Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

5வயது சிறுமி கொலை : பாடசாலை மாணவன் உட்பட மூவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொடதெனியாவ பிரதேசத்தில் 5வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17வயதான பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வாரம் வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 5 வயது சிறுமியின் மரணம் நாடு முழுவதிலும் பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் அப்பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் வணிகப்பிரிவில் உயர்தரம் கற்கும் மாணவன் என்பதுடன், கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்ப நண்பர் எனவும் புலனாய்வுப் பிரிவpனர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட மாணவனுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதுடன், பாலியல் ரீதியான படங்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இது குறித்து ஏனைய இருவரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.onlineuthayan.com/news/427

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேயா படுகொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

கொட்­ட­தெ­னி­யாவ - படல்­கம, அக்­க­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற  ஐந்து வயதுடைய சிறுமியின் படு­கொலை   தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு உறவினர்களையும் இம் மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.suspects-remanded.jpg

17 வயதுடைய மாணவனும் 33 வயதுடை நபர் ஒருவருமே இன்று காலை கொட்­ட­தெ­னி­யாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்தே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  டி.என்.ஏ பரிசோதனையின் முடிவிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் சிறுமியின் உறவினர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

ஐந்து வயதுடைய சேயா செதவ்மி, கடந்த 11 ஆம் திகதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது காணாமல் போய் 13 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://virakesari.lk/articles/2015/09/19/சேயா-படுகொலை-சந்தேக-நபர்களுக்கு-விளக்கமறியல்

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமான பாலியல் வன்புணர்வுகள் துன்புறுத்தல்கள் குடும்ப நண்பர்களாலும் உறவினர்களாலுமே நடைபெறுகின்றன.அந்தவகையில் பெற்றோரும் தெரிந்தோ தெரியாமலோ  இதற்குப் பொறுப்பானவர்களாகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத் தெரியுது, ஆனால் பாதுகாப்பாக வளர்க்கத் தெரிவதில்லை. தயவுசெய்து பிள்ளைகளை ஒழுங்காகவும் பாதுகாப்பாகவும் வளர்க்கத் தெரியாவிட்டால் பெற்றுக்கொள்ளாதீர்கள். முதல் குற்றவாளிகள் பெற்றோர்தான். சிறுபிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு அதியுயர் (மரண) தண்டனை பரிசளிக்கப்படவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.