Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை : இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு

Featured Replies

விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை : இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு
விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை : இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு

கிளிநொச்சி விசுவமடு கூட்டுறவுப் பாலியல் வல்லறுவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். 

கடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 5 பிள்ளைகளின் தாயார் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். நள்ளிரவு வேளையில் பாதுகாப்பற்ற தற்காலிகக் கூடார வீடொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் விசுவமடு பிரதேசம் மட்டுமல்லாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமே பெரும் அச்சத்தில் மூழ்கியிருந்தது. 

 இந்தச் சம்பவத்தையடுத்து, முழுமையான இராணுவ மயமாகியிருந்த சூழலில், கொட்டில்களினும் தரப்பாள் கூடாரங்களிலும் மக்கள் மீள்குடியேறியிருந்த அந்த நேரம் பெண்கள் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற அச்சத்துடனேயே இரவு நேரங்களைக் கழித்தார்கள். 

இந்தச் சம்பவத்தில் விசுவமடுவைச் சேர்ந்த 27 வயதுடைய 2 குழந்தைகளின் தாயார் ஒருவரை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும்,  மற்றுமொரு பெண்ணாகிய  5 குழந்தைகளின் தாயாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் 4 இராணுவத்தினருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

விசுவமடு பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றியிருந்த, பண்டித கெதர சாந்த சுபசிங்க, பத்திரண பண்டாரநாயக்க பிரியந்த குமார, தெல்கொல்லகே தனுஸ்க புஸ்பகுமார, கொப்பேராலகே கெதர தனுஸ்க பிரியலால் ரத்நாயக்க ஆகிய 4 இராணுவ சிப்பாய்களுக்கு இந்த வழக்கில் 5 கூட்டுப்பாலியல் வல்லுறவு, பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. 

இந்த வழக்கு விசாரணையின்போது, நான்காவது எதிரி மன்றில் ஆஜராகவில்லை. தலைமறைவாகியிருந்தார். அவர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்டிருந்த 4 இராணுவ சிப்பாய்களும் விசாரணையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்து,அவர்கள் ஒவ்வொருவருக்கும் மொத்தமாக 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குவதாக தனது தீர்ப்பில் தெரிவித்தார். 

இரண்டு பிள்ளைகளின் தாயராகிய இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக எதிரிகள் நால்வருக்கும், இந்தத் தீர்ப்பில் தலா 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து பிள்ளைகளின் தாயராகிய பெண்ணை அதே சம்பவத்தில் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக நான்கு எதிரிகளுக்கும் இந்தத் தீர்ப்பில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

நட்டஈடும்,தண்டமும் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நட்டயீடாக 5 லட்ச ரூபாவும், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு லட்ச ரூபாவும் நட்டயீடு வழங்க வேண்டும் என்றும் நட்டயீடு செலுத்தத் தவறும் பட்சத்தில் எதிரிகள் ஒவ்வொருவரும் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

அதேநேரம், கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு 25 ஆயிரம் தண்டப்பணமும், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் எதிரிகள் 2 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, இந்த வழக்கின் எதிரிகள் நால்வருக்கும் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு 20 வருடமும், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு 5 வருடமும்,நட்டயீடு வழங்காவிட்டால் 3 வருடமும், தண்டப்பணம் செலுத்தாவிட்டால் 2 வருடமுமாக மொத்தமாக 30 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

http://onlineuthayan.com/news/984

விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு:  4 சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை! நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு கூட்டுறவுப் பாலியல் வல்லறுவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 5 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

நள்ளிரவு வேளையில் பாதுகாப்பற்ற தற்காலிகக் கூடார வீடொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் விசுவமடு பிரதேசம் மட்டுமல்லாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமே பெரும் அச்சத்தில் மூழ்கியிருந்தது. இந்தச் சம்பவத்தையடுத்து, முழுமையான இராணுவ மயமாகியிருந்த சூழலில், கொட்டில்களினும் தறப்பாள் கூடாரங்களிலும் மக்கள் மீள்குடியேறியிருந்த அந்த நேரம் பெண்கள் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற அச்சத்துடனேயே இரவு நேரங்களைக் கழித்தார்கள். இந்தச் சம்பவத்தில் விசுவமடுவைச் சேர்ந்த 27 வயதுடைய 2 குழந்தைகளின் தாயார் ஒருவரை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் எனவும் மற்றுமொரு பெண்ணாகிய 5 குழந்தைகளின் தாயாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் எனவும் குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் 4 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

