Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Featured Replies

பல்லிக்கு 
வால் பிடிப்பது - பிடிக்காது ....
வால் அறுந்தாலும் வாழும் ...
வால் பிடிக்காதே மனிதா ...!!!

^^^

ஓடி ஓடி உழைக்கணும்...
முகிலைப்போல் ....
ஊருக்கே கொடுக்கணும் ...
முகிலைப்போல்.....!!!

^^^

கெட்டிக்காரமகனையும் ....
கெட்டு போன மகனையும் ....
ஒன்றாகவே பார்க்கும் குணம் ....
அம்மா ........!!!

^^^

தண்ணீருக்காக போராடினோம் ....
கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ...
வெள்ள காடு ....!!!

^^^

தனியே வாழ்ந்தபோது ...
தன் அறையை கூட்டாதவன் ...
கல்யாணம் செய்தபின் ...
வீடு கூட்டுவான் ....!!!

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................

 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

எப்போது தோற்பவன் ....
நகைசுவை நடிகன் ...
எப்போதும் வெல்பவன் ...
கதா நாயகன் ....
வென்று தோற்பவன் ...
வில்லன் ....
வாழ்கையும் இதுதான் ...!!!

^^^

மிருக வதை சட்டத்தை ....
கடுமையாக எதிர்த்தார் ...
எங்க தலைவர் ....
வெள்ளை குதிரைமேல் ...
வீர வாள் ஏந்தியபடி ....!!!

^^^

எல்லோரையும் சிரிக்கவைக்கும் ....
அவருக்கு சிரிக்க அனுமதியில்லை ...
சிரித்தால் தொழில் பறிக்கப்படும் ...
நகைசுவை நடிகன் ....!!!

^^^

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாமிர்தம் .... சிந்தனைகளுக்குப் பஞ்சமில்லா அமிர்தம் ....தொடருங்கள் இனியவன்....!!  :)

  • தொடங்கியவர்
16 hours ago, suvy said:

பஞ்சாமிர்தம் .... சிந்தனைகளுக்குப் பஞ்சமில்லா அமிர்தம் ....தொடருங்கள் இனியவன்....!!  :)

நன்றி நன்றி 

  • தொடங்கியவர்

குரு குலத்தில் பிறந்தவர்...
மாமிசத்தை துறந்தவர் ....
வரைகிறார் மீன் படம் ....
தொழிலே தெய்வம் ....!!!

^

சின்ன எல்லை சண்டை ...
இருவீட்டார் கடும் சண்டை ....
இருவீட்டு நாய்களும் ....
தெருவில் கொஞ்சி ....
விளையாட்டு ....!
மனிதனுக்கு ஆறு அறிவாம் ...!!!

^

ஊர் முழுக்க திருமணம் ....
செய்து வைக்கிறார் ....
தன் மகளுக்கு இன்னும் ...
வரன் தேடுகிறார் ....!
வரதச்சனை கொடுமை ....!!!

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................
 

  • தொடங்கியவர்

ஒரு மரம் ஓராயிரம் குழந்தை 
-------------
பச்சை பசேரென இருக்கும் போது .....
கண்ணுக்கு குளிர்மை தருகிறது ....
குடைபோல் படர்ந்து  இருக்கும் போது.....
உயிரளுக்கு நிழல் தருகிறது ......
இத்துப்போகும் சருகு தருகிறது 
செத்து மடிந்தால் விறகு தருகிறது ....!!!

வாழும் போது பயன் தருகிறது ....
வாழ்ந்து முடிந்தும் பயன் தருகிறது......
தான் நச்சை எடுத்து (CO2)....
உனக்கு உயிர் (O2) தருகிறது .........!!!

ஒரு மரம் வெட்டப்படும்போது ....
ஒரு மகன் மகள் வெட்டப்படுகிறார்கள் ......
ஒரு மரம் நடப்படும் போது .......
ஓராயிரம் மகன் மகள் பிறக்கிறார்கள் .....
குழந்தை இல்லையே குழந்தை இல்லையே .....
கவலை இல்லையே உலகில் மனிதா ....!!!

 

 

*****************

கனி என்றால் க(ன்)னி 

-------------

கனியென்றால் கன்னி ....
முக்கனி மா, வாழை, பலா .....
முக்கனிபோல் இனித்திடு ...
பெண்ணே....!!!

