Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தி பிரதம மந்திரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தார்

Featured Replies

5 பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று வெள்ளி 22 மார்கழி பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20694

தழிழீழ - இந்தி உறவில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்.

நல்ல செய்தி

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடல்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இன்று காலை இந்தியப் பிரதமருடன் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்கள், தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற விடங்கள் உரையாடப்பட்டன. சந்திப்பானது 45 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்மந்தர், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜெந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் பங்கேற்றனர்.

www.pathivu.com

2 ஆம் இணைப்பு) இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் சந்தித்துப் பேசினர்.

இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூடமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரமன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.

சென்னையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பாக எமது "புதினம்" சிறப்பு செய்தியாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் அளித்த நேர்காணல்:

இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஈழத் தமிழர்களின் துயரங்களை விளக்கினோம்.

இச்சந்திப்பு 45 நிமிட நேரம் நடைபெற்றது.

நாங்கள் முன்வைத்த வேண்டுகோள்கள் அனைத்தும் நியாயமானவைதான் என்று இந்தியப் பிரதமர் எம்மிடம் தெரிவித்தார். மேலும் வடக்கு-கிழக்கு பிரிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்றும் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் கெளரவத்தோடும் கண்ணியத்தோடும் பாதுகாப்பாகவும் வாழ வேன்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. அண்மையில் இந்தியா வந்திருந்த சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சேவிடமும் இதனைத் வலியுறுத்தியிருக்கிறோம் என்றும் இந்தியப் பிரதமர் எம்மிடம் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமருடனான எமது சந்திப்பானது ஒரு திருப்புமுனையாகும் என்றனர் அவர்கள்.

இச்சந்திப்பின் போது இந்திய பிரதமரின் முதன்மை ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகார அமைச்சு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் உடனிருந்தனர்.

www.puthinam.com

தமிழீழம் உறுதியாகிவிட தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் மத்திய அரசையும் மாற்றியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நல்ல ஒரு முயற்சி. இதற்கு உதவிய தமிழகத் தலைவர்கள் அனைவருக்கும் நன்றிகள் சொல்லத் தான் வேண்டும். அவ்வாறே முதல்வர் கருணாநிதிக்கு நன்றிகள்.

சென்ற முறை நடந்த மனஸ்தாபத்துக்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை இரு தரப்புமே தவிர்த்துக் கொண்டது இந்தப் புரிந்துணர்விற்கு ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாமா!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்

யாரையும் யாரும் நம்பி ஏமாந்து விடப் போவதில்லை. ஏற்கனவே அனைவரும் பாடம் படித்திருக்கின்றோம். ஆனால் புரிந்துணர்வை வளர்க்க வேண்டிய தேவை உள்ளது. அது அவசியமும் கூட.

ஈழப் போராளிகளுக்கு பயிற்சி அளித்தது இந்தியா என்பதற்காக சிங்கள அரசு, இந்தியாவை புறம்பாடவில்லையே. தனது சூழ்ச்சியால் இந்தியாவுக்கும், போராளிகளுக்கும் முரணைத் தோற்றுவித்தது. ராஜிவ் ஜேஆரின் வலையில் மாட்டுப்பட்டது சோகம் தான். எனி அப்படியோ துன்பியல் சம்பவம் நடக்க கூடாது என்றால் நாம் மற்றவர்களிடம் புரிந்துணர்வை வளர்ப்போம். அது அடமானம் வைக்கும் செயல் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம அந்திய வெளியுறவு அமைச்சரின் கருத்தை பார்த்தால் அப்பிடி ஒன்றும் பெரிதாக நடந்து விட போவதில்லை போல இருக்கே..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா விரும்புவதெல்லாம்...

1. தமிழர்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் மூலமாக ஒரு தீர்வைக் கொடுக்கவேண்டும்; ஆனால் இந்திய மாநிலங்களின் அதிகாரங்களை மிஞ்சிய சமஸ்டியைத் தமிழர்கள் அடையக் கூடாது.

