Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிரண்டது இங்கிலாந்து : வொன்டர் கிட் உலகம் முழுக்க சூப்பர் ஹிட்...!

Featured Replies

மிரண்டது இங்கிலாந்து : வொன்டர் கிட் உலகம் முழுக்க சூப்பர் ஹிட்...!

 

ந்தியவை சேர்ந்த இளம் வீரர் பிரணவ் ஒரே இன்னிங்சில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் அனைத்து செய்தி தாள்களிலும், விளையாட்டு பக்கங்களை பிரணவ் செய்தி ஆக்கிரமித்துள்ள நிலையில்,  கிரிக்கெட் ஆடி வரும் பிற நாடுகளிலும் அனைத்து பத்திரிகைகளும் பிரணவின் சாதனை குறித்து செய்தி வெளியிட்டு, அவரது திறமையை மெச்சியுள்ளன. 

mail%20.jpg

இங்கிலாந்தை சேர்ந்த  மெயில் ஆன்லைன் பதிப்பில்,  '' 1009 நாட் அவுட்...  பிரிட்டன் வீரரின் 116 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது" என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அங்கீகரிக்கப்ட்ட போட்டிகளில் பிரிட்டனை சேர்ந்த ஏ.ஈ.ஜே. கோலின்ஸ் அடித்திருந்த 628 ரன்கள்தான் உலக சாதனையாக இருந்தது. கடந்த 1899-ம் ஆண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

wander%202.jpg

பிரிஸ்டலில் நடந்த பள்ளி அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின்போது,  ஏ.ஈ.ஜே. கோலின்ஸ்  இந்த சாதனையை  புரிந்தார். தற்போது 116 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர் ஒருவரால், அந்த  சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாக மெயில் ஆன்லைன் செய்தி வெளியிட்டு பிரணவை கவுரவப்படுத்தியுள்ளது. 

wonder1.jpg

' டெய்லி டெலிகிராப்',  "இந்திய சிறுவன் ஒரே இன்னிங்சில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்" என்ற செய்திடன்,  பிரணவ் ஆடிய இன்னிங்சின் வீடியோவையும் தனது ஆன்லைன் பதிப்பில் வெளியிட்டுள்ளது.  

பி.பி.சி தனது ஆன்லைன் பதிப்பில், ''கிரிக்கெட்டில் புதிய சாதனை பிரணவ் அடித்தார்... 1009 ரன்கள்'' என்ற தலைப்பில்,  பிரணவ் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

cricket%281%29.jpg

''பிரணவ் என்ற 15 வயது சிறுவன் ஒரே இன்னிங்சில் ஆயிரம் ரன்கள் அடித்து சாதனை '' என்று 'தி இன்டிபென்டன்ட்' தனது செய்தியில் கூறியுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இந்திய சிறுவன் ஒருவன் ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக 'டெய்லி மிரர்' தனது செய்தியில் கூறியுள்ளது.

''ஒரே இன்னிங்சில் 3 இலக்க ரன்களை இனி மறந்து விடுங்க... இந்திய சிறுவன் 4 இலக்க ரன்களை ஒரே இன்னிங்சில் எட்டியுள்ளான்'' என்று 'சிட்னி மார்னிங் ஹெரால்ட்' பிரணவுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

'ஆயிரம் ரன்கள் ஒரே இன்னிங்ஸ்... இந்திய சிறுவனின் உலக சாதனை ' என பாகிஸ்தான் டெய்லி பிரணவுக்கு புகழாரம் சூட்டியுள்ளது. 'இந்திய இளம் வீரர் ஒரே இன்னிங்சில் ஆயிரம் ரன்கள் அடித்து சாதனை ' என 'தி டான்' தனது ஆன்லைன் பதிப்பில் கூறியுள்ளது.

http://www.vikatan.com/news/sports/57267-wonder-kid-of-india-super-hit-in-cricket-world.art

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து பத்திரிகைகளின் நேர்மைக்குப் பாராட்டுக்கள். இதே அவுஸி என்றால்.. பிரணவ்வின் சாதனையில் சந்தேகம் வெளியிட்டிருப்பினம்.

பிரணவ்வுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் சிறப்பாக எதிர்காலத்தில் விளையாட. tw_blush:

Edited by nedukkalapoovan
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பிரணவ்...திறமை இருந்தும் என்ன பிரயோசனம் இந்திய அணியில் இடம் கிடைக்குமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நெடுக்கருக்கு "பிரணவ்" "பிரணவன்" ஆகப் போயிட்டார்

  • தொடங்கியவர்

புக் கிரிக்கெட்டில் கூட 1000 ரன்கள் சாத்தியமில்லை: சாதனை பிரணவ்வுக்கு அமோல் மஜூம்தாரின் அறிவுரை

 

 
1009 ரன்கள் சாதனை வீரர் பிரணவ் தனவாதே. | படம்: பிரசாந்த் நக்வி.
1009 ரன்கள் சாதனை வீரர் பிரணவ் தனவாதே. | படம்: பிரசாந்த் நக்வி.

