பூனையும் எலியும் போல. அல் காய்தாவையும் ஒசாமா பின் லேடனையும் இணைப்பது பல இழைகள். SBG (அதாவது சவுதி பின் லேடன் குழுமம்) என்ற நிறுவனம்தான் சவுதியின் மிகப் பெரிய ஒப்பந்த நிறுவனம் (contracting company) என்பதை மட்டும் இப்போது அறிந்து கொள்ளலாம். மற்றவற்றை சற்றுப் பொறுத்து விவரமாகப் பார்ப்போமே.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/சமத்துவம்-மறுக்கும்-சவுதி-அரேபியா-1/article6902616.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 2

 
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் பந்தர் பின் சுல்தான்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் பந்தர் பின் சுல்தான்.

இரட்டை கோபுரத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள அல் காய்தா தீவிரவாதி குறிப்பாக மூன்று சவுதி இளவரசர்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மூவருமே அமெரிக்காவுடன் ஆழ்ந்த தூதரக மற்றும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தவர்கள்.

இளவரசர் பந்தர் பின் சுல்தான் 1983-லிருந்து 2005 வரை அமெரிக்காவுக்கான சவுதி தூதராக பணி புரிந்தவர். மன்னர் சல்மானின் சகோதரி மகன். முன் னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். 2012-லிருந்து சென்ற ஆண்டு ஏப்ரல் வரை சவுதி உளவுத்துறை தலைவர்.

அடுத்ததாக இளவரசர் துர்கி அல் பைஸல். இவருக்கு வயது 69. (இளவரசர் என்றவுடன் உங் கள் மனதில் ஓர் இளைஞர் தோன்றி யிருந்தால் அதற்கு நான் பொறுப் பல்ல. மன்னர் அல்லாத அத்தனை அரச குடும்ப ஆண்களும் இளவரசர்கள்தான்).

இளவரசர் பந்தர் பின் சுல்தானுக்குப் பிறகு இவர்தான் அமெரிக்க தூதராகப் பணிபுரிந்தார். அவருக்கு முன்பாக சவுதி உளவுத்துறையின் தலைவர் இவர்தான். 2005-ல் இவர்மீது அரசல் புரசலாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அல் கய்தாவுக்கு இவர் நிதி உதவிசெய்கிறார்! ஒரு பேட்டியில் “இந்தக் குற்றச்சாட்டு என் முகத்தில் ஓங்கி அறைவதற்கு சமமானது” என்று துடிப்புடன் பதிலளித்தார் இளவரசர்.

மூன்றாவது இளவரசர் அல்வலீது பின் தலாலுக்கு மேலே குறிப்பிட்ட இருவரை விட வயது குறைவுதான். 59. சவுதி அரேபியாவை நிறுவியவர் என்று கருதப்படும் மன்னர் அப்துல் அஸீஸின் பேரன். அரபு உலகின் பிரம்மாண்டமான கேளிக்கை நிறுவனமான ரொடானாவின் முதலாளி.

செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து நிதி உதவியாக ஒரு கோடி டாலரை நியூயார்க் மேயருக்கு அளிக்க முன் வந்தார் இவர். ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் மேயர். காரணம் மத்திய கிழக்கு நாடுகள் குறித்த அமெரிக்காவின் கொள்கையை இவர் விமர்சனம் செய்ததுதான்.

அல் காய்தா என்றவுடன் நம் மனதில் ஒசாமா பின் லேடன் நினைவு எழாமல் போகாது. அவருக்கும் சவுதிக்கும் உள்ள தொடர்பைக் கொஞ்சம் பார்ப்போம். சொல்லப்போனால் சவுதியோடு முதலில் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டவர் ஒசாமாவின் அப்பா முகமது பின் லேடன்தான்.

அவர் பிறந்தது ஏமென் நாட்டில். என்றாலும் அங்கு பஞ்சம் ஏற்பட பிழைப்புக்காக அவர் நாடிச் சென்ற நாடு சவுதி அரேபியா. தன் வாழ்க்கையைத் தொடர அதுவே சிறந்த இடம் என்று கருதினார். அங்கு நுழைந்தபோது அவரிடம் இருந்த பணம் கொஞ்சம்தான். ஆனால் நம்பிக்கை நிறைய.

சின்னச் சின்னக் கட்டடங்களை கட்டிக் கொடுக்கும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டார். அவரது மனைவி (அதாவது பதினொன்றா வது மனைவி) 1957-ல் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றார். அந்தக் குழந்தை? கரெக்ட். ஒசாமா பின் லேடன்தான்.

குழந்தைகள், மனைவிகள் எல்லாமே அதிக எண்ணிக்கை. கஷ்டம் தாங்க முடியாத முகமது பின் லேடன் மன்னரை அணுகினார். அரண்மனையின் ஒரு புதிய பகுதியை சிறப்பாகக் கட்டித்தருகிறேன் என்றார். மன்னர் ஒப்புக் கொள்ள, மிகவும் சிறப்பாகவே கட்டுமானப் பணி நடந்தது.

மன்னரோடு நட்பு வளர்ந்தது. மன்னர் இறந்த பிறகு இளவரசர் பைஸல் மன்னரானார். ஆனால் அப்போது நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

முகமது பின் லேடன் தன் பணத்தை எடுத்து அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளமாகக் கொடுத்தார். மன்னர் உருகினார். அதற்குப் பிறகு அரசின் கட்டட வேலைகள் எல்லாம் முகமது பின் லேடனுக்குத்தான். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை லாவகமாகக் கைப்பற்றிவிட்டார்.

கால ஓட்டத்தில் பொதுப் பணித்துறை அமைச்சராக்கப் பட்டார். மெக்கா, மதினா மசூதிகள் பராமரிப்பும் அவருக்கு ஒப்படைக்கப் பட்டது.

ஒசாமா பின் லேடன் வளர்ந்தார். கூடவே அவர் கனவும் வளர்ந்தது. அந்தக் கனவு “இஸ்லாமியர்களால் மட்டுமே நிரம்பிய ஓர் உலகம்”.

ஒசாமா பின் லேடன் தன் பள்ளிப் படிப்பை மேற்கொண்டது மதினா மற்றும் ஜித்தா ஆகிய நகரங்களில். பிறகு ‘கிங் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தில்’ நிர்வாகம் மற்றும் பொருளாதாரத் தில் பட்டம் பெற்றார்.

பள்ளி நாளிலிருந்தே ஒசாமாவுக்கு ‘முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்’ என்ற அமைப்புடன் தொடர்பு இருந்தது. என்றாலும் ஆரம்பக் கட்டத்தில் ஒசாமா பின் லேடனுக்கு சவுதி அரேபியாவில் நிலவிய கடுமையான மதச் சட்டங்கள் ஏற்புடையதாக இல்லை. ஆனால் நிகழ்ந்தது ஒரு பெரும் திருப்பம்.

சவுதி அரேபிய மன்னர் ஒசாமாவின் அப்பாவிடம் மெக்கா, மதீனா மசூதிகளை புதுப்பிக்கும் பணியை ஒப்படைத்தபோது அங்கிருந்த பல இஸ்லாமிய புனித நூல்களை (தற்காலிகமாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள) தன் வீட்டுக்கு எடுத்து வந்தார். அவற்றை ஒசாமா பின் லேடனும் படித்தார்.

படிக்கப் படிக்க அவருக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் மேல் ஆழமான நம்பிக்கை வந்தது.

மேலை நாட்டு கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவி இருக்க, அது இஸ்லாமியர்களைத் தீண்டா மல் இருக்க வேண்டுமானால் அதற்கு புனிதப் போரும் துப்பாக்கியும்தான் ஒரே வழி என்ற சித்தாந்தம் அவர் மனதில் அழுத்தமாகப் பதிந்தது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/சமத்துவம்-மறுக்கும்-சவுதி-அரேபியா-2/article6908330.ece?ref=relatedNews

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஏமனுக்கு  அடி விழுது....இப்ப சவுதி அரசு நன்றிகடன் செலுத்துகின்றது ...விமானதாக்குதல் மூலம்.....

  • தொடங்கியவர்

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 3

 
 
  • ஒசமா பின் லேடன்
    ஒசமா பின் லேடன்
  • இரட்டைக் கோபுர தகர்ப்பில், சவுதி அரச குடும்பத்துக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்த சக்காரியாஸ் மவுசாய்
    இரட்டைக் கோபுர தகர்ப்பில், சவுதி அரச குடும்பத்துக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்த சக்காரியாஸ் மவுசாய்

பின்னர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார். அப்போது அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் நுழைய, அங்குள்ள முஸ்லிம் பிரமுகர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஒசாமா பின் லேடனின் மனதில் ஆழமாகப் பதிந்தது.

பெருமளவில் நிதி திரட்டி ஆப்கனில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு அதை ரகசியமாக அனுப்பி வைத்தார்.

பின்னர் ஆப்கானிஸ்தானுக்கும் ஒசாமா பின் லேடனுக்கும் இடை யில் நடைபெற்ற விஷயங்களை நாம் ஏற்கெனவே (இதே பகுதியில் முன்பு இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் குறித்த தொடரில்) பார்த்து விட்டதால் அதற்குப் பின் நடைபெற்ற விஷயங்களுக்கு வருவோம்.

சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு நீங்கிய பிறகு ஒசாமா பின் லேடன் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு திரும்பினார்.

அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ‘இனி இந்த நாட்டை விட்டு வெளியேறக்கூடாது’ என்று அவருக்குத் தடை விதித்தது சவுதி அரேபியா.

என்றாலும் தன்னைத் துடிப் புடன் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஒசாமா பின் லேடன் சதாம் ஹுசேன் சவுதி அரேபியாவின் மீது போர் தொடுப்பார் என்று அரசை எச்சரித்தார்.

அப்படிப் போர் நிகழ்ந்தால் எந்த மாதிரியான வியூகங்களை வகுக்கலாம் என்றும் தன் ஆலோசனைகளை எழுத்து வடிவில் அரசுக்கு அனுப்பினார். ஆனால் அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

ஒசாமா பின் லேடன் எச்சரித்த படி இராக் படைகள் சவுதி அரேபியவுக்குள் நுழையத் தொடங்கின. ஒசாமா பின் லேடன் அனுப்பிய ஆலோசனைகளை மதிக்காமல் அமெரிக்க உதவியை நாடியது சவுதி அரசு.