விசுவமடு பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றியிருந்த, பண்டித கெதர சாந்த சுபசிங்க, பத்திரண பண்டாரநாயக்க பிரியந்த குமார, தெல்கொல்லகே தனுஸ்க புஸ்பகுமார, கொப்பேராலகே கெதர தனுஸ்க பிரியலால் ரத்நாயக்க ஆகிய 4 இராணுவ சிப்பாய்களுக்கு இந்த வழக்கில் 5 கூட்டுப்பாலியல் வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த வழக்கு விசாரணையின்போது, நான்காவது எதிரி மன்றில் முன்னிலையாகவில்லை; தலைமறைவாகியிருந்தார். அவர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று இன்று புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனை வழக்கு விசாரணையின் முடிவில் 81 பக்கங்களைக் கொண்ட தனது தீர்ப்பை நீதிபதி இளஞ்செழியன் ஒரு மணித்தியாலம் பகிரங்க நீதிமன்றத்தில் வாசித்தார். குற்றம் சுமத்தப்பட்டிருந்த 4 இராணுவ சிப்பாய்களும் விசாரணையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிவித்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் மொத்தமாக 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குவதாக தனது தீர்ப்பில் தெரிவித்தார். இரண்டு பிள்ளைகளின் தாயராகிய இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக எதிரிகள் நால்வருக்கும், இந்தத் தீர்ப்பில் தலா 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து பிள்ளைகளின் தாயராகிய பெண்ணை அதே சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக நான்கு எதிரிகளுக்கும் இந்தத் தீர்ப்பில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நட்டஈடும் தண்டும்

வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நட்டஈடாக 5 லட்ச ரூபாவும், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபாவும் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் நட்டஈடு செலுத்தத் தவறும்பட்சத்தில் எதிரிகள் ஒவ்வொருவரும் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு 25 ஆயிரம் தண்டப்பணமும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் எதிரிகள் 2 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வழக்கின் எதிரிகள் நால்வருக்கும் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு 20 வருடமும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு 5 வருடமும், நட்டயீடு வழங்காவிட்டால் 3 வருடமும், தண்டப்பணம் செலுத்தாவிட்டால் 2 வருடமுமாக மொத்தமாக 30 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் நீண்ட தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் முக்கியமாக தெரிவித்த கருதுக்கள் வருமாறு:- இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எதிரிகளான 4 இராணுவச் சிப்பாய்களும் இரண்டு தாய்மாரை, கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய குற்றத்தைப் புரிந்துள்ளனர் என்பது விசரரணை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் தன்மீது குற்றம் புரியப்பட்டபோது, இறுதி நேரம் வரையில் அவர்களைத் தடுத்துப் போராடியிருக்கின்றார் என்பதும் விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மற்ற பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை ஒப்புறுதி சாட்சியங்களின் மூலம் நிரூபணமாகியிருக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியம்

கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தை மன்று விசேட கவனத்திற்கு எடுத்துள்ளது. "சம்பவம் நடைபெற்ற அன்று இரவு 12 மணிக்கு வீட்டினுள்ளே புகுந்த இராணுவத்தினர் கொட்டானால் முழங்காலில் அடித்தார்கள். அவர்கள் கையில் கிறிஸ் கத்தி வைத்திருந்தார்கள். அப்போது அருகில் படுத்திருந்த பிள்ளைகள் எழுந்து கத்தினார்கள். பயம் காரணமாகக் கத்திய அந்தப் பிள்ளைகளுக்கும் அவர்கள் அடித்தார்கள். அவ்வாறு அவர்கள் கத்திக்கொண்டு எனது பக்கத்தில் வந்தபோது, இராணுவத்தினர் எனது உடலைச் சுரண்டி, என்னைப் பிடித்து இழுத்தார்கள். அப்போது எங்களுடன் இருந்த எனது தம்பி ரஞ்சித், அக்கா பாவம் அவரை அப்படி ஒன்றும் செய்ய வேண்டாம் என கத்தினான். அப்போது, அந்த இராணுவத்தினர் அவனுடைய கழுத்தைச் சவட்டி, அதனை முறித்தமாதிரியாக, அவனை இழுத்துச் செனறு அவனுடைய கைகளைக் கட்டுவதற்காக கொடிக்கயிற்றைப் பிடித்து அறுத்தார்கள். அவ்வாறு அவனுடைய கைகளைக் கட்டுவதற்கு முற்பட்டபோது, எங்கள் எல்லோரையும் அவர்கள் கொலை செய்யப் போகின்றார்கள் என்று பயந்தேன். அந்தப் பயத்தில் என்னைப் பிடித்துக்கொண்டிருந்த ஆமியைத் தள்ளிவிட்டு வெளியில் ஓடினேன்.

