Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குறுக்கெழுத்து போட்டி.........

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி பாதி விடை பாதியில் கூறினால் மற்றையவர்களின் ஆர்வம் பாதிக்கப்படும்... விடை தேடுவதற்கான ஆர்வம் குறைந்துவிடும் உதாரணமாக... நான் இப்போட்டியை ஆரம்பிக்கும் போது எனக்குத்தெரியாது 5 பாவங்களும் எவை என... இல்லை பாதிவிடை கூறலாம் என்றால் பாதி மற்றையவர்கள் பிரசுரிப்பார்கள் என விட்டுவிடுவோம் இல்லையா??? அதற்குத்தான் கூறினேன்....

ஆனால் பட்டிமன்றம் ஆரம்பிக்கும் போது துயா மிக அழகாக விதிமுறைகள் வைத்துத்தான் ஆரம்பித்தார்... உதாரணமாக ஒரு அணியில் இருந்து இருவர் தொடர்ந்து கருத்துக்களை வைக்கக்கூடாது மற்றைய அணி பதில் கூறும் வரை காத்திருக்கவேண்டும் என...

நன்றி

  • Replies 647
  • Views 58.6k
  • Created
  • Last Reply

அப்ப முழுக்க தெரிந்தால் தான் பதில் எழுத முடியுமா?

ஒருவருக்கு பாதிவிடை அல்லது முக்கால்வாசி விடை மட்டும் தான் தெரியும்

என்றால் என்ன பண்ணுவது?

நல்ல கேள்வி.. அதை விட மற்றவர்கள் பதில் எழுத முயல்கிறார்கள் என்பதை எப்படி அறிவது.? யாருமே பதிலைத்தேடாவிட்டால்.? :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலாவும் வரட்டும் இறுதி முடிவை எடுக்கலாம். என்ன சொல்கிறீர்கள். :lol:

வரலாம் இல்லையா.? தனிமடல் பற்றி வேறு பிரச்சனைகள் வந்ததாய் நினைவு.. :idea:

யாழினி சொல்லுவது போல் தனி மடல்கள் வேண்டாம்... நானும் ஏற்றுக்கொள்ளுகிறேன்... அவை வேறுசில பிரச்சினைகனை கொண்டுவரலாம்...

வெண்ணிலா விதிமுறைகள் இனி வரும் போட்டிகளில் கூறுவது நல்லது... என நினைக்கிறேன்

இன்று நிறைய நேரம் இணையத்தில் செலவழித்துவிட்டேன்...

என்னுடைய கருத்துக்கள் யாருடைய மனதையாவது பாதித்து இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கள் ... வசி அண்ணா ... நீங்கள் பாதி விடை கூறும் போது நானும் பாதி விடை கண்டுவிடித்துவிட்டு மிகுதி தேடிக்கொண்டு வருவதற்குள் உங்கள் பாதிவிடையை பார்க்க உண்மையாகவே கோபம் தான் வந்தது அதனால் தான் நிறைய எழுதிவிட்டேன் மன்னிச்சுக்கொள்ளுங்கோ... அனைவருக்கும் என் இனிய மாலைப்பொழுது வணக்கங்கள் கூறிவிடைபெறுகிறேன்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

இதிலையும் பிரச்சனையா, பட்டிமன்றமத்தில் குறிப்பிட்ட தெரிவு செய்யப்பட்ட ஆக்கள் மட்டும் தான் பதில் அளிப்பார்கள் அங்கே இரண்டு பிரிவு மட்டுமே உண்டு. எனவே அவர்களுக்கு என்று பல விதிகளை இலகுவாக அமைக்க முடியும். ஆனால் யாரும் கலந்து கொள்ளக்கூடிய இப் போட்டிக்கு எப்படி விதிகளை அமைப்பது எனவே நீங்கள் தான் புரிந்து நடந்து கொள்ளவேண்டும். அல்லது பட்டிமன்றம் இடப்படு 24 மணி நேரத்துக்குள் முழுமையாக தெரிந்தவர்கள் விடையைக் கூறலாம். அப்படி கூறாதவிடத்து ஏனையோர் தங்கள் விடைகளை முன்வைக்கலாம். தனிமெயிலில் விடைகளை அனுப்பி அதனை பிரசுரிப்பது என்பது முடியாத விடயம். அதாவது அது வீண்பிரச்சனைகளை விளைவிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையாக விடையைத் தர வேண்டும் என்று கட்டாயமில்லை என நினைக்கிறேன். எவரும் பரிசு தரமாட்டார்கள் :cry:

மேலிருந்து கீழ்

10. மல்லன் (குழம்பியுள்ளது)

இடமிருந்து வலம்

6. குதிரை -??