இது ஒசாமா பின் லேடனின் வாழ்க்கையில் மற்றொரு பெரும் திருப்பு முனையை அளித்தது. அதற்குப் பிறகு அரச குடும்பத் தினரையோ, அதிகாரிகளையோ சந்திப்பதைத் தவிர்த்தார். முஸ்லிம் மத குருமார்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஒவ்வொரு முஸ்லிமும் ராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று பிரசங்கம் செய்தார். சவுதி அரசுக்கு இதெல் லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. நாட்டை மட்டுமல்ல, அவர் தங்கிய ஜிட்டா பகுதியை விட்டே அவர் வெளியேறக் கூடாது என்று தடை விதித்தது. இதுவும் போதாதென்று அவர் இல்லாதபோது அவரது பண்ணை வீட்டை சோதனை இட்டது.

ஒசாமா பின் லேடன் இதனால் கடும் கோபம் அடைந்தார். தன் ஆழமான அதிருப்தியை வெளிக் காட்டினார். ஒப்புக்கு சில ஆறுதல் வார்த்தைகளை உதித்தார் இளவரசர். ஆனால் ஒசாமா பின் லேடனுக்கு விதிக்கப் பட்டிருந்த தடை நீக்கப்பட வில்லை.

சவுதி அரேபியாவில் எந்கு திரும்பினாலும் அமெரிக்கப் படைகள். அங்கு தங்கவே அவருக்குப் பிடிக்கவில்லை. 1991 ஏப்ரல் மாதம் ரகசியமாக பாகிஸ்தானுக்குச் சென்றார் ஒசாமா பின் லேடன். அதற்குப் பிறகு சவுதி அரேபியாவுக்கு அவர் இறுதிவரை திரும்பி வரவே இல்லை.

ஆக தான் பிறந்து வளர்ந்த சவுதி அரேபியாவின் மீது இவ் வளவு வெறுப்பை பின்னொரு காலத்தில் உமிழ்ந்ததற்குக் காரணம் அமெரிக்காதான்.

(சவுதி அரசும் “நமதுமுதல் எதிரி ஒசாமா பின் லேடன்தான்” என்று வெளிப்படையாகவே அறிவித் தது). பின்னர் ஒசாமா பின்லேடன் அமெரிக்காவினால் வேட்டை யாடப்பட்டு கொல்லப்பட்டார். ஆனால் அல் காய்தா இயக்கம் இன்னமும் தாராளமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரேபிய அரசுக்கோ, அதன் இளவர சர்களுக்கோ தொடர்பு இருக்குமா? தாக்குதலின் பின்னணியில் தாங்கள்தான் இருப்பதாக அல் காய்தா வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.

அப்படியா னால் சவுதி அரேபியா அரசுக்கும் அல் காய்தா இயக்கத்துக்கும் மறை முக ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டதா? சித்தாந்த மத வேறுபாடுகளை முன்னணிக்குக் கொண்டுவந்து விட்டு, அமெரிக்காவின் சமீப கால உறவுகளை சவுதி அரசு ஒரு பொருட்டாக நினைக்கவில் லையா? திரை விலகுமா?

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/சமத்துவம்-மறுக்கும்-சவுதி-அரேபியா-3/article6911776.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 4

 
 
அலெக்ஸாண்டர்
அலெக்ஸாண்டர்

அரேபிய தீபகற்பத்தின் முதல் நாகரீகம் என்று தில்மன் நாகரீகத்தைக் கூறலாம். அது குவைத்தின் அருகிலிருந்து ஓமனிலுள்ள குன்றுகள் வரை நீண்டிருந்தது. இது கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகள் முந்தைய கால கட்டம்.

கிரேக்கத்தை தன் வசம் கொண்டு வந்த அலெக்ஸாண்டர், பின்னர் பல நாடுகளை தன் ஆளுகையில் கொண்டு வரும் பேராசையோடு இயங்கினான். பாரசீகம் அவன் வசம் வந்தது. சிந்து சமவெளியில் உள்ள பல பகுதிகளைத் தன் பிடிக்குள் கொண்டுவந்தான்.

அடுத்து பிரம்மாண்டமான மகத சாம்ராஜ் யத்தையும் (அப்போது அது கிட்டத் தட்ட பீகாரிலிருந்து பஞ்சாப் வரை பரவி இருந்தது) வளைத்துப் போட வேண்டும் என்று விரும்பினான். ஆனால் தங்கள் தாயகத்தை விட்டுக் கிளம்பி பல வருடங்கள் ஆகி இருந்ததால் அவனது படை வீரர்கள் இதை விரும்பவில்லை.

வேறு வழியில்லாமல் அலெக்ஸாண்டர் மாசிடோனியா வுக்கு தன் படையுடன் திரும்பத் தொடங்கினான். வழியில் பாபிலோனில் உள்ள மன்னன் இரண்டாம் நெபுகட் நெஸாரின் அரண்மனையில் தங்கினான்.

அன்று மாலை அரண்மனையில் சிறப்பான களிப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மது பொங்கி வழிந்தது. மறுநாள் காலையில் அவனுக்குக் கடும் காய்ச்சல். உடலில் வெப்பம் அதிகமாகிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில், இன்னும் சில நாட்களுக்குத் தன்னால் பயணம் செய்ய முடியாது என்பதை அவன் உணர்ந்தான்.

தன் படை வீரர்களை நோக்கி “நீங்கள் மாசிடோனியாவுக்குச் செல்லுங்கள். நான் பிறகு வருகிறேன்'' என்பதை சைகை செய்து உணர்த்தினான். படையில் சிலரைத் தவிர மீதி பேர் தாய் நாட்டை நோக்கிக் கிளம்பினர்.

ஒன்று அல்ல, முழுமையாக பதினோரு நாட்கள் படுத்த படுக்கையாக இருந்தான் அலெக்ஸாண்டர். கடுமையான மலேரியா நோய் அவனை ஆட்டிப் படைத்தது. உடல் உபாதை அதிகமானது. பலப்பல நாடுகளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த அந்த பேராசைக்கார மாவீரனின் உயிர் அடங்கியது.

முப்பத்திரண்டே வயதுக்குள் உலக சரித்திரத்தில் தன் முத்திரையை அழுத்தமாக பதித்துச் சென்ற அலெக்ஸாண்டரின் நிறைவேறாத இரண்டு கனவுகளில் ஒன்று மகதத்தை வெற்றி கொள்வது. மற்றொன்று அரேபியாவைத் தன் வசம் கொண்டு வருவது.

செல்வச் செழிப்பு மிக்க அரேபியா மீது எப்போதுமே ஒரு கண் வைத்திருந்தான் அலெக்ஸாண்டர். என்றாலும் அவனது தளபதிகளில் ஒருவனான நியர்சுஸ் அரேபியாவின் ஒரு பகுதியான பைலகா தீவில் வணிக கேந்திரம் ஒன்றைப் பின்னர் நிறுவினான்.

அரேபியாவின் செல்வச் செழிப்பு அதற்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத நபடியன் சாம் ராஜ்யத்திற்கு மிகவும் உதவிகர மாக இருந்தது ஒரு வேடிக்கை. ஏசு பிறந்த கால கட்டத்தில் வளர்ந்த இந்த சாம்ராஜ்யம் அரேபி யாவுக்கும் டமாஸ்கஸுக்கும் (இன்றைய சிரியா நாட்டின் தலைநகர்) நடுவே இருந்தது.

இந்த இரண்டு நாடுகளுக்குமிடையே நிறைய வணிகம் நடைபெற்றது அந்த சாம்ராஜ்ய மன்னர்களுக்கு மிகவும் வசதியாகிப் போனது. வணிகப் போக்குவரத்து நடுவில் இருந்த தங்கள் பகுதி வழியாக நடைபெற்றபோது ஒவ்வொரு வண்டிக்கும் இவ்வளவு என்று வரி வசூலித்து தன் கஜானாவை நிறப்பிக் கொண்டது அந்த அரசு.

இருபதாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே அரேபிய தீபகற்பத் தில் மனிதர்கள் வசித்து வந்தனர் என்கிறது அந்த நாட்டு தூதரகம். காட்டு மிருகங்களையும் தாவரங் களையும் உண்டு வேட்டையாடு வதைத் தொழிலாகக் கொண் டிருந்தனர் அந்த மக்கள்.

15,000 வருடங்களுக்கு முன் ஐரோப்பிய பனிக்கட்டிகள் உருகியதைத் தொடர்ந்து அரேபிய தீபகற்பம் உலரத் தொடங்கியது. பசும் புல்வெளிகளால் சூழப்பட் டிருந்த பகுதிகள் பாலைவனங் களாயின. காட்டு மிருகங்கள் ஒட்டு மொத்தமாக மறைந்தன. நதிகள் காய்ந்தன. மணல் படு கைகளைத்தான் காண முடிந்தது.

இதன் காரணமாக மனிதர்கள் இடம் பெயர வேண்டிய அவசியத் துக்கு உள்ளானார்கள். மலைப் பள்ளத்தாக்கு பகுதிகளை நாடி னார்கள். விவசாயம் வளர்ந்தது.

இதனால் பல பலன்கள் விளைந் தன. வேட்டையாடும் பழக்கம் மறைந்தது. ஆடுகள், மாடுகள், குதிரைகள், ஒட்டகங்கள் ஆகி யவை வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளாயின. விவசாயம் தீவிரமடைய அடைய, மக்கள் கூட்டாக வாழத் தொடங்கினார்கள். மொழி, அரசியல் அமைப்புகள், கலை, கட்டடக்கலை போன்றவற் றுக்கு அஸ்திவாரம் இடப்பட்டது.

நைல் நதி பள்ளத்தாக்கு, மெசபடோமியா ஆகிய இரு பெரும் நாகரிகத் தொட்டில் களுக்கு நடுவே அமைந்திருந்தது அரேபிய தீபகற்பம். வணிகம் அதன் காலத்தின் கட்டாயமானது.