2. புலிகளின் ஆயுத/அரசியல் பலம் குறையவேண்டும். அதனால்தான் மாற்று இயக்கங்களிற்கு இந்தியப் புலனாய்வுத் துறை உதவி புரிகின்றது.

3. சிங்கள அரசு இந்தியாவின் நலன்களுக்கு எதிரான எவருடனும் சேரக்கூடாது (உ.ம். பாகிஸ்தானின் செல்வாக்கு இலங்கையில் குறையவேண்டும்)

இப்படியான இலங்கை சம்பந்தமான வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் வந்ததாகத் தெரியவில்லை.. எனினும் தமிழ்நாட்டு மக்களின்/தலைவர்களின் நடவடிக்கைகளால் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம்.. அதுகூட தமிழரின் போராட்டத்திற்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும்..

இதை வெற்றியின் முதற்படியாவே கருதவேண்டும்.

இந்தியா விரும்புவதெல்லாம்...

1. தமிழர்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் மூலமாக ஒரு தீர்வைக் கொடுக்கவேண்டும்; ஆனால் இந்திய மாநிலங்களின் அதிகாரங்களை மிஞ்சிய சமஸ்டியைத் தமிழர்கள் அடையக் கூடாது.

2. புலிகளின் ஆயுத/அரசியல் பலம் குறையவேண்டும். அதனால்தான் மாற்று இயக்கங்களிற்கு இந்தியப் புலனாய்வுத் துறை உதவி புரிகின்றது.

3. சிங்கள அரசு இந்தியாவின் நலன்களுக்கு எதிரான எவருடனும் சேரக்கூடாது (உ.ம். பாகிஸ்தானின் செல்வாக்கு இலங்கையில் குறையவேண்டும்)

இப்படியான இலங்கை சம்பந்தமான வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் வந்ததாகத் தெரியவில்லை.. எனினும் தமிழ்நாட்டு மக்களின்/தலைவர்களின் நடவடிக்கைகளால் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம்.. அதுகூட தமிழரின் போராட்டத்திற்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும்..

well said.

  • கருத்துக்கள உறவுகள்

இச் சந்திப்பு பற்றி உதயனில் 22ம் திகதி வந்த செய்தி

"இலங்கைத் தமிழ் எம்.பிக்களின் இன்றைய புதுடில்லி விஜயம், இலங்கை தொடர்பாக இந்தியா இதுவரை கடைப் பிடித்து வந்த கொள்கையில் முக்கிய புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டு விட்டதையே உணர்த்துவதாயிருக்கிறது" என்று விடுத லைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார்.

"மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழர் விவகாரத்தை இந்தியா கையாண்ட விதம் வேறு. இன்றைய நிலைமை வேறு என்றும் நெடுமாறன் கூறி யிருக்கிறார்.

"இலங்கைக்கு இராணுவ உதவி எதனை யும் இந்தியா வழங்கப் போதில்லை. பேச்சு மூலமான அரசியல் தீர்வொன்றையே இந் தியா வலியுறுத்தி வருகிறது என்று காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி அண்மை யில் முதல்வர் கருணாநிதியிடம் வலியுறுத்திக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.இப்படி செய்தி ஏஜென்ஸி ஒன்று தெரிவித்தது.

இதேவேளை விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்தி யாகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் இந்தியத் தலைவர்களோடு பேச்சு நடத்து வது 'முக்கிய திருப்பம்' என்று பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய ராஜதந்திரி ஒருவர் புதுடிலிலியில் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்ஸ் தமிழ் இணையம் இவ்வாறு கூறுகிறது

பிரதமருடன் இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு

பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பிக்கள் இன்று சந்தித்துப் பேசினர்.

இலங்கை தமிழ் எம்.பிக்களான ஆர்.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன்இ சேனாதி ராஜா செல்வம்இ அடைக்கல நாதன், கஜேந்திரன் பொன்னம்பலம் ஆகியோர் நேற்று சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.

ஈழத்தில் தமிழர்கள் பட்டு வரும் அவதியை எடுத்துக் கூறிய அவர்கள் இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினர்.