மும்பை கிரிக்கெட் சங்கம் நடத்திய பண்டாரி கோப்பை பள்ளிகள் கிரிக்கெட்டில் 15 வயது மாணவர் பிரணவ் தனவாதே 323 பந்துகளில் 1009 ரன்கள் குவித்து உலக சாதனை நிகழ்த்தியது பற்றி முன்னாள் மும்பை வீரர் அமோல் மஜூம்தார் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதோடு, பிரணவுக்கு சிறந்த அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி அன்றைய பள்ளிகள் கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்திய போது அடுத்ததாகக் களமிறங்க கால்காப்புடன் காத்திருந்தவர் அமோல் மஜூம்தார், உள்நாட்டு கிரிக்கெட்டில் பல திறமையான இன்னிங்ஸ்களை ஆடி வாசிம் ஜாபருக்கு முன்னதாக அதிகபட்ச ரஞ்சி டிராபி ரன்களை எடுத்த அமோல் மஜூம்தாரை அப்போதெல்லாம் பாராட்டாத வீரர்களே இல்லை எனலாம். கிளைவ் லாயிட், கேரி சோபர்ஸ் ஆகியோரும், கவாஸ்கர், மஞ்சுரேக்கர், சச்சினுக்கு அடுத்தபடியாக வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள சிறந்த வீரர் அமோல் மஜூம்தாரே என்று பாராட்டினர், ஆனால் ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடமுடியாமல் அவர் போனது நகைமுரணா, விதியா, தேர்வுக்குழுவின் போதாமையா, அரசியலா என்பது விவாதத்துக்குரியது.

இந்நிலையில் 1009 ரன்கள் பிரணவுக்கு தனது சிறுபிராயக் கனவுகளை தொலைத்த அமோல் மஜூம்தார் அறிவுரை வழங்குவதுதானே சரியாக இருக்கும்?

இதோ அமோல் மஜூம்தார் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் எழுதியுள்ள பத்தியில் கூறியதாவது:

புக் கிரிக்கெட்டில் கூட 1009 ரன்கள் ஒருபோதும் சாத்தியமில்லை. இது சிந்தனைக்கப்பாற்பட்ட இன்னிங்ஸ் ஆகும். நாம் திகைப்பில் வாயடைத்துப் போகும் தருணங்கள் மிகக்குறைவு, ஆனால் இது அத்தகைய தருணங்களில் ஒன்று. அதுவும் 1000 ரன்கள் வரை தவறிழைக்காமல் ஆடுவது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக பள்ளிகளில் ரன் எந்திரமாக திகழ்ந்தவர்கள் அடுத்த கட்டத்துக்கு உயர முடியாமல் போனதையும் பார்த்து வருகிறேன். உலகமும் ஊடகமும் வளர்ந்து விட்டன. பிரணவ்வை இந்த இன்னிங்ஸிற்குப் பிறகு நிறைய பேட்டிகள் கண்டிருப்பார்கள், திறன் வளர்ப்பாளர்கள் நிறைய பேர் அவரை அணுகியிருப்பார்கள்.

ஆனால், இதற்கெல்லாம் அவருக்கு இன்னும் வயதாகிவிடவில்லை என்பதை அவர் உணர வேண்டும். அவரது பெற்றோர், பயிற்சியாளர்கள், மூத்த வீரர்கள் ஆகியோர் அவரது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எதார்த்தத்துக்குத் திருப்ப வேண்டும்.

அவர் தனது சாதனை குறித்து பெருமை அடைந்து அதனை மேலெடுத்து செல்வது அவசியம் என்பதோடு அவர் தன்னைச் சுற்றிலும் பார்க்கவும் பழக வேண்டும். இதனை ஒரு படிக்கல்லாக மட்டுமே அவர் பார்க்க வேண்டும். நல்ல கரியருக்கான வலுவான அடித்தளத்தை அவர் நாட்டியுள்ளார். இனி அதனை அவர் வடிவாக்குவது அவசியம்.

ஒரு சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து அவர் (ஆட்டோ ஓட்டுநர் மகன்) வந்தவர் என்பதால் அவர் இந்தச் சாதனையை அளவுக்கு மீறி தன்னுள்ளே கொண்டாடி விடுவார் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் நான் அப்படிக் கூற மாட்டேன். அது அவர் வளரும் சூழ்நிலையைப் பொறுத்து அமைவது. வெற்றிகளும் ஏற்படும் தோல்விகளும் தாக்கும். அவர் சாதாரண பின்னணியிலிருந்து வந்திருப்பதால் இந்தப் புகழ் போதையிலிருந்து மீண்டு நல்ல முறையில் தன்னை ஒருமுகப்படுத்திக் கொள்வார் என்று கருதுகிறேன்.

எப்போதுமே இத்தகைய மிகப்பெரிய ஆட்டத்துக்குப் பிறகு அடுத்த இன்னிங்ஸ் சாதாரணத்தை அசாதாரணத்திலிருந்து பிரித்தறிய உதவும். ஆனால் அடுத்த இன்னிங்ஸை அவர் மறந்து விட வேண்டும் என்றே நான் கூறுவேன். அடுத்த 5 ஆண்டுகளில் அவர் ஆடும் ஒவ்வொரு இன்னிங்ஸும் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றே நான் கூறுவேன். ஏனெனில் இனி இவர் என்ன செய்கிறார் என்பதை அனைவரும் கவனமாக பார்த்து வருவார்கள். ஆனால் 15 வயதில் சர்வதேச அளவில் இவர் செய்தியாகியிருக்கிறார் என்பது இவரிடமிருந்து இன்னும் சிலவற்றை எதிர்பார்க்கவே செய்யும். நாம் அவர் மீது ஒரு கண் வைத்திருப்பது எவ்வளவு அவசியமோ, அவர் தன்னை ஒருமுகப்படுத்திக் கொள்வதும் அவசியம்.

இவ்வாறு பிரணவ் தனவாதேவுக்கு அமோல் மஜூம்தார் அறிவுரை வழங்கியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-1000-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/article8073261.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.