பாதாம் பருப்புகள், பேரீச்சம் பழங்கள், வாசனை திரவியங் கள் போன்றவற்றை மெசப டோமியா, நைல் பள்ளத்தாக்குப் பகுதி, மத்திய தரைப் பகுதி போன் றவற்றுக்கு அரேபியர்கள் வணிகம் செய்யத் தொடங்கினார்கள் அரேபிய தீபற்பத்தில் வசித்தவர் கள்.

அதேசமயம் தாங்கள் வணிகம் செய்த நாடுகளில் எழுந்த அரசியல் அமைதியின்மை அரேபியாவை எட்டியும் பார்க்கவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணமாக பெரும்பாலைவனங்கள் ஒரு தடுப்பு போல அரேபியாவைப் பிரித்திருந்ததுதான்.

கி.பி.570-ல் ஒரு முக்கிய நிகழ்வு. அரேபியாவில் இருந்த மெக்காவில் நபிகள் நாயகம் பிறந்தார்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/சமத்துவம்-மறுக்கும்-சவுதி-அரேபியா-4/article6916009.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 5

 
 
 
மெக்காவின் பண்டைய கால தோற்றம்
மெக்காவின் பண்டைய கால தோற்றம்

இறை வெளிச்சம் கிடைக்கப் பெற்ற நபிகள் நாயகம் கூறியதன் தொகுப்புதான் திருகுர்ஆன். கி.பி.622-ல் தன்னைக் கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதை அறிந்ததும் தன் தொண்டர்களுடன் யாத்ரிப் என்ற நகருக்குக் குடிபெயர்ந்தார் (அதுதான் இன்றைய மதீனா). இப்படி நபிகள் நாயகம் தன் இடத்தை மாற்றிக் கொண்ட தினமான ‘ஹிஜ்ரா’தான் இஸ்லாமிய காலண்டரின் தொடக்கமானது. (ஹிஜ்ரா என்றால் வேறொரு இடத்துக்குக் குடிபெயர்தல் என்று பொருள்).

அடுத்த சில வருடங்கள் முகமது நபிகளின் தொண்டர்களுக்கும் மெக்காவில் உள்ள ‘பேகன்’களுக்கும் (pagans என்பது யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியவர்களைத் தவிர மீதிப் பேரைக் குறிக்கிறது என்று தோராயமாகச் சொல்லலாம்) தொடர்ந்து பல போராட்டங்களைச் சந்தித்தன.

பிற பகுதிகளில் அவரது புதிய மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டிருந்தவர்களும் முகம்மது நபிகளோடு சேர்ந்து கொண்டனர். இஸ்லாம் என்பது அவர்களை இறுக்கமாக இணைக்கும் இழை ஆனது. அதன் பின்னர் மீண்டும் மெக்காவை அடைந்தபோது அவர்களுக்கு எந்த வெளிப்படையான எதிர்ப்பும் இல்லாமல் போனது.

ஆக அரேபிய தீபகற்பத்தில் அரபு முஸ்லிம்களுக்கு மதமும் அரசியலும் இணைந்த ஒரு தனித்துவப் பகுதி ஆளுகைக்குள் வந்தது.

அடுத்த நூற்றாண்டில் இஸ்லாம் மிக அதிக அளவில் பெருகியது. அரேபிய தீபகற்பத்தையும் தாண்டி உருவாகியது ஒரு பரந்து விரிந்த முஸ்லிம் அரபு சாம்ராஜ்யம். இந்திய தீபகற்பத்தின் வட மேற்குப் பகுதி, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, தெற்கு இத்தாலி, என்றெல்லாம் பரவி தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

இதன் காரணமாக வேறெரு விந்தையும் நிகழ்ந்தது. நபிகள் நாயகம் இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பத் தொடங்கியது மெக்கா மற்றும் மதீனாவிலிருந்துதான். ஆனால் அரபு சாம்ராஜ்யம் விரிவடைந்தவுடன் அரசியல் முக்கியத்துவம் டமாஸ்கஸ், பாக்தாத், கெய்ரோ ஆகிய நகரங்களுக்கு மாறிவிட்டது (இவை தற்போதைய சிரியா, இராக் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் தலைநகரஙகள்).

ஆனால் இஸ்லாமின் புனிதத்தலங்கள் என்ற அந்தஸ்தை மெக்காவும் மதீனாவும் அழுத்தமாகவே தக்க வைத்துக் கொண்டன. நபிகள் இறந்த பிறகும் இஸ்லாம் பெரும் வளர்ச்சி அடைந்தது.

உலகெங்கிலும் இஸ்லாமியக் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள் அரேபிய தீபகற்பத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் கணிசமானவர்கள் மெக்கா மற்றும் மதீனாவில் குடியேறத் தொடங்கினர். அரேபியாவின் பிற பகுதி நாகரிகங்களும் முஸ்லிம் உலகும் சங்கமமாயின. இதன் காரணமாக அரபு மொழி செழிப்படைந்தது.

பதினேழாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய சாம்ராஜ்யம் தழைத்தது. ஆனால் அதன் பிறகு காலப்போக்கில் அரேபியாவின் வணிகம் குறைந்தது. செல்வச் செழிப்பு இறக்கம் கண்டது. ஷேக்குகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். பாரசீக மன்னர்களும், ஒட்டாமன் துருக்கியர்களும் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள, அரேபியா தன் தனித் தன்மையை இழந்தது.

அதற்குப் பிறகு அது சின்னச் சின்ன முஸ்லிம் ராஜ்யங்களாகப் பிரிந்துவிட்டது. என்றாலும் மெக்காவும் மதீனாவும் பல நாடுகளிலிருந்தும் பயணிகளைக் கவர்ந்திழுக்கத் தவறவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டு தொடக்கத்தில் முஸ்லிம் அறிஞரான ஷேக் முகம்மது பின் அப்துல் வஹாப் என்பவர் இஸ்லாமின் மூலக் கோட்பாடுகளுக்கு அனைவரும் திரும்ப வேண்டும் என்பதை வெளிப்படையாக வலியுறுத்தத் தொடங்கினார். உள்ளூர் மதவாதிகளுக்கு இது பிடிக்கவில்லை.

தங்கள் பதவிகளுக்கு வேட்டு வந்து விடுமோ என்ற பயம்! வஹாபை தண்டிக்க முயற்சித்தனர். தனக்குப் பாதுகாப்பு கோரி வஹாப், திரியா என்ற சிறுநகரின் ஆட்சியாளரைக் கேட்டுக் கொண்டார். அவர் பெயர் முகம்மது பின் சவுத்.வஹாபும் சவுத்துமாக சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ‘இருவருமாகச் சேர்ந்து நிஜமான இஸ்லாம் மார்க்கத்தை முஸ்லிம்களிடையே கொண்டுவர நம் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’. இதற்கென உருவானது முதல் சவுதி நாடு. இதன் ஆன்மிக குருவாக விளங்கினார் வஹாப்.

வஹாபிஸம் என்பது சவுதி அரேபியாவில் இன்றும் உள்ள ஒரு பிரிவினரின் கொள்கை. சரித்திர மற்றும் மதத்திற்கான முக்கியத்துவம் உள்ள கட்டிடங்கள் என்று எதுவுமே இருக்கக் கூடாது என்பது இவர்களது கொள்கை. காரணம் இதை அனுமதித்தால் நாளடைவில் இஸ்லாமிய மார்க்கத்துக்குள் மெல்ல மெல்ல உருவ வழிபாடு நுழைந்து விடும் என்ற கவலை.

இதனால்தான் ஆயிரம் வருடங்களுக்கும் அதிகத் தொன்மை உடைய மெக்காவில் இருந்த தொண்ணூறு சதவீத கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதில் பல இஸ்லாமிய வி.ஐ.பி.க்கள் எழுப்பிய மசூதிகளும் அடக்கம். இரண்டு உதாரணஙகள் – நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா கட்டிய மசூதி, நபிகள் நாயகத்தின் மாமனார் அபுபக்கர் எழுப்பிய மசூதி. நபிகள் நாயகத்தின் மனைவி கதிஜாவின் வீடும் மேற்கூறிய காரணத்துக்காக இடிக்கப்பட்டன. ஆக, முகமது நபி காலத்தில் இருந்த கட்டிடங்களில் தப்பித்து இன்று வரை அங்கு இருப்பவை மிகச் சொற்பமானவைதான்.

உலகம் உருளும்..

http://tamil.thehindu.com/world/சமத்துவம்-மறுக்கும்-சவுதி-அரேபியா-5/article6920235.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 6

 
 
சவூதி அரேபியாவின் ராஸ் தனுராவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.
சவூதி அரேபியாவின் ராஸ் தனுராவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.

வஹாப் ஆன்மிக குருவாகவும் சவுத் ஆட்சியாளருமாக இணைந்து 19-ம் நூற்றாண்டில் உருவாக்கிய அரசின் எல்லை கிட்டத்தட்ட அரேபிய தீபகற்பம் முழுவதும் பரவியது (மெக்கா, மெதினா உட்பட). திரியாவை தலைமையிடமாக கொண்ட சவுத் ஆட்சியாளர்களின் புகழ் ஒட்டாமன் சாம்ராஜ்யத்துக்கு நெருடல் அளித்தது. ஒட்டாமனின் படை திரியா நகரில் நுழைந்து அந்த நகரை நிர்மூலமாக்கியது.

அங்குள்ள பேரீச்சைத் தாவரங் களை வேரோடு சாய்த்தது. துப் பாக்கி குண்டுகளால் அங்குள்ள கட்டடங்களைத் துளைத்து துவம்சம் செய்தது. கிணறுகளைத் தூர்த்தது. அதாவது மக்கள் வசிக்கவே முடியாதபடிக்கு அந்த நகரை ஆக்கியது.