வாழையடி வாழையாய் ...
வாழைபோல் வாழவைக்கும் ....
ஆற்றல் கொண்டவள் பெண் ....!!!

புறத்தோற்றத்தில் பலாவின் முள் ...
அகதோற்றத்தில் பலாவின் சுவை ....
தேவையற்றதை தூக்கி எறியும் சக்கை .....
இத் தத்துவத்தை கொண்டவளே பெண் ....!!!

சுவைக்க சுவைக்க தெவிட்டாத -மா 
சுவைத்தபின் எறியப்பட்ட விதையில் ....
இனத்தை பெருக்கும் -மா 
பெண்ணே நீ நினைக்க நினைக்க .....
இன்பம் தருபவள் - வருங்கால 
சந்ததியை கருவில் சுமப்பவள் ...!!!


.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................

Edited by கவிப்புயல் இனியவன்

  • 1 month later...
  • தொடங்கியவர்

எமக்கு 
தேவையானது இவைதான் ..!
வேலியில்லாத வீடு வேண்டும்....!
தடையில்லாமல் 
சுவாசிக்க மூக்கு வேண்டும் ...!
பேசுவதற்கு வாய்வேண்டும் ...!

இவை எல்லாவற்ரையும் விட ....?

என் தேசத்தின் ஒரே 
ஒரு பிடி மண் வேண்டும் ...!
மண்ணில் பயிர் வளருமா ..?
மனிதன் வளர்வானா ,,,?
என்று பரிசீலிப்பதற்கு ....!!!

கவிப்புயல் இனியவன் 
ஈழக்கவிதைகள்

 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

என் 
புதிய புதிர் கேள்வி ....?
உன்னை நினைக்கும் போது ...
கவிதை வருகிறதா ....?
கவிதை எழுதும் போது ...
உன் நினைவு வருகிறதா ...?

காதலும்  விஷம் ....
உன்னை ..
உடனடியாக கொல்லாது...!
மெல்ல இனி சாகும் ..
உன் உயிர் ...!

-----

இதயங்கள் கண்ணீரால் 
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வி....!!!

இதயங்கள் சிரித்துக்கொண்டு 
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி ....!!!

ஒரு 
இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் கவிதை எழுதினால் 
ஒருதலைக்காதல் ...!!!

 

  • தொடங்கியவர்

நீ 
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என் 
இதய அறைக்குள் ..
அழகாய் இருகிறாய் ...!!!

சிறு மழைதுளி
தான் முத்தாக மாறும் 
உன் ஓரக்கண் பார்வையால் 
இதயத்துக்குள் 
முத்தானாய் .......................!!!

முத்துக்குழிப்பது 
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம் உன்னை 
அறிந்து கொள்வது ..?

 

******************

 

காதல் அரும்பு
************************
கூட்டத்தில் நெரிந்து...
கொண்டு கூத்தாடி ...
போல்நின்றேன் -நீ ...
பார்த்த பார்வையில் ...
உறைந்து போனேன் -.....
அந்த கணமே....
அரும்பியது காதல் ...
மொட்டு உன் மீது ....
^
ஊமை காதல் ....!!!

காதல் ஏக்கம்
************************
மீண்டும் எப்போது 
சந்திப்போம் மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?
விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி 
நாட்கள் கூட வருடம் போல் 
நகர்ந்தது ............!
^
காதல் ஏக்கத்தோடு ....!!

காதல் மலர்வு
***********************
காதல் 
இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும் .....
ஏற்படும் பிணைப்பு
மீண்டும் ஒரு முறை 
வந்தது அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு 
அல்ல உறுதி ...!
^
மலர்ந்தது காதல் 

காதல் வாழ்க்கை
**************************
தினம் 
தோறும் தனியே 
உணவு அருந்தியதில்லை
தனியே உறங்கியதில்லை
தனியே வெளியே 
செல்லவில்லை
இதல்லாம் நடக்கிறது 
என் கற்பனையில் .........!

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

காதல் வலி
**********************
சந்திக்கும் நேரம் 
சறுக்கினால் சண்டை 
சற்று நேரம் ஊமையாகி 
என்னை உறையவைப்பாய்
முள் வினாடி கம்பி 
கடிகாரத்தில் ஓடுவதுபோல் 
உனக்கும் விளங்கும் 
காதல் வலி....!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.