அவ்வாறு ஓடியபோது, எனது பின் மண்டையில் அடி விழுந்தது. அதேநேரம் 3 இராணுவத்தினர் என்னைப் பிடித்து வீட்டின் பின்னால் உள்ள பற்றைக்குள் கொண்டு சென்றார்கள். அவ்வாறு கொண்டு சென்றபோது என்னால் முடிந்த மட்டும் அவர்களிடமிருந்து தப்புவதற்கு முயற்சித்தேன் முடியவில்லை. அங்கு வைத்து அவர்கள் என்னைக் கற்பழித்தார்கள். அவர்களே இந்த நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள்" என அந்தப் பெண் தனது சாட்சியத்தில் தெரிவித்து, எதிரிகளை அடையாளம் காட்டினார். அதேபோன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் சாட்சியமளிகையில், "என்னை ஒருபக்கமாகவும், மற்றவரை மறுபக்கத்திலும் இராணுவத்தினர் இழுத்துச் சென்றார்கள். நான் 5 குழந்தைகளின் தாய் என்னை ஒன்றும் செய்ய வேண்டாம் என அவர்களிடம் அழுதபடி கெஞ்சினேன். அவர்கள் எனது உடைகளை பகுதியாகக் களைந்தார்கள். எனக்கு மாதவிலக்கு என்னை ஒன்றும் செய்ய வேண்டாம் என அப்போது அவர்களிடம் நான் சொன்னேன். அவர்கள் எனது உள்ளாடைகளைக் கழற்றி பார்த்தார்கள். பார்த்த பின்னர், எனது கைகளைக் கட்டி கீழே தள்ளிவிட்டார்கள். அப்போது சுமார் 20 மீற்றர் தூரத்தில் என்னை விடுங்கோ என்னை விடுங்கோ என மற்ற பெண் கத்திக்கொண்டிருந்தார். அவர் அவ்வாறு கத்த, கத்த வீட்டின் பின்னால் இருந்த மற்ற காணிக்குள் அவரை அவர்கள் இழுத்துச் சென்றார்கள்" என தெரிவித்துள்ளார்.

மக்களையும் நாட்டையும் பாதுகாக்கச் சென்ற காவலர்களே குற்றம் புரிந்துள்ளார்கள்

இந்த வழக்கில் எதிரிகளாக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் இராணுவச் சிப்பாய்களாவர். இவர்கள் இந்தச் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில், கிளிநொச்சி விசுவமடு பிரதேசத்தில் நாட்டின் பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, இராணுவ உத்தியோகத்தர்களாக கடமைக்காக அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டிருந்தார்கள். அவ்வாறாக தேசிய பாதுகாப்பு கடமைக்காக அனுப்பப்பட்டிருந்தபோதே, இவர்கள் தங்களுடைய இராணுவ முகாமில் இருந்து வெளியேறிச் சென்று, கூட்டுப்பாலியல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்செயலைப் புரிந்திருக்கின்றார்கள்.

இந்தக் குற்றச் செயல் சம்பவம் நடைபெற்றதையடுத்து, சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த இராணுவ பொலிசார் இவர்கள் நான்கு பேரையும் அன்று அதிகாலையிலேயே கைது செய்திருந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் கோர யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அனைத்தையும் இழந்து இராமநாதன் இடம்பெயர் அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்துவிட்டு, அரசாங்கமும், இராணுவத்தினரும் வழங்கிய மீள்குடியேற்றத்திற்கான வாக்குறுதியை அடுத்து, இந்தப் பெண்கள் தமது செர்நத ஊரான விசுவமடுவுக்குத் திரும்பிச் சென்று தற்காலிகக் கொட்டில் அமைத்து, அதில் தங்கியிருந்து தங்களுடைய காணிகளைத் துப்பரவு செய்வதில் ஈடுபட்டிருந்த வேளையில் இரவு 12 மணிக்கு அவர்கள் தங்கியிருந்த வீட்டினுள்ளே புகுந்து, இந்தக் குற்றச் செயலைப் புரிந்திருக்கின்றார்கள்.