சில வருடங்கள்தான். மறுபடி யும் கிளர்ந்தெழுந்தது சவுத் ஆட்சி. ரியாத் அதன் தலைநக ராக மாறியது. இது திரியாவிலி ருந்து சுமார் இருபது மைல்கள் தள்ளியிருந்தது. சுமார் பதினோரு ஆண்டுகள் ஆட்சி செய்தார் துர்கி பின் அப்துல்லா அல் சவுத். ஒட்டாமன் ஆட்சியில் இழந்த பகுதி களில் பெரும்பாலானவற்றை மீட்டார்.

மீண்டும் அமைதிக்கு பங்கம். 1865-ல் ஒட்டாமன் சாம் ராஜ்யம் புதிய வலிமையுடன் எழுந்தது. சவுதி நாட்டின் துறை முகங்களைக் கைப்பற்றியது. சவுதி அரசை நீக்க முயற்சி செய்தது.

அப்போதைய சவுதி மன்னர் அப்துல் ரஹ்மான் பின் ஃபைசல் அல் சவுத் என்பவர் கிழக்கு அரேபியாவின் பாலைவனப் பிரதேசங்களில் வாழ்ந்த பெடோயின் இன மக்களிடம் தஞ்சம் கேட்டார்.

தன் குடும்பத்தோடு அந்தப் பகுதிக்குச் சென்ற மன்னர் 1902 வரை அங்கேயே தங்கினார். அதாவது சுமார் பத்து வருடங்களுக்கு. அப்போது மன்னரின் மகன் அப்துல் அஜீஸ் அவருடன் இருந்தார்.

இழந்த தங்களது ராஜ்ஜியத்தை மீட்டே ஆக வேண்டும் என்ற தீர்மானத்துடன் மனதில் மிகுந்த தைரியத்துடன் வெறும் நாற்பதே தொண்டர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு நள்ளிரவில் ரியாத் நகருக்குள் நுழைந்தார் அப்துல் அஜீஸ்.

எப்படி என்ற விவரங்கள் சரியாகப் புலப்படவில்லை. ஆனால் மெக்கா மெதினா உட்பட பல பகுதிகளைத் தன் கைவசம் கொண்டு வந்தார். ஆங்காங்கே தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்த சமூகங்களை இணைத்து தனக்கு ஆதரவாக ஆக்கிக் கொண்டனர்.

செப்டம்பர் 23, 1932 அன்று சவுதி அரேபியா என்ற பெயரில் நாடு உருவானது. அதன் தேசிய மொழி அரபி, அரசியலமைப்பு என்பது குர்ஆன்தான்.

ஒருவரின் பெயர் ஒரு நாட்டிற்கு வைக்கப் படுவது அபூர்வம். அது சவுதி அரேபியாவில் நிகழ்ந்தது.

மன்னர் சவுத் அடுத்தடுத்து செயல்பட்டு சவுதி அரேபியாவின் எல்லைகளை மேலும் மேலும் விரிவாக்கினார். முதலில் ரியாத் அவர் வசம் வந்தது. ஷெரீப் உசேன் அலியையும் தோற்கடித்தார். உரு வானது நவீன சவுதி அரேபியா.

(ஷெரீப் உசேன் அலி குறித்து சில விவரங்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டாமன் சாம்ராஜ்ஜியம் ஆட்டம் காணத் தொடங்கியது. இதற்கு ஒரு முக்கிய காரணம் அரேபியர் களின் புரட்சி. இதைத் தொடங்கியவர் ஷெரீப் உசேன் அலி என்பவர். ஒட்டாமன் சாம்ராஜ்ஜியத்திலிருந்து அரபு நாடுகள் முழுமையான சுதந்திரம் பெற வேண்டுமென்பதுதான் அந்தப் புரட்சியின் நோக்கம். இதற்கு அடுத்த கட்டமாக சிதறிக் கிடந்த அரபுப் பகுதிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கமும் இருந்தது.

வந்தது முதலாம் உலகப் போர். பிரிட்டன் மற்றும் பிரான்ஸுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார் ஷெரீப் உசேன் அலி. இதன்படி உலகப் போரில் இந்த இரு நாடுகளுக்கு அரேபியர்கள் ஆதரவு இருக்கும். ஆனால் இதற்கு பதிலாக ஒட்டாமன் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராகச் செயல்பட்டு அரபு நாடுகளுக்கு விடுதலை வாங்கித் தரவேண்டும். அரேபியர்களுக்கு ஆதரவாகவே நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்றன).

சவுதி அரேபியாவில் நிகழ்ந்த அடுத்த மாபெரும் புரட்சி என்பது 1930-களில் அங்கு கண்டெடுக்கப் பட்ட பெட்ரோலியக் கிணறுகள். இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம். ஆனால் ஒன்று, சவுதி அரேபியா மட்டுமல்ல, அந்த பகுதியிலுள்ள எல்லா நாடுகளுமே பெட்ரோலிய வளத்தால் பணம் கொழிக்கத் தொடங்கின. (இந்த விஷயத்தில் பரிதாபமாக விளங்கிய விதிவிலக்கு ஏமன் மட்டுமே).

சவுதி அரேபியாவின் லேட்டஸ்ட் மூன்று மன்னர்களைப் பார்ப்போம்.

1982 முதல் 2005 வரை அங்கு மன்னராக இருந்தவர் பஹத் அப்துல் அஜீஸ். இளவரசராக இருந்தபோதே ஐ.நா. சபையின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்காக சான் பிரான்ஸிஸ் கோவிற்குச் சென்றார். பின்னர் சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரானபோது ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடி சூடும் விழாவிற்குச் சென்றார். 1953 இறுதியில் சவுதி அரேபியாவின் கல்வி அமைச்சரானார். அந்த நாட்டின் கல்வித் துறை அமைச்சர் நியமிக்கப் பட்டது அப்போதுதான்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/சமத்துவம்-மறுக்கும்-சவுதி-அரேபியா-6/article6928313.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா - 7

 
 
 
பஹத் அப்துல் அஜீஸ்
பஹத் அப்துல் அஜீஸ்

சவுதி அரேபியாவின் மன்னராக 1982 முதல் 2005 வரை இருந்த பஹத் அப்துல் அஜீஸுக்கு நாசர், சாத் என்று இரண்டு அண்ணன்கள் உண்டு என்றாலும் தகுதியை முன்வைத்து இவரே பட்டத்து இளவரசர் ஆனார். மன்னர் காலீத் இறந்தவுடன் இவர் மன்னர் ஆனார். மன்னர் என்கிற முறையில் இவர் முன்னின்று நடத்திய செயல்களைவிட, இளவரசராக இவர் செய்தவை அதிகம். ஐ.நா. சபையின் ஆதரவாளராக இருந்தார்.

அமெரிக்காவின் தோஸ்த் ஆனார். அரபு நாடுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களைய முயற்சி எடுத்துக் கொண்டார் - முக்கியமாக அல்ஜீரியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையே. குவைத்தை இராக் ஆக்கிரமித்த போது அரபு நாடுகளை இராக்கிற்கு எதிராக திரட்டியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

ஆனால் பிறகு ஈரானுக்கு எதிராக இராக் போரிட்டபோது இராக்கை ஆதரித்தார் மன்னர். காரணம் கடுமையான இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரான ஒரு புரட்சி ஈரானில் எழுந்திருந்தது. ஆட்சியாளர்களும் இதற்குக் கொஞ்சம் செவி சாய்க்கத் தொடங்கி இருந்தனர். அது போன்ற புரட்சி சவுதி அரேபியாவிலும் வந்து விடக்கூடாதே. எனவேதான் ஈரானுக்கு எதிரான நிலையை மேற்கொண்டார் இவர். இவருடைய ஆடம்பரமான வாழ்க்கை குறிப்பிடத்தக்கது. அதில் பல சுவாரசியங்கள்.

மிக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தார் இவர். இவருக்கான கப்பலில் இரண்டு நீச்சல் குளங்களும் ஒரு திரை அரங்கமும் ஒரு மருத்துவமனையும் இருந்தன. அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு உட்பட பல வசதிகளைக் கொண்டதாக இருந்தது. செயின் ஸ்மோக்கராகவும் மிகவும் பருத்த தேகம் கொண்டவராகவும் இருந்த இவருக்கு மூட்டு வலி, நீரிழிவு நோய், பின்னர் பக்கவாதம்என்று பல நோய்கள் வந்து சேர்ந்தன. இருந்தும் தன் முதிர்ந்த வயதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இவர் (இவரும்?) அரசியல் செய்து கொண்டு இருந்தார்.

ஃபார்ச்சூன் இதழ் இவர் 18 பில்லியன் டாலர் சொத்து கொண்டவர் என்றது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரர் என்றது. ஆறு மகன்கள், நான்கு மகள்கள் என்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்த இவர் தன் 84-வது வயதில் இறந்தார். அவர் இறப்பிற்குப் பிறகு பல அரபு நாடுகள் குறிப்பிட்ட நாட்களுக்கு துக்கம் அனுஷ்டித்தன.

அடுத்து, இரு புனித மசூதிகளின் பாதுகாவலராக (அதுதான் சவுதி அரேபியா மன்னர் யாராக இருந்தாலும் அவரது பட்டப் பெயர்) அரியணை ஏறியவர் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ். சவுதி அரேபியாவின் ஆறாவது மன்னர். பல விதங்களில் சவுதி அரேபியாவின் பொருளாதார, சமூக கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மன்னர் அப்துல்லா அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் இவரால் உருவானது. பெண்கள் கல்விக்கெனவே இளவரசி நூரா அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்.

