Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மழை வெள்ளத்தினால் சென்னை தனியார் மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மழை வெள்ளத்தினால் சென்னை தனியார் மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி! 
[Saturday 2015-12-05 09:00]

சென்னை மணப்பாக்கத்தில் அடையாற்றின் கரையோரம் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில், பெரும் வெள்ளம் காரணமாக மின்தடை ஏற்பட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால்,அங்கு சிகிச்சை பெற்று வந்த 18 நோயாளிகள் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களில் 14 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது; உயிரிழந்த எஞ்சிய 4 பேரின் உடல்களை அவர்களது உறவினர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதற்கிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.வெள்ளத்தால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்: தாழ்வான பகுதிகளிலும், பலவீனமான கரைகள் உள்ள பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. இதில் மணப்பாக்கத்தில் அடையாற்றின் கரையோரம் இருக்கும் பிரபலமான தனியார் மருத்துவமனையைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெறும் அளவில் கட்டமைப்புக் கொண்ட இந்த மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை 525 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். 200 நோயாளிகள் சிகிச்சை பெறும் வசதி கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவில், 75 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் பெருக்கெடுத்து ஓடி வந்த வெள்ளத்தின் காரணமாக அந்த மருத்துவமனையின் 10 அடி உயரம் கொண்ட சுற்றுச் சுவர் சுமார் 20 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது.

சென்னை மணப்பாக்கத்தில் அடையாற்றின் கரையோரம் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில், பெரும் வெள்ளம் காரணமாக மின்தடை ஏற்பட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால்,அங்கு சிகிச்சை பெற்று வந்த 18 நோயாளிகள் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களில் 14 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது; உயிரிழந்த எஞ்சிய 4 பேரின் உடல்களை அவர்களது உறவினர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதற்கிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.வெள்ளத்தால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்: தாழ்வான பகுதிகளிலும், பலவீனமான கரைகள் உள்ள பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. இதில் மணப்பாக்கத்தில் அடையாற்றின் கரையோரம் இருக்கும் பிரபலமான தனியார் மருத்துவமனையைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெறும் அளவில் கட்டமைப்புக் கொண்ட இந்த மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை 525 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். 200 நோயாளிகள் சிகிச்சை பெறும் வசதி கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவில், 75 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் பெருக்கெடுத்து ஓடி வந்த வெள்ளத்தின் காரணமாக அந்த மருத்துவமனையின் 10 அடி உயரம் கொண்ட சுற்றுச் சுவர் சுமார் 20 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது.
சென்னை மணப்பாக்கத்தில் அடையாற்றின் கரையோரம் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில், பெரும் வெள்ளம் காரணமாக மின்தடை ஏற்பட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால்,அங்கு சிகிச்சை பெற்று வந்த 18 நோயாளிகள் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களில் 14 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது; உயிரிழந்த எஞ்சிய 4 பேரின் உடல்களை அவர்களது உறவினர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதற்கிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.வெள்ளத்தால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்: தாழ்வான பகுதிகளிலும், பலவீனமான கரைகள் உள்ள பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. இதில் மணப்பாக்கத்தில் அடையாற்றின் கரையோரம் இருக்கும் பிரபலமான தனியார் மருத்துவமனையைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெறும் அளவில் கட்டமைப்புக் கொண்ட இந்த மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை 525 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். 200 நோயாளிகள் சிகிச்சை பெறும் வசதி கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவில், 75 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் பெருக்கெடுத்து ஓடி வந்த வெள்ளத்தின் காரணமாக அந்த மருத்துவமனையின் 10 அடி உயரம் கொண்ட சுற்றுச் சுவர் சுமார் 20 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது.

   
தண்ணீருக்குள் மூழ்கிய ஜெனரேட்டர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்: இதனால் பல ஆயிரம் கனஅடி நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு, மருத்துவமனைக்குள் புகுந்தது. தரையின் கீழ் இருந்த இரு தளங்களும், தரைத்தளமும் 5 நிமிஷங்களுக்குள் மூழ்கின. ஏற்கெனவே பலத்த மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெறப்பட்டிருந்தது. வெள்ளத்தால் தரைத்தளத்தில் இருந்த 6 மிகப்பெரிய ஜெனரேட்டர்களும் தண்ணீருக்குள் மூழ்கின. இதைத் தொடர்ந்து மருத்துவமனை இருளில் மூழ்கியது. இதேபோல தரைகீழ் தளத்தின், முதல் தளத்தில் வெண்டிலேட்டருக்கு தேவையான சிலிண்டர்களும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் மூழ்கின. இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர், ஆக்ஸிஜன் உதவியோடு சுவாசித்து வந்த நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், உடனே தரை கீழ் தளத்தில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தண்ணீருக்குள் நீந்திச் சென்று, மேலே எடுத்துக் கொண்டு வந்தனர். இதற்கிடையே வெள்ளம், தரைத்தளத்துக்கு மேல் வரத் தொடங்கியது. உடனே மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளை முதல் தளத்துக்கு மேலே கொண்டு சென்றனர். இதற்கிடையே, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு சிலிண்டர் மூலம் நேரடியாக சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு, ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. இருப்பினும் குறைந்த சிலிண்டர்களையே எடுக்க முடிந்ததால் நோயாளிகளுக்குத் தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்க முடியவில்லை எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனால் வெண்டிலேட்டர், ஆக்ஸிஜன் உதவியோடு சுவாசித்த வந்த நோயாளிகள் புதன்கிழமை (டிசம்பர் 2) காலை 10 மணி முதல் இறக்கத் தொடங்கியுள்ளனர். இதைப் பார்த்த மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளை உடனடியாக வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பிற மருத்துவமனைகளுக்கு... இதைக் கேட்ட நோயாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் அங்கு இருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள், போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீ ழப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் சாதாரண வாகனங்கள் மூலம் சென்றதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.ஆனாலும் ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் ஆகியவை இல்லாத காரணத்தினாலும், உடனடியாக வேறு மருத்துவமனைக்குச் செல்ல முடியாத காரணத்தினாலும் வியாழக்கிழமை இரவுக்குள் 14 நோயாளிகள் அங்கு இறந்தனர். அதேபோல பிற மருத்துவமனைக்கு கொண்டு சென்ற 4 நோயாளிகளும் இறந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.இதற்கிடையே, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் மருத்துவமனையைப் பார்வையிட்டு விசாரணை செய்தனர்.உயிரிழப்புக்குக் காரணம் என்ன? சுகாதாரத் துறைச் செயலர் விளக்கம்இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலையும், மருத்துவமனையில் கூடுதல் ஜெனரேட்டர் வசதி இல்லாததுமே 18 நோயாளிகளின் உயிரிழப்புக்குக் காரணம் என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ""மணப்பாக்கத்தை உள்ளடக்கிய நந்தம்பாக்கம் மழைநீரால் சூழப்பட்டதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.தனியார் மருத்துவமனையில் ஜெனரேட்டர் மின்சாரம் இல்லாததாலும், சடலங்கள் இருக்கும் இடங்களிலும் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தும் மருத்துவமனை நிர்வாகம் கூடுதலாக போதிய ஜெனரேட்டர் மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில், மருத்துவமனையில் பல்வேறு நோய்களால் உயிரிழந்த 14 நோயாளிகளின் சடலங்கள், கடும் மழை காரணமாக அவர்களது உறவினர்களால் எடுத்துச் செல்லப்படவில்லை.காரணத்தை அறிய பிரேத பரிசோதனை: சடலங்கள் சுகாதார கேட்டை ஏற்படுத்தக் கூடும் என்ற காரணத்தால் தனியார் மருத்துவமனை நிர்வாகம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்ததை அடுத்து, அங்கிருந்த சடலங்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குபாதுகாக்க எடுத்துச் செல்லப்பட்டன. அரசு மருத்துவமனைகளின் நடைமுறைப்படி, கொண்டு வரப்பட்ட 14 சடலங்களையும் பரிசோதனைக்கு உள்படுத்தி உயிரிழப்புக்கான காரணத்தை அறிய வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசின் ஜெனரேட்டர் உதவி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. அதாவது, 70 உள்நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு 250 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டரை அந்த மருத்துவமனைக்கு அரசு வெள்ளிக்கிழமை அளித்துள்ளது. எனவே இந்த 18 உயிர் இழப்புகள் மின் தடை காரணமாக மட்டுமே ஏற்படவில்லை என்று ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.உடனடியாக 350 நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றினோம்: மருத்துவமனை விளக்கம் சென்னை,டிச.4: மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததால் உடனடியாக 350 நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றினோம் என மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிருத்வி மோகன்தாஸ் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:பலத்த மழையின் காரணமாக எங்களது மருத்துவமனையில் ஏற்கெனவே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெற்று வந்தோம்.இந்நிலையில் அடையாறு ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் காரணமாக, செவ்வாய்க்கிழமை இரவு எங்களது மருத்துவமனையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வெள்ளம் மருத்துவமனைக்குள் புகுந்தது. இதன் விளைவாக ஜெனரேட்டர் இருந்த பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக மருத்துவமனை இருளில் மூழ்கியது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்ட்டிலேட்டர், ஆக்ஸிஜன் உதவியோடு சுவாசித்து வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகளை ஒரே பகுதிக்கு இடமாற்றிக் கொண்டு வந்து, அங்கு ஆக்ஸிஜன்,வெண்டிலேட்டர் அளித்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். இருப்பினும் 18 நோயாளிகள் இறந்தனர். பிற வார்டுகளில் இருந்த 350 நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் மாற்றினோம் என்றார் அவர்.

"வழக்குப் பதிவு செய்து விசாரணை'- சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையர் அருண் வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையைப் பார்த்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=146294&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இசைக்கலைஞன் said:

என்ன கொடுமை..

இந்தநிலையில்  வல்லரசு நினைப்பு....

 

பல அரசியல்வாதிகளின் செயற்திறமின்மையும்

பல பிரபலங்களுடைய  ஊதிப்பெருக்கப்பட்ட மாயைவிம்பங்களும்

வெளியே வந்துவிட்டன...

திருந்துவார்களா???

அல்லது மீண்டும் ......?

 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விசுகு said:

இந்தநிலையில்  வல்லரசு நினைப்பு....

 

பல அரசியல்வாதிகளின் செயற்திறமின்மையும்

பல பிரபலங்களுடைய  ஊதிப்பெருக்கப்பட்ட மாயைவிம்பங்களும்

வெளியே வந்துவிட்டன...

திருந்துவார்களா???

அல்லது மீண்டும் ......?

 

தமிழ் இளைஞர்கள் திராவிட இந்திய அரசியலில் கோபமாகவே உள்ளார்கள். பாமர மக்களும் மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பாமர மக்கள் அடுத்தமுறை திமுகவில் குத்திவிடுவார்களோ என்கிற கவலையும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, இசைக்கலைஞன் said:

தமிழ் இளைஞர்கள் திராவிட இந்திய அரசியலில் கோபமாகவே உள்ளார்கள். பாமர மக்களும் மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பாமர மக்கள் அடுத்தமுறை திமுகவில் குத்திவிடுவார்களோ என்கிற கவலையும் உள்ளது.

இன்னொன்றையும்  எழுத மறந்துவிட்டேன் இசை

 

இளைஞர்கள் தாமாகவே களமிறங்கி மக்களுக்கு தம்மால் முடிந்ததை செய்திருப்பதும்

அது பலமான விடயமாக வெளியில் தெரியவந்திருப்பதும்

தீமையிலும் ஒரு நன்மையாகும்

 

அதேநேரம்

புதியவர்கள் எவ்வளவு வேலை செய்தார்கள்?

மக்களுடன் நின்றார்கள்? என்பதைப்பொறுத்தே அடுத்த தேர்தல் அமையும்

ஒரு நம்பிக்கை உண்டு

பார்க்கலாம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை கலங்களை விண்ணுக்கு அனுப்பியும் சரியான கால நிலையை அவதானித்து முன்னேற்பாடுகளைச் செய்யும் திறன் இந்திய அரசிடம் இல்லை. வந்த பின்னர் பார்ப்போம் என்று இருந்து பல உயிர்களைக் காவு கொண்டுள்ளனர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணின் மைந்தர்களை சிந்திக்காமல் மேற்கத்தைய நாடுகளைப்போல் விண்ணில் ஆராய்ச்சி செய்ய வெளிக்கிட்டு விட்டார்கள்.

மேற்கத்தைய நாடுகள் தமது மக்களுக்கு அடிப்படை தேவைகளை ஓரளவாவது செய்துவிட்டுத்தான் இதர நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றார்கள்.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு சிறிய இயற்கை அனர்த்தம் வந்தாலும் விளைவு பாரதூரமானதாகவே இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.