Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. பரிந்துரைகளை அமுல்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! மிரோஸ்லாவிடம் கூட்டமைப்பு வலியுறுத்து!!

Featured Replies

ஐ.நா. பரிந்துரைகளை அமுல்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! மிரோஸ்லாவிடம் கூட்டமைப்பு வலியுறுத்து!!

"இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளையும், அந்தப் பரிந்துரைகளை ஆதரித்து ஐ.நாவில் அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளையும் அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுங்கள்.'' - இவ்வாறு அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் நாயகம் மிரோஸ்லாவ் ஜென்காவிடம் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் வலியுறுத்தினர்.

அத்துடன், தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை முழுமையாக விடுவித்தல், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப விசேட திட்டத்தை ஏற்படுத்தல் ஆகிய முக்கிய விடயங்களையும் அமுல்படுத்துமாறும் இலங்கை அரசுக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் நாயகத்திடம் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் நாயகம் மிரோஸ்லாவ் ஜென்கா உத்தியோக பயணம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ளார். இவர் வந்த கையோடு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகத்தில் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பேச்சின்போதே இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தினர் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தான் அங்கு நேரில் சந்தித்து தமிழருக்கான அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்தியிருந்தேன் என்று அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் நாயகம் மிரோஸ்லாவ் ஜென்கா எம்மிடம் தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் இடம்பெறவுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா. தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் ஜனாதிபதி மைத்திரியிடம் தான் கூறினேன் என்றும் மிரோஸ்லாவ் ஜென்கா எம்மிடம் தெரிவித்தார். நியூயோர்க்கில் மைத்திரியுடனான சந்திப்பின் தொடராகத்தான் தான் இலங்கை வந்துள்ளேன் என்றும் மிரோஸ்லாவ் ஜென்கா எம்மிடம் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் நாம் தெரிவித்த விடயங்களை தான் கவனத்தில் எடுத்து அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் மிரோஸ்லாவ் ஜென்கா எம்மிடம் உறுதியளித்தார்'' - என்றார். -

 http://www.malarum.com/article/tam/2015/10/21/12261/ஐ-நா-பரிந்துரைகளை-அமுல்படுத்த-அரசுக்கு-அழுத்தம்-கொடுங்கள்-மிரோஸ்லாவிடம்-கூட்டமைப்பு-வலியுறுத்து-.html#sthash.Qkx2ql2j.dpuf

 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

அவையள் அழுத்தம் கொடுக்கவேணும் அரசுக்கு.....நீங்கள் அரசுடன் ஒன்றுக்குள்ள ஒன்று, என்ன நியாயம் சம்பந்தர் அய்யே?

சம்பந்தரோ ... புதிய கதிர்காமர் நீங்களோ ... உதைச் சொன்னனாங்கள் என்று சத்தியம் பண்ணிச் சொன்னாலும் யாரும் நம்பப்போவதில்லை! ...  நம்மளுக்கு தெரியும் துண்டை போட்டுட்டு தாண்டுவீர்கள் என்று!! உங்கள் தலைவரை,  எதிர்க்கட்சி கதிரையுடன் கட்டிப்போட்டு காதலிக்க விட்டுட்டாங்கள்! ... அவர் அந்தக்கத்திரை மீதுள்ள காதலால் ... எதுவுமே கதைக்கப்போறதில்லை! ... சும்மா புலுடா எங்களுக்கு ...

மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் தான்  சிங்களத்தை வழிக்கு கொண்டு வரும்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் தான்  சிங்களத்தை வழிக்கு கொண்டு வரும்

2009, மே, 18, முள்ளிவாய்க்கால், ஆயுதங்களின் மவுனிப்பு :unsure:

அது தற்காலிகமாக........

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.