நீதித்துறையை ஓரளவு சீரமைத்தார் (இதுவே அங்கு அதிர்ச்சியைக் கிளப்பியது). உலகின் முக்கிய மதங்களின் பிரதிநிதிகளுடன் இவர் பேச்சு வார்த்தைகள் நடத்தியதுண்டு. பாலஸ்தீனத்தில் உண்டான அமைதியின்மையைக் குறைக்க பெரும் முயற்சி எடுத்தார். உலக நாடுகளின் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்ட இவர் தீவிரவாதச்செயல்களைப் பல முறை கண்டித்திருக்கிறார். உலகின் பல நாடுகளுக்கு நல்லெண்ண விஜயம் செய்திருக்கிறார். (இந்தியாவிற்குக் கூட 2006-ல் வந்திருக்கிறார்). பலவித அரபுக் குதிரைகளை ஆசையுடன் வளர்த்தார். ரியாத் நகரில் ஒரு பெரும் நூலகத்தை எழுப்பினார்,

படிப்பதில் பெரும் விருப்பம கொண்டவர் இந்த மன்னர்.மன்னர் அப்துல்லாவிற்குப் பிறகு சமீபத்தில் மன்னர் ஆகி இருப்பவர் சல்மான். அவரும் அவரது ஆறு சகோதரர்களும் `சவுதி ஸெவன்’ என்று செல்லமாகக் குறிப்பிடப்படுகிறார்கள். மன்னர் ஆவதற்கு முன் பல வருடங்கள் ரியாத் நகரத்தின் ஆளுநராகப் பணி ஆற்றியிருக்கிறார். அங்குள்ள பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்காகப் பாடுபட்டார். வெளிநாட்டுப் பிச்சைக்காரர்களை உடனடியாக வெளியேற்றினார். உள்நாட்டுப் பிச்சைக்காரர்களை மறுவாழ்வு மையங்களில் சேர்த்தார்.

பஹரைனில் அரசுக்கு எதிராக வலுத்த குரல்கள் எழுந்தபோது சல்மான் சவுதி அரேபியாவின் ராணுவத்தை அங்கு அனுப்பி அந்த அரசுக்கு உதவினார். பாதுகாப்பு அமைச்சராக இவர் இருந்தபோது இவர் ராணுவத்துக்காக செலவழித்த தொகை எக்கச்சக்கம். பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய ராணுவ பட்ஜெட்டை சவுதி அரேபியா தாண்டியது அப்போதுதான்.

மன்னர் குடும்பத்தில் (நாலாயிரம் இளவரசர்களைக் கொண்டது) அமைதியை ஏற்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. முதுகில் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர். ஒரு முறை பக்க வாதத்தில் தாக்கப்பட்டதில் இன்னமும்கூட இவரது இடது கை சரியாக வேலை செய்ய வில்லை. நினைவை பாதிக்கும் அல்ஸைமர் நோயும் இவருக்கு உள்ளதாகச் சொல்கிறார்கள். வயது எண்பது என்றாலும் இவருக்குத்தான் மன்னர் பதவி. அதுதான் சவுதி அரேபியா.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/சமத்துவம்-மறுக்கும்-சவுதி-அரேபியா-7/article6929971.ece?ref=relatedNews

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவூதி அரசுக்கும் இந்தியாவில் இருக்கும் தாதாக்களுக்கும் என்ன வித்தியாசம்?
தாதாக்களும் தமக்கென நீதியையும் நீதிமன்றங்களையும்......சட்டங்களையும் வகுத்து வைத்திருக்கின்றார்கள். ரோ எனும் அரச அமைப்பால் கூட அவர்களை எதுவும் பண்ணமுடியாதாம்.

 

 

  • தொடங்கியவர்

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 8

 
 
சவுதி அரேபியாவில் பொது இடத்தில் பிரம்படி தண்டனை.
சவுதி அரேபியாவில் பொது இடத்தில் பிரம்படி தண்டனை.

முஸ்லிம்களுக்குப் புனிதமான பல இடங்கள் சவுதி அரேபியாவில் உள்ளன. அவற்றில் முக்கியமான இரண்டு, மெக்காவும் மெதினாவும். மெக்காவில் உள்ள மசூதியின் பெயர் மஸ்ஜித்-அல்-ஹராம். இதில்தான் இஸ்லாமின் மிக மிகப் புனிதமான காபா உள்ளது. மெதினாவில் உள்ள மசூதியின் பெயர் அல்-மஸ்ஜித் அல்-நபாவி. இங்குதான் முகமது நபியின் சமாதி உள்ளது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் தொடங்கப்பட்டது என்றாலும் இன்றைக்கு உலகின் மிகப் பெரிய மதங்களில் ஒன்று இஸ்லாம்.

தொழுகை நேரங்களில் யாரும் கடைகளுக்குச் செல்ல மாட்டார் கள். எனவே அங்கு தொழுகை நேரத்தில் கடைகள் திறந்திருக்காது. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சவுதி அரேபியாவில் குடியுரிமை கிடையாது. மெக்காவிற்குள் பிற மதத்தினருக்கு அனுமதி கிடையாது.

சவுதி அரேபியாவில் வசிக்கும் பிற மதத்தினர் வழிபடுவதற்கு அவர்களுக்கான எந்த வழிபாட்டுத் தலத்தையும் கட்ட அனுமதி கிடையாது. முஸ்லிம் அல்லாதவர்கள் சவுதி அரேபியாவில் இறந்தால் அவர்கள் அந்த நாட்டு எல்லைக்குள் புதைக்கப் படமாட்டார்களாம்.

முன்னொரு காலத்தில் சவுதி அரேபியாவில் திரை அரங்குகள் நிறைய இருந்தன. 1980-க்களில் புதிய இஸ்லாமிய அலை வீசிய போது பல மாற்றங்கள். நாட்டிலுள்ள அத்தனை திரை அரங்குகள் மற்றும் நாடக அரங்குகளையும் அரசு இழுத்து மூடியது. இதை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர் என்பதல்ல. 2005-ல் மன்னர் அப்துல்லா ஒரு சில திரைப்பட அரங்குகளை மட்டும் திறக்க அனுமதி அளித்திருக்கிறார்.

சில நூற்றாண்டுகளாகவே கலைகளை வளர்ப்பது என்பது சவுதி அரேபியாவில் பெரும்பா லும் வேண்டாத விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

மிகச் சிறந்த கல்விமான் களும் இலக்கியவாதிகளும் இருந்தும்கூட மதம் சாராத இலக்கியங்களுக்கு அங்கு ஆதரவு சிறிதும் இல்லை. தவிர நூல்களுக்குக் கடுமையான தணிக்கை முறை உண்டு.

சவுதி அரேபியா சந்தேகமில்லாமல் ஓர் இஸ்லாமிய நாடு என்பதால் அதன் நீதிதுறை முழுக்க முழுக்க இஸ்லாமிய சட்டமான ஷரியாவை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இந்த இடத்தில் ஷரியா பற்றி கொஞ்சம் பார்ப்போம். இந்த சட்டங்கள் திருகுர்-ஆனை அடிப்படையாகக் கொண்டவை. அடுத்ததாக அந்த சட்டங்கள் அடிப்படையாகக் கொண்டது ஸுன்னாவை. ஸுன்னா என்பவை நபிகள் நாயகம் தன் வாழ்நாளில் கடைப்பிடித்தவை மற்றும் பேசியவை. மூன்றாம் நிலையாக ஷரியா கருதுவது ‘இஜ்மா’வை. இஜ்மா என்பது ஒரு குறிப்பிட்ட வழக்கில் முஸ்லிம் அறிஞர்கள் ஒருமித்த குரலில் அளிக்கும் ஆலோசனைகள். நான்காவது தான் தர்க்கம்.

சவுதி அரேபியாவின் நீதித்துறை என்பது மூன்று பகுதிகளைக் கொண்டது. இது பெரிய பகுதி என்று ஷரியா நீதிமன்றங்களைச் சொல்லலாம். இவைதான் பெரும் பாலான வழக்குகளை நடத்து கின்றன.

ஷரியாவுக்கு அடுத்ததாக உள்ளது குறை தீர்க்கும் வாரியம் (Board of Grievances). அரசு தொடர்பான குறைகள் இதில் அலசப்படும். (அதற்காக மன்னரின் மீதே குறை கூறலாம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.)

நீதித்துறையின் மூன்றாவது அங்கமாக அரசு அமைச்சகத்தின் பல்வேறு குழுக்களைக் கூறலாம். இவை தொழிலாளர் பிரச்னை போன்றவற்றைக் கையாளு கின்றன.

சட்டப்படி ஓர் ஆண், 4 பெண் களை மணக்கலாம். ஆனால் அவன் தன் அனைத்துக் குடும் பங்களையும் சமமாகவும் சிரமம் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான்கு திருமணங்கள் அனு மதிக்கப்படுகின்றன என்றாலும் ஒன்று அல்லது இரண்டு திரு மணங்களுக்கு மேல் யாரும் செய்து கொள்வதில்லை. பொருளாதாரமும் ஒரு முக்கிய காரணம்.

செல்வச் செழிப்பு உள்ளவர் கள் மட்டுமே நான்கு வரை செல் கிறார்கள். அது மட்டுமல்ல, ஒரு மனிதன் ‘எந்த ஒரு குறிப் பிட்ட சமயத்திலும்’ நான்கு குடும் பங்களுக்குமேல் வைத்திருக்கக் கூடாது என்று சட்டத்தையே கொஞ்சம் வளைக்கிறார்கள் அரச குடும்பத்தினர்.

மரண தண்டனை என்பது சவுதி அரேபியாவில் மிகவும் சகஜம். எதற்கு மரண தண்டனை கொடுப்பார்கள்? கொலை, விப சாரம், போதை மருந்து கடத்தல் ஆகியவற்றுடன் இந்த பட்டியல் நின்று விடவில்லை. தன்பால் ஈர்ப்பு, கணவரல்லாத ஒருவ ருடன் உறவு கொள்ளுதல் ஆகிய வற்றோடு, இஸ்லாம் மார்க் கத்தைத் துறப்பவர்களுக்கும் மரண தண்டனைதான். (எப்போதாவது போனால் போகிறது என்று ஆயுள் தண்டனை அளிப்பார்கள்).

மரண தண்டனையை விடக் கொடுமை அந்த மரணம் எப்படி விதிக்கப் படுகிறது என்பது. வாளால் கழுத்தை அறுப்பதுதான் அங்கு வழக்கம். ஒரே வீச்சில் கழுத்தை அறுத்துவிடும் அளவிற்கு வாளும் கூர்மையானது, வெட்டுபவர்களும் திறமைசாலிகள். ஆனால் இந்தத் திறமைசாலிகளின் எண்ணிக்கை இப்போது குறைந்து விட்டது. இதனால் துப்பாக்கியால் சுடுவது என்கிற முறையிலும் ஆங்காங்கே மரண தண்டனையை நிறைவேற்றத் தொடங்கி இருக்கிறார்கள்.