'க' வில் தொடங்கும் பெயர் தெரியவில்லை. குதிரைக்கு மா, பரி, அசுவம் போன்ற ஒத்த சொற்கள் உள்ளன.

வெண்ணிலாதான் சரியா என்று கூறவேண்டும்.

kurukkezuththu113ih6wz.jpg

  • தொடங்கியவர்

வெண்ணிலா சோபனா சொல்வதும் சரிதான்.. :roll:

ஒருவர் விடைகளை சொன்னதும் மற்றவர்களுக்கு இதில் ஆர்வம்

போய்விடுகிறது.. இதற்கு ஏதாவது வழி பண்ணுங்கள். :idea:

இல்லை வசியண்ணா இது 11வது போட்டி இப்படியாகத்தான் கடந்த 10 போட்டிகளிலும் விடைகள் சொல்லப்பட்டு வருகிறது. இதில் என்னவென்றால் விடைகள் கூறுபவர்கள் சரியாக ஒரே தடவையில் சொல்லவில்லையே. சோ ஏன்னையோரும் முயன்று தத்தமது சரியான விடைகளை முன்வைக்கலாம். இதைவிட நான் வேறு என்ன உத்தியை கையாள்வது? :lol:

  • தொடங்கியவர்

ம் சில நேரங்களில் முழுதாக விடையை எழுதவேண்டும் என்று காத்திருந்தால் ஒருவருக்கும் விடை முழுதாக தெரியாமல் போனால் அதற்குரிய பதில் வராமலே போகலாம். இப்படி முடிந்தளவு விடைகளை தெரிந்தவர்கள் சொன்னால் அதை வைத்து மற்றவர்களும் முயற்சிக்கலாம். இப்படி பாதி விடை எழுதுவது மற்றவர்களின் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பது உண்மை தான். எதற்கும் இதுபற்றி இதனை ஆரம்பித்து வைத்த வெண்ணிலாவின் கருத்தையும் கேட்கலாம் அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம். கள உறவுகள் ஒற்றுமையாக களந்து ஒரு முடிவெடுத்தால். தேவையற்ற கருத்து மோதல்களை தவிர்க்கலாம். என்ன நினைக்கிறீங்கள்

:lol:

மற்றவர்களின் ஆர்வத்தை முழுதாக குறைக்காதே. ஏனெனில் இப்போ பதிலளித்த வசியண்ணா கிருபன் அண்ணா இருவரது பதில்களிலும் பிழைகள் இருக்கின்றனவே. எனவே மற்றவர்களுக்கு சிலவேளைகளில் அதற்கான சரியான பதில்கள் இருக்கலாம். எவரும் பதில்களை முன்வைக்கலாம். ஆர்வத்தை குறைப்பது என்று சொல்ல முடியாது. :wink:

  • தொடங்கியவர்

அனுமதியுடன் விடை கூறலாம் சரி. பாதிவிடை கூறக்கூடாது என்று விதிமுறை எதுவும் வைக்கவில்லை கடந்த போட்டிகளில். பாதிவிடை கூறியவர்களிற்கு. உற்சாகம் கொடுத்தார்கள் முழுமையாக தெரியாவிடின் போட்டியைப்போட்டவர்களே விடையை கொடுத்தார்கள். எதற்கும் கலந்து ஆலோசித்தால் ஒரு இறுதி முடிவு எடுக்கலாம். இப்படித்தான் செய்யவேண்டும் என்று கூறவில்லை. பங்குபற்றுபவர்கள் தான் அதற்குரிய சிறந்த வழியை சொல்லவேண்டும். உங்களது கருத்தை சொல்லுங்கள். வெண்ணிலா மற்றும் உறவுகள் கருத்துக்களையும் பார்த்து தேவைப்படின ஒரு விதியை விரும்பினால் வெண்ணிலா உருவாக்கலாம். :idea:

