Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்துவிடுங்கள்: ஐநாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த 21-வயது யாஷிடி பெண்

Featured Replies

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்துவிடுங்கள்: ஐநாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த 21-வயது யாஷிடி பெண்
 
 
  நியூயார்க்: ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள் என்று 21-வயது யாஷிடி இனப் பெண் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
 
உலகையே மிரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் சிரியா மற்றும் ஈராக் நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் குழந்தைகள், பெண்களை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து சந்தைகளில் விற்பனை செய்தும், கொன்று குவித்தும் அட்டூழியம் செய்து வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக ரஷ்யாவும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான உக்கிர யுத்தம் நடத்தி வருகின்றன.

21-year-old Yazidi woman begs UN Security Council to wipe out Islamic State

 இந்நிலையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடியில் சிக்கி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உயிர்பிழைத்த யாஷிடி இனப்பெண், தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள் என்று கண்ணீர் மலங்க கோரிக்கை விடுத்துள்ளார். யாஷிடி இனத்தைச் சேர்ந்த நாதியா முராத் பாசீ தாஹா தற்போது ஜெர்மனியில் அகதியாக உள்ளார்.

 

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஈராக்கில் இவரது கிராமத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். பின்னர் நாதியா முராத் பாசீ தாஹா உள்பட, அங்கிருந்த பெண்களை பஸ்சில் தீவிரவாதிகளின் தலைமையகமான மோசூல் நகருக்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு சிறுமிகள், பெண்கள் என்று வேறுபாடு பார்க்காமல் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர்.

இதுதொடர்பான உண்மை நிலையை அறிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 15 பேர் கொண்ட குழுவிடம் தாஹா தனக்கு நடந்த கொடுமை பற்றியும் அங்கு நடந்தவை பற்றியும் விவரித்துள்ளார். "பெண்கள் மற்றும் சிறுமிகளை அழிக்கும் ஆயுதமாக பாலியல் பலாத்காரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் பயன்படுத்தினர். பாதிக்கப்பட்ட பெண்களால் அடுத்து வாழவே முடியாது என்ற கொடூரம் அரங்கேற்றப்பட்டது. தீவிரவாதிகள் யாஷிடி இனப் பெண்களின் உடல்கள், இறைச்சியை போன்று விற்பனை செய்யப்பட்டது." என்று நாதியா முராத் பாசீ தாஹா கூறி உள்ளார்.

 

சில நாட்கள் கழித்து என்னை எடுத்துக் கொண்ட தீவிரவாதி, என்னை ஆடை அணிந்துக் கொள்ளுமாறும், அலங்காரம் செய்துக் கொள்ளுமாறும் கொடுமை செய்தான், பின்னர் அந்த பயங்கரமான இரவில் தான் கொடுமைகளை செய்தான். தீவிரவாதிகளுக்கு சேவை செய்ய வற்புறுத்தினான். என்னை தொடர்ந்து ஒவ்வொரு இரவும் அவமானப்படுத்தினான். இரவு என்னை கடுமையாக தாக்கினான். தீவிரவாதிகளுடன் அறையில் அடைத்தான். பின்னர் நான் சுயநினைவை இழக்கும் வரையில் அவர்கள் குற்றம் செய்தனர் என்று கூறி உள்ளார். என்னுடைய சகோதரர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்து உள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்துவிடுங்கள்: ஐநாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த 21-வயது யாஷிடி பெண்

இஞ்சை இவையளும் வெளிக்கிட்டினம்...இனியென்ன கவலை tw_lol:

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இஞ்சை இவையளும் வெளிக்கிட்டினம்...இனியென்ன கவலை tw_lol:

 

 

பிளேனைப் பாக்க .. இப்ப தான்..வெள்ளோட்டம் விட்டது போல புதுசாக் கிடக்குது!

  • தொடங்கியவர்

சுயநினைவை இழக்கும் வரை சித்ரவதை செய்யப்பட்டேன்: ஐ. எஸ்.சிடம் தப்பித்த பெண்ணின் கண்ணீர் கதை (வீடியோ)

 

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான ஈராக்கை சேர்ந்த இளம்பெண், ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்துவிடுமாறு ஐ.நா.விற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஈராக்கில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த நாதியா முராத் பாசீ தாஹா என்ற பெண்ணும் மற்றும் சில பெண்களும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமையிடமான மோசூல் நகருக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். கொடூர கொடுமைகளுக்கு ஆளான நாதியா(21) என்ற பெண் அங்கிருந்து தப்பித்துள்ளார், இவர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 'போரின் போது கடத்தப்பட்டவர்கள்'  தொடர்பாக விசாரிக்கும் 15 நபர்கள் கொண்ட குழுவிடம்,  தனக்கு நடந்தவை பற்றி கண்ணீர் மல்ககூறியுள்ளார்.

"தீவிரவாதிகளுக்கு பணிவிடை செய்ய வற்புறுத்தப்பட்ட நான், சுயநினைவை இழக்கும்வரை அவர்களால் சித்ரவதை செய்யப்பட்டேன், என்னுடைய சகோதரர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர்.

இனி வாழவே முடியாது என்கின்ற அளவுக்கு யாஸிதி பெண்களுக்கு கொடூரம் அரங்கேற்றப்பட்டது. இவ்வாறு பல்வேறு அட்டூழியங்களை செய்துவரும் அவர்களை அழிக்க வேண்டும்" என  அவர் கூறியுள்ளார்.

இவரின் பேச்சை கேட்ட பாதுகாப்பு கவுன்சில், ஒருபுறம் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எண்ணி வருந்தியபோதிலும், துணிச்சலான அவரது பேச்சை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இவ்வழக்கை எடுத்துச் செல்ல வலியுறுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/world/56510-yazidi-woman-un-security-council-wipe-islamicstate.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.