Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாருக்கு மன்னிப்பு???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒரு ஆபிரிக்க செனகல் நாட்டைச்சேர்ந்த வயதான பெண். அடிக்கடி கடைக்கு வருவார்.

நிறைப்பணம் செலவளிப்பார். ஊருக்கும் அனுப்புவார்.  

கனக்க பைல்கள் கொண்டு வந்து போட்டோக்கொப்பி எடுத்து பல இடங்களுக்கும் அனுப்புவார்.

 பைல்கள் முறையாக அடுக்கப்பட்டு அதற்கேற்ப ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கும்.

எழுதப்படிக்கத்தெரியாத அவரது இந்தத்திறமையைக்கண்டு நான் பிரமித்ததுண்டு.

எழுதப்படிக்கத்தெரியாததால் என்னிடம் விலாசங்களை எழுதித்தரும்படி கேட்பார். 

அதில் பிள்ளைகளின் படிப்பு மற்றும் சொத்துக்கள் சம்பந்தமானதும் 

விவாகரத்து மற்றும் முறைப்பாடுகள் சார்ந்த அமைச்சுக்களின் விலாசங்களும் இருக்கும்.

 

 

ஒருநாள் கனநேரமாக தொலைபேசியில் அழுதபடியிருந்தார். என்னுடனும்  அழத்தொடங்கினார்.

அன்று தான் அவருடன் கதைக்கத்தொடங்கினேன். 

எல்லாமே போச்சு. இனி எப்படி எல்லாவற்றையும் நான் சமாளிக்கப்போகின்றேனோ என அழுதபடியே இருந்தார்.

ஆறுதலாக என்ன பிரச்சினை என்றதற்கு எனது மூத்தமகன் இராணுவத்திலிருந்தவன்.

நேற்று நடந்த சண்டை ஒன்றில் இறந்துவிட்டான் என ஓலமிட்டு அழத்தொடங்கிவிட்டார்.

அவன் தான் நாட்டில் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தவன். எனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்.

அவர்களது படிப்பு. பழக்கவழக்கங்கள். எல்லாவற்றையும் கவனித்தான். இனி???

அப்போ உங்கள் கணவர் எங்கே என  நான் கேட்டதும் முகமெல்லாம் மாறிவிட்டது.

அவனைப்பற்றிக்கேட்காதே. அவனால் தான் எல்லாம்.

அவனை நான் மன்னிக்கவே மாட்டேன் என்றவர் நிமிர்ந்து நடந்து சென்றுவிட்டார்....

 

அடுத்தமுறை வரும்  போது  பல பைல்களுடன் வந்தார். அது அவரது கணவருடயைது.

அவருக்கு 3 நாட்டில் பிரசாயுரிமையுள்ளது. அத்தனையும் களவாக எடுத்தது.

அவற்றை அமைச்சுக்களுக்கு காட்டிக்கொடுக்கும் கடிதமும் யாரைவிட்டோ எழுதி வந்திருந்தார். 

ஒவ்வொன்றிலும் 5 பிரதிகள் எடுத்து எல்லாவற்றையும் கவரில் போட்டு விலாசம் எழுதச்சொல்லித்தந்தார்.

எனக்கு அதில் உடன்பாடில்லை என நான் சொல்ல எல்லாம் அல்லா பார்த்துக்கொண்டிருக்கின்றார். நீ எழுதித்தா என்றார்.

எனக்கோ மன உறுத்துதல். திருமணம் முடித்து வாழும் போது கணவன் மனைவிக்குள் எல்லாம் தெிரிந்திருக்கும்.

இருவரும் பிரிந்தபின் தத்தமக்கு தெரிந்த இரகசியங்களை வைத்து சட்டநடவடிக்கைகளை எடுத்தல்.

அதிலும் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என வந்தபின்.....??

 

தொடரும்...