இதற்கென்று எதுவிதமான விதிமுறைகளை இக்களத்தில் குறுக்கெழுத்துப் போட்டிக்கென இதுவரையில் ஒதுக்கவில்லை. இனிமேலும் ஒதுக்கப்படுவதாக இல்லை. ஏனெனில் எல்லோரும் பங்குபற்றலாம். விடை தெரிந்தவர்கள் தெரிந்த விடைகளை எனினும் கூறலாம். வார இறுதியில் சரியான பதில்கள் பிரசுரிக்கப்படும். :P

  • தொடங்கியவர்

இப்படி பாதி விடை பாதியில் கூறினால் மற்றையவர்களின் ஆர்வம் பாதிக்கப்படும்... விடை தேடுவதற்கான ஆர்வம் குறைந்துவிடும் உதாரணமாக... நான் இப்போட்டியை ஆரம்பிக்கும் போது எனக்குத்தெரியாது 5 பாவங்களும் எவை என... இல்லை பாதிவிடை கூறலாம் என்றால் பாதி மற்றையவர்கள் பிரசுரிப்பார்கள் என விட்டுவிடுவோம் இல்லையா??? அதற்குத்தான் கூறினேன்....

ஆனால் பட்டிமன்றம் ஆரம்பிக்கும் போது துயா மிக அழகாக விதிமுறைகள் வைத்துத்தான் ஆரம்பித்தார்... உதாரணமாக ஒரு அணியில் இருந்து இருவர் தொடர்ந்து கருத்துக்களை வைக்கக்கூடாது மற்றைய அணி பதில் கூறும் வரை காத்திருக்கவேண்டும் என...

நன்றி

சோபனா அக்கா உங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. பட்டிமன்றம் என்பது இருவரால் அல்லது இரு குழுக்களால் எதிர் எதிர் கருத்துக்களை முன்வைக்கப்படுவதே. ஆனால் இக்குறுக்கெழுத்துப்போட்டி என்பது விடைகளை கூறுவதே. அது உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் கூறலாம் உதாரணத்திற்கு வசியண்ணா கிருபன் அண்ணா போன்றவர்களாலும் பதில்கள் கூறப்படலாம். ஆனால் பதில் சொன்னவர்கள் முழுமையாக சரியான பதில்களையும் சொல்லவில்லை. எனவே எல்லோரும் உங்களது விடைகளை முன்வைக்கலாம். :P

  • தொடங்கியவர்

நல்ல கேள்வி.. அதை விட மற்றவர்கள் பதில் எழுத முயல்கிறார்கள் என்பதை எப்படி அறிவது

முயற்சிப்பவர்கள் பதிலை முன்வைக்க வேண்டியதுதானே. :?:

  • தொடங்கியவர்

முழுமையாக விடையைத் தர வேண்டும் என்று கட்டாயமில்லை என நினைக்கிறேன். எவரும் பரிசு தரமாட்டார்கள் :cry:

மேலிருந்து கீழ்

10. மல்லன் (குழம்பியுள்ளது)

இடமிருந்து வலம்

6. குதிரை -??

'க' வில் தொடங்கும் பெயர் தெரியவில்லை. குதிரைக்கு மா, பரி, அசுவம் போன்ற ஒத்த சொற்கள் உள்ளன.

வெண்ணிலாதான் சரியா என்று கூறவேண்டும்.

நன்றி கிருபன் அண்ணா. இத்தனை வாதங்களுக்கு மத்தியிலும் அவ்வாதங்களை கருத்தில் கொள்ளாது பதில் அளித்தமைக்கு நன்றி கிருபன் அண்ணா. இருப்பினும் உங்கள் பதில்களில் சில தவறுகள் இருக்கின்றன. அதுமட்டுமன்றி கிருபன் அண்ணா

மேலிருந்து கீழ் 10. மல்லன் குழம்பவில்லை. :P

இது சாத்தியப்படுமா என்று பாருங்கள்!

வெண்ணிலா விடைகளை தனிமடலில் பெற்று விடையை இங்கு பிரசுரிக்காமல், இவரின் விடையில் எத்தனை சரி, எத்தனை பிழையென்று போட்டுவிடுங்கள்! அனைத்துக்கும் சரியாக விடை எழுதினவரின் விடையை மட்டும் முழுமையாக பிரசுரித்துவிடுங்கள்!

  • தொடங்கியவர்

இது சாத்தியப்படுமா என்று பாருங்கள்!

