Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை அங்கிகளோடு இருந்த தாக்குதலாளிகள்! பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் பெல்ஜியத்தில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
kaithu_thakkuthal_001.jpg

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் நபர்களை பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் வைத்து செய்து செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சின் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் பயங்கர தொடர் தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளான இடங்களில் ஒன்றான பட்டாகிளான் அரங்கத்திற்கு அருகே நின்ற கார் ஒன்று, பெல்ஜிய நாட்டின் பதிவுத் தகட்டுடன் காணப்பட்டதை அவதானித்த  காவல்த்துறையினர், விரைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையின் பின்னர் இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கைது செய்யப்பட்டதாக பெஜ்ஜியம் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாரிஸில் இருந்துள்ளார் என பெல்ஜியப் பிரதமர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மிகக் கொடூரமான இத்தாக்குதல்களை நடத்தியவர்களில் ஒருவர் பாரிஸின் புறநகர்ப்பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் கடந்த காலத்தில் குற்றச் செயல்கள் புரிந்துள்ளதற்கான பதிவுகள் உள்ளன என்றும் பிரான்ஸ் அரசின் தலைமை வழக்கறிஞர் பிரான்சுவா மொலீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மற்றொரு தாக்குதலாளி சிரிய நாட்டு கடவுச் சீட்டு வைத்திருந்தார் எனவும் பிரெஞ்சு அரச தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அனைத்து தாக்குதல்தாரிகளும் தானியங்கி கலாஷ்னிகோவ் துப்பாக்கியை வைத்திருந்ததுடன் தற்கொலை அங்கியும் அணிந்திருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இத்தாக்குதல் பிரான்ஸின் மீது நடத்தப்பட்ட ஒரு போர் என்றும், தமது அரசு ஈவு இரக்கமின்றி எதிர்தாக்குதலை நடத்தும் எனவும் பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸுவா ஒலாந் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பிரான்ஸ் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

parish_attack_fr_001.jpg

parish_attack_fr_002.jpg

parish_attack_fr_003.jpg

http://www.tamilwin.com/show-RUmtzBSYSVewzH.html

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழரசு said:

இதேவேளை இத்தாக்குதல் பிரான்ஸின் மீது நடத்தப்பட்ட ஒரு போர் என்றும், தமது அரசு ஈவு இரக்கமின்றி எதிர்தாக்குதலை நடத்தும் எனவும் பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸுவா ஒலாந் அறிவித்துள்ளார்.

பிரெஞ்ச் அதிபரின் இந்தக் கூற்று வரவேற்கப்படவேண்டியது. பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் ஈவு இரக்கமின்றி அழிக்கப்படவேண்டும்.   மூளைச் சலைவை செய்யப்பட்ட இந்த தற்கொலைதாரிகள் சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படவேண்டும். இவர்களுக்கு மன்னிப்பே வழங்கப்படக் கூடாது!

 

  • கருத்துக்கள உறவுகள்

சிரியா லிபியா போன்ற நாடுகளில் அப்பாவிகளை கொன்று பயங்கரவாதிகளை கொல்வதாக சாட்டு கூறும் உலக பயங்கரவாதிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம். பாரிசில் கொல்லப்பட்டால் அப்பாவிகள், சிரியாவில் கொல்லப்படால் பயங்கரவாதிகளா என்பதை சில அரைவேக்காடுகள் விளக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது முசுலீம் இனத்தவர்களை அவர்கள் பாரம்பரிய உடைகளுடன் காணும்போது, வெறுத்து நோக்கும் மனோநிலையை, ஏனைய இனத்தவர்கள் பலரிடம் காணக்கூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, வாலி said:

பிரெஞ்ச் அதிபரின் இந்தக் கூற்று வரவேற்கப்படவேண்டியது. பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் ஈவு இரக்கமின்றி அழிக்கப்படவேண்டும்.   மூளைச் சலைவை செய்யப்பட்ட இந்த தற்கொலைதாரிகள் சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படவேண்டும். இவர்களுக்கு மன்னிப்பே வழங்கப்படக் கூடாது!

 

இதை சிரியாக்காரன் ஈராக்காரன் தனது கோணத்தில் சிந்தித்தால்....அவன் செய்வது சவனுக்கு சரியாகத்தான் இருக்கும்.

அதுசரி பிரான்ஸ்காரனுக்கு சிரியாவிலை குண்டு போடவேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.