Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவம் பிடித்துச் சென்ற இரு மகன்களையும் இன்றுவரை காணவில்லை : தாயார் கண்ணீர் மல்க யாழில் சாட்சியம்

Featured Replies

இராணுவம் பிடித்துச் சென்ற இரு மகன்களையும் இன்றுவரை காணவில்லை : தாயார் கண்ணீர் மல்க யாழில் சாட்சியம்
 
 
இராணுவம் பிடித்துச் சென்ற இரு மகன்களையும் இன்றுவரை காணவில்லை : தாயார் கண்ணீர் மல்க யாழில் சாட்சியம்
இராணுவத்தினர் எனது இரு மகன்களையும் பிடித்துச் சென்று இன்று வரை தகவல் எதுவும் தெரியாது என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு முன்னால் தாயொருவர் சாட்சியமளித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 1996ஆம் ஆண்டு ஜீன் மாதம் மூத்த மகனான கருப்பன் பாலகிருஸ்ணன் என்பவரை மணியந்தோட்டத்தில் வைத்து இராணுவம் பிடித்துச் சென்றது. இதனை இவரின் சித்தப்பா நேரில் கண்டுள்ளார். அவர் சாட்சியமளிக்க எங்கும் போக தயார் என்றும் கூறியிருக்கிறார்.
 
அதேபோல் 1996ஆம் ஆண்டு ஜீலை மாதம் கடற்தொழிலில் ஈடுபட்டு வீடு திரும்பும் வழியில் எனது இளைய மகன் கருப்பன் சுரேஸ் கொழும்புத் துறையில் வைத்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டதாகவும் குறித்த பகுதியால் சென்றவர்கள் நேரில் பார்த்ததாக எனக்கு தெரிவித்தனர்.
 
 இரு மகன்களையும் இராணுவ முகாம்கள் எல்லாம் தேடி அலைந்தோம் ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இன்று வரை அவர்கள் பற்றி எதுவும் எமக்கு தெரியாது.
 
எமக்கு எந்தவிதமான நஸ்ட ஈடுகளும் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வந்தால் மட்டும் போதும். கடவுளை நம்பிக் கொண்டு இருமகன்களும் வருவார் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன் என்று தாயார் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
 
 
 
 
 
இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மகள் குடும்பம் எங்கே? : ஆணைக்குழு முன் தாய் கேள்வி
 
இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மகள் குடும்பம் எங்கே? : ஆணைக்குழு முன் தாய் கேள்வி
2009 மே மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மகள் குடும்பத்தை இதுவரை காணவில்லை என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு முன்னால் தாயொருவர் சாட்சியமளித்துள்ளார்.
 
எனது மகளான சசிகலா, மருமகன் பரமேஸ்வரன், பேரன் பிரதீபன், பேத்தி பிரியாளினி, அதுமட்டுமல்லாது ஏழு வயது நிரம்பிய பேரன் பிறை அழகன் போன்றோர் இறுதிக்கட்டப் போரில் வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்களை இராணுவத்தினர் வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றதாக சிலர் எனக்கு தெரிவித்தனர். அத்துடன் எனது மகளின் குடும்பத்துடன் 10 குடும்பங்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்து அவர்களையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக சிலர் குறிப்பிட்டனர்.
 
;அதன்பின்னர் நாங்கள் தேடி அலையாத இடம்இல்லை. இராணுவ முகாம்கள் எல்லாம் அவர்களை தேடி அலைந்தும் அவர்கள் தொடர்பில் எந்தவித பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. எமக்கு கடவுள் தான் வழிகாட்ட வேண்டும் கடவுளின் அருளால் எனது மகள் குடும்பம் திரும்பி என்னிடம் வரும் என்று தாயார் சாட்சியத்தில் தெரிவித்தார்.
 
 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.