Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று அன்று | 9 அக்டோபர் 1967: புரட்சியின் மறுபெயர் சே!

Featured Replies

இன்று அன்று | 9 அக்டோபர் 1967: புரட்சியின் மறுபெயர் சே!

che1_2577820f.jpg
 

இளைஞர்களின் நாடி நரம்புகளில் கனல் பாய்ச்சும் பெயர் சே குவேரா. 1928-ல் அர்ஜென்டினாவில் பிறந்த அவர் கியூபா நாட்டு விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தார்.

மருத்துவம் படித்துச் சொகுசான வாழ்க்கை வாழ வாய்ப்புகள் இருந்தும் மக்களின் இன்னல்களைக் களையப் போராளியாக மாறினார். 1954-ல் ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் அவருடைய தம்பி ரவுல் காஸ்ட்ரோவை மெக்சிகோவில் சந்தித்தார். உலகின் சர்வாதிகாரம் படைத்த வட அமெரிக்காவுக்கு ஃபிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் கடும் சவாலாக இருந்தனர். கெரில்லா தாக்குதல் மூலம் பாடிஸ்டாவின் ராணுவத்தை வீழ்த்தி 1959-ல் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபா பிரதமர் ஆனார்.

`லா கபானா’ கோட்டை சிறைச்சாலையின் பொறுப்பாளர் ஆனார். கியூபாவின் நிதியமைச்சராகவும், கியூபா தேசிய வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார். புரட்சிக்கு எல்லைகள் இல்லை என்று நினைத்த சே குவேரா, காங்கோவில் புரட்சிப் படைகளுக்கு உதவினார். பின்னார் பொலிவியாவுக்குச் சென்றார். அங்கு ஆஸ்துமா பாதிப்பால் இருந்தவரை 1967 அக்டோபர் 8-ல் சுற்றிவளைத்தது சி.ஐ.ஏ. பயிற்சி பெற்ற பொலிவியப் படை. பள்ளி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த சே, அக்டோபர் 9-ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

http://tamil.thehindu.com/opinion/blogs/இன்று-அன்று-9-அக்டோபர்-1967-புரட்சியின்-மறுபெயர்-சே/article7742114.ece?homepage=true

  • தொடங்கியவர்

12109288_490994631067057_537836315406727

இலங்கையில் சே குவேரா !!!
புரட்சியாளர் சே குவேரா 1959ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வேளையில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இது.

தன்னுடைய இரு மொழிபெயர்ப்பாளர்கள், மெய்ப்பாதுகாவலர், இலங்கை காவல் அதிகாரி மற்றும் சேயின் இலங்கை நண்பரோடு, ஹொரணை பகுதியிலுள்ள மொரகஹென எஸ்டேட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

நன்றி: SOORIYAN FM

  • கருத்துக்கள உறவுகள்

சே புகுந்த நாடு சிறிலங்கா என்ற காரணத்தால் தான் 1971 ஆம் ஆண்டு புரட்சி வெடித்ததோ?

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகளுக்கான விதைகளை நாட்டும் சேகுவேரா எப்போதுமே இருப்பார்.

புரட்சிகளில் நம்பிக்கை உள்ளதால் அவருடைய படம் போட்ட நாலு ரீ-சேர்ட் வைத்திருக்கின்றேன் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகளுக்கான விதைகளை நாட்டும் சேகுவேரா எப்போதுமே இருப்பார்.

புரட்சிகளில் நம்பிக்கை உள்ளதால் அவருடைய படம் போட்ட நாலு ரீ-சேர்ட் வைத்திருக்கின்றேன் :cool:

அவர் பிடித்த பிரான்ட் சுருட்டுத்தான் நான் பாவிக்கிறன் ஆகவே நானும் புரட்சியாளன் 

  • கருத்துக்கள உறவுகள்

சே குவேராவின் நினைவு நாள் : அஞ்சலி அர்த்தமுள்ளதாகட்டும்

che_guevara

தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் புரட்சியாளனாகவே வாழ்ந்த சேகுவேராவின் அஞ்சலி நாள் இன்று 09.10.2015 ஆகும். 1929 ஆம் ஆண்டு பிறந்து 39 வயதுகள் வரை வாழ்ந்த சே கோட்பாட்டாளர், தத்துவார்த்த ஆசிரியர். மார்க்சியப் போராளி, புரட்சிக்காகரன் எனப் பல பெயர்களில் அறியப்பட்டவர்.