அவர்களது கோரிக்கைகளை கேட்ட முதல்வர் இதுகுறித்து மத்திய அரசிடம் விரிவாக எடுத்துக் கூறுவதாக தெரிவித்தார். இச் சந்திப்பின்போது சுப.வீரபாண்டியனும் உடன் இருந்தார். மேலும் பிரதமருடனும் உடனடியாக தொலைபேசியில் பேசினார். இந்த எம்பிக்களை சந்திக்குமாறும் பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.

இந் நிலையில் இலங்கை தமிழ் எம்.பிக்கள் டெல்லி சென்று இன்று பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்தனர். இந்தக் குழுவில் சுப.வீரபாண்டியனும் இடம் பெற்றிருந்தார்.

இலங்கையில் தற்போது அமைதியின்மையை நிலவி வருவதையும், அங்கு விரைவில் அமைதியான சூழ்நிலை ஏற்பட இந்திய அரசு விரைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரமதரிடம் தமிழ் எம்.பிக்கள் எடுத்துக் கூறினர்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கையைச் சேர்ந்த தமிழ் குழு ஒன்று பிரதமரை சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை இவர்களை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால், நாராயணன் போன்ற அதிகாரிகள் தலையிட்டு அதைக் கெடுத்தனர்.

இம்முறை முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் இவர்களால் பிரதமரை சந்திக்க முடிந்துள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இதுவரை இலங்கை அரசுக் குழுவே இதுவரை மத்திய அரசை சந்தித்து வந்தது. தமிழ் எம்.பிக்கள், தமிழர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை சந்திக்க மத்திய அரசு மறுத்தே வந்தது. இந் நிலையில் தற்போது தமிழ் எம்.பிக்கள் குழு பிரதமரை சந்தித்துள்ளது மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

இந்தச் சந்திப்பு நாடகம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று!

அதாவது மகிந்தவின் ஆளுனர் மாகாநாட்டிற்கான இந்திய விஜயத்திற்கு முன்னரேயே திட்டமிடப்பட்டு பின்னர் சில குளறுபடிகளால் குழம்பிப்போன ஒன்று.

அதன் பின் மகிந்தவை இந்திய உயர்பிடம் நன்கு வரவேற்றதும், சந்திப்பின் பின் நாடுதிரும்பிய மகிந்த இந்தியா தனது நிலைப்பாட்டை வரவேற்றதாகவும் மேலும் ஆயுத உதவியளிக்க உறுதியளித்தாகவும் தெரிவித்தார்.

அவரின் கருத்தை உறுதி செய்யுமாப்போல இந்திய கடற்படைத்தளபதியின் கருத்தும் அதனை தொடர்ந்து தவறுதலாக பிடிபட்ட வெடிமருந்து லாறியும் அமைந்தன.

இவற்றினை தொடர்ந்து ஏற்பட்ட எதிர்பலைகளை சமாளிக்க,

1) அனுப்பப்பட்ட வெடிமருந்து சுரங்கம் தோண்டுவதற்காக என்றும் (இலங்கையில் சுரங்கம் தோண்டுகிறார்களா? நானறிந்த வகையில் மாணிக்கக் கற்களைத்தான் அகழுகிறார்கள்!)

2) மக்களைக் கொல்லும் அரசிற்க்கு உதவி வழங்க மாட்டோம் (வழங்கிக் கொண்டே) என்ற சோனியாவின் அறிக்கையும்.

3) தடங்களுக்குள்ளான சந்திப்பு நாடகம் மீண்டும் அரங்கேறிமை என்பன அமைந்துள்ளன.

அத்துடன் இவை அனைத்தும் நாடகமே என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையில், இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சனையில் தலையிடாக் கொள்கையும், அயல் நாட்டிற்கு புரிந்துணர்வின் அடிப்படையில் உதவி என்ற கோசம் அமைந்துள்ளன.

வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே

ஈனப் பறையர்க ளேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

சீனத் தராய்விடு வாரோ? - பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல்என்ன நீதி?

ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில் யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்

முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு போயின நாட்களுக் கினிமனம் நாணித் தொல்லை

இகழ்ச்சிகள் தீர - இந்தத் தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.