மந்திர தந்திரங்ளுக்கெல்லாம் சவுதி அரேபியாவில் வாய்ப்பே இல்லை. அப்படி யாராவது ஈடு பட்டால் அவர்களுக்கு (உங்கள் யூகம் சரிதான்) மரண தண்டனை தான். அவர்கள் எந்த அளவிற்கு மந்திர தந்திரங்களை வெறுப்பவர் கள் என்பதற்கு சரியான உதாரணம் ஹாரி பாட்டர் நாவல்களுக்கு அந்த நாட்டில் விதிக்கப்பட்ட தடை.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/சமத்துவம்-மறுக்கும்-சவுதி-அரேபியா-8/article6944281.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 9

 
 
saudi_2329268f.jpg
 

சவுதி அரேபியாவின் வித்தியாசமான நீதிச் செயல்பாட்டிற்கு இன்னொரு அடையாளம் திய்யா. இதற்கு அர்த்தம் ‘ரத்தப்பணம்’ என்பதுதான். யாரையாவது கொன்று விட்டால் இறந்தவரின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை அபராதமாகக் கட்டிவிட்டு தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். நீதிமன்றம் அறிவிக்கும் தொகை கொஞ்சம் அதிகம்.

100 ஒட்டகங்கள் என்பதாகக்கூட இருக்கலாம். பணமாகவும் இருக்கலாம். இப்போது இந்தத் தொகை ஒரு லட்சம் டாலரைத் தாண்டுகிறதாம். இப்போதெல்லாம் ‘திய்யா இன்சூரன்ஸ்’ என்பது அறிமுகமாகிவிட்டது. இந்த திட்டதில் தவணையை கட்டிக்கொண்டு வந்தால், வரும் காலத்தில் நீங்கள் பிறரின் இறப்புக்குக் காரணமானால் அதற்கான திய்யா அபராதத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனமே கட்டிவிடும்!

முஸ்லிம்களுக்கு மட்டும்தான் மெக்காவில் அனுமதி என்பதால் மாறுவேடத்தில் அங்கு சென்றார் உலகின் பல பகுதிகளுக்குச்சென்று வர விருப்பம் கொண்ட இத்தாலியரான லுடோவிகோ என்பவர்.

முஸ்லிம் பயணிகளுக்குப் பாதுகாவலராகச் செல்லும் இஸ்லாமியர் வேடம் தரித்தார். மெக்காவை விட்டு பத்திரமாகவே வெளியேறியிருப்பார். ஆனால் வழிப்போக்கர் ஒருவர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலாக அமைய வேண்டிய அராபிக் வார்த்தைகள் அப்போது அவருக்கு மறந்து தொலைக்க, அவர் கிறிஸ்தவர் என்ற உண்மை வெளிப்பட்டது. சிறைப்படுத்தப்பட்டார். பின்னர் சுல்தானின் துணைவி ஒருவரின் உதவியோடு தப்பித்தார்.

பல நூற்றாண்டுகளாகவே, பெண்கள் வேலைக்குச் செல்வது சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றுதான். ஆனால் விதிவிலக்குகள் உண்டு. மகளிர் கல்விக் கூடங்களில் பெண்கள் ஆசிரியர் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ராணு வத்தில் சேருவது பற்றிப் பெண்கள் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.

கல்வியைப் பொறுத்தவரை சவுதியில் பெண்களுக்குத் தடையில்லை. பெண்களுக்கான சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. ‘மன்னர் அப்துல்லாவின் கல்வி உதவித் தொகை திட்டத்தின்’ மூலம் பயனடையும் பெண்கள் அதிகமாகி வருகின்றனர்.

பெண்களுக்கான முழுதும் உடலை மூடிய உடை என்பது முஸ்லிம் பெண்களுக்குத்தான் என்கிறது சவுதி அரேபியாவின் சட்டம்.

என்றாலும் 2001-ல் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய சில பெண்கள் சவுதி அரேபியாவிற்கு பயிற்சி மற்றும் பாதுகாப்பு கோணத்தில் அனுப்பப்பட்டபோது ஒரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பு கிளம்பியது.

“வம்பே வேண்டாம். நீங்கள் எல்லோருமே தலை முதல் கால் வரை மறைக்கும் உடைகளையே அணிந்து கொள்ளுங்கள்” என்றார் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரான டொனால்டு ரம்ஸ்ஃபெல்டு.

மார்த்தா மெக் ஸாலி என்ற அமெரிக்கப் பெண்மணி அந்த நாட்டின் விமானப்படையின் உயர் அதிகாரி. போர் விமானங்களை திறமையுடன் ஓட்டக்கூடியவர். இவர் டொனால்டு ரம்ஸ்ஃபெல்டு மீது வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க செனட்டில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சவுதி அரேபியாவுக்குச் செல்லும் பெண்கள் தலையைச் சுற்றி உடை அணியவேண்டாம் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. ஆனால் அந்த வழக்கில் வேறொரு பகுதியும் இருந்தது. உரிய ஓட்டுனர் உரிமம் இருந்தும்கூட சவுதி அரேபியாவில் தான் பணியின் காரணமாகக்கூட காரோட்ட முடியாமல் போனது என்றார்.

அவர் எங்கு சென்றாலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் ஓர் ஆண் அதிகாரிதான் அவருக்கு கார் ஒட்டும்படி நேர்ந்தது. இது பற்றி அமெரிக்க நீதிபதி எந்தத் தீர்ப்பையும் வழங்கியதாகத் தெரியவில்லை.

கொலை செய்தால்கூட குறிப்பிட்ட பணத்தைக் கொடுத்து விட்டு தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்றும், இந்தத் தொகையை ‘திய்யா’ என்று குறிப்பிடுவார்கள் என்றும் கூறியிருந்தோம்.

சவுதி அரேபியாவில் மகளிர் நிலைமை குறித்த இந்தப் பகுதியில் இதை மீண்டும் குறிப்பிட ஒரு தனிக் காரணம் உண்டு. இறந்தது ஒரு பெண் என்றால் பாதி திய்யா கொடுத்தால் போதுமாம்! அது மட்டுமல்ல இறந்தது முஸ்லிம் அல்லாத ஒருவர் என்றால் (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்) அவர் இறப்புக்குக் காரணமாக இருந்தவர் குறைவான திய்யா செலுத்தினால் போதும்.

சென்ற ஆண்டில் மன்னர் அப்துல்லா மகளிருக்கும் வாக்குரிமை வழங்கினார். உலகின் மிகப் பல நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியபிறகு ஒருவழியாக இதை அளித்தது சவுதி அரேபியா. அது கூட முனிசிபல் தேர்தலில் மட்டும்தான் இப்போதைக்கு வாக்களிக்கும் உரிமை.

முனிசிபல் தேர்தலில் பெண்கள் வேட்பாளர்களாக நிற்க முடியுமா? முடியும். ஆனால் அவர்கள் வீட்டின் வெகு அருகில்தான் அவர்களது அலுவலகம் இருக்க வேண்டும். வாக்களிக்கும் உரிமை சென்ற வருடம் அளிக்கப் பட்டாலும் அது இந்த வருடம் நடைபெறவிருக்கும் தேர்தலில்தான் அமல் படுத்தப் படப்போகிறது.

2009-ல் மன்னர் அப்துல்லா வேறு ஒரு வியக்கத்தக்க அதிர்ச்சிக்குக் காரணமானார். மகளிர் கல்வித்துறையில் துணை அமைச்சராக நூர் அல் பயஸ் எனும் பெண்மணி ஒருவரை நியமித்தார். இவர்தான் சவுதி அரேபிய அரசில் பங்கேற்ற முதல் பெண்மணி.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/சமத்துவம்-மறுக்கும்-சவுதி-அரேபியா-9/article6954732.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 10

 
 
சவுதியில் பெண்கள் கார் ஓட்ட உரிமை கோரும் போராட்டம்.
சவுதியில் பெண்கள் கார் ஓட்ட உரிமை கோரும் போராட்டம்.

சவுதி அரேபியாவின் பள்ளிகளில் மாணவிகளுக்கு விளையாட்டு வகுப்புகள் கிடையாது என்ற நிலைதான் காலகாலமாக இருந்து வந்தது. அதில் சமீபத்தில் ஒரு மாற்றம். பள்ளி மாணவிகளுக்கும் இனி விளையாட்டு வகுப்புகள் உண்டு என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அரசின் இந்த ஆணைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டனர் மதத் தீவிரவாதிகள்.

இத்தகைய எதிர்ப்புகளையும் மீறி பெண்களின் நிலைமை சவுதி அரேபியாவில் கொஞ்சூண்டு முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஒலிம்பிக்ஸில் சவுதி அரேபியாவின் சார்பில் முதல் முறையாக இரண்டு பெண்கள் பங்கேற்றனர். மகளிர் விளையாட்டு கிளப்களுக்கு லைசென்ஸ் வழங் கப்படுகிறது.

முதன் முறையாக செய்தித்தாள் ஒன்றுக்கு பெண் ஒருவர் ஆசிரியராக நியமிக் கப்பட்டிருக்கிறார். டாக்ஸியில் தனியாகச் செல்லலாம் என்கிற அளவுக்கு நிலைமையில் முன் னேற்றம்.

ஆனால் பெண்கள்மீது கிரிமினல் குற்றங்கள் சுமத்தத் தடையில்லை. உறவினர் அல்லாத ஆணுடன் பொது இடங்களில் பேசுவதுகூட தவறு. பெண்களுக் கென்று தனி வங்கிகள்.