கோர யுத்தத்தில் பாதுகாக்கப்பட்ட மானம் யுத்தம் இல்லாத வேளை சூறையாடப்பட்டது

இந்தச் செயலின் மூலம், யுத்தம் நடைபெற்றபோது, காப்பாற்றப்பட்டிருந்த அந்தப் பெண்களின் கற்பையும் மானத்தையும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இந்த 4 இராணுவ சிப்பாய்களும் சூறையாடியிருக்கின்றார்கள். கோர யுத்தத்தில் பாதுகாக்கப்பட்ட மானம் 2010 ஜுன் 6 ஆம் திகதி யுத்தம் இல்லாத சூழ்நிலையில் எதிரிகளான இராணுவ சிப்பாய்களினால் பறிக்கப்பட்டிருப்பது பெரும் குற்றச் செயலாகும். பொது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய தமது அரச கடமையாகிய பாதுகாப்பு வழங்காமல் இரண்டு தாய்மார்கள் மீது கூட்டுப் பாலியல் வல்லறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அது மட்டுமல்லாமல், இந்த நாட்டு இராணுவத்தினரின் நற்பெயரைக் கெடுத்த செயலாகும். எனவே, இலங்கை இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டுமனால் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இராணுவத்தின் பாலியல் வல்லுறவு குற்றம் என்பது சர்வதேச குற்றம், அத்துடன் அது ஒரு போர்க் குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றம் என ஐ.நா. யுத்த குற்ற நீதிமன்ற சட்டங்களிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சடடங்களிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட போது யாழ் மேல் நீதிமன்றம் பொதுமக்களினால் நிறைந்து வழிந்தது. தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, எதிரிகள் நான்கு பேரும் உடனடியாக, பாதுகாப்பாக சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். குறிப்பிட்ட இராணுவ வீரர்களின் உறவினர்கள் இன்று நீதிமன்றத்துக்குச் சமுகமளித்திருந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்படடதும் அவர்கள் நீதிமன்றத்தினுள்ளேயே கதறி அழுதார்கள். மற்றும் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உறவினர்களும் பொலிஸாரும் அவரை துர்க்கி வந்து ஆசுவாசப்படுத்தினார்கள். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றக் கட்டடத்தின் முதலாம் மாடியில் அதிரடிப்படை பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். நீதிபதி இளஞ்செழியனுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

jaffna%20court%205476e.jpg

http://www.malarum.com/article/tam/2015/10/07/12069/விசுவமடு-பெண்-வல்லுறவு-வழக்கு-4-படையினருக்கு-20-வருட-சிறை-யாழ்-மேல்நீதிமன்றம்-தீர்ப்பு-.html#sthash.iJvPVLgy.dpuf

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இத்தீர்ப்புப் பற்றி சொறீலங்கா பிரதமர் ரணில்:  போர் வெற்றி நாயகர்களை சிறைக்குள் தள்ள அனுமதிக்கமாட்டோம். 

சொறிலங்கா சனாதிபதி மைத்திரி: போர் வெற்றியில் பங்கெடுத்த.. எல்லோரும் காப்பாற்றப்படுவது போல இவர்களும் காப்பாற்றப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவார்கள்.

சொறீலங்கா எதிர்கட்சி தலைவர்: தமிழ் மக்கள் வன்முறையை ஏன் தெரிவு செய்தார்களோ தெரியவில்லை. அதன் விளைவே இது. இந்தத் தீர்ப்பு இன ஐக்கியத்தை பாதிக்க அனுமதிக்கமாட்டேன். சொறீலங்கனாக இவர்களை விடுவிக்க சுமந்திரனை ஐநா வரை அனுப்பவும் தயங்கமாட்டேன்.

எதிர்கட்சி தலைவரின் ஆலோசகர் இத்தீர்ப்பு பற்றி கனடாவில்.. : இதுவும் புலிகளால் தான். அவர்கள் பெண்களை படையில் இணைத்ததால் தான் சிங்கள இளைஞர்கள் தமிழ் பெண்களை பழிவாங்கத் துடிக்கின்றனர். எல்லாம் புலிகளால் தான். மற்றும்படி.. இந்த சிங்களச் சிப்பாய்கள் செய்த குற்றம் ஏதுமில்லை. இந்தத் தீர்ப்பு இன ஐக்கியம்.. சாந்தி.. சமாதானத்தை சொறீலங்காவில் விரும்பும் அமெரிக்காவின் முடிவை பாதிக்க நான் அனுமதிக்கமாட்டேன். 

வடக்குக்கிழக்கு வாக்காளர்கள்: இது எப்பவும் நடக்கிறது தானே. பழகிப் போச்சுது. அதற்காக... நாங்கள் என்ன செய்வது. சிவனேன்னு சீவிங்க விடுங்க.

புலம்பெயர் தமிழ் ஆதவாளர்கள்: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய நல்ல தீர்ப்பு.. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதிப்பில் இருந்து மீள யார் தான் என்ன செய்வது....??! அமெரிக்கா.. இந்தியா.. ரணில்.. சம்பந்தன்.. சுமந்திரன்.. மாவை.. சிவி எதையாவது செய்யுங்கோ..!!

Edited by nedukkalapoovan

இந்த கைதிகள் அனைவரும் அடுத்த சுதந்திரதினத்திற்கோ அல்லது புது வருடப்பிறப்பிற்கோ கைதிகளுக்கான பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார்கள். இந்தத் தீர்ப்பெல்லாம் இலங்கையில் நீதித்துறை சிறப்பாக இயங்குகிறது இராணுவத்துக்கே நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப் படுகின்றது எனும் அரசின் பிராசாரத்திற்குத் தான் பயண்படும். எனினும் தனது பணியை சிறப்பாகச் செய்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.