வெண்ணிலா விடைகளை தனிமடலில் பெற்று விடையை இங்கு பிரசுரிக்காமல், இவரின் விடையில் எத்தனை சரி, எத்தனை பிழையென்று போட்டுவிடுங்கள்! அனைத்துக்கும் சரியாக விடை எழுதினவரின் விடையை மட்டும் முழுமையாக பிரசுரித்துவிடுங்கள்!

கடந்த 10 போட்டிகளுக்கான விடைகள் எச்சந்தர்ப்பத்திலும் தனிமடல் மூலம் பெறப்படவில்லை. இனிமேலும் அப்படியான முறை கையாளப்பட மாட்டாது. ம் மன்னரே சரியாக கூறியவர்களின் பதில்கள் இங்கு போடுகிறேன். :P

  • தொடங்கியவர்

இடமிருந்து வலம்

1. முத்தமிழ்களில் ஒன்று நாடகம்

3. எரிபொருளொன்று விறகு

5. தவறு என்றும் பொருல்படும். வழு

6. குதிரை ?

7. அழகு குழம்பியுள்ளது. எழில்

11.இசை என்றும் சொல்லலாம் பண்

12.உயிரை வாங்குபவர் ?

13.பணத்தை விட இதுதான் சிறந்தது என்பர். குழம்பியுள்ளது குணம்

15.கவரி திரும்பியுள்ளது சாமரம்

17. பருத்தி என்றும் சொல்வர் ?

18. அரைப்பதற்கு உதவுவது. அம்மி

மேலிருந்து கீழ்

1. கப்பலோட்டி நாவிகன்

2. குளிர் மாதம் குழம்பியுள்ளது மார்கழி

3.ஆலமரத்திற்கு இது சிறப்பு விழுது

4. ஐம்பெரும் பாவங்களில் ஒன்று குருநிந்தை

8. சிந்தனை எண்ணம்

9.அம்மனுக்கு பிடித்ததொன்று. குங்குமம்

10. வீரன் என்றும் சொல்வர் ?

14.கத்தியை கூராக்குவதற்கு இதைப் பயன்படுத்துவர். திரும்பியுள்ளது அரம்

16.கடவுளை இப்படியும் அழைப்பர் சாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு யாரும் பரிசு பெறுவதற்காக விடை கூறவில்லை... பதில் என்றால் அது எப்பவும் முழுமையாக இருக்கனும் ... அது தேவையில்லை என வெண்ணிலாவே கூறும்போது உங்கள் விருப்பம்போல விடை கூறுங்கோ...

நன்றி

  • தொடங்கியவர்

இங்கு யாரும் பரிசு பெறுவதற்காக விடை கூறவில்லை... பதில் என்றால் அது எப்பவும் முழுமையாக இருக்கனும் ... அது தேவையில்லை என வெண்ணிலாவே கூறும்போது உங்கள் விருப்பம்போல விடை கூறுங்கோ...

நன்றி

அப்படியில்லை சோபனாக்கா. உங்களுக்கு தெரிந்தது ஏனையோருக்கு தெரியாமல் இருக்கலாம். சிலவேளைகளில் ஏனையோருக்கு தெரிந்தவை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். சோ தெரிந்தவர்கள் தெரிந்தவற்றுக்கு சொல்லலாம். முழுமையாக பதில் சொல்பவர்கள் தான் பதில் அளிக்கலாம் எனில் யாரும் முன்வரமாட்டார்கள். இப்பகுதிக்குரிய மட்டுறுத்துனர்களே முடிவெடுக்கட்டும். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதாவது முழுமையாக தெரியுமா சோபனாக்கா... இதில் மற்றவர்களால் கூற முடியாத பதில்களை நீங்கள் கூறலாமே. வேகமாக முழுமையாக கூறுவது உங்கள் திறமை... அல்லது அதிகமாக கூறுங்கள் அதுவே உங்கள் திறமை. பல நாள் சென்ற பின் முழுமையாக விடை வந்தால் குறுக்கெழுத்து போட்ட இடமே எங்கோ ஆழத்தில் இருக்கும். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி சொல்லுறதும் சரி தான்.. என்னமோ கலந்து பேசி செய்யுங்கள். :wink: .