ஆக பிணைக்கும் சங்கிலிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அறுந்து விடவில்லை. பணி காரணமாகவோ, மருத்துவச் சிகிச்சைக்காகவோ வேறு நாடு களுக்கோ, அதே நாட்டின் வேறு பகுதிகளுக்கோ போக வேண்டு மென்றால் சவுதி அரேபிய பெண் கள் தங்கள் கணவர் அல்லது அப்பாவின் எழுத்துபூர்வ அனுமதியைப் பெற வேண்டும். அதாவது அந்த நாட்டின் பாதி மக்கள் தொகையான பெண்கள் மைனர்கள் போலவே நடத்தப் படுகிறார்கள்.

இரு மாதங்களுக்கு முன் ஒரு பெண்மணிக்கு 150 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டது. காரணம் அவர் காரோட்டியதுதான்.

பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக் குக்கூட நீதி கிடைப்பது அபூர்வம். பாலியல் வல்லுறவுக்கு மரண தண்டனை என்கிறது சட்டம். ஆனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண் நான்கு முஸ்லிம் ஆண்களை இதற்கு சாட்சியாக நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்த வேண்டும்.

அப்படி இல்லையென்றால் அவள் வீண்பழி சுமத்தியதாகக் கூறி அதற்கான தண்டனை உண்டு. பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட கொடுமை போதா தென்று இந்த தண்டனை வேறா? எனவே சவுதி அரேபியாவில் பாலியல் வல்லுறவு வழக்குகள் மிக அரிதா கவே பதிவு செய்யப்படுகின்றன.

சவுதி கஜெட் என்ற இதழில் வெளியான செய்தி இது. 23 வயதான திருமணமாகாத பெண் ஒருவர், காரில் சென்ற ஒருவர் லிப்ஃட் கொடுப்பதாகக் கூற, அதில் ஏறிவிட்டார். ஜெட்டா நகரின் கிழக்கில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றது அந்தக் கார். அங்கு அந்தக் கார் ஓட்டுனரும், காத்திருந்த அவனது மூன்று நண்பர்களும் அன்று இரவு முழுவதும் பலாத்காரம் செய் தனர்.

பின்னர் அவள் கர்ப்பம் அடைந்தாள். கருச்சிதைவுக்கு முயற்சித்தாள். முடியவில்லை. எனவே மன்னர் ஃபக்த் மருத்துவ மனையில் கருச்சிதைவுக்கு விண்ணப்பித்தாள். அப்போது அவள் வயிற்றில் எட்டு வாரக் கரு உருவாகியிருந்தது. அவள் முறையற்ற உறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

மாவட்ட நீதிமன்றத்தில் அவள் குற்றவாளியாக கருதப்பட்டு, ஒரு வருட சிறையும், நூறு சவுக்கடி களும் தண்டனையாக அளிக்கப் பட்டன. குழந்தை பிறந்தவுடன் இந்த சவுக்கடிகள் அளிக்கப்படும் என்று கருணை காட்டியது நீதிமன்றம்!

இன்றளவும் குடும்பம் என்பது தான் மற்ற எந்த சமூக அமைப்பு களை விட சவுதி அரேபியாவில் முன்னணி வகிக்கிறது. ஒரே கூரை யின் கீழ் சகோதரர்கள் அவரவர் குடும்பங்களுடன் வசிப்பது என்பது அங்கு மிக இயல்பான ஒன்று. குடும்ப விஷயங்கள் வெளியே கசியக்கூடாது என்பதில் மிகுந்த கட்டுப்பாடு கொண்டவர்

கள். முக்கியமாக குடும்பத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான கோடு மிக அழுத்த மானது. வீட்டில் ஆண்கள் தனி யாகச் சாப்பிடவேண்டும். அவர் களுக்குப் பிறகே பெண்கள் (சிறுமி கள் உட்பட) சாப்பிடவேண்டும்.

பொது நிகழ்ச்சிகளிலும் கொண்டாட்டங்களிலும் கூட குடும் பத்தோடு சாப்பிடமாட்டார்கள். ஆண்களுக்குத் தனிப் பகுதி, பெண்களுக்குத் தனிப் பகுதி. முதலில் ஆண்கள் பகுதிக்குத்தான் உணவு பரிமாறப்படும். பிறகுதான் பெண்கள் பகுதிக்கு.

இளம் பெண்களும், இளம் ஆண்களும் உரையாடுவதற்கே ஆயிரம் சிக்கல்கள் எனும் சூழலில் இணையதளம், செல்போன் போன்ற வசதிகளை சாமர்த்திய மாக பயன்படுத்தத் தொடங்கியிருக் கிறார்கள் இளைய தலைமுறை யினர்.

அதே சமயம் பழமையில் ஊறிய நாடு என்பதற்காக சவுதி அரேபியா எல்லாவற்றிலுமே கற்காலத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்ளக் கூடாது. கல்வி அறிவு பெற்றவர்கள் இங்கு 80 சதவீதம் பேர். அந்த நாட்டில் ஆங்கிலம் பரவலாகப் பேசப்படுகிறது. பெரிய கடைகளில் அராபிக், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலுமே அறிவிப்புகளைப் பார்க்கலாம்.

பள்ளிகளில் ஆங்கிலமும் பயிற்றுவிக்கப்படுகிறது. சவுதி அரேபிய கல்விக் கூடங்களில் முதல் மொழி என்ன என்றால் அராபிக் என்று சொல்லிவிடுவீர்கள். 2-வது மொழி என்ன? ஆங்கிலம். அதுவும் அமெரிக்க ஆங்கிலம்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/சமத்துவம்-மறுக்கும்-சவுதி-அரேபியா-10/article6958272.ece?ref=relatedNews
  • தொடங்கியவர்

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா - 11

 
 
சவுதி அரேபியாவில் திருடப்பட்டு தாய்லாந்தில் மீட்கப்பட்ட நகைகளின் ஒரு பகுதி - அடுத்த படம்: சமீபத்தில் உயிரிழந்த சவுதி மன்னர் அப்துல்லா
சவுதி அரேபியாவில் திருடப்பட்டு தாய்லாந்தில் மீட்கப்பட்ட நகைகளின் ஒரு பகுதி - அடுத்த படம்: சமீபத்தில் உயிரிழந்த சவுதி மன்னர் அப்துல்லா

சவுதி அரேபியாவின் கொடியை யார் வேண்டுமானாலும் வரைந்துவிட முடியாது. அதன் கீழ்ப் பகுதியில் உள்ள வாளை வேண்டுமானால் வரையலாம். அதற்கு மேலே இருக்கும் அராபிக் எழுத்துகளை அந்த மொழியை அறிந்தவர்கள்தான் சரியாக எழுத முடியும். வலமிருந்து இடமாகப் படித்தால் அவை கூறுவது “இறைவனைத் தவிர இறைவன் வேறொருவர் இல்லை. முகம்மதுதான் இறைத் தூதர்” என்பதுதான்.

இவ்வளவு மத முக்கியத்துவம் கொடியிலேயே இருப்பதால், துக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுவதில் தயக்கம் நீடிக்கிறது. மன்னர் ஃபத் 2005-ல் இறந்தபோது, பிற அரபு நாடுகளின் தலைநகரங்களில் கூட அந்தந்த தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன. ஆனால் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அப்படி செய்யப்படவில்லை.

“எங்கள் அன்பு மன்னர் நெடுங்காலம் வாழட்டும்” இதுதான் சவுதி அரேபியாவின் தேசிய கீதம். முஸ்லிம்களுக்கு மட்டுமே சவுதி அரேபியாவில் குடியுரிமை என்றாலும் பல்வேறு பணிகளில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

எது போன்றவர்களுக்கு அங்கு வரவேற்பு அதிகம்? சந்தேகமில்லாமல் அரச குடும்பத்தின் அழைப்பை ஏற்று வருபவர்களுக்குத்தான். பெட்ரோலிய வளம் நிறைந்த அரபு நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அடுத்த கட்ட வரவேற்பு. அதாவது குவைத், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு. மேலை நாடுகளிலிருந்து வருபவர்கள் அடுத்த பிரிவில் இடம் பெறுகிறார்கள். அதற்கும் அடுத்த இடம்தான் பெட்ரோலிய வளம் இல்லாத அரபு நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு. அதாவது எகிப்து, ஜோர்டான், சிரியா ஏமென், பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்கள். மற்றவர்கள் பிறகுதான்.

என்றாலும் எந்த வகையான வேலைக்கு வருகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த வரிசை கொஞ்சம் முன்பின்னாக அமையும். ஒரு நகைத் திருட்டு என்பது சவுதி அரேபியா மற்றும் வேறொரு நாட்டுக்கிடையே பெரும் பகைமையை உண்டாக்கி இருக்கிறது என்பது தெரியுமா?

சவுதி அரேபியாவில் உள்ளது ஃபைஸல் அபுலாஸிஸ் என்ற இளவரசரின் அரண்மனையில் வேலை செய்து கொண்டிருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர், அந்த அரண்மனையிலுள்ள நகைகளைத் திருடிக் கொண்டு தன் தாய் நாட்டிற்குப் பறந்து விட்டார். களவு போனது தொண்ணூறு கிலோ எடையுள்ள நகைகளாம்! வைர நகைகள்.

குற்றவாளியை தாய்லாந்து அரசு கைது செய்தது. நகைகளை இளவரசருக்கு அனுப்பியது. ஆனால் திருடப்பட்ட நகைகளில் பாதிகூட திரும்ப வரவில்லையென்றும், வந்தவற்றில் பாதி போலி நகைகள் என்றும் சவுதி அரேபியா குற்றம் சாட்டியது. அது மட்டுமல்ல, தாய்லாந்தின் சக்தி வாய்ந்த சில புள்ளிகள் மற்றும் சீனியர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம்தான் பாக்கி நகைகள் சிக்கிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது.

பின்வந்த நாட்களில், தாய்லாந்து மக்களுக்கு விசா கொடுப்பதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டது சவுதி அரேபியா. ஐந்து வருடங்களுக்கு முன் சவுதியில் வேலை செய்த தாய்லாந்துக்காரர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை லட்சம். இன்றோ வெறும் பத்தாயிரம் பேர்தான்.