மெக்சிக்கோ சிற்றியில் கியூபப் புரட்சியாளனான பிடல் கஸ்ரோவைச் சந்தித்த போது அவரின் போராட்ட இயக்கத்தில் இணைந்துகொள்கிறார். கியூபப் புரட்சியின் இரண்டாவது முக்கிய தலைவராகச் செயற்பட்ட சே குவேரா, கியூபா அரசியல் பல முக்கிய பதவிகளை வகிக்கிறார்.


1965 ஆம் ஆண்டில் கியூபா அரசின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் வெளியேறி உலகின் ஏனைய நாடுகளில் புரட்சி செய்வதற்காகப் பயணிக்கிறார். ஆபிரிக்க நாடான கொங்கோவில் சே புரட்சிக்கான முயற்சி தோல்வியடைய, பொலீவியாவை நோக்கிச் செல்கிறார். அங்கு மக்கள் மத்தியில் அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கும் போது சீ.ஐ,ஏ உடன் இணைந்து பொலீவியப் படைகள் அவரைக் கைது செய்து கொன்றுபோட்டன,


மத்தியதரவர்க்கக் கல்விச் சமூகத்தில் பிறந்த சே வாசிப்பில் அக்கறை கொண்டவர். சே இன் வீட்டு நூலகத்தில் மட்டும் 3000 நூல்கள் இருந்ததகக் கூறுகின்றனர். மார்க்சியத் தத்துவத்தில் சே இன் ஈடுபாடு அங்கிருந்தே ஆரம்பமாகிறது. 1958 ஆம் ஆண்டு சீ.ஐ.ஏ சே தொடர்பான இரகசிய அறிக்கை ஒன்றைத் தயார் செய்தது. சே, ஒரு அறிவிசீவி என்றும், நன்றாக வாசித்து அறிந்துகொண்டவர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. கியூபாவின் அரசியல் திட்டத்தை முன்வைக்கும் போது, கார்ல் மார்க்சின் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அதனை மேற்கொண்டதாக சே கூறுகிறார்.


குறிப்பான சூழ் நிலைகளில் வெற்றிபெற்ற கியூபப் புரட்சியில் முழுமையான புதிய ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த மக்கள் கட்டமைப்புக்கள் இருக்கவில்லை. தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் ஒரு வகையான தேசிய அரசை நிறுவப் போதுமானதாகவிருந்தது.


1965 ஆம் ஆண்டு உலகத்தின் ஏனைய நாடுகளில் புரட்சிசெய்வதற்காக கியூபாவை விட்டு நீங்கிய சே இன் வழிமுறைகளிலும் அரசியலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.


1960 ஆம் ஆண்டில் மா ஓ சேதுங் மற்றும் சே குவேராவிற்கு இடையேயான உரையாடலில் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தத்தைப் பாராட்டும் சே இன் அரசியல் மாற்றம் தென்படுகிறது.


போராட்ட சக்த்திகளிடமிருந்து சே இன் ஆளுமையை அகற்ற முடியாத சூழலில் சே இராணுவக் கோட்பாடு என்ற போலி நூலை சீ.ஐ.ஏ தயாரித்து வெளியிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.


சே என்ற தனிமனிதனைக் கதாநாயகனாகக் கருதுவதற்குப் பதிலாக சே இன் அரசியலையும் அவரின் இறுதிக்கால அரசியலின் பரிணாம வளர்ச்சியையும் விமர்சன அடிப்படையில் எதிர்கொள்ளும் போதே அப்புரட்சியாளனுக்கான அஞ்சலி அர்த்தமுள்ளதாகும்.

http://inioru.com/meaningful-tribute-of-che/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.