தம்பி சொல்லுறதும் சரி தான்.. என்னமோ கலந்து பேசி செய்யுங்கள். :wink: .

இது தெரியாமல் தானாக்கும் அவை கலந்துரையாடினம்...! :lol::lol:

குறுக்கெழுத்துப் போட்டிய குறுக்கால இழுக்காம...குறித்த கால அவகாசம் கொடுங்க (அதை தேவையில்லாம நீட்டாதேங்க... சுட்டித் தங்கைக்குத் தெரியும் தானே போட்டியின் கடினத்தன்மை அதற்கேற்ப வழங்கும் காலத்தை போட்டியோடு பிரசுரிக்கலாம்)... முழுமையான விடை தெரிந்தவர்கள் பிரசுரிக்க வாய்ப்பாக...! அவர்கள் அதற்குள் விடை சொல்லவில்லை என்றால் பகுதியாகவோ இல்ல சந்தேகத்துடன் கூடிய முழுவிடை தெரிஞ்சவங்கள் விடை சொல்ல அனுமதிக்கலாம்..!

களத்துக் கருத்தை களத்தோட வைச்சிருக்கிறது நல்லம் தனிமடலுக்குப் போனா அது தனிப்பட்ட விடயமாகிடும்...! ஏதோங்க இவ்வளவும் சொல்ல வேணும் போல தோன்றிச்சு சொன்னம் கோவிக்காதேங்கோ...! :wink: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆஆஆஆஆகா.. கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்கை.. :evil: :evil:

ஆஆஆஆஆஆகா.. கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்கை.. :evil: :evil:

அவங்க நீங்க பின்னாடி சொன்னது போலவே முன்னாடியே கலந்துரையாடுறாங்க என்று சொன்னம்..அதுக்கேன் கோவிக்கிறீங்க...! :wink: :P :lol:

  • தொடங்கியவர்

இது தெரியாமல் தானாக்கும் அவை கலந்துரையாடினம்...! :lol::lol:

குறுக்கெழுத்துப் போட்டிய குறுக்கால இழுக்காம...குறித்த கால அவகாசம் கொடுங்க (அதை தேவையில்லாம நீட்டாதேங்க... சுட்டித் தங்கைக்குத் தெரியும் தானே போட்டியின் கடினத்தன்மை அதற்கேற்ப வழங்கும் காலத்தை போட்டியோடு பிரசுரிக்கலாம்)... முழுமையான விடை தெரிந்தவர்கள் பிரசுரிக்க வாய்ப்பாக...! அவர்கள் அதற்குள் விடை சொல்லவில்லை என்றால் பகுதியாகவோ இல்ல சந்தேகத்துடன் கூடிய முழுவிடை தெரிஞ்சவங்கள் விடை சொல்ல அனுமதிக்கலாம்..!

களத்துக் கருத்தை களத்தோட வைச்சிருக்கிறது நல்லம் தனிமடலுக்குப் போனா அது தனிப்பட்ட விடயமாகிடும்...! ஏதோங்க இவ்வளவும் சொல்ல வேணும் போல தோன்றிச்சு சொன்னம் கோவிக்காதேங்கோ...! :wink: :idea:

நன்றி குருவியண்ணா மூத்த உறுப்பினர் என்ற நிலையில் நீங்களும் உங்கள் கருத்தை இங்கு முன்வைத்தமைக்கு. :P

ஒரு வாரகாலப்பகுதிதான். திங்கட்கிழமை தோறும் என்னால் குறுக்கெழுத்து போட முடியும். எதற்கும் கள உறவுகள் ஒத்துழைத்தால் மட்டும். இல்லையேல் போட்டும் பிரயோசனம் இல்லை. நன்றி அனைவருக்கும். :P

என்னால் மட்டும் தான் குறுக்கெழுத்துப்போட்டியை போட முடியும் என்றில்லை. நீங்களும் போட்டியை தொடரலாம். நான் எப்போதும் சலிக்கமல் பதில் தர தயார். இச்சுட்டிக்கும் மற்றவர்களின் அறிவுபூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் என் அறிவுத்திறமையை இன்னும் வளர்க்கணும் என்ற ஆசை. :P :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தெரியாமல் தானாக்கும் அவை கலந்துரையாடினம்...! :lol::lol:

குறுக்கெழுத்துப் போட்டிய குறுக்கால இழுக்காம...குறித்த கால அவகாசம் கொடுங்க (அதை தேவையில்லாம நீட்டாதேங்க... சுட்டித் தங்கைக்குத் தெரியும் தானே போட்டியின் கடினத்தன்மை அதற்கேற்ப வழங்கும் காலத்தை போட்டியோடு பிரசுரிக்கலாம்)... முழுமையான விடை தெரிந்தவர்கள் பிரசுரிக்க வாய்ப்பாக...! அவர்கள் அதற்குள் விடை சொல்லவில்லை என்றால் பகுதியாகவோ இல்ல சந்தேகத்துடன் கூடிய முழுவிடை தெரிஞ்சவங்கள் விடை சொல்ல அனுமதிக்கலாம்..!

களத்துக் கருத்தை களத்தோட வைச்சிருக்கிறது நல்லம் தனிமடலுக்குப் போனா அது தனிப்பட்ட விடயமாகிடும்...! ஏதோங்க இவ்வளவும் சொல்ல வேணும் போல தோன்றிச்சு சொன்னம் கோவிக்காதேங்கோ...! :wink: :idea:

ஆம் குருவிகரே நீங்கள் சொன்னமாதிரி தான் வெண்ணிலாவினால் விதிகள் எனும் தலைப்பில் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அதற்கு பின்னர் யாராலும் முழுமையாக பதில் குடுக்கமுடியாவிட்டால் பாதி பதில்களை ஏற்றுகொள்ளலாம்... இப்படி ஏதாவது ஒரு நல்லமுடிவு வெண்ணிலாவினால் வைக்கப்படும் என்று தான் நேற்று யாழினி வசி அண்ணா என்போரால் சேர்ந்து முடிவெடுத்து வெண்ணிலாவிற்காக காத்திருந்தோம்... ஆனால் அதற்கு வெண்ணிலா பாதி பதிலும் கொடுக்கலாம் அப்படி கொடுத்தால் மற்றையவர்களை ஊக்கிவிப்பதாக அமையும் என கூறிச்சொன்றார்... இதன் பின்னரும் குறுக்கொழுத்துப்போட்டி என்பது வேடிக்கை மட்டும் பார்க்கும் பகுதியாக தான் இருக்கும் என நினைக்கிறேன்...
  • தொடங்கியவர்

ஆம் குருவிகரே நீங்கள் சொன்னமாதிரி தான் வெண்ணிலாவினால் விதிகள் எனும் தலைப்பில் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அதற்கு பின்னர் யாராலும் முழுமையாக பதில் குடுக்கமுடியாவிட்டால் பாதி பதில்களை ஏற்றுகொள்ளலாம்... இப்படி ஏதாவது ஒரு நல்லமுடிவு வெண்ணிலாவினால் வைக்கப்படும் என்று தான் நேற்று யாழினி வசி அண்ணா என்போரால் சேர்ந்து முடிவெடுத்து வெண்ணிலாவிற்காக காத்திருந்தோம்... ஆனால் அதற்கு வெண்ணிலா பாதி பதிலும் கொடுக்கலாம் அப்படி கொடுத்தால் மற்றையவர்களை ஊக்கிவிப்பதாக அமையும் என கூறிச்சொன்றார்... இதன் பின்னரும் குறுக்கொழுத்துப்போட்டி என்பது வேடிக்கை மட்டும் பார்க்கும் பகுதியாக தான் இருக்கும் என நினைக்கிறேன்

ஏனையோரின் கருத்து........................................... :?:

ஏன் சுட்டித்தங்கையே...சோபனாவின் கருத்தையும் உள்வாங்கித்தான் செயற்பட்டுப் பாருங்களேன்... முடிவுகளை பார்த்து பிறகு நிரந்தர மாற்றம் ஏற்படுத்தலாம் தானே...!

சோபனாவின் கருத்து விடையை முழுமையாகச் சொல்ல வேண்டும் என்பதுதான்... பகுதி விடை தெரிந்தவர்களும் முழுமையாக விடையை பூர்த்தி செய்து கொடுக்கலாம்...தெரியாதவைக்கு ஓரளவு ஊகத்தோடும் விடையைப் போட்டுக் கொடுக்கலாம் தானே... சரியான விடையை இறுதியில் மட்டும் சொன்னா விசயம் முடியுது...! :P :wink: :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.