தாய்லாந்தில் வசிக்கும் சவுதி அரேபியர்களோ பாதுகாப்பில்லாததாக உணர்கிறார்கள். தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் சவுதியைச் சேர்ந்த நான்கு தூதர்களும், சில வணிகப் பெருந்தலைகளும் கொலை செய்யப்பட்டனர். இதுவரை இந்தக் குற்றங்களுக்காக யார் மீதும் இன்று வரை வழக்குப் பதிவு செய்யவில்லை தாய்லாந்து அரசு.

90 வயதான மன்னர் அப்துல்லா சமீபத்தில் இறந்தபோது அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி பெரிதாக எழுந்தது. இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம். 1953-ல் மன்னர் அப்துல் அஜீஸ் அல் சவுத் இறந்தவுடன், ஃபைசல் என்பவர் மன்னரானார். ராஜ குடும்பம், மத குருதமார்கள் ஆகிய இரு தரப்பினரும் முழு ஆதரவும் இவருக்குக் கிடைத்தது. தானே பிரதம மந்திரியும் ஆனார். அன்றிலிருந்து இன்று வரை சவுதி அரேபியாவின் மன்னரும் பிரதம மந்திரியும் ஒருவர்தான்.

அப்பா, அவருக்குப் பிறகு பிள்ளை என்று அரசுப் பட்டம் சென்று விடாது. அதற்காக எந்தக் குழுவும் சேர்ந்து அடுத்த அரசரைத் தேர்ந்தெடுக்காது. பிறகு?

அண்ணாவிலிருந்து தம்பிக்கு என்பதுபோலத்தான் அரசாட்சி மாறி வரும். அப்தெல் அஜீஸ் பின் சவுத் என்பவரின் மகன்தான் சமீபத்தில் மறைந்த மன்னர் அப்துல்லா. ஆனால் அப்துல்லாவுக்கு வேறு 44 சகோதரர்கள் இருக்கிறார்கள்.

இந்த இடத்தில் திய்யா பற்றி ஒரு சிறு விளக்கம். குருதிப் பணம் என அழைப்படும் இந்த முறையில், பாதிக்கப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே அதனை செயல்படுத்த முடியும்.

அதாவது ஒருவர் கொலைக்கு காரணமாக இருந்தால், கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் அவரை மன்னிக்கும் பட்சத்தில்தான் தண்டனை ரத்தாகும். மரணத்துக்கு காரணமானவர் அளிக்கும் நஷ்ட ஈட்டை (அபராதத்தை) ஏற்பதும், ஏற்காததும் அக்குடும்பத்தின் விருப்பம். இந்த விஷயத்தில் சவுதி மன்னரோ அல்லது நீதிமன்றமோ கூட இறுதி முடிவெடுக்க முடியாது.

இறந்தவரின் குடும்பம் மன்னிக்காத பட்சத்தில் குற்றவாளிக்கு அரசாங்கம் மரண தண்டனை விதிக்கும். திய்யா என்பது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் நலனை மட்டும் முன்னிட்டு வகுக்கப்பட்ட தீர்வு ஆகும்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/சமத்துவம்-மறுக்கும்-சவுதி-அரேபியா-11/article6959937.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 12

சவுதி அரேபியாவில் பிரபலமாகியுள்ள விபரீத விளையாட்டு.
சவுதி அரேபியாவில் பிரபலமாகியுள்ள விபரீத விளையாட்டு.

சவுதியில் செல்வம் மட்டுமல்ல, மக்கள் செல்வமும் அதிகமாகவே அதிகமாகிக் கொண்டிருக்கிறது. வருடத்துக்கு 2 சதவீதம். உலக நாடுகளின் சராசரிப்படி இது மிக அதிகம். 1980-லிருந்து அடுத்த 25 ஆண்டுகளில் மக்கள் தொகை மும்மடங்கு பெருகி இருக்கிறது.

சவுதி அரேபியாவின் விளை யாட்டுத் துறையிலும் சுவாரசியங் கள் உண்டு. சவுதி அரேபியாவின் தேசிய விளையாட்டு கால்பந்து. தேசிய கூடைப் பந்து அணியும் உண்டு. 1999 ஆசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுகளில் வெண்கலப்பதக்கம் பெற்றது கூடைப்பந்து அணி.

2012 ஒலிம்பிக்ஸில் சவுதி அரேபியாவிலிருந்து தடகளப் போட்டிகளில் சில பெண்களும் பங்கேற்றனர். ஆனால் இதற்கு பின்னணி வேறு. ஒலிம்பிக் குழுவில் சவுதி அரேபியா குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. ‘’சவுதி அரேபியா வில் பெண்களுக்கு அளிக்கப்படும் மோசமான நிலையை நீக்க நம்மால் ஆனதைச் செய்ய வேண்டாமா?

ஆண் - பெண் பாகுபாடு காட்டுகிறது என்ற காரணத்தைக் காட்டி சவுதி அரேபியாவின் ஆடவர் பிரிவுகளுக்கும் தடை போட்டால் என்ன?‘. இந்த விவாதத்தின் முடிவு குறித்து கவலைப்பட்ட சவுதி அரேபியா மகளிர் பிரிவு என்ற ஒன்றையும் அனுப்பத் தீர்மானித்தது.

சவுதி அரேபியாவின் தேசிய விலங்கு பாலைவனக் கப்பலான ஓட்டகம். விலை உயர்ந்த காரை வைத்திருப்பவர்களை விட சொந்த மாக ஒட்டங்களை வளர்ப்பவர் களைத்தான் சவுதி அரேபியாவில் பெரும் பணக்காரர்களாக ஏற்றுக் கொள்வார்கள்.

ரியாத் நகரில் நடக்கும் ஒட்டகச்சந்தை மிகவும் பிரபலம். சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் நூறு ஒட்டகங்கள் விற்பனையாகும். போக்குவரத்து, உணவு ஆகியவை தவிர, வேறொரு விஷயத்திற்கும் ஒட்டகம் பயன்படுகிறது. சவுதி அரேபியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஒட்டகப் பந்தயம் மிகவும் பிரபலம். 19 கிலோமீட்டர் நீளம் கொண்டது அந்தப் பந்தயத் தளம். சுமார் இரண்டாயிரம் ஒட்டகங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றன.

மற்றொரு விபரீத விளை யாட்டும் சவுதி அரேபியாவில் வெகுவாக பிரபலமாகிக் கொண்டு வருகிறது. அது Sidewalk skiing. அதாவது, காரின் ஒரு பக்கத்திலுள்ள இரண்டு சக்கரங்கள் மேலெழும்பி இருக்க மீதி இரண்டு சக்கரங்கள் மட்டும் பூமியில் சுற்றும் நிலையில் காரை ஓட்டுவது.

இது போதாதென்று அந்த நிலையில் ஒருவர் காரை ஓட்ட, மற்றவர் அந்தக் காரிலிருந்து வெளியேறி, சாய்ந்த நிலையில் இருக்கும் மேற்புறத்தில் உட்கார்ந்து கொண்டும், நின்றபடி பேலன்ஸ் செய்து கொண்டும் வித்தை காண்பிப்பார்.

இதில் இன்னொரு வித்தையும் அறிமுகமாகி இருக்கிறது. கார் மேலே குறிப்பிட்டபடி ஓடிக்கொண்டிருக்கும் அதே நிலையில் தரையைத் தொடாமல் இருக்கும் இரண்டு சக்கரங்களையும் சாகசக்காரர் மாற்றிப் பொருத்த வேண்டும்.

உலகின் மொத்த பெட்ரோலிய வளத்தில் 18 சதவிகிதத்தை தன்னிடம் கொண்டிருக்கிறது சவுதி அரேபியா. அந்த நாட்டின் பொருளாதாரமே பெட்ரோலியத் தைக் கொண்டுதான் தீர்மானம் செய்யப்படுகிறது என்றால் அது மிகையல்ல.

அதன் மொத்த தேசிய வளத்தில் 50 சதவிகிதம் பெட்ரோலும், எரிவாயுவும்தான்.

உலகின் மிக அதிகமான பெட்ரோலிய வளம் கொண்ட நாடு என்ற பெருமையை மிக நீண்ட வருடங்களுக்குக் கொண்டிருந்தது சவுதி அரேபியாதான். ஏற்றுமதி மூலம் சவுதி அரேபியாவுக்கு வந்து சேரும் நிதியில் 85 சதவிகிதம் பெட்ரோலியத்தின் மூலமாகத்தான். இரும்புத் தாது, தாமிரம், தங்கம் போன்ற வையும் சவுதி அரேபியாபிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மார்ச், 1938-ல்தான் சவுதி அரேபியாவின் முதல் பெட்ரோலியக் கிணறு கண்டெடுக்கப்பட்டது. தம்மம் என்ற பகுதியில் 1440 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது இந்தப் பெட்ரோலியக் கிணறு.

ஒரு காலத்தில் சில உலகளாவிய நிறுவனங்கள்தான் உலகின் பெட்ரோல் சந்தையை தீர்மானித்துக் கொண்டிருந்தன. இவற்றை ‘ஏழு சகோதரிகள்’ என்று என்ரிகோ மட்டே என்ற ஒரு தொழிலதிபர் குறிப்பிட, அதற்குப் பிறகு அந்த விவரிப்பைப் பலரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

உலகின் மொத்த பெட்ரோலிய வளங்களில் 85 சதவிகிதத்தை தங்களிடம் கொண்டிருந்த இந்த ஏழு நிறுவனங்களும்தான் அப்போது பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தீர்மானித்தன. ஆனால் இந்த ஆதிக்கம் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

1960-ல் உருவானது ஒபெக் என்ற அமைப்பு. அதாவது பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு. இதன் உறுப்பினர்களான நிறுவனங்கள் தங்களுக்குள் பல விஷயங்களில் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டன. எந்த ஒரு நிறுவனமும் தன்னிச்சையாக பெட்ரோலிய விலையை குறைக்கக் கூடாது என்பது அவற்றில் முக்கியமான ஒன்று.

இன்று இந்த அமைப்பின் அசைக்க முடியாத உறுப்பினராக விளங்குகிறது சவுதி அரேபியா.

http://www.yarl.com/forum3/topic/161658-சமத்துவம்-மறுக்கும்-சவுதி-அரேபியா/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.