 

 

Edited by விசுகு

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே....  இந்த  பாட்டு உங்கள் கதைக்கு பொருந்தும் ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை வந்தபோது

உங்களது பைல்களைப்பார்த்தபோது

நீங்கள் விவாகரத்து செய்த மாதிரி  தெரியவில்லையே என்றேன்

பெரிதாக சிரித்தார்

வழக்கு நடக்கு நான் ஒப்பந்தம் வைத்தால் தானே விவாகரத்து.

கொடுக்கமாட்டேன் என்றார். இதென்ன அநியாயம்

ஆளும்  வேண்டாம். விடவும் மாட்டேன் என்றால்...?

எத்தனைவருடமாக விவாகரத்து வழக்கு நடக்கு என்றேன்.

அது பல வருடங்களாக.  இறுதியாக அவருடைய வழக்கறிஞர் என்னிடம் தனியே கேட்டவர்.

எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்லுங்கள். தருகின்றாராம். ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என.

காசு என்னத்துக்கு எனக்கு. அவன் அலையணும். கம்பி எண்ணணும்.

செய்யாமல் சாகமாட்டேன் என்றார்.

எனக்கு அவருடன் பேசப்பிடிக்கல. விட்டுவிட்டேன்....

வருவார் போவார். பேசுவதில்லை.

 

சிறிய காலத்தின் பின்..

தொலைபேசியில் ஒரே சண்டை. சத்தமாக கதைத்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் அமைதியாக பேசு. ஆட்கள் வரும் இடம் என்றேன். அழத்தொடங்கிவிட்டார். இப்ப என்ன பிரச்சினை என்றேன். அவர் எனது பிள்ளைகளை பேரப்பிள்ளைகளை விட்டு விவாகரத்து கொடுக்கும்படியும் அவருக்கு எதிராக செய்யும் சட்டநடவடிக்கைகளையும் கைவிட்டுவிடும்படியும் சொல்லச்சொல்ல அவர்கள் என்னுடன் சண்டை பிடிக்கிறார்கள் என்றார். அது சரிதானே அது தானே நியாயம் தர்மம்.  நீ அல்லாவை நேசிப்பதாக சொல்வது உண்மையானால் அவரை விட்டுவிடேன் என்றேன்.  விடமாட்டேன். இதில் இன்னொருவிடயமும் இருக்கு. அது எனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்துக்கானது. அவருக்கு இருக்கும் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினை வரும் போது அது எனது பிள்ளைகளுக்குப்போகாமல் அரசுடமையாகிவிடும். ஏனெனில் அவரது பெயரிலும் பிரசாஉரிமையிலும் அத்தனை சுத்துமாத்துக்கள். எனது இந்த நடவடிக்கை மூலம் அவரும் தண்டிக்கப்படுவார். அதேநேரம் எனது மக்களுக்கும் சொத்துபிரச்சினை வராது என்றார்.  மனுசி எப்படியெல்லாம் கணக்குப்போடுது என்று ஆச்சரியமாக இருந்தது.  சரி உனக்கு இதுக்கெல்லாம் ஆலோசனை தருவது யார் என்று கேட்டேன். எனது சகோதரன் ஒருத்தர் எனது நாட்டில் நீதிபதியாக இருக்கின்றார். அவர்தான் என்றார். போச்சடா போச்சு.

உனக்குத்தான் அறிவில்லை

ஒரு நீதிபதிக்குமா? என்றேன்

மனுசிக்கு ஆத்திரம் வந்துவிட்டது.  அவன் என்ன செய்தவன் என்று தெரியுமே?

அவன் மனுசனே இல்லை

நான் ஒரு பிணம்

பிணத்திடம் எதற்கு கருணையை எதிர்பார்க்கின்றான் என பொழியத்தொடங்கினார்....

 

திங்கள் முடியும்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக் கதையின் உள்ளுக்குள் எவ்வளவு உண்மை என்று தொிய வாய்ப்பில்லை. தொடருங்கள் விசுகு,

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னடா  இந்த மனிசியோட பெரிய அக்கப்போராக் கிடக்கு....!  :)

தொடருங்கள் விசுகு....!

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருடங்களாகிவிட்டது.  தொடருங்கள் விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.