Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனைவி பிள்ளைகள் சுகபோகம்: வறுமை பெண்கள் பிரசார பணியில்: செல்வம் காட்டம்

Featured Replies

தமிழர்களின் வறுமையை பயன்படுத்தி வன்னியில் உள்ள அமைச்சர் ஒருவர் எங்கள் சகோதரிகளை பிரசாரத்துக்கு பயன்படுத்தும் கேவலமான நிலை உருவாகியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்க தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.D0df0d3f0df.jpg

வவுனியாவில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இங்குள்ள அமைச்சரொருவர் மனைவி பிள்ளைகள் உறவுப்பெண்கள் சுகபோகம் அனுபவிக்க எங்கள் தமிழ் பெண் பிள்ளைகள் கடும் வெயிலிலும் பிரசாரத்துக்காக பயன்படுத்தி வருகின்றார்.

அவர்களின் வறுமையை பயன்படுத்தி தையல் மெசின், தொண்டர் ஆசிரியர் நியமனம், அரச தொழில்வாய்பபு என்று ஆசை வார்த்தைகளை காட்டி தனது வெற்றிக்காக பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றமை வேதனைக்குரியது.

ஒரு இனத்தின் வறுமையை இன்னொரு இனத்தவாகள் சாதகமாக பயன்படுத்துவது வன்னி தோதல் தொகுதியில் மிக மோசமாக இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் எங்கள் சமூகத்தை சேர்ந்த படித்த பல பட்டதாரிகளை இதுவரை வேலையில்லாமல் வைத்திருந்து தேர்தலில் பின்னர் வேலைவாய்ப்பு தருவதாக தெரிவித்து தேர்தலுக்காக பயன்படுத்துகின்றனர். அவர்களில் பெண் பிள்ளைகளும் சென்று வருவது கவலைக்குரிய விடயமாகும். 

எங்கள் மக்கள் இதில் தெளிவாக இருக்க வேண்டும். இவாகள் தரும் தையல் மெசினும் சைக்கிளும் எங்கள் மக்கள் இடம்பெயர்ந்து மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தபோது உழைத்த பணத்தில் வருகின்றது.

எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் விட்டு வந்த இரும்பை ஏற்றிச்சென்று பெ;ற பணத்தில் வருகின்றது. எனவே எங்கள் மக்கள் தருவதெல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் எமது சகோதரர்களும் சகோதரிகளும் மண்ணுக்காகவும் எங்கள் உரிமையை பெற்றிடவும் மாவீரர்கள் ஆகியதை இறுதி வரை மறந்திடாமல் எங்கள் உரிமையை பெற்று அவர்களுக்கு சமர்ப்பிப்பதற்காக எமக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/articles/2015/08/13/மனைவி-பிள்ளைகள்-சுகபோகம்-வறுமை-பெண்கள்-பிரசார-பணியில்-செல்வம்-காட்டம்

 

  • கருத்துக்கள உறவுகள்

பதியுதீன் வேலை மட்டுமில்லை, பிள்ளையும் கொடுத்து மதமும் மாற்றுவான்.

நாமதான் மோட்டுத்தமிழனாச்சே. 

ஒரு நாடு, இரு வேசம், திம்பு தும்பு என்று அலைவோம். ஒரு அமைச்சுப் பதவி எடுத்து இனத்தின் இருப்பை நிலைநாட்டினால் துரோகிப் பட்டம் கொடுப்போம்.

தமிழனுக்கு எல்லாம் எதுக்கு பொம்பிளை பிள்ளயள்? எல்லாரையும் பதியுதீனிடம் அனுப்பி விட்டு சைக்கிளுக்கு காத்தடிக்கப் போகட்டும்.

செல்வம் அய்யாவிடம் தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வழி இல்லை, வறுமையை நீக்க வழி இல்லை, மாவீரருக்காக வாக்கு போடட்டாம், தெரியாமல் தான் கேட்கிறான் மாவீரர்கள் வந்து சோறும் மருந்தும் வாங்கிக் கொடுபீனமா?  ஆனால் ரிசாதுக்கு ஆதரவாக பிரச்சாரம் பண்ணினால் பணம் வேலைவாய்ப்பு கிடைக்கும், மதம் மாறினால் வாழ்வாதாரம் கிடைக்கும், ஆனால் உங்களுக்கு வாக்கள்த்தால் என்ன கிடைக்கும் ?? 2020 ம் ஆண்டில் மீண்டும் வந்து வாக்கு கேட்பியள் , ஆனால் 2020ல் வன்னிப் பக்கம் வாக்குகேட்க்க கூட போக முடியாது என் என்றால் அங்கு அதாவது கூட்டணியின் இஸ்லாம் மதம் பின்பற்றுன் தமிழர்கள் தான் இருப்பார்கள்,அதே போல் பெண் பிள்ளைகளை பற்றி கவலைப்பட தேவை இல்லை அவர்கள் எல்லாம் நிக்கப் அணிந்து வீட்டுக்குள் நுடங்கி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதியுதீன் வேலை மட்டுமில்லை, பிள்ளையும் கொடுத்து மதமும் மாற்றுவான்.

நாமதான் மோட்டுத்தமிழனாச்சே. 

ஒரு நாடு, இரு வேசம், திம்பு தும்பு என்று அலைவோம். ஒரு அமைச்சுப் பதவி எடுத்து இனத்தின் இருப்பை நிலைநாட்டினால் துரோகிப் பட்டம் கொடுப்போம்.

தமிழனுக்கு எல்லாம் எதுக்கு பொம்பிளை பிள்ளயள்? எல்லாரையும் பதியுதீனிடம் அனுப்பி விட்டு சைக்கிளுக்கு காத்தடிக்கப் போகட்டும்.

2009 பின் உங்களின் கொள்கையை ஒற்றவர்கள் இது வரைக்கும் ஈழத்தமிழர் விடயத்தில் எதனை சாதித்தார்கள்?

அவங்களாலை பறிபோன நிலத்திலை அரைப்பரப்பை திருப்பியெடுத்திட்டம் எண்ட கதையெல்லாம் வேண்டாம்.

அவங்களை அழிச்சிட்டம் எண்டு சொல்லுற சிங்களவன் ஏன் இன்னும் அங்காலை அரக்கிறான் இல்லை????
இதுக்கை நாடு அந்தமாதிரி இருக்கு எண்டு கதை வேறை

இதுவரைக்கும் என்ன எங்களுக்கு செய்தனியள் என்று கேட்டால் மகிந்தவை இறக்கி மைத்ரி யை கொண்டு வந்தனாங்கள் என்று ஒன்றுதான் அது சரி  என்ன தமிழ் மக்களுக்கு செய்தனியள்? உடனே கோபம் பொத்துக்கொண்டு வந்துடும் பாருங்கோ  மக்களே சிந்திப்பீர் இதுதான் சம்  சும் வாலுகளின் திறமை. 

  • தொடங்கியவர்

விடிவுகாலம் நெருங்குகிறது: விஜிந்தன்

article_1439472031-viji.gif


உரிமை  போராட்ட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கு அங்கத்தவர்கள் எமது இலக்குக்கு எதிராக இருந்து தேசத்தை காட்டிக்கொடுத்தார்கள். இவர்களுடன் இணைந்து அரசியல் நடத்துவதற்கு விருப்பமில்லாத காரணத்தினாலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்  நான் இணைந்துக்கொண்டேன் என முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர் கே.விஜிந்தன் தெரிவித்தார்.

வவுனியா நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்  கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்து  தெரிவிக்கையில்,

தமிழ் பிரதிநிதித்துவத்தை அடையாளப்படுத்தும் முகமாக வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே ஒரு தமிழ் வேட்பாளர் நான். வன்னி மக்களுக்கான விடிவுகாலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.  

இந்தத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் வேட்பாளராக நான் போட்டியிடுவதை எல்லோரும் அறிவீர்கள்.  அதன் மூலம் வன்னி மக்களின் வருங்காலத்தை வசந்த காலமாக்க வேண்டும். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், வேட்பாளரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை மேற்கொண்டதுடன் பல தொழில்வாய்ப்புக்களையும் வழங்கினார்.இவரது வளர்ச்சியையும்,ஆதரவையும் பொறுத்துக்கொள்ளாத சிலர் திட்டமிட்டு இருமுறை தேர்தல் பிரசாரங்களின் மீது  தாக்குதல் நடத்துகின்றனர்.

எமது இலக்கு கற்ற சமூக சிந்தனை உள்ள சமூகம் உருவாக வேண்டும், எமது சமூகம் என்றும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றார்.

http://www.tamilmirror.lk/152019#sthash.lbAHyKRd.dpuf

 

பதியுதீன் வேலை மட்டுமில்லை, பிள்ளையும் கொடுத்து மதமும் மாற்றுவான்.

நாமதான் மோட்டுத்தமிழனாச்சே. 

ஒரு நாடு, இரு வேசம், திம்பு தும்பு என்று அலைவோம். ஒரு அமைச்சுப் பதவி எடுத்து இனத்தின் இருப்பை நிலைநாட்டினால் துரோகிப் பட்டம் கொடுப்போம்.

தமிழனுக்கு எல்லாம் எதுக்கு பொம்பிளை பிள்ளயள்? எல்லாரையும் பதியுதீனிடம் அனுப்பி விட்டு சைக்கிளுக்கு காத்தடிக்கப் போகட்டும்.

இதுவரைக்கும் என்ன எங்களுக்கு செய்தனியள் என்று கேட்டால் மகிந்தவை இறக்கி மைத்ரி யை கொண்டு வந்தனாங்கள் என்று ஒன்றுதான் அது சரி  என்ன தமிழ் மக்களுக்கு செய்தனியள்?  இதைத்தான் திரும்ப  திரும்ப கேட்க்கின்ரம் நீங்கள் அனைவரும் மற்றவரை குறை சொல்வதிலேயே குறியாய் இருக்கின்றியல் இல்லாவிடின் மேலும் கால அவகாசம் கேட்க்கபடுது நீங்கள் செய்யும் அரசியல